Monday, 28 December 2015

பாறை..!!

என்றாவது ஒரு நாள் அருவியால் தழுவப்படுவோமெனும் நம்பிக்கையில்தான்
வெயிலினில் காய்ந்துக் கொண்டிருக்கிறது
பாறைகள்..!!

     

Sunday, 27 December 2015

கொசு..!

பேராசைக் கொண்ட கொசுக்கள் தான்
தேநீர் குவளையில் மூழ்கிச்சாகிறது..!

     

Friday, 25 December 2015

அகல்விளக்கு !

காற்றுடன் போராடித்தான்
இன்னொருவருக்கு வெளிச்சம் கொடுக்கிறது
அகல்விளக்கு !

    

Wednesday, 9 December 2015

ஆழம்...!!

ஆழ்கடலில் அலைகளில்லை என்பதினால்
அவ்விடத்தில் ஆழமில்லை என்று
அர்த்தமில்லை !

அதுபோலவேதான்
அறிவாளிகளின்  மௌனங்களும்!!

     

Sunday, 6 December 2015

முகமூடி !

இன்னொருவரின் முகமூடி
எனக்கெதற்கு..!?

எனக்கென்று
ஓர் முகம் இருக்கையில் ...!!

     

Wednesday, 2 December 2015

எழுத்தேற்றம்..!!


எழுத்தேற்றம் வைத்துதான்
நானும் இரைக்கிறேன்!

என் உள்ளக்கிணற்றில் நிரம்பிடும்
சிந்தனைகளை..!!

அச்சிந்தனைகள் மழையாகப் பொழிந்தாலாவது
பருவ காலத்தில் வந்து ஓய்ந்திடும் என நானும் ஒதுங்கிடுவேன் !

ஆனால் அதுவோ ஊற்றாக அல்லவா
பீறிடுகிறது!

இரைக்க இரைக்க ஊருகிறது!

இரைக்காதிருந்தால்
என்னை மூழ்கடிக்கிறது!

நானும் என்ன செய்ய..!?

அடுப்போடும் நெருப்போடும்
பிழைப்போட்டும் எனக்கு எழுதுவது தேவையில்லை தான்..!!

ஆனாலும்
நான் மூர்ச்சையாகி விடாமலிருக்க
எழுத்தேற்றம் கொண்டு இரைப்பதை விட
வேறு வழியில்லை..!!