Tuesday, 31 December 2013

கடுஞ்சொல்..!!

கவலையுடன் -
தி௫ம்பிடும்-
என்னை-
காயம்படுத்தவ௫ம்-
கடுஞ்சொல்லும்!

காரணம்-
புது காயம் ஏற்படுத்திடும் அளவிற்கு-
என் உள்ளத்தில்-
இடம் இல்லாததால்..!!

Monday, 30 December 2013

மனிதன்..!!

"எப்படியும்"-
வாழலாம்-என்பவன்
மூடன்!

"இப்படிதான்"-
வாழனும்-என்பவனே
மனிதன்!

Sunday, 29 December 2013

ஒரே வசனம்..!!(சிறு கதை)


     சில  வாகனங்கள் போய்க்கொண்டி௫க்கிறது.ஒ௫ இடத்தை நோக்கி .கரடு முரடாண சாலை . வாகனங்கள் தவழ்ந்து செல்கிறது,அல்லது கடலில் கட்டுமரம் மிதந்து செல்வதை போல் .தட்டு தடுமாறி அவ்விடத்தை அடைந்தும் விட்டது.சீ௫டை அணிந்தி௫ந்த காவலர்கள் வாகனத்தை பரிசோதித்தார்கள்.
அதை விட வந்தவர்களின் பொறுமையை சோதித்தார்கள்.இந்த விழிப்புணர்வு .சில மாதங்களுக்கு முன்னால் இ௫ந்தி௫ந்தால்,காவல் காக்க வேண்டிய கட்டாயம் , காலலர்களுக்கும் இ௫ந்தி௫க்காது.அந்த வாகனமும்,அங்கு வர வேண்டிய அவசியமும் இ௫ந்தி௫க்காது.

           பரிசோதனை முடிந்த வாகனங்கள் அம்முகாமுக்குள் நுழைந்தது.அம்முகாம் அகதிகள் முகாம்.உயிர் வாழ்வதற்காக பிறந்த மண்ணை பிரிந்து , வேறொ௫ தேசம் போனாலாவது, அகதி எனலாம்.இங்கு கேவலம் சொந்த குடிமக்களையே அகதிகளாக்கிய அவலம்.முகாமில் கூடாரங்கள் அமைக்கபட்டி௫ந்தது.காற்றிற்கு அலைக்கழிக்கபட்டது.

        அதிலி௫ந்த மக்களின் முகங்கள்.கவலை.விரக்தி,அவமானம் இத்தனையவும் மொத்தமாக சுமந்தி௫ந்தது.நிவாரண குழுவை கண்டதும்,வேகமாக கூட்டம் கூடியது.எனக்கு , உனக்கு என பங்கிட்டு கொண்டார்கள்.ஆயிரம் பே௫க்கு சம்பளம் கொடுத்தவர்கள் கூட,ஒ௫ வேலை உணவுக்கு கையேந்தி நின்றார்கள்.

         கணவனை இழந்தவர்கள்.மகனை,மகளை இழந்தவர்கள்.
மானம் இழந்தவர்.இன்னும் சொல்ல வாய் கூசும் அளவிற்கு இன்னல்களை அடைந்தவர்கள்.காணாமல் போன உறவுகள் வரவே மாட்டார்கள்.ஆனாலும் வ௫வார்கள் என்கிற நம்பிக்கையில் இ௫ப்பவர்கள்.இலையில் ஒட்டியி௫க்கும் பனி துளிபோல் நம்பிக்கை கொண்டி௫ந்தார்கள்.

      கலவரத்தில் பாதிக்கபட்ட மக்களினை ஆறுதல்படுத்திட . நிவாரண குழு அம்மக்களை ஒன்றாக கூட்டினார்கள்.ஒ௫ வயதில் மூத்தவர் ஆறுதல் சொல்ல முயன்றார்.ஆனால் அவ௫க்கு ஆறுதல் சொல்லும் அளவிற்கு ,அவர் மன வேதனையில் இ௫ந்தார்.வைக்கோல் போரில் தொலைந்த குண்டூசியை தேடுவதுபோல் வார்த்தை தேடி, மக்களை தேற்றிட முயன்றார்.அக்கூட்டத்தில் ஒ௫ இளம்பெண் அழுகையை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டி௫ந்தாள் காரணம் அறிய ,அப்பெண்ணை தனியே சந்திக்க முயன்றார்.

         கூட்டத்தலி௫ந்து அப்பெண் தனியாக அழைக்கபட்டாள்.ஒ௫ கூடாரத்தில் ,அப்பெரியவர் அப்பெண்ணிடம் அழுவதற்கான காரணம் கேட்டார்.அவள் சொல்ல முற்படுவதும்.,பிறகு தவிர்ப்பதுமாக இ௫ந்தாள்.தி௫ம்ப தி௫ம்ப அப்பெரியவர் கேட்டார். அவள் தட்டுதடுமாறி நடந்தவற்றை சொன்னாள்.''ஓ....'''வென பெ௫ங்குரலெடுத்து அழுதாள்.அப்பெரியவர் திக்கித்து போனார்.அவ௫ம் குமுறி குமுறி அழுதார்.

            அவள் அப்படி என்ன !?சொன்னாள்.இதைதான் சொன்னாள்''நான் கணவ௫டன் வாழ்ந்தேன்.கலவரத்தில் என் கணவரையும்,குடும்பத்தையும் பலி கொடுத்தேன்.கலவரக்காரர்கள் மாறி மாறி கற்பழித்தார்கள். மயக்கம் அடையும்வரை கற்பழிக்கபட்டேன்.நிர்வாணமாகவே இம்முகாமிற்கு வந்தேன்.இப்போது நான் கர்ப்பமாக இ௫க்கிறேன்.குழந்தைக்கு தகப்பன் . என் கணவனா!!.? இல்லை ,கலவரகார நாய்களா......!!!!?''

// குறிப்பு-இது முழுக்க முழுக்க கற்பனை கதையல்ல...//


கை தட்டு..!!

நான்-
விழும்போதெல்லாம்-
கை தட்டுபவர்களுகளே!

கொஞ்சம் பொறுங்கள்-
ஒ௫ நாள்-
''எழும்போதும்''-
கைதட்ட போவதும்-
நீங்களே!

Saturday, 28 December 2013

உதாசினம்..!!

பறவை கூட்டம்-
கரை அ௫கிலி௫ப்பதை-
மாலுமிக்கு-
தெரியபடுத்துகிறது!

உதறி தள்ளுபவர்களின்-
உதாசினங்கள்-
நம்மை-
'உயரத்தை 'நோக்கி-
பயணிக்க சொல்கிறது!

Friday, 27 December 2013

க௫ப்பு துணியல்ல..!!

எரிக்கபட்ட-
கரிக்கப்பட்ட!

சிதைக்கப்பட்ட-
சின்னாபின்னமாக்கபட்ட!

வெட்டபட்ட-
வெட்டி வீசப்பட்ட!

மானபங்கம் நடத்தபட்ட-
மரணிக்கபட்ட!

இப்படியாக-
கணக்கில் வந்தவைகள்-
எத்தனை.!?

கணக்கில் வராதவைகள்-
எத்தனை!?

உறவை -
இழந்த!
உடமைகளை-
இழந்த!

நம்பிக்கையை-
இழக்காத-
உறவுகள்!

தட்டினார்கள்-
நீதியின்-
கதவுகளை!

அந்தோ-
பரிதாபம்!
நீதி தேவதை-
கண்ணில் கட்டப்பட்டி௫ந்தது-
க௫ப்பு துணியல்ல!

'காவி' துணி..!!

நம் பிறப்பு...!!

நம் பிறப்பு-
சாதாரணமாக-
இ௫க்கலாம்!

வாழ்வது-
சிறப்பானதாக-
இ௫க்கட்டும்!

Thursday, 26 December 2013

மான் செத்தால் ...!!

என் தேசத்தில்-
மான் செத்தால் கூட-
நீதி கிடைக்கிறது!

மனிதன் செத்தாலோ-
கிடைக்கும்-
நீதியில்-
மனிதாபிமானமே-
செத்து விடுகிறது!

Wednesday, 25 December 2013

எண்ண ஓவியம்..!!

சிந்திக்கொண்டி௫க்கும்-
சிந்தனைய௫வியில்!

ஆளுக்கு கொஞ்சம்-
பிடித்துக்கொள்கிறோம்-
உள்ளங்கையளவில்!

பிடித்த வண்ணத்தைகொண்டு-
ஓவியங்களாக வரைகிறார்கள்-
எண்ணங்களை!

காட்சி த௫கிறது-
மற்றவர்களுக்கு-
நன்மைகளாகவும்-
தீமைகளாகவும்!!

Tuesday, 24 December 2013

காதல் கவிதை....!!!

காதலிப்பவர்கள்-
காதலிப்பவர்களை-
கரம் பிடிக்கிறார்களோ!?-
இல்லையோ!?

காதல் கவிதைகள்-
பிடித்து விடுகிறது!

எழுத்தினை...!!

எழுத்தினை-
நான்-
எழுதவில்லை!

எழுத்துக்கள்தான-
என்னை-
எழுதுகிறது!

Monday, 23 December 2013

வெற்றி தேவதை..!!

வெற்றி எனும்-
தேவதைகள்-
நடத்திடும்-
சுய வரத்தில்!

தகுதி உள்ளவ௫க்கே-
மாலை சூட்டுகிறார்கள்!!

தழும்புகள்!..!!

போர் வீரனின்-
தழும்புகள்!

நெஞ்சிலி௫ந்தால்-
வெகுமானம்!

முதுகிலி௫ந்தால்-
அவமானம்!

ஒன்றுதான்-
போர் வீரனும்!
சாதனையாளர்களும்!

