சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
Saturday, 30 January 2016
முடி.!
கிரீடமாக பார்க்க்கபட்டது
கீழ்த்தரமாகவும் பார்க்கப்படுகிறது
முடி!
Wednesday, 27 January 2016
செருப்பு..!!
எப்படிதான் உழைத்தாலும்
வீட்டிற்குள் அனுமதிக்கப்படுவதில்லை
செருப்புகள்!
நதி !
கடலில் கலந்திடும்வரைதான்
அதன் பேர் நதி !
Tuesday, 26 January 2016
மண்ணறை.!
இன்னும் இன்னுமென அலைபவர்களைப் பார்த்து
மௌனமாய் சிரிக்கிறது மண்ணறைகள்!
Saturday, 23 January 2016
தேனீ..!!
தனக்காக மட்டுமே
தேனினை சேகரிப்பதில்லை தேனீக்கள் !
Thursday, 21 January 2016
கர்ப்பப்பை !
சில காலகட்டங்கள் வரைதான்
கர்ப்பப்பை கூட நம்மைத் தாங்குகிறது !
Wednesday, 20 January 2016
மெழுகுவர்த்திகள் !
தன் கண்ணீரை
பிறர்மீது எறிவதில்லை மெழுகுவர்த்திகள் ..!!
Tuesday, 19 January 2016
கத்தரிக்கோல் .!
சில சிலவற்றுடன் பிரிந்திருப்பதும்
நன்மைக்குத்தான்.
ஏனென்றால் கத்தரியின் இரு இதழ்கள் இணைந்துதான்
ஒட்டியிருப்பதை வெட்டி விடுகிறது !
Saturday, 16 January 2016
அசுத்தம் ..!
தாகம் தீர்த்திட்ட நதியினை
தன் நாக்கினால் நக்கி அசுத்தம் செய்து விட்டதாக
மனப்பால் குடிக்கிறது
நாய்கள்..!
Wednesday, 13 January 2016
புரோட்டா.!
அடிப்பட்டு கிழிப்பட்டாலும்
ருசிக்காமல் இருப்பதில்லை
புரோட்டாக்கள்!
Sunday, 10 January 2016
நாற்றம்.!
கருவாட்டு ஈக்களுக்கு
கஸ்தூரி நாறிடத்தான் செய்யும்!
Friday, 8 January 2016
சோம்பல் .!
புல்வெளியிற்கும்
பனித்துளியிற்குமான உறவென்பது
சூரியன் சோம்பல் முறிக்கும் வரைதான்..!!
Monday, 4 January 2016
படகு..!
படகுகளின் மேல் உரிமை கொள்வதில்லை
பலகைகளான மரங்கள்!
Friday, 1 January 2016
கண் மூடு..!!
என் கவிதைகளை
கண் மூடி தடவிப் பார்!
அதில் நான்
உன்னை ஒளித்து வைத்திருப்பதை
உணர்வாய்!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)