Wednesday 30 March 2016

ஒத்தன முத்தம்..!!


நனைத்து பிரிந்த கடல் அலை
ஈரத்தை விட்டுச் சென்றதைப் போல்!

உரசிச் சென்ற கடற்காற்று
ஒட்டிச் செல்லும் பிசுப்பிசுப்பைப் போல்!

மறையும் சூரியன்
விட்டுச் செல்லும் நிலவினைப் போல்!

சோம்பல் முறித்து உடலைச் சிலிர்த்துச் சென்ற சேவல்
உதிர்த்திட்ட இற்குகளைப் போல.!

வளைக்குள் நுழைந்திட்ட நண்டுகள்
பதித்துச் சென்ற தடங்களைப் போல்!

ஒத்தன இதழ்முத்தம்
மிச்சம் வைத்திட்ட எச்சிலைப் போல்!

உண்டு உமிழ்ந்த வெத்தலை
உதட்டில் சிகப்பாய் தங்கி இருப்பதைப் போல் !

நீ என்னை வெறுத்துச் சென்றிருந்தாலும்
என்னுள் விதைத்துச் சென்றிருக்கிறாய் கவிதைகளை..!!

     -/இந்த கவிதை சிங்கபூரில் வெளியாகும் "தி சிராங்கூன் டைம்ஸ் "ல்
வெளியாகி இருந்தது,ஜனவரியில்//

மரம்...!!

சருகுகளை நினைத்து வருந்துவதில்லை
துளிர்விடத் தெரிந்த
மரங்கள் !

Tuesday 29 March 2016

அலை.!

தள்ளியே விட்டாலும்
கடலை விட்டு பிரிவதில்லை
அலைகள்!

      

Thursday 24 March 2016

அழகு சாதனங்கள் .!

எதார்த்தங்களிடம்
தோற்றுத்தான் போகின்றன
அழகு சாதனங்கள் !

     

Wednesday 23 March 2016

ஆலமரம்.!

இளைப்பாறிய பறவைகளிடம்
எதனையும் எதிர்பார்ப்பதில்லை
ஆலமரங்கள்!

    

Saturday 19 March 2016

சிகரட்.!

தன்னைப் "பற்ற" வைப்பவர்களுக்குள்
"புற்றை"வைத்து விடுகிறது
புகையிலைகள்!

      

Wednesday 16 March 2016

கூண்டுக்கிளிகள் !

சிறைப்பட்டே வாழ்ந்து விட்டதால்
சிறகுகள் தனக்கிருப்பதையே மறந்துவிடுகிறது
கூண்டுக்கிளிகள்!

     

Sunday 13 March 2016

ஏணிகள் .!

ஏமாளியென்ற பட்டம் கிடைத்தாலும்
ஏறியவர்களை கீழேத் தள்ளி விடுவதில்லை
ஏணிகள்!

    

Wednesday 9 March 2016

புல்லாங்குழல் !

தன்னுள்ளிருந்து இன்னிசை வெளிப்படத்தான்
தன்மேல் துளைகளை ஏற்றுக்கொள்கிறது
புல்லாங்குழல்கள்!

    

Tuesday 8 March 2016

கடல்.!

அலைகளை எதிர்க்க துணிந்தவர்களுக்கே
தன்னுள் கடக்க வழி விடுகிறது
கடல்!

     

Saturday 5 March 2016

கோழிக்குஞ்சு..!!

தடைதனை உடைத்திட தயாரில்லையென்றால்
ஓட்டிற்குள்ளேயே சமாதியாகி விட வேண்டியதுதான்
கோழிக்குஞ்சுகள்!

    

Thursday 3 March 2016

பெண்மை..!


வேதனையின் உச்சத்தைத் தொட்டப் பிறகே தான்
தாய்மை எனும் பட்டம் பெறுகிறது
பெண்மை!