தழும்பில்லாத-
போர் வீரனும் உண்டோ!?

அதுபோலாகவே-
சோதனையை கடக்காத -
சாதனையாள௫ம் உண்டோ!.

Saturday, 21 December 2013

லட்சிய விதை..!!

அலட்சியங்கள்-
என்ன.!?
அவமானங்கள்-
என்ன!?

ஏளன பார்வைகள் -
எத்தனை!?
ஏமாற்றங்கள்-
எத்தனை.!?

இத்தனையும்-
'லட்சிய விதை'யை-
உறங்கிட செய்யாது!

உத்வேகமே-
அடைந்திட செய்யும்!

Friday, 20 December 2013

அனுபவம்!

முயற்சித்து -
தோற்றால்-
அது-
அனுபவம்!

தோற்றிடுவோம்-என
முயலாதி௫ந்தால்-
அது-
அவமானம்!!

பனி ரோஜா..!!

பனியில் நனைந்த -
ரோஜாவை-
கண்டுள்ளேன்!

பனியினால-
ரோஜாவாக-
என்னவளே!
உன்னைதான்-
கண்டேன்!

Thursday, 19 December 2013

வெற்றி முத்தம்....

பூவின் இதழில்-
முத்தமிட-
முயல்பவன்!

முள்ளி௫க்கும்-
காம்பைதான்-
பிடித்தாகனும்!

அதுபோலாகவே-
வெற்றியடைய-
நினைப்பவன்!

தோல்வியை-
தாண்டிதான்-
பயணிக்கனும்!

Wednesday, 18 December 2013

தண்ணீர்..!!

தவழ்ந்து வ௫ம்-
தண்ணீ௫ம்!

தடைகள் வந்தால்-
தேங்கும்!

தி௫ம்பி செல்ல-
முயலாது!

இன்னொ௫ பாதை-
கண்டிடாமல்-
இராது!

நண்பர்களே!
தடைகளை கண்டு-
நாம் தயங்கி நிற்கனுமா..!?

தொடர்ந்து முயன்றால்-
தண்ணீ௫க்கு-
வழி விட்டது-
நம்மை தடுத்திடுமா..!?

Tuesday, 17 December 2013

திறமை....!!

ஒவ்வொ௫-
பூக்களுக்கும்-
வாசம் உண்டு!

ஒவ்வொ௫-
கனிகளுக்கும்-
சுவை உண்டு!

ஒவ்வொ௫த்த௫க்குள்ளும்-
திறமைகள் உண்டு!

மரம் , செடி-
கொடிகள் ௬ட-
மண்ணை ,பிளந்து ,வளர்ந்து-
தன் 'இ௫ப்பை'காட்டுகிறது!

மனித ஜென்மமோ-
விமர்சனதிற்கு பயந்து-
'இ௫ப்புகளை'(திறமை)-
மனதோடு புதைக்கிறது!

பனி துளி...!

ஒன்றுதான்-
பனி துளியும்-
சிந்தனை துளியும்!

தெரிந்திடும்போதே-
உ௫வாக்கம்-
செய்திடனும்!

இல்லையென்றால்-
நம்மை -
கடந்து செல்லும்-
காலத்தை போல்-
கடந்திடும்.!

Monday, 16 December 2013

வாய்ப்பெனும் கதவு....!

வாய்ப்பை தேடி-
கதவுகளை-
தட்டி கொண்டே இ௫!

ஏதோ ஒ௫ கதவு-
திறந்திட-
நீ!
'தட்டுவதற்காகவே''-
காத்தி௫க்கிறது!

Sunday, 15 December 2013

சிந்தனை திரி..!

மேகத்தில்-
மறையும்-
நிலவும்!

கூந்தலில்-
நீ!
மறைத்து கொள்ளும்-
உன் முகமும்!

என்-
சிந்தனை திரியில்-
பற்ற வைக்கும்-
தீப்பொறிகள்!

Saturday, 14 December 2013

"சாதாரண மனிதர்கள்"..!(ஓர் அரசியல் பார்வை)

     அன்பிற்கினிய சொந்தங்களே!     
        இன்றைய காலகட்டத்தில் அரசியல் எனும் வார்த்தை, பலரால் கேட்ககூடாத வார்த்தை போல் அசிங்கமாக பார்கிறார்கள்.அல்லது அலட்சியபடுத்துகிறார்கள்.அரசியல் ஒரு சாக்கடைஎன்கிறார்கள்.சரி!அது சாக்கடையாகவே இருக்கட்டுமே.,அதனை யார் சுத்தம் செய்வது.!?அந்த சாக்கடைதான்(அரசியல்)அதிகாரத்தின் உச்ச பட்சம்.அதில் எடுக்கப்படும், அல்லது தீர்மானிக்கப்படும் செயல்கள்தான்., நமக்கு நன்மை பயக்குபவை,அல்லது நாசம் செய்பவை.கொத்திட வரும் பாம்பை கண்டதும் ,நாம் ,நம் கண்களை மூடிக்கொண்டால்,பாம்பிற்கு என்ன கண்கள் தெரியாமல் போய்விடுமா!?

             இன்றைய தலைமுறை வரை சொல்லிடும் உத்தமர்களில் ஒருவர்.கர்ம வீரர் காமராஜர் அவர்கள்.அவர்களிடம் சொத்து சுகங்கள் இருக்கவில்லை.ஆனால் நல்லது செய்யணும் என்ற நல்லுள்ளமும்,அதனை செயல்படுத்த ஆட்சியும் இருந்தது.இலவச கல்வியை வழங்கினார்.இன்றுவரைக்கும் மதிக்கபடுகிறார்கள்.ஆனால் இன்று கல்வி ஏழைக்கு கிடைக்கும் நிலையிலா உள்ளது!?.காரணம் என்ன,!? சமூக அக்கறை உள்ளவர்கள்,இன்றைய உலகில் இல்லையா!?.,அல்லது நமக்கென்ன என்று அவர்கள் ஒதுங்கியதாலா!?.ஒருவன் தன் கழுதையுடன் பயணித்தான்.அப்போது அவனது எதிரி கூட்டம் வந்ததை கண்டான்.உடனே தப்பித்து ஓடிட முனைந்து ,கழுதையை அழைத்தான் .கழுதை உரிமையாளனுடன் போக மறுத்தது."யாரிடம் நான் இருந்தால் என்ன!? எப்படியும் சுமையைதானே சுமக்க போகிறேன் "என்று கழுதை சொன்னது.இது கதையாக இருக்கலாம்,ஆனால் இந்த கழுதையின் நிலைதான் .நம் நிலையும்,மாறி மாறி பிரதான கட்சிகள் ஆண்டாலும் ,நம் நிலையோ மாறாத நிலை.

                    வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை, நாம் எதிர் நோக்கி உள்ளோம்.மத்தியிலுள்ள இரு பெரும் கட்சிகளான காங்கிரஸ்,பிஜேபி .இவர்களிடையில் என்ன !?வித்தியாசம்.100 சிசி பைக்கிற்கும் 120 சிசி பைக்கிற்கும் உள்ள வித்தியாசம்தான்.நாட்டின் இன்றைய நிலைக்கு கொஞ்சம் வேகத்தில்தான், இருவருக்கும் வித்தியாசம்.இவர்களல்லாத மாற்று அரசியலை உருவாக்க முடியுமா!?அல்லது முடியாமல் போகுமா!?

               டெல்லியில் தற்போது நடந்த தேர்தல்.அரசியல் மாற்றத்திற்கான ஒரு விதையை போட்டுள்ளது.ஆம் ,அதுதான் "ஆம் ஆத்மி"(சாதாரண மனிதர்கள்) கட்சி.இரு மலைகளுடன் மோதிய சிறு உளி.அவ்விரு கட்சியையும் கீறல் விழ செய்து விட்டது.இக்கட்சி முதலில் இவ்விரு கட்சிகளுக்கு மாற்றமாக ,களத்தில் பணியாற்றி திக்கு முக்காட வைத்தமைக்கு வாழ்த்துக்கள்.மாற்றம் தரும் என்பதை நம்புவோம்.

        என்தேச மக்களே!
 நாட்டின் மேல் அக்கறை கொண்டவர்களே!
நாமும் அரசியல் மாற்றத்திற்காக முயற்சிப்போம்.அல்லது குறைந்த பட்சமாவது நம் வாக்குகளையாவது மாற்றம் தர வருபவர்களுக்கு ,வாக்களிப்போம்.

      

Friday, 13 December 2013

ஏளனம் .!(தன்னம்பிக்கை பற்றியது)

         அன்புக்குரியவர்களே!
                       உலகிலுள்ளவைகளெல்லாம் ஒவ்வொரு காரணத்திற்காக படைக்கப்பட்டுள்ளது.ஆம்,மண்ணில் விளைவதை ,மனிதன் உண்ணுகிறான்.பிறகு மனிதனே,மண்ணிற்கு உணவாகிறான்.படைக்கப்பட்டதின் நோக்கத்தை பலர் அறிய முயல்வதில்லை.சிலர் அறியாமலில்லை.அறிந்தவர்கள் மட்டுமே சாதிக்கிறார்கள்.அறிய முனையாதவர்கள்,வாழ்வில் சரிகிறார்கள்.எல்லோருக்குமே ஆசை வாழ்ந்து காட்டனும் என்று.
அத்தனை பேரும் சாதித்தார்களா.!?கேள்விக்குறியே!

              அனைவருக்கும் ,தனக்கென்று ஒரு ஆசை இருக்கும்,அது தனக்கு பிடித்தமானையாகவும் இருக்கும்.அதனை செய்திடதான் நம்மில் எத்தனை தயக்கம்.எப்படிப்பட்ட மயக்கம்.யாரும் எதுவும் சொல்லிடுவாங்களோ என்ற பயம்.இவ்வுலகம் யாரைத்தான் ,நிம்மதியாக விட்டது.கையில் புத்தகத்துடன் அலையும் மாணவனை,"படிச்சி கிழிக்க போறாக"என்பார்கள்.படிக்காமல் இருந்தாலும்,"இப்பவே படிக்க மாட்டேங்குறான்"!இவனெல்லாம் எங்கே உருப்பட"என்பார்கள்.அப்படியே சாதிக்கணும் என எண்ணுவோரை.வார்த்தைகளால் வறுத்தெடுக்கும்.என்ன செய்ய இப்பேர்பட்ட உலகில்தான் வாழ்ந்தே ஆகணும்.

             இவ்வுலகம் போற்று உத்தமர்.நீதி அரசர்களில் ஒருவர்.மகாத்மா காந்தியும், அவரது ஆட்சியே நம் இந்திய நாட்டிற்கு தேவை என்றார்.ஆம்,அவ்வுத்தமர்தான் இஸ்லாமிய ஆட்சியாளர்களின் ஒருவர் உமர் (ரலி)அவர்கள். இந்த நீதி ஆட்சியாளரைகூட ,ஒரு காலத்தில் தன் தந்தையால்,"ஆடு மேய்க்க கூட லாயக்கில்லாதவன்"என ஏளனபடுத்தபட்டவர்தான் .

         உறவுகளே!திட்டுபவர்கள்,திட்டி கொள்ளட்டும்.நாம் ,நம் முயற்சியில் தளராமல்
பயணிப்போம்.நாம் வாழும் காலத்தில்,மனித சமூகத்திற்கு பலன்தரும்,சின்னதொரு நற்சிந்தனையாவது விட்டு செல்வோம்.

Thursday, 12 December 2013

என்ன ஜென்மமோ..!?

நிலவில் -
செவ்வாயில்-
மனிதர்கள்-
வாழ முடியுமா!?

ஆராய்ச்சிகள்-
நடக்கிறது-
வேகமா!

ஆனால்-
வாழும்-
பூமியை!?

இழுத்து செல்கிறோம்-
அழிவு பாதையிலே!

இருப்பதை-
பாதுகாப்பதில்லை!

இன்னொன்றில்-
தேடுவது-
குறைச்சல் இல்லை!

என்ன-
ஜென்மமோ!?

இந்த-
மனித ஜென்மம்!



Wednesday, 11 December 2013

வரலாறு..!

கடந்த-
காலத்தை-
காட்டும்-
கண்ணாடி!

இன்று-
சாதிக்க-
முனைபவர்களின்-
திசை காட்டி!

Tuesday, 10 December 2013

உதிர்ந்திட்ட ...!!

உதிர்ந்திட்ட -
பூக்கள்-
கனிகளாவது-
அரிது!

அழகே நீ!
உதிர்ந்து விட்ட-
புன்னகையில்-
கவிதை பூக்கள்-
கிடைக்கிறது!

Monday, 9 December 2013

கரு..! (சிறு கதை)

            நடுத்தரமான வீடு அது  .வீட்டின் முன் நான்கு கால் கொண்ட பந்தல்.அங்கும் இங்குமாக சிறு சிறு கூட்டங்கள்.கொதிக்க வைத்த பாலினை அரிப்பை கொண்டு தடை செய்யாமல், அப்படியே செய்யப்பட்ட தேநீரில் திட்டு திட்டாக ஒதுங்கி இருக்கும் பாலாடை போல்.அவரவர் யோசனையில் பலவாறாக சிந்தனைகள்.பல்வேறு பேச்சுக்கள்.கவலை தோய்ந்த முகங்கள்.அங்கலாய்ப்புகள்.

      "என்னய்யா..!! இது ..!? இப்படி பண்ணிருச்சய்யா..!!-ஒருவன்.

      "என்ன செய்ய.!?அந்த கிழவி வேற திட்டிகிட்டே இருக்குமா..!?மற்றொருவர்.

    "அதுக்காக இப்படியா!?-முதலாமவர்.
     "அவுக கஷ்டம் .அவுகளுக்கு..!இரண்டாமவர்.
        "நல்ல ஆஸ்பதியிரியிலும் பார்த்துக்கிட்டுதான் ,அந்த பொண்ணோட புருசனும்.,புள்ளையில்லன்னு..!

   "சரி !அதோட விதி அவ்வளவுதான்!"

       இப்படியான பேச்சுக்கள் தொடர்ந்து கொண்டிருந்தது.தற்கொலை செய்து கொண்ட ஒரு பெண்ணோட வீட்டின் முன்பாக.அதே நேரம் பெண்ணின் ரத்த உறவுகள் வந்தார்கள்.டாடா சுமோவில் வேகமாக வந்திறங்கியவர்கள்.கதறலுடன் வீடு நோக்கி, ஓடி வந்தார்கள்.அக்கூட்டத்திலிருந்த இறந்த பெண்ணோட அண்ணன்.வீட்டிலிருந்த தங்கச்சி மாப்பிள்ளை  சட்டையை பிடித்திழுத்தான்.

     "பாவிகளா..! எந்தங்கச்சியை கொன்னுடீங்களேடா..!என மல்லுக்கு நின்றான்.

          மற்றவர்கள் அவர்களது சண்டையை முடிவுக்கு கொண்டுவந்தார்கள்.வயதில் மூத்தவர் சொன்னார்..!

   "ஏய்..! என்னப்பா நீ..!அவனோட மல்லுக்கு நிக்கிறே..!?அந்த பொண்ணு செஞ்சது அவரு என்ன செய்வாரு..!"என்றார்.

       "தங்கச்சி......!!!"என பெருங்குரலோடு உட்கார்ந்தான்.

      இத்தனை களேபரங்கள் ,மத்தியில் ஒருத்தி மட்டும்.மனதுக்குள் குழம்பினாள்.அவள் சாவு ஏனென்று அறிந்தவள்.இறந்தவளும்,இவளும்தான் ,ஜோசியக்காரனை பார்க்க போனவர்கள்.இறந்தவளின் ஜாதகத்தை பார்த்த அவன்.இந்த ஜென்மத்தில் உனக்கு குழந்தை பிறக்காது என்றான்.அப்போது அழ ஆரம்பித்தவள்.மறு நாள் பார்க்கையில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தாள்.இவ்வுண்மையை மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல்,அவள் தொடர்ந்து அழுதாள். அதே நேரம்...


          அவளது உடல் அரசு மருத்துவ மனையில், பிரேத பரிசோதனை நடந்தது.காரணம் கண்டறிந்தார்கள்.கொலையா.!?தற்கொலையா .!?என்பது போன்ற கேள்விகளுக்கு ,அந்த சோதனை அறிவிப்பில் (ரிபோர்ட்)பதில் இருந்தது.அதில் ஒரு உண்மையிருந்தது.அது தெரியாமல்தான் அந்த அபலை தூக்கில் தொங்கியது.

ஆம் அவள் "கரு தரித்திருந்தாள்..!"

Sunday, 8 December 2013

இளம் மனசு..!

என்னை கண்டதும்-
எழுந்தாய்-
விரைந்தாய்!

கதவினை-
அடைத்தாய்!

அடியே!
உன் கதவிடுக்கில்-
நசுங்கியது-
உன் தாவணி முனை-
மட்டுமல்ல!

என்-
இளம் மனசும்தான்!

Saturday, 7 December 2013

தருணும்- மோடியும்!

பெண் விவகாரம்!
தருணும்-
மோடியும்!

அதென்ன!?-
ஒருவர்-
தீவிர விசாரிப்பு!

மற்றொருவருக்கு-
சிவப்பு கம்பளம்-
விரிப்பு!

காதலுக்கு-
கண்ணில்லை-
யாரோ சொன்னது!

நீதிக்கு-
இருக்குதென்று-
யார் சொன்னது!?

Friday, 6 December 2013

வென்றவர்களை விட....!!

வையகத்தில்-
எதிரிகளை-
வென்றவர்களை விட!

பிரியத்துகுரியவர்களிடம்-
"தெரிந்தே-" 
தோற்றவர்கள்-
அதிகம்!

Thursday, 5 December 2013

சாதாரணம்!

நினைப்பதெல்லாம்-
வாழ்வில்-
கிடைப்பதில்லை!

கிடைப்பதெல்லாம்-
வாழ்வில்-
நிலைப்பதில்லை!

வருவதும்-
போவதும்-
சாதாரணம்!

ஆனாலும்-
அவளது-
பிரிவோ-
"சதா ரணம்"!

Wednesday, 4 December 2013

வெள்ளாடு..! (சிறு கதை)

                இரவு மணி 10.47 .
அந்த  ரயில் நிலையம் பரபரப்பாக இருந்தது.பயணிகளை அனுப்புவதற்கு வந்தவர்களும் ,பயணத்திலிருந்தவர்களும் தனக்கு தேவையானவற்றை கடைகளில் வாங்கி கொண்டிருந்ததால் ,மக்கள் நிரம்பி இருந்தார்கள்.சிலரோ பேரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள்.சிலர் ரயில் சன்னல் வழியாக ஆலோசனை சொன்னார்கள்.வெத்தலை எச்சியும்,பான்பராக் ,குட்கா  போன்றவைகளும்  நடை பாதையை கொலை பாதையாக மாற்றி இருந்தது.

