சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
பூவின் வாசத்தை
யாசிக்கிறாயா.!?
அது
முள்ளால் ஆசிர்வதிக்கும்
பரவாயில்லையா.!,
ஞாபகங்களுடன் கதைக்கும்
இத்தருணத்தை
யாருமற்ற இரவென்று
யார் சொன்னது.!?
சொற்கள்தான்
எனது தலையணை
அதன் அர்த்தங்கள்தான்
எனது போர்வை.!
வேரில் எதைக் கொட்டினாலும்
மலர்களென்னவோ சிரிக்கத்தான்
செய்கிறது.!
மலர்களின் மௌனம் கேட்க
நெருங்கியபோது
மலர்களின் கண்ணீராய்
பனித்துளிகள்.!
இறைவன்
கதவுகளை திறந்தே வைத்திருக்கிறான்
மனிதன்தான்
கண்களை மூடிக்கொண்டான்..
பிடித்த வரிகளிலும்
உன் வாசம்.!
சந்தோசங்கள்
விரவிக் கிடக்க
ஏன் அழுகையைத் தேடி
எடுக்கிறாய்..!?
வானமோ
பூமியோ
நீ பேசாதவற்றையா
என்னிடம் பேசிட போகிறது..!?
கசக்கும் வாழ்க்கையில்
இனி்ப்பு பலகாரமாய்
கவிதை.!
எழுதப் பிடிக்கிறது
எழுதுவதால்
என்னைப் பிடிக்கிறது
அவ்வளவுதான்.!
சட்டுவம் கொத்தும்
சத்தத்திலுமா
ஒளிந்திருப்பாய்.!?
கவிதையின்
விரல்களைப் பிடித்து
நடக்கிறேன்
அது நான் இருக்கும்
உலகத்தை
அழகாக்கிறது..