Tuesday 16 April 2013

நினைவெல்லாம் ரத்தம்! சுவாசமெல்லாம் நாற்றம்!! (11)

"ஊழலை ஒழிப்போம்"-
இந்த வாசகம்!

தேர்தலின்போது-
கேட்கும்-
வாசகம்!

இதெப்படி-
இருக்கிறதென்றால்!

வேரில்லாமல்-
மரங்கள்-
இருப்பது போல்!

அடித்தளம்-
இல்லாமல்-
கட்டிடங்கள்-
இருப்பது போல்!

இதெப்படி-
முடியாதென்போமோ..!?

அதுபோலவே-
அரசியலுடன்-
ஊழலுமோ!?

உங்களுக்கு-
இவ்விஷயம்-
தெரிந்ததா!?

அதுதான்-
லோக் ஆயுக்தா!

தெரிந்திருந்தால்-
நல்லது!

என்னை போலவே-
தெரியாதவர் என்றால்-
அறிவது-
நல்லது!

லோக் ஆயுக்தா-
லஞ்சத்திற்கு எதிரான-
மாநில அமைப்பாகும்!

அதிகாரிகளை-
நியமிப்பது-
நீதிமன்றமும்-
அம்மாநில கவர்னரும்-
ஆகும்!

இவ்வமைப்பு-
தன் மாநிலத்திற்கு-
வேண்டாமென-
எதிர்ப்பு!

எதிர்ப்பு-
தெரிவித்தவர்தான்-
வருங்காலத்தில்-
பிரதம வேட்பாளராவார்-என
எதிர்பார்ப்பு!

ஊழல் நடவடிக்கைக்கு-
இவர்(மோடி) ஏன்-
தடுக்கணும்!?

தடுத்தாலும்-
இவர் நல்லாட்சி-
செய்கிறார்-என
நம்பனும்!?

நல்லா-
விளங்கிடும்....!!

(தொடரும்....)

//லோக் ஆயுக்தா பற்றிய விபரம்.
இத்தளத்தில் பார்க்கலாம்-
நன்றி தினக்ஸ் வலைத்தளம்.
http://dinaex.blogspot.sg/2013/04/blog-post_2388.html?m=1//




2 comments:

  1. சிந்திக்க வேண்டிய கேள்விகள்...

    ReplyDelete
  2. சிந்தனையைத் தூண்டும் பகிர்வு.

    தொடரட்டும் கேள்விகள்....

    ReplyDelete