Sunday 22 May 2011

பொறுத்தது போதும்...

கலங்குவதில்லை-
 கதிரவன் -
கண் விழிக்கவில்லை -
நீ என்பதால்!

அடைந்தே -
கிடைப்பதில்லை
பறவை-
 கூட்டினுள் !

நீ அடைந்தே -
கிடக்கிறாய் -
வீட்டினுள் -
என்பதால்!

விவசாயி-
 வெயிலுக்கு பயந்தால் -
நமக்கு -
உணவு எங்கே!

நாம் இமையை -
திறக்க-
முயற்சிக்க விட்டால் -
நமக்கு பார்வை தான்-
 எங்கே!?

சோதனையை -
தாங்காத -
சாதனையாளன் -
இங்கே எங்கே!?

தோல்விகளில் -
பாடம் படி!
திறந்தே இருக்கிறது -உனக்கு
வெற்றி படி!

No comments:

Post a Comment