            அக்கூட்டத்திலொருவன் படபடப்புடன் நின்று கொண்டிருந்தான் .நல்ல உயரம்.இரண்டொரு நாட்களுக்கு முன் செய்யப்பட்ட முக சவரம்.
ஜீன்ஸ் பேண்டும்," இன் " செய்த சட்டையும் ,அவனை படித்தவன் போலும், அழகானவனாகவும் காட்சி தந்தது.தனது கைகடிகாரத்தையும், பாதையையும் பதட்டத்துடன் பார்த்திருந்தான்."இன்னும் சிறிது நேரத்தில் யமுனை எக்ஸ்பிரஸ் கிளம்ப உள்ளது"-என கரகரத்த ஒலிபெருக்கியில் குயிலொன்று கூவியது.இவனுக்கு நேரம் குறைய, குறைய,உயிர் நழுவிடுவதுபோல் இருந்தது.பாதையை பார்த்து கொண்டிருந்தவனுக்கு,சந்தோசம் மேலிட்டது.ஆம் எதிர்பார்த்தது வந்தது.

        விளக்கின் வெளிச்சத்தில் ஒரு இளம்பெண் வேகமாக ஓடி வந்தாள்.ரயிலை தவற விடக்கூடாது என்ற எண்ணம் மேலாட.இவனும் அவளை நோக்கி ஓடி  ,கைபையை வாங்கி கொண்டு ரயிலை அடைந்தார்கள்.தங்களது இருக்கையில் அமர்ந்தார்கள். ரயில் புறப்பட சரியாக இருந்தது

                 அவர்கள் இருக்கை முதல் வகுப்பானது.நான்கு பேர்கள் பயணம் செய்வது.ஆனால் இருவர் மட்டுமே இருந்தார்கள்.வேறு யாரும் வரவில்லை போலும்.மூச்சிரைக்க  அவள் இருந்தால்,எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த அவன் எழுந்து,அவளது அருகில் அமர்ந்து கொண்டே கேட்டான்.
     "ஏன்டா ..!!செல்லம் லேட்டு..!?-அவன்.

      "இல்லப்பா..!வீட்ல எல்லோரும் தூங்க கொஞ்சம் நேரம் ஆயிருச்சி...!அவள்.

    "எல்லாம்,அவங்களாலதான் .,அவுங்க நம்ம காதலை ஏற்று இருந்தால்.,நாம ஏன் இந்த முடிவுக்கு வரணும்..!?-அவன்.

"ம்ம்ம்..!,என்றாள் கண்கள் கலங்கி கொண்டவளாக.!

"ஏய்..!அழாதடா..!!நானிருக்கேன்ல .,எல்லாம் கொஞ்ச நாள்ல அவுகளே நம்மள கூப்புடுவாங்க பாரு...!?-என்றான்.அவளை மாரில் சாய்த்து கொண்டு.தலை முடியை கோதி விட்டு.

              குளிர்சாதன அறை .பயண சீட்டை சரிபார்ப்பவர் வந்தார்.சரி பார்த்து விட்டு சென்று விட்டார்.அறையை பூட்டி கொண்டார்கள்.
            
அவர்களின் -                        
இளமை.
அறையிருந்த -
குளுமை.
கிடைத்த -
தனிமை.
உண்டாக்கியது -
சபலம்தனை.

ரயில் எல்லையை (அடுத்த நிலையம்)நோக்கி பயணித்தது.இவர்கள் "எல்லை மீறி"பயணித்தார்கள்.

          காலை மணி எட்டு ,ஆறு நிமிடம் .ரயில் மாநகரத்தை அடைந்தது.பயணிகள் இறங்கினார்கள்.அந்த இளம் ஜோடிகளும்தான்.ரயில் நிலையத்தை கடந்து வெளியில் வந்தார்கள்.அப்போது..

"டேய்.!மாப்ள..!என அவனின் நண்பர்கள் கூட்டம்.

நலம் விசாரித்து கொண்டார்கள்.திட்டத்தை சொன்னார்கள்.இவன் நண்பனின் பைக்கில் ஏறி "சாமான்கள்"வாங்கி வருகிறேன் என கிளம்பினான்.

         அவள் மற்றொரு நண்பனோடு ஆட்டோவில் பயணித்தாள்.வேகத்தடையில் ஆட்டோ ஏறி இறங்கியது.வலது பக்கமாக வளைந்து சென்றது.அப்போது ஒரு "குட்டி யானை"எனும் வாகனத்தில் வெள்ளாடுகள் ஏற்றப்பட்டு சென்றது.அவள் பதைபதைப்புடன் அதனை பார்த்தாள்."அறுபட போகிறதே "என எண்ணி.

        மனதுக்குள் குதூகலித்தாள் .மண வாழ்வு அமைவதை எண்ணி கொண்டு.பாவம் இவள் ,போனவன் வர போவதில்லை .இவள் வாழ்வு இனிக்க போவதும் இல்லை.ஆடுகள் மேல் பரிதாபம் கொண்டவள்.தானும் அந்நிலையில் பயணிப்பதை அறியாதிருந்தாள்.ஆம் ,அவளுடன் பயணிப்பது விபசார புரோக்கர்.தற்போதுதான் "இப்பண்டத்தை" வாங்கி செல்கிறான்.....!!

Tuesday, 3 December 2013

புத்தக வெளியீடு..!


அன்புடையோர்களே!
          முதல் முறையாக நான் முதன் முதலாக வெளியிட்ட "நேசமும்-அரியாசனமும்"எனும் கவிதை புத்தகத்திற்கு நீங்கள் கொடுத்த ஆதரவாலும்,ஆலோசனைகளாலும்,மற்றுமொரு புத்தகம் வெளியிட உந்தி தள்ளியது.அதன் விளைவாக மற்றுமொரு கவிதை தொகுப்பாக தாயை பற்றிய புத்தகம் வெளியிட்டுள்ளேன்.
புத்தக தலைப்பு...
       "தாயெனும்...!!"

புத்தகமாகும்.இதனையும் வெற்றியை நோக்கி செலுத்திட உங்களது,ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.புத்தகம் வாங்கி விற்பனை செய்ய விருப்பம் உள்ளோர்கள் முகவர்களை அணுகலாம்.

மொத்த விற்பனையாளர்,
சீனி பக்கீர்,
கை பேசி-9659084870
முஹம்மது ஆரிப் ,
கை பேசி-7373430413
ஒப்பிலான்,
ராம்நாட் (மாவட்டம்)
இந்தியா.
மின்னஞ்சல்-seeni .shaah @gmail .com 

புத்தகம் கிடைக்கும் இடங்கள்,

 இஸ்ஹாக்,(sdpi கட்சி முதுகுளத்தூர் தொகுதி தலைவர்)
அல் இஹ்வான் மீடியா பேலஸ்.
அலங்கார வாசல்,
ஏர்வாடி தர்கா,
ராம்நாட்(மாவட்டம்)
கை பேசி-9944863014

பிஸ்மி மொபைல்ஸ்.,
பேருந்து நிலையம்,
சாயல்குடி,
ராம்நாட்(மாவட்டம்)
கை பேசி-9488686852

நன்றி! நன்றி!!

Monday, 2 December 2013

பெண்ணே..!

உன் -
கண்களின் வழி-
உன்-
மனதினை -
படித்தேன்!

படித்தவற்றை-
வார்த்தைகளால்-
கோர்த்து-
கவிதை வடித்தேன்!

படிக்கும் வரை-
பொறுமை கொண்டாய்!

எழுதியதை-
படிப்பதற்குள்-
எங்கே -
சென்றாய்..!?

Sunday, 1 December 2013

புது முகம்..!(சிறு கதை)

          சூரியன் மறைவதற்கான அறிகுறியானது.மாலை நேரம்தான் அது.வெப்பம் குறைந்துகொண்டிருந்தது.சூடான ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒரு வீட்டை நோக்கி வந்தார்கள்.அவர்களின் வேகத்தை கண்டு அவ்வூரின் பெரியவர்களும் என்னமோ ஏதோவென்று பின் தொடர்ந்தார்கள்.வரும் வழியிலேயே "வேகத்தின் காரணத்தை " புரிந்துகொண்டார்கள்.

          அவ்வீடு வந்துவிட்டது.பழைய மாடி வீடு அது."வாழ்ந்து கெட்டதை"சொல்லாமல் சொல்லியது.வளர்ந்திருந்த கட்டிடமும் அதிலிருந்த சிதிலமும்.
வீட்டிற்கு முன் கூடியவர்கள்.

       "அடியே ..!நீ!வெளியே வாரியா...!?நாங்க உள்ளே வரவா..!?இது ஒருவன்.

     "அவ எப்படிடா வருவா..!?......!! காதில் விழக்கூடாத வார்த்தையில் இன்னொருவன். 

இப்படியான வார்த்தைகள் கொட்டியது.ஆத்திரமும் அசிங்கமும் கலந்தவைகளாக.

          வீடு பூட்டி இருந்தது .உள்ளே நோயாளி தகப்பனும்  ,வயதான தாயும் ,18 வயது பெண்ணும் ,25 வயது பெண்ணும் ,30 வயதை தாண்டிய பெண்ணும்,
இருந்தார்கள்.தேடி வந்தது இதில் மூத்த பெண்ணைத்தான் .இவர்களுடன் ஒரு புதியமுகமும் இருந்தது.45 வயது கடந்திருக்கும்.யார் இந்த பெண்மணி கதையின் ஓட்டத்தில் அறிந்துகொள்வோம்.வெளியில் சப்தமும் வார்த்தைகளும் தடித்தன.இவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர்.அந்த புதிய முகம் கதவை நோக்கி நடந்தாள்.கதவை திறந்தாள்..!வெளியிளிருந்தவர்களுக்கு அதிர்ச்சி யார் இவளென்று..!!

        "ஏய்..! நீ யாரு..!?அவளை வர சொல்லு...!ஒருவன்.ஊர் பெரியவர் அவ்விளைஞனை தடுத்தார் .தொடர்ந்தார்.

