சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
இரண்டற கலந்திட்டப்போது
இதழின் மென்மையென்ன
முள்ளின் வன்மையென்ன!?
அது சரியில்ல
இது சரியில்ல
எதுவும் சரியில்ல என
பிதற்றிக் கொண்டே இருக்கிறான்
தன்னை இன்னும் கண்ணாடியில்
பார்க்காதவன்.!
மௌனத்தினுள்
என்னைத் தேடிக் கொண்டிருப்பதெல்லாம்
ஏதோவொரு கணத்தில்
என்னை கண்டடைந்து விடுவேனென்ற
நம்பிக்கையில்தான்..!