Tuesday 25 December 2012

முகலாயர்களே....(17)

மரம்-
வெட்ட -
தடையுண்டு!

மயிலை-
பிடிக்க-
தடையுண்டு!

மானை-
சுட-
தடையுண்டு!

மனிதனை-
வெட்டுவது-
சாதாரண-
நிகழ்வானது-
இன்று!

கங்கை-
யமுனை-
காவேரி-
ஆறுகளுக்கு-
பெண்களின்-
பேருண்டு!

பூமியை-
தாய்-
என்பவர்களும்-
உண்டு!

கடலை-
அம்மா -
என்பவர்களும்-
உண்டு!

மணிக்கு-
ஒரு-
கற்பழிப்பு-
வீதம்-
நடக்கிறது-
இன்று!

பயம்-
தீராமல்-
அணு உலை-
திறக்கப்பட-
மாட்டாது-என
பிரச்சாரம்-
சொன்னவர்கள்-
உண்டு!

லத்தியால்-
அடி கொடுத்து-
திறக்க-
 முனைகிறார்கள்-
இன்று!

சில்லறை-
வர்த்தகத்திற்கு-
மத்திக்கு-
ஆதரவு-
உண்டு!

மாநிலத்திற்கு-
எதிர்க்கிறார்கள்-
இன்று!

இருந்த-
இடத்தில-
பள்ளி கட்டி -
கொடுக்கப்படும்-
சொல்லிய -
கட்சி-
உண்டு!

அவர்கள்-
அமைத்த -
கமிசனையே-
மறந்தார்கள்-
இன்று!

மத கலவரங்கள்-
நடந்தி-
மனிதங்களை-
கொன்றவர்கள்-
உண்டு!

மத நல் இணக்கத்திற்கு-
உண்ணாவிரதம்-
இருப்பதாக-
கேலி பண்ணுகிறார்கள்-
இன்று!

இதெல்லாம்-
சொல்லபடுது-
அரசியல்-
சாணக்கியத்தனம்-
என்று!

சுதந்திர-
புரட்சியில்-
ஐந்தாவது-
மகன்-
மிர்சா முகல்-
வீர மரணம்-
அடைந்தது-
நம்மில் எத்தனை-
பேருக்கு-
தெரிந்த -
ஒன்று!?

இந்துக்களும்-
இஸ்லாமியர்களும்-
எனது இரு கண்கள்-என்று
பகதுர்ஷா-
சொன்னதை-
நம்மில் -
எத்தனை பேர்-
அறிந்த-
ஒன்று!?

இவர்களை-
வசைபாடவாவது-
யாருக்கு-
யோக்கியதை-
இருக்குது-
இன்று..!!?


(தொடரும்.....)





8 comments:

  1. இந்துக்களும்-
    இஸ்லாமியர்களும்-
    எனது இரு கண்கள்-என்று
    பகதுர்ஷா-
    சொன்னதை-
    நம்மில் -
    எத்தனை பேர்-
    அறிந்த-
    ஒன்று!?/

    சிறப்பான ஆக்கம் ..

    ReplyDelete
  2. மிக அருமையாக தொடர்கின்றீர்கள் சகோ.கவிதை வரிகள் அனைத்தும் அருமை.

    ReplyDelete
  3. அரிய தகவல்கள்! அறியாத தகவல்கள்! கவிதை வடிவில் கலக்கும் தங்கள் பணி சிறக்கட்டும்! தொடர்கிறேன்!

    ReplyDelete
  4. நடைமுறையுடன் முகலயர்களை அழகாக தொடர்புபடுத்துகிறீர்கள் சகோ..
    தொடருங்கள்

    ReplyDelete