       "யாரம்மா..!?நீ..! புதுசா இருக்கே..!என்றார்.

    "அய்யா பெரியவரே!கொஞ்சம் உக்காந்து பேசுவோமே..!?என்றார் பெண்மணி.

        "அதெல்லாம் முடியாது..!அவளை கூப்பிடு..!இது கூட்டத்தில் ஒருவன்.

        " அட !பொறுமையா இருங்கப்பா..!? என்றவர்."சரி! உக்காருங்க எல்லோரும்..!என அவர் உட்கார்ந்துவிட்டார்.

           அவ்வீட்டு திண்ணையில் முக்கியஸ்தர்களும் .மற்றவர்கள்  நின்றுகொண்டும் பார்த்துகொண்டிருந்தார்கள்.
    
       "சரிம்மா..!! யாரு நீங்க..!?-இது பெரியவர்.

          "நான் கருணை காப்பக நிர்வாகி .அந்த பெண்ணோட நிலையை நீங்க புரிஞ்சிக்கணும்..!என அப்பெண்மணி பேசி கொண்டிருக்கும்போதே..!

       "அந்த "ஓடி போனவளுக்கு"நீங்க என்ன வக்காலத்தா..!?என ஒருவன் கேட்டு விட்டான்.

          பொறுமையாக இருந்த அப்பெண்மணி.கொதித்து விட்டார்.
"ஆமாங்க ! அவ ஓடி போனவள்தான் .எவன் கூடவும் ஓடி போகல.வீட்டை விட்டுதான் ஓடி போனாள்.தானொருத்தி முதிர்கன்னியாக இருப்பதால் மற்ற தங்கசிகளுக்கு வரன் அமையாதுன்னு ,தன்னை மாய்த்து கொள்ள வந்தவளை,சிலர் காப்பாற்றி எங்க காப்பகத்தில் சேர்ந்தாங்க.இவ்வளவு பேசுறீங்களே உங்களோட வரதட்சணை எனும் பிச்சை காசாலேதானே !இப்படி பட்ட கேவலமெல்லாம் நடக்குது,அதை ஏன் நீங்க நிறுத்த முடியல.உங்க ஊர் பொண்ணுதானே அவளுக்கு ஒரு வாழ்கை அமைச்சி கொடுக்க முடியல..!காசு வாங்கிட்டு ஒரு பொண்ணு "தப்புக்கு" உடந்தையினா கேவலமான பேரு , வரதட்சணை வாங்குற ஆம்பளைக்கு என்ன பேரு சொல்றது.....!!  என பொரிந்து தள்ளி கொண்டே போனார்.அப்பெண்மணி.

         வந்தவங்க ,உட்கார்ந்து இருந்தவங்க,எல்லோரும் வாயடைத்து போய் கேட்டு கொண்டிருந்தார்கள்.

       வீட்டினுள்ளோ  அபலை பெண்களும் ஏழை தகப்பனும் கண்ணீரில் கரைந்தார்கள்.இயலாமையாலும் வறுமையாலும்.......!!!

Saturday, 30 November 2013

நான்கு முனை சந்திப்பு..!(சிறு கதை)

            நான்கு சாலைகளை இணைக்கும் போக்குவரத்து விளக்கு நிற்கும் இடம் அது.மக்கள் நடமாட்டம் மிகுதியாக இருக்கும் இடம்.பலதரப்பட்ட மனிதர்கள் பல்வேறு மன சுமையுடன் செல்லும் இடம் அது. 

          அவ்விடத்தில் ஒரு சுவர் .அதனருகினில் ஓடும் சாக்கடை கால்வாய் நாற்றத்தை தந்தது.அது போதாதென்று மனித கழிவுகளும் கிடந்தது.தெரு நாய்கள், மேலும் கால் நடைகள் படுத்து கிடந்தது. 

          போவோரெல்லாம் விறு விறுவென்று சுவற்றை பார்த்தார்கள்.விகாரமாக பார்த்தார்கள்.வில்லங்கமாகவும் பார்த்தார்கள்.பிஞ்சுகளை "பழுக்க"வைத்தது."பழுத்தவைகளை" "அழுகிட" வைப்பது.எது எப்படியோ மோசாமான காட்சிதான் அது.அப்படியென்ன ..!?அச்சுவற்றில் எல்லோரையும் திரும்பி பார்க்கவைத்தது.  

             "வனஜா இருக்கா தினுசா" -"பாப்பா போட்ட தாழ்பாள்"மேலும் கிளு கிளுப்பான காட்சிகள் .இன்று இப்படம் கடைசி.இதுபோன்ற சுவரொட்டிகள் .எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு ஆடை குறிப்புகள்.சுவர் முழுக்க அப்பட்டமான காட்சிகள் கொண்ட சுவரொட்டிகள்.

              அதன் ஓரத்தில் "பெண்கள் நாட்டின் கண்கள்"எனும் விளம்பரம்.சில மாடுகள் சுவரோடு உரசி தன் உடல் அரிப்பை தீர்த்தது.ஒரு மாடு மட்டும் "பெண்கள் நாட்டின் கண்கள்"எனும் வாசகம் கொண்ட சுவரொட்டியை நாக்கினால் நக்கி ஈரப்டுத்தியது.கொஞ்சம் இலகுவானவுடன் பல்லினால் கடித்து தின்ன ஆரம்பித்தது.

      தாலிக்கு தங்கம் இலவசம் கொடுத்து .அந்த தாலிக்கு பங்கம் விளைவிக்கும் டாஸ்மாக் தெருவெங்கும் இருப்பது போல.ஊரான் கண்களுக்கு அங்கங்களை வியாபாரமாக்கி விட்டு அது என்ன .!?பெண்கள் நாட்டின் கண்கள் என கடுப்புல அந்த சுவரொட்டியை கடிதிருக்கும்போல.அந்த அறிவுள்ள மாடு.

Friday, 29 November 2013

எரியும் வயிறு...!!

குடியால்-
குடிச்சவனுக்கும்!

குடிச்சவனால்-
குடும்பத்திற்கும்!

சமூக அவலத்தால்-
சமூக ஆர்வலர்களுக்கும்!

வயிறு-
எரிகிறது!

இதனைதானோ-
அரசு-
சாதனை என்கிறது..!?

குறைவதால்...!!

சேர்த்த பணம்-
குறைவதால்-
யாரும் மகிழ்வதில்லை!

வருடந்தோறும்-
 குறையும் -
ஆயுளை-
பிறந்த நாள் -என 
கொண்டாடுவதுதான்-
எனக்கும் புரியவில்லை!

Thursday, 28 November 2013

தகப்பனின் வலி..!!

கைதட்டல்களில்-
கரைகிறார்-
கணம் (பளு) தூக்கிய-
வீரன்!

கிழவன் -என
ஒதுக்கபடுகிறார்-
குடும்பத்தை-
தாங்கிய-
தகப்பன்!

வீரனின்-
வலியை விட!

தகப்பனின் வலி  -
அளவிட முடியாதது!

Wednesday, 27 November 2013

சாலையோர....!!(சிறு கதை)

         "டேய்...!!இங்க பாரேன்..!-அழைத்தான் ஒருவன்.

         "என்னடா.!! இப்படி...!!அதிர்ந்தான் மற்றொருவன்.

        சாலையோரமாக போனவர்கள் எட்டி எட்டி பார்த்து விட்டு அதிசயப்பட்டார்கள்.
கை பேசியை கொண்டு படம்கூட பிடித்து கொண்டனர்.

            அப்படியென்ன!? இவர்கள்  பார்த்தார்கள்.ஒரு பள்ளத்தில் நாய்க்குட்டிகளுடன் தாய் நாய் படுத்து கிடந்தது.குட்டிகளெல்லாம் தாயிடம் பால் குடித்துகொண்டிருந்தது.அக்குட்டிகளுடன் ஒரு பூனை குட்டியும் இணைந்திருந்தது.தாய் நாயும் அக்குட்டியை விரட்டவில்லை.மற்ற குட்டிகளும் பூனைக்குட்டியை  விரட்டவில்லை.

              பசியின் வலியையும் கொடுமையையும் அந்நாய்கள் அறிந்திருந்தது.அதனால் அப்பூனையவும் அனுமதித்திருந்தது.

             சாலையின் ஒரு புறத்தில் இப்படியான காட்சி.மறு புறத்தில் என்ன சப்தம்..!? வாங்க பார்க்கலாம்.இல்லை வேண்டாம்.போக்குவரத்து அதிகமாக இருக்கிறது.இங்கிருந்தே பார்ப்போம்.  

            தாரை தப்பட்டைகள் நொறுங்குகிறது.விசில் சப்தம் காதை கிழிக்கிறது.குத்தாட்டம் இன்னும் கொலை வெறியாட்டம் என பல ஆட்டங்கள்.அந்த பெரிய கட்டிடத்திற்கு முன்னால்.

                ஒருவன் பின் ஒருவனாக கட்டியிருந்த சாரத்தை பிடித்து ஏறினார்கள்.கீழிருந்த கூட்டம் கூச்சலிட்டது.மேலிருந்தவர்கள்  பதிலுக்கு கூச்சலிட்டு கொண்டே பால் குடத்தை அந்த கட் அவுட் மேலூற்றினார்கள்.கூச்சலும் கும்மாளமும் மேலிட்டது.

        அங்கே ஒரு அவலம்.பக்கத்திலிருந்த போக்குவரத்து விளக்கு நிறுத்தத்தில் கையேந்தி கொண்டலைந்தது பலதரப்பட்ட வயிறுகள்........!!

           மிருகத்திடம் மனிதம் தெரிந்தது.மனிதர்களிடம் மிருகங்கள் தெரிகிறது.

சங்கரராமா..!!

கத்திகளும்-
அரிவாள்களும்-
இரை தேடியது!

ரத்தத்தை -
சுவைத்து-
பசியாறியது!

பின்னர்-
புரிந்தது!

தானாக-
ஆயுதங்கள்-
வரவில்லை!
வரவழைக்கப்பட்டது!

ரத்தம் சிந்திய-
ஆத்மாவும்-
நியாயங்களை-
பேசி இருந்தது!

ரத்தக்கறைகளை-
துடைக்க முனைகையில்-
நாற்றங்கள் வந்தது!

முறைகேடுகள்!
முறையற்ற உறவுகள்!-
இப்படியாக தொடர்ந்தது!

தீர்ப்பு வந்தது!

நியாயம் தேடிய-
 கண்கள்-
"திரு திருவென"-
முழிக்கிறது!

சங்கரராமா..!
உயிரற்று போனாய்!

உன் உதிரங்களால்-
உண்மைகளை-
முளைபிக்க செய்தாய்!!

Tuesday, 26 November 2013

பத்து லட்சம்....!!

ஆண் பெண்-
நட்பென்பது-
வளர வேண்டிய -
மரமாகும்!

அதனை -
மறுப்பது-
மடத்தனமாகும்!

பிரிந்திருந்தால்-
பிற்போக்கு தனம்!

கட்டுப்பட்டிருந்தால்-
காட்டுமிராண்டி தனம்!

இப்படியாக-
எத்தனையோ-
வியாக்கியானம்!

தற்போதைய-
ஒரு-
சம்பவம்!

பத்து லட்சம்-
கேட்டான்-
ஒருவன்!

மறுத்தால்-
"உறவை"இணையத்தில்- 
வெளியிடுவேன்-
என்றான்!

யார்-
இவன்!?

ஒரு பெண்ணை-
மணந்தவன்!

மனைவியின்-
"அந்தரங்கதிற்குதான்-"
விலை பேசினான்!

கைது-
 செய்யப்பட்டுள்ளான்!

கட்டியவனே-
வில்லனாக-
மாறுகிறான்!

"கண்டவனுடன்"-
சுற்றுவது-
பெண்ணுரிமை என்கிறோம்!

எங்கோ-
நடந்த ஒன்னு-என
அலட்சியம் செய்வோம்!

எங்கோ நடக்கும்-
திருட்டிற்கு-
நாம் ஏன் -
பணத்தை-
வங்கியில் போடுகிறோம்..!?

Monday, 25 November 2013

பாரம்....! (சிறு கதை)

             தேசிய நெடுஞ்சாலை .இரு வழி சாலையில் கனரக வாகனங்களும் ரக ரகமான வாகனங்களும் மின்னலை தோற்கடிக்க முன்னூட்டம் காண்பது போல் பயணித்து கொண்டிருந்தது.அதிலொரு வாகனம் பயணத்தை யாருமே இல்லாத இடத்தில் ஒரு ஓரமாக நிறுத்தியது.உள்ளிருந்த இரு நடுத்தர வயதுடைய ஆடவர்கள் கண்ணசைவில் பேசினார்கள்."அதை"வெளியே தள்ளு என்கிற சம்பாசனை.!

              ஒருவன் முதலில் இறங்கினான்.பவ்யமாக "அதை"தாங்களாக இறக்கினான்.ஓரமாக "நிறுத்தி விட்டு"காரினுள் சென்று கதவடைத்தான்."முடிஞ்சதுடா.."என வாகனத்தை விரட்டினார்கள்.

               அவர்கள் விட்டு சென்றது
என்ன!? உபயோக படாத பொருளா..!? இல்லை உயிரற்ற பிணமா!? என்ன "அது"!? விட்டு சென்றவர்கள் யார்..!?இதனை அறிய பின்னோக்கி செல்லனும்.சிலவருடங்கள் பின்னோக்கினால் சிறு கதை ,பெரும் கதையாகிடும்.அதனால் இரண்டு நாட்களுக்கு முன்னால் நடந்ததை பார்ப்போம்.

                      இரண்டு தெருதாண்டி ஒருவன் வேகமாக வந்தான்.அந்த வேக நடையில் ஒரு கோபம் தெரிந்தது.வந்த நடை ஒரு அலுவலகத்தின் மேலாளர் அறையை அடைந்தது. கதவை திறந்து வேகமாக சென்றான்.வேகமாக திறந்த கதவு அசைந்து கொண்டிருந்தது.

   "என்னைய என்ன.!?கேனபயன்னு நினைச்சியா!?இன்னைக்கி தேதியென்ன..!? இன்னும் உன் வீட்டுக்கு "கொண்டு"போகாமல் இருக்கே.!?வந்தவன் கொந்தளித்தான்.கோபத்தை வார்த்தையில் கொப்பளித்தான்.

        "என்னையவும் என்னடா செய்ய சொல்றே..!?சனியனை  சுமந்தமாதிரி இருக்கு ..!?இப்படியே எவ்வளவு நாளைக்கு காலம்தள்ள..!?மேலாளர்.

    "அதுக்கு என்ன செய்ய சொல்றே!நான் தான் கிடைச்சேனா!?-வந்தவன்.

    " பொறு !யோசிப்போம்...!!-மேலாளர்.

    ஆடிய கதவு தள்ளாட்டத்தை நிறுத்தி விட்டது.கதவு சாத்திகொண்டது.பேசியது என்னவென்று தெரியவில்லை.முகபாவனைகளும் உடல் அசைவுகளும் ஒரு திட்டம் தீட்டபடுவது மட்டும் உறுதிபடுத்தியது. 

             "சரி நீங்க சொன்ன மாதிரியே..! முடிச்சிருவோம் ..!!-கதவை திறந்து கொண்ட வந்தவன் சொல்லிவிட்டு சென்றான்.

        அத்திட்டதைதான்  இன்றைக்கு செயல்படுத்தினார்கள்.தாய் இறந்து விட்டார்.பார்வையில்லாத தகப்பனைதான் "அது"வாக நெடுஞ்சாலையில் "தள்ளி"விட்டு சென்றார்கள்.அக்கயவர்கள்.

        குடும்பப்பாரத்தை சுமந்தவரை ஒரு பாரமாக எறிந்து சென்று விட்டார்கள்.

      இது கற்பனை கதையல்ல.நிஜகதையில் கொஞ்சம் கற்பனை .

நன்றி கெட்ட....!!

முதியோர் இல்லங்கள்-
பெருகுவது!

"பிள்ளைகளின்"-
"நன்றி கெட்ட தனத்தை"-
காட்டுகிறது!

Sunday, 24 November 2013

வெள்ளை புறா...!!

முத்தம்-
கொடுப்பவரையும்-
பெறுபவரையும்-
பொருத்துதான்-
அர்த்தம் தரும்!

அதுபோலாகவே-
சமாதானத்தின்-
பொருள்கொண்டதுதான்-
வெள்ளை புறாவும்!

ரத்தைகறைக்கொண்ட-
கைகளும்-
புறாவை பறக்கவிடுகிறது!

சமாதானம் எனும்-
சொல்லில்கூட-
ரத்த வாடை -
அடிக்கிறது!

வஞ்சியே..!!

பனிகளினால்-
செய்திட்ட-
பதுமையா-
நீ!?

கொதித்த பாலில் ஒதுங்கிய -
பாலாடையால் செய்த -
தேகம் கொண்டவளா!?-
நீ!

வஞ்சி-
உன்னை வர்ணிக்க-
வார்த்தைகளை-
தேடுகிறேன்!

என் வசம்-
உன் "வாசம்"-
வராது-என்பது
தெரியாமல்!

நிலவினை-
பார்த்திட துடிக்கும்-
சூரியனை போல்!




Friday, 22 November 2013

அர்த்த ராத்திரி...!(சிறு கதை)

     "சுஜி! சுஜி! எழும்பலையா.!?என அறைத்தோழி எழுப்பினாள்.எழுந்த சுஜி கைபேசியை பார்த்தாள்.மீண்டும் போர்வையால் முகத்தை மூடிக்கொண்டு படுக்க முயற்சித்தாள்.

       "என்னப்பா..!!கொஞ்ச நாளாவே ரொம்ப "டல்லாவே " இருக்கியே என்ன..!?என அறைத்தோழி கேட்டாள்.

       "ஒன்னும் இல்லை !எப்பவும் போலதானே இருக்கேன்."!கண்களை மூடிக்கொண்டே பதிலுரைத்தாள்.
  
    "இல்லையே !ஒரு மாசத்துக்கு முன்னாலே நான் அவசரமா ஊருக்கு போயிட்டு வந்தேனே .அப்ப இருந்தே பாக்குறேன் ஒரு "மாதிரியா"இருக்கியே! எதையும் பார்த்து பயந்துட்டியா...!!?என கனிவுடன் கேட்டாள்.

    "அதெல்லாம் இல்லை..!!-என சுஜி சொன்னாள்.

     " அப்ப காலேஜுக்கு இன்னைக்கும் வரலையா..!? இது அறைத்தோழி.

      சுஜியிடமிருந்து பதிலில்லை அந்த மௌனத்தில் வரமாட்டேன் எனும் அர்த்தம் புதைந்திருந்தது.

     "சரிப்பா..!! நான் கிளம்புறேன் -என ஆடைகளை சரிசெய்துகொண்டு காலேஜுக்கு தோழி கிளம்பி விட்டாள்.

        கதவை சாத்தி விட்டு நடந்தால் அவளது நடை சப்தம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது.உடனே சுஜி எழுந்தால் கைபேசியை எடுத்தாள் ஒரு எண்ணுக்கு அழைத்தாள்.

