Sunday 20 July 2014

குர்ஆன்பற்றிய கவிதைகள்..!!(11)

கல்மனதையும்
கரையச்செய்யும்!

பதறும்மனதையும்
பலமடையச்செய்யும்!

குர்ஆன் வசனங்கள்!
--------------------------
எதை எதையோ எழுவதற்கு
நான் சலித்தவனில்லை!

ஆனால் குர்ஆனைப்பற்றி
எழுத முனைகையில் திணறித்தான்
போகிறேன் !

நீச்சல் தெரியாதவன்
ஆழ்கடலில் சிக்குண்டதுப்போல்!
---------------------------------
மரணத்தண்டனையே தீர்வு
கற்பழிப்பிற்கு என
ஓங்கி முழங்குகிறார்கள்!

குர்ஆன் அன்றே சொல்லியதை
நினைவூட்டினால்
ஏனோ..!?
முனுமுனுக்குகிறார்கள்!
-------------------------
போராட்டங்கள்
வெடிக்கவில்லை!

கோஷங்கள்
முழங்கவில்லை!

ஆனாலும்
பெண்களின் பாதுகாப்பு
உறுதிசெய்யப்பட்டது !

இறைவசனங்களால்!
------------------------

1 comment: