உன்னோடு பேச ஆரம்பித்ததோ
பேச்சை நிறுத்தியதோ
நினைவில் இல்லை...
எப்போது
ஏன் தடைப்பட்டது
தெரியவில்லை..
திடீரென்ற உள்ளுணர்வில்
உன் எண்களை கைப்பேசியில்
தேடிப் பார்க்கிறேன்
அதிலும் இல்லை..
ஆனால்
நீ வாசித்ததாக பகிர்ந்த
கதைகளும் கவிதைகளும்
அலமாரியில் வைத்திருக்கிறேன்...
ஒருவேளை
அதனை மீண்டும் நான் வாசிக்கையில்
உனக்காக அது என்னிடம்
உரையாடலாம்..
அருமை..
ReplyDeleteகவிதை நன்று. பாராட்டுகள்.
ReplyDelete