"ஒரு பாதி கதவு நீயடி ....!!"என பாடி முடிந்தது.எதிர் முனையில் பதிலில்லை.திரும்ப திரும்ப முயற்சிக்கிறாள்.பதிலில்லை.

          சில மணிகள் கழிந்தது.மீண்டும் மீண்டும் "அழைப்புகள் "தொடர்ந்தது.ம்ஹும் பதிலில்லை.

        வயிற்றை தடவி பார்த்தாள்.வெட்கமும் இயலாமையும் "பலியானதும்"எண்ணியவுடன், ஓ!வென அழுதாள்.அறைத்தோழி அவசரமாக ஊருக்கு சென்றபோது அந்த அர்த்த ராத்திரியை எண்ணி பார்த்தாள்.குழுங்கி குழுங்கி அழுதாள்.

     ஆம் அன்றிரவு வேட்டை நாயொன்று அவளது கற்பில் வேட்டையை நடத்திவிட்டது.அந்நாய் காதல் எனும் முகமூடியுடன் வந்திருந்தது.சமயம் பார்த்து வேட்டையை முடித்தது."அடையாளத்தையும்"அவளுக்குள் விதைத்து சென்றுவிட்டது.

         அவள் அழுது அழுது கைபேசியில் அழைக்கிறாள்.பதில்தான் இல்லையானதும்,கண்ணீரில் நனைகிறாள்......!!

மின்னலா!? மின்சாரமா!?

வந்தாய்-
மறைந்தாய்-
அதிர்வை தந்தாய்!

என்னவளே!
நீ!
மின்னலா!?
மின்சாரமா!?

நம் -
தமிழகத்தில்-
மின்னலை விட-
மின்சாரமே அபூர்வம்!

எனக்கும்-
உன்பார்வைஎன்பதும்-
அதுபோலாகும்!

Thursday, 21 November 2013

கணக்கு..!

நல்லாட்சி வருமென்று-
வாக்களித்தோம்!

மாறாத நிலை கண்டு-
விக்கி தவிக்கிறோம்!

பணத்திற்கு-
பாதுகாப்பு -என
வங்கியில்-
வைத்தார்கள்!

வங்கிக்குள்ளேயே-
"கணக்கு"முடிக்கபடுகிறார்கள்!"

Wednesday, 20 November 2013

"காட்சிகள் ". (சிறு கதை)

             காட்சி -1
              -------------
               பச்சை பசேலென இருக்கும் மலைகளுக்குள் சல சலவென ஓடும் அருவியொன்று.அதனை சுற்றி சப்தமிடும்  பறவைகள் கூட்டம் சிறகடித்து பறக்கும் சப்தம்.இயற்கை அழகு கண்ணுக்கு குளிர்ச்சியை தந்தது.

                அழகு தேவதை பெண்ணொருத்தி அருவியை நோக்கி  வருகிறாள். வந்தவள் தலையில் கட்டியிருந்த துவாலையை தூக்கி எறிந்தாள். அதனை தொடர்ந்து தனது மேலங்கியை அவிழ்க்கிறாள் . மேலும் மார்பிலிருந்து முழங்கால்வரை மறைத்திருந்த துண்டையும் துச்சமென களைகிறாள்.இரண்டு கையளவு துணிகளை ஆடையென அணிந்திருந்தாள்.

              ஒரே குதி அருவினுள் நீந்துகிறாள் சிரிக்கிறாள் சோப்பு தேய்க்கிறாள் தேய்த்துகொண்டே இருக்கிறாள் .அழுக்கில்லாத உடம்பில் அலுக்காமல் சோப்பு தேய்க்கிறாள்.

         பிறகு செல்லகொஞ்சலுடன் சொல்கிறாள் ."என் மேனியின் அழகிற்கு இந்த "டாப்ஸ்"சோப்பே காரணம்....!! என்கிறாள்.

            காட்சி-2
            ---------------
          
                    மழை பெய்ந்து ஓய்ந்திருந்தது.சாலையின் குழிகளிருந்த தண்ணீரை வைத்து அறியமுடிந்தது.அந்த ஈரசாலையில் 
வருகிறாள் சுடுதார் அணிந்து ஒரு பூஞ்சோலை. 

                அவளிடம் ஒரு இளைஞன் தன்காதலை ஒரு பூவின் மூலம் தெரியபடுத்துகிறான்.அவள் மறுக்கிறாள்.கடிதம் கொடுக்கிறான் அதில் என் உயிரே உனக்கென வாசகம் கொண்ட கடிதம் அது.அப்போதும் மறுக்கிறாள்.இன்னொரு நாள் ஒரு பைக்கில் வந்து பார்க்கவே செய்கிறான்.அவள் விறு விறுவென பைக்கில் ஏறிக்கொள்கிறாள்.

              பைக் பறக்கிறது.உங்களுடன் என்றும் "காசாகூ"பைக் இருக்கவேண்டும் என சொல்லபடுகிறது.

                காட்சி-3
                 -----------
           விடுமுறைதின சிறப்பு நிகழ்ச்சி "பெண்களின் கண்ணியம் காக்கபடனும்".இதனை உங்களுக்கு வழங்குவது."காசாகூ"நிறுவனத்தாரும் "டாப்ஸ்"நிறுவனத்தாரும்.சொல்லி ஒளிபரப்புகிறது தொலைக்காட்சி....

       தலையில் மண்ணள்ளி போட்டுவிட்டு குளிக்க தண்ணீர் கொடுப்பது போலாகவே உள்ளது.இது போன்ற காட்சிகள்...

Tuesday, 19 November 2013

கன்று குட்டி.(சிறு கதை)

         "ம்ம்ம்மாஆ ...ம்ம்மா..."என கத்தி கதறியது பசு மாடொன்று.அதன் கதறலில் ஒரு காரணமும் இருந்தது."தனக்குள்"இருந்த மற்றொரு உயிரை வெளியில் தள்ள வேண்டிருந்தது.பசுவின் கண்களில் வலியும் அவஸ்தையும் கலந்து இருந்தது.உலகின் எந்த உயிரும் பிரசவம் என்பது சவமாவதின் வலியை தருவது. 

                    மாட்டின் சொந்தகாரரும் மற்ற சிலரும் பசுவோடு போராடிகொண்டிருந்தார்கள்.குட்டி ஈன்று விட உதவிகொண்டிருந்தார்கள்."ஹே"என சின்ன பிள்ளைகளும் விளையாடி கொண்டிருந்தார்கள்.பெரியவர்கள் அச்சிறுவர்களை விரட்டினார்கள்.

                    மீண்டும் பசுவின் அலறல் தொடங்கியது.வெளியில் தள்ளியது.கண்டொன்று பிறந்தது.
அக்கன்று "கிடாரி கன்று"(பெண் கன்று) பசுவின் உரிமைக்காரருக்கோ மட்டற்ற மகிழ்ச்சி .அதன் வாயிலாக குட்டிகள் விருத்தி ஆகுமென்று.

                   எல்லோரும் சந்தோசமாக இருக்கும்போது அவ்வீட்டினுள் ஒரு அறையில் நடுத்தர வயது பெண்ணொருத்தி தலையணையில் தலை புதைத்து குப்புற படுத்து கிடந்தாள்.

              "அடியே ...!படுத்தே கிடந்தா என்ன அர்த்தம் எந்திரிச்சி,வேலை வெட்டியா பாரு..!"ஊரு உலகத்துல இல்லாததா .!?" என சொல்லிக்கொண்டே டிங் டிங் என வெத்தலையை இடித்துகொண்டிருந்தாள் கிழவி ஒருத்தி.

          மேலும் தொடர்ந்தாள்-"முதல்ல நீ! பெத்த இரண்டும் பொட்டையா பொறந்திரிச்சி.!இதுவும் பொம்பள புள்ளையா இருக்கும்னு "கரைச்சிட்டு " வந்தாச்சி ..! இதுக்கு போய் படுத்து கிடக்குறியே விவஸ்த கெட்டவ..!!என பொருமிக்கொண்டே வெத்தலையை இடித்தாள்.
     
            இடிபட்டது வெத்தலை மட்டுமில்லை.மனித சமூகத்தின் மனிதமும்தான்.....!!!

Monday, 18 November 2013

சாப்பாடு பொட்டலம்...!!(சிறு கதை)

           சூரியன் கோபத்தை வெப்பமாக கக்கியது.தார்சாலை அதன் பங்கிற்கு அனலை துப்பியது.இதில் பெட்டிக்கடை வானொலியொன்று "தீபிடிக்க தீபிடிக்க முத்தம் கொடுடா .."பாடலை பாடிக்கொண்டு கடுப்பை கிளப்பிகொண்டிருந்தது.
அந்த மதிய வேளையில்.. 

                  ஜனங்கள் அவரவர் வேலையில் மூழ்கி கொண்டு,வரவும்போவதுமாக பேருந்து நிலையம் இருந்தது.

                ஒரு உணவகத்திலிருந்து வெள்ளையும் சொள்ளையுமாக மூன்று பேர்கள் வந்தார்கள்.அவர்களது நடையில் ஒரு "கெத்து"தெரிந்தது.

             அம்மூவர் படை தேநீர் கடையை வந்தடைந்தது.
"அய்யா..! பசிக்குது ஏதாவது தர்மம் பண்ணுங்கய்யா..!!"அவர்களிடம் யாசித்தது ஒரு வயாதானவர். பரட்டைத்தலையும் குழிவிழுந்த கண்களும் அவரது ஏழ்மையை சொன்னது .பரிதாபத்தை உண்டு பண்ணியது.
            
       மூவரில் ஒருத்தன் இன்னொருவனுக்கு கட்டைளையிட்டான் ."அங்கே போய் ஒரு சாப்பாடு பார்சல் வாங்கி இவருக்கு கொடு " என்றான்.

      நீங்க  நல்லா இருப்பீங்கய்யா....!! என நன்றி சொன்னார்.
             
           அதை கண்டுக்காமல் கடைக்குள் பிரவேசித்தார்கள்.கடையிலுள்ள வாடிக்கையாளர்களும் முதலாளியும் பவ்யமாக பணிந்தார்கள்.

              "என்னடா..!!அலைய விடுறியே என்ன..!?தேடி வரணுமோ..ம..."!வார்த்தைகள் தடித்தன வந்தவர்களிடமிருந்து.

      "இல்லண்ணே..!!கொடுக்க வச்சிருந்த காசு பாப்பாவுக்கு உடம்பு முடியாம போச்சி ...அதுல செலவாயிருச்சு அண்ணே..!!எப்படியும் இரண்டு நாள்ல தந்துறேன்..!!என கெஞ்சினார் கடை முதலாளி.
           
        "அதெல்லாம் முடியாது சாயங்காலம் வருவேன்.கொடுத்துரு பணத்தை இல்லையினா மரியாதை கெட்டுரும்..!!மரியாதையை கெடுத்துட்டு மறுபடியும் கெட என்ன இருக்கு ஆனாலும் எச்சரித்து விட்டு போனான்.

                 அதேநேரத்தில் சாப்பாடு வாங்கபோனவன் பார்சலை முதியவரிடம் கொடுத்து விட்டு அவனோட சென்றான்.ஆம் அவன் ஒரு கந்துவட்டிக்காரன்.வசூலுக்கு பக்கத்துக்கு ஏரியாவிற்கு சென்றான்.தன் படையுடன்.
       
          சில நாழிகைகள் கழித்து அந்த மூவரும் அத்தேநீர் கடையை கடந்து சென்றார்கள்.அப்போது இரு நாய்கள் ஒரு உணவு பொட்டலத்தை கடித்து குதறி தரையில் சிந்தி கொண்டிருந்தது .அப்பெரியவரும் "பாவப்பட்ட"பணத்தால் வாங்கப்பட்ட சாப்பாடை சாப்பிடவில்லை.நாய்களும் சிந்தியதேயொழிய சாப்பிடவில்லை.
    
         ஆனால் அந்த கந்து வட்டிக்காரன் போடும் "எச்சிதுண்டுகளுக்கு "ஆசைப்பட்டு இரு பிச்சைகார நாய்கள் சென்றது கந்து வட்டிகாரனுக்கு பக்கபலமாக....!!

சிமிட்டி சிமிட்டி...!!

அழகே!
கண்களை-
சிமிட்டி சிமிட்டி-
பேசுவதில் -
உனக்கொன்று பாதிப்பில்லை!

கொஞ்சம் புரிந்துகொள்-
மின்னல் தாக்குதலை-
என் உடல் தாங்குமா...!?

Sunday, 17 November 2013

என்னடா செல்லம்..!!(சிறு கதை)

              "என்னடா செல்லம் .! வந்துகொண்டுதான் இருக்கேன்"! "சாரிமா கொஞ்சம் லேட்டாச்சி..!!உரையாடல் நடத்திக்கொண்டே விரைவாக தனது பைக்கை செலுத்தினான் இளைஞன் அவன்.

           இவன் பார்க்கபோவது தனது தொலைபேசியில் தவறுதலாக வந்த அழைப்பில் எண்ணங்கள் சிறகடிக்க கைபேசியும் திரும்ப திரும்ப அடிக்க மௌனம் உடைந்து வார்த்தைகள் வளர்ந்து பலமுறை சந்திக்க முனைந்து இன்றுதான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது..!

         அவள் சொன்ன இடம் வந்து விட்டது.அண்ணா பூங்கா.உள்ளுக்குள் சிறுவர்கள் விளையாடிகொண்டிருந்தார்கள்.பெற்றோர்கள் அவர்களை பின்தொடர்ந்தார்கள்.வயதானவர்கள் சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்துகொண்டு "இழந்தவைகளை"எண்ணி கொண்டிருந்தார்கள்.மாலை நேரம் 6.30 என்பதால் கொஞ்சம் குளுமையாக இருந்தது.மேகங்கள் வட்டமிட்டு இருந்ததால் குளிர்காற்று உடலை சிலிர்க்க செய்தது.

          இவனது பார்வை பாவையை தேடியது.தேடல் மாமரத்தின் கீழ் நிலைக்குத்தியது.ஆம் மாங்காய்கள் அங்கு சிதறிக்கிடந்தன.மாங்கனியைபோல அவள் நின்று கொண்டிருந்தாள்.
நடுக்கத்துடனும் நிறைய ஆசைகளுடனும் அவளை நெருங்கினான்.

         அறிமுக உரையாடல்கள் நடந்தன.அவ்வுரையாடல் முடிந்ததும்  வார்த்தை தடை பட்டன.
      கண்கள் காதல் பேசின .நேரம் கடந்து கொண்டிருந்தன.

"என்னை உனக்கு பிடிச்சிருக்கா ..!?அவன் கேட்டான்.

அவள் மௌனித்தாள்.

""மணி  ஒன்பதரையாச்சி கிளம்புங்க...!! இது பூங்கா காவலாளி.

"கிளம்பிறோம் சார்.! என சொல்லிக்கொண்டே அவரது கையில் நூறு ரூபாயை திணித்தான்.

"சரி சரி! என சொல்லிகிட்டே அவர் கிளம்பிட்டார்.

அவர் போன கொஞ்ச நேரத்தில் அவனுக்கொரு இன்ப அதிர்ச்சி .
அவள் அவன் எதிர்பாராதபோது முத்தமிட்டாள்.

       இவன் "வாங்கியதை" கொடுக்க முயற்சித்தான்.அவள் ஓட்டம் பிடித்தாள்.இவன் துரத்தினான்.நேரம் பத்துமணிக்கு மேல் ஆனதால் கூட்டம் முழுவதுமாக குறைந்திருந்தது.இவனுக்கு சந்தோசமாக இருந்தது.
    
          ஓடியவள் மூச்சு வாங்கியவளாக ஒரு மரத்தின் கீழ் நின்றாள்.நல்ல இருளாக இருந்தது.இவன் ஆசை அலைமோத நெருங்கி கொண்டிருந்தான்.அவள் செல்ல சிரிப்புடன் "வேணாம் !வேணாம்"-
என்றாள்.

              படார் என மூக்கில் விழுந்தது .முத்தமல்ல அவனது முகத்தில் முரட்டு குத்து.சராமரியாக கண்கள் கன்னங்கள் மாறி மாறி விழுந்தது அடிகள்.நிலை தடுமாறினான் .அரைமயக்கதிற்கு உள்ளானான்.

              அவனது பணம், கை பேசி பைக் சாவி, தங்க சங்கிலி எல்லாம் கையாடபட்டது அடிதவர்களால் .அவர்களோடு உதவி புரிந்தாள் "மாங்கனி".இவன் முனங்கிக்கொண்டே ஏமாற்றாட்டதை உணர்ந்தான்.

                 இவனது பல்சர் கிளம்பி போகும் சப்தம் இவனுக்கு கேட்டது.இவனது முனங்கல் சப்தம்
யாருக்கும் கேட்கவில்ல்லை....!!
           

கவலையின்போது...!

குழம்பிய மனதில்-
தெளிவான சிந்தனை-
பிறக்காது!

கவலையின்போது-
கலங்கினோமேயானால்-
திறந்திருக்கும்-
வாயிலும் தெரியாது!

Saturday, 16 November 2013

விழி எனும் ஆயுதம்...!!

அழகு விழியாளே!

"வேல் விழியாள்"-
"வாள் விழியாள்"-என
கவி எழுதியவர்களை-
நீ!
தாக்கினால்-
அது நியாயம்!

ஓரமாக போகும்-
என்னை -
உன் விழியால்-
சிதைக்க முனைவது-
அநியாயம்!

Friday, 15 November 2013

நன்றி! நன்றி!! (1000 மாவது கவிதை)

முளையிடும்-
கிளையினை-
கால்நடைகள்-
கடித்திடாமல்-
தடுக்கும்-
வேலிகள்!

விரக்தியின்போது-
அதன் சாயலைக்கூட-
துடைத்திடும்-
குழந்தையின்-
பிஞ்சுவிரல்கள்!

அடைமழை-
நின்றபின்பும்-
இலைகளின்-
தங்கி இருக்கும்-
மழை துளிகள்!

பிரிந்து-
" சென்றபின்னும்"-
இனிமை தரும்-
நினைவுகள்!

இதுபோலாகவே!
என் எழுத்தினை-
இவ்வளவு தூரம்-
பயணிக்க வைத்தீர்கள் !

கருத்துகளையும்-
ஆலோசனைகளையும்-
தந்தீர்கள்!

உங்களனைவருக்கும்-
மனமுவந்த-
நன்றிகள்!

இத்தனையும்-
எனக்கு !

அமைத்தளித்த-
இறைவனுக்கு! ?

காலமெல்லாம்-
கண்ணீர் வடித்தாலும்-
கண்ணின் ஒளிக்கு-
அது ஈடாகாது!

இதில்-
எண்ணற்றவற்றை-
அள்ளி சொரிந்தவனே-
உனக்கு -
நன்றி செலுத்திட-
வழியேது!?

இறைவா!
உன்னையே -
நான் வணங்குகிறேன்!

உனக்கு மட்டுமே-
வணக்கத்தை-
உரித்தாக்குகிறேன்!

//இனி கதைகளும் எழுதிட முயற்சிக்கிறேன்.இத்தருணத்தில் சொல்லி கொள்கிறேன்///