இறைவா..!!
எப்படிப்பட்டவர்களிடமும்
பணிந்து நடக்கும்
உள்ளத்தையும்!
உன்னையன்றி
எப்பேர்ப்பட்டவர்களிடமும்
அடிபணிந்திடாத
நெஞ்சுரத்தையும்
எங்களுக்கு தந்தருள்வாயாக..!!
---------------------------
இறைவா..!!
கருவறையில்
எங்களை பாதுகாத்த
ரஹ்மானே!
மண்ணறையிலும்
எங்களை பாதுகாத்திடு
எங்கள் இறையோனே..!!
--------------------
இறைவா..!!
ஆயிரக்கணக்கில்
வார்த்தைகளை எழுதுகிறேன்!
ஓர் புள்ளியாவது
உன் திருப்பொருத்தமடைய வேண்டி
ஏங்குகிறேன்!
எங்கள்
சிந்தனையை சீராக்கு!
எங்கள்
எழுத்துக்களை நேராக்கு!
---------------------------
இறைவா..!
நீ கொடுத்த அறிவைக்கொண்டே
நான் உன்னை புகழ்கிறேன்!
உன்னால் பெற்ற அறிவிற்கு
நன்றி செலுத்த முடியாமல் உழலுகிறேன்!
இறைவா..!!
நீயே நிலையானவன்!
நீயே எங்களது பாதுகாவலன்!
---------------------------
இறைவா..!!
இரவையும் பகலையும்
படைத்தாய்!
அதற்கு விளக்காக
சூரியனையும் சந்திரனையும்
வைத்தாய்!
அதுப்போன்றே
நன்மை தீமை கலந்த
இவ்வுலகில் மனித சமூகத்தை படைத்திருக்கிறாய்!
நல்லது கெட்டதையறிய
உனது மொழியையும் {குர்ஆன்}
நபிகளாரின் வழியையும் வைத்தே இருக்கிறாய்!
இறைவா..!!
எங்களது உள்ளத்தை
சத்தியத்தில் நிலைப்படுத்துவாயாக!
அசிங்கத்தில் விழுந்திடாமல்
காப்பாற்றுவாயாக!
--------------------
இறைவா..!
இப்படிதான்
பயணிக்கனும் என
பயணிக்கிறேன்!
எப்படி மாறும்
பயணம் என்பதை
அறியாதவன் நானே!
மாறுவதால்
கலக்கம் எனக்கில்லை!
உன் கோபத்திற்கு
ஆளாகிட கூடாதே என்ற அஞ்சத்தில்
