Monday 29 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(26)

மக்கா -
மக்கள்-
சிலைகளை-
வணங்கினார்கள்!

சிலை வணங்குவதற்கான-
ஆதாரங்கள்!

முன்னோர்கள்-
வணங்கினார்கள்!

அதனால் மட்டுமே-
வணங்கினார்கள்!

ஆனால்-
இஸ்லாம் கூறும்-
இறைவன்!

அவன்-
ஒருவனே!

இணை துணை-
இல்லாதவன்!

அன்பாளன்!
அருளாளன்!

மன்னிப்பவன்!
தண்டிப்பவன்!

அவன்-
யாராலும்-
பெறப்படவும் இல்லை!

யாரையும்-
பெறவும் இல்லை!

ஆட்சியாளர்களுக்கெல்லாம் -
ஆட்சியாளன்!

சூழ்ச்சியாளர்களுக்கெல்லாம்-
சூழ்ச்சியாளன்!

இஸ்லாமை யாரேனும்-
ஏற்றுகொள்வது !

"லா இலாஹ இல்லலாஹு-
முஹம்மதுர் ரசூலுல்லாஹி-என
மனமார ஏற்றுகொள்வது!

"வணக்கத்திற்குரியவன்-
அல்லாஹ்வை தவிர-
வேறுயாருமில்லை-
முஹம்மது(ஸல்) இறை தூதர்-
தமிழாக்கம் இது!

இஸ்லாமிய-
கொள்கை!

புரையோடிய-
அனாச்சாரங்களை-
எரித்திடும்-
நெருப்பின் வெட்கை!

சிலைகளை வைத்து-
சம்பாதித்தவர்கள்!

அதனால்-
தங்களை தாங்களே-
உயர்ந்தவர்கள்-என
எண்ணியவர்கள்!

வர்க்கபேதங்கள்!
வர்ணபேதங்கள்!

ஆண்டான்-
அடிமை முறைகள்!

பிறப்பால்-
உயர்தவர்கள்-என
எண்ணியவர்கள்!

இப்படியான-
விசயங்களை-
எதிர்த்தது!

இன்றும்-
என்றும்-
ஆணிவேரையே-
பிடுங்குவது!

இஸ்லாம்தான் அது!

அதனால்-
இந்த -
ஏகத்துவ கொள்கையை-
முஹம்மது(ஸல்)-
மறைமுகமாக எத்திவைத்தார்கள்!

முஹம்மது(ஸல்)-
துணைவியார் கதீஜா (ரலி)-
அபூபக்ர் (ரலி)-உள்பட
எட்டு பேர்கள் இணைந்தார்கள்!

கொஞ்சம் கொஞ்சமாக-
நூற்றி முப்பது  பேர்கள்-
ஆனார்கள்!

மறைமுகமாக-
செய்தது!

பகிரங்கபடுத்த-
நேர்ந்தது!

(தொடரும்....)

// இறைவனை தமிழில் கடவுள் என்றும் பகவான் என்றும் ஆங்கிலத்தில் god  என்றும் அழைக்கிறோமோ..அதுபோலவே அல்லாஹ் என்பது கடவுளை குறிக்கும் அரபு சொல்லாகும்.
அது முஸ்லிம்களின் தனிபட்ட கடவுள் பெயர் என சொல்லமுடியாது.//





3 comments:

  1. அருமை! தொடர்கிறேன்!

    ReplyDelete
  2. அல்லாஹ் விளக்கம் அருமை
    தொடர்கிறேன்

    ReplyDelete