Thursday, 24 November 2016

சின்ன சின்னதாய் .!(4)

"காட்டில் ஓநாய்களின் ஊளைச் சப்தம் அதிகமாக கேட்கிறதென்றால்,அங்கே சிங்கங்கள் கர்ஜிக்க மறந்துவிட்டதென அர்த்தம்.இது காட்டுக்கு மட்டுமல்ல,நாட்டுக்கும் பொருந்தும்."



"கடந்து வந்த பாதையை நெஞ்சில் வை,அடைய வேண்டிய இலக்கை கண்ணில் வை."


"வாழ்வின் சவால்களை எதிர்கொள்ள திராணி இல்லாமல் துறவறம் பூண்டவர்களின் உபதேசங்களை விட,தன்னை சார்ந்தவர்களின் பசியைப் போக்க,தன்னை வருத்தி உழைக்கும் "அன்றாட காய்ச்சி"யின் ஒரு வார்த்த்தை சிறந்தது."



"அள்ளிக் கொடுத்துக் கொள்ளும் உறவுகளை விட,விட்டுக் கொடுத்துக் கொள்ளும் உறவுகளே நீடிக்கும் ."

Saturday, 19 November 2016

சின்ன சின்னதாய்..!(3)

"சின்ன சின்ன முயற்சிகள் என்ன செய்து விடும் என்று எண்ணாதே.நாம் அண்ணாந்து பார்க்கின்ற,கட்டிடங்கள்கூட சிறு சிறு கற்களின் கூட்டமைப்பு தான்."

 

"கோபத்தை வெளிப்படுத்த தெரிந்த அளவிற்கு ,தன் பாசத்தை சொல்லத் தெரியாதவர்கள் .தந்தைமார்கள்."



"ஆயிரம் ரூபாய் செலவழிக்கும்போது தெரியாது,நூறு ரூபாய் சம்பாதிக்கும்போது தான் புரியும்.நம் தகப்பன்மார்கள் பட்டபாடு."

 

"இவ்வுலகம் தாயை எழுதியதைப் போல் ,தந்தையின் தியாகத்தை எழுதிடவில்லை.ஏனென்றால் தாயைப் போல் ,தகப்பன் தன் கண்ணீரை வெளிக்காட்டிடுவதில்லை."



"எல்லோருக்கும் முதன் முதலாக அறிமுகமாகும் முதல் ஹீரோ "வாப்பா"தான்.ஆனால் அந்த "வாப்பாக்களோ"வில்லன்களாகவே,கடைசிவரை நடித்துக் கொண்டிருப்பார்கள் ."


Tuesday, 15 November 2016

சின்ன சின்னதாய் ..!(2)

"மண்ணில் விதைப்பது தான் முளைப்பதுப் போல்,நாம் பேசிடும் வார்த்தைகள்கள்,பிறரது மனதில் புதைந்து,நம்மைப் பற்றிய எண்ணங்களாக வளர்கிறது."

 ---------------------

"சொல்லெனும் கல்லால்,ஒருவரது மனக்கண்ணாடியை உடைப்போமென்றால்,அதில் சிதறுதுவது ,அம்மனக் கண்ணாடியில் பதிந்திருந்த ,உங்களது பிம்பமும் தான்."

  -----------------------

"தோற்க தோற்க துவளாமல் முயன்றுக் கொண்டே இரு.ஆம்! வலிக்க வலிக்கத் தான்,உடற்பயிற்சியில் உடம்பில் உரமேறுகிறது."

------------------------

"குழந்தைகளின் நெஞ்சில் பெருமைத் தனத்தை ஊட்டி வளர்க்காதீர்கள் .அது அவர்களது சோற்றில் நஞ்சைக் கலப்பதற்கு சமம்."

------------------------

"உன்னை முழுமைப்படுத்த முயற்சித்துக் கொண்டே இரு.முழுமையடைந்த சிசுவை கருவறை வெளியேற்றுவதுப் போல்,காலமும் ஒரு நாள் உன்னை,இவ்வுலகிற்கு அறிமுகம்படுத்தும்."

---------------------------

Friday, 11 November 2016

சின்ன சின்னதாய்..! (1)

"உன்னை அழ வைத்து பார்க்க விரும்புபவர்களுக்கு முன்னால்,நீ சிரித்துக் கொண்டே அவர்களை கடந்து போ,அதுதான் நீ அவர்களுக்கு கொடுக்கும் மிகப்பெரிய தண்டனை."

------------------------

"உலகம் நமக்கு பாதையைத் தான் காட்டும்,நம் கால்கள்தான் பயணிக்க முயற்சிக்க வேண்டும்."

  -----------------------

"ஒருவரது மனக்காயத்திற்கு ,உன் வார்த்தைகளால் மருந்திட முடியுமென்றால்,நீயும் மகான் தான்."

 ----------------------

"கல்லில் இருக்கும் தேரைக்கும் உணவளிக்கும் இறைவன் ,கை கால் உள்ள நம்மை உழைத்து உண்ண சொன்னதை மறந்து விட்டு ,தன் நிலைக்கு படைத்தவன்தான் காரணம் என்று ,நாம் இறைவனைப் பழிப்போமென்றால் ,நாம் தான் முட்டாள்கள்."

  -------------------

"முணுமுணுப்புடன் தொடரும் உறவை விட,சிறு சிரிப்புடன் கைக்குலுக்கி பிரிதல் சிறந்தது."

 -----------------

"இன்றைய காலகட்டத்தில் நடமாடும் புலிகளை விட,சூடு போட்டுக் கொண்ட பூனைகளே அதிகம்."

---------------------

புகைந்தாலும்
 ஊதுபத்தியாய் புகைந்திடு!

 

Friday, 4 November 2016

கவிக்குழந்தை.!

என்னிடம் சமர்த்தாக இருக்கும்
கவிதைக் குழந்தை
உன்னைக் கண்டால் தான்
சிணுங்கிக் கொண்டே அழுகிறது!
உன்னிடம் வருவதற்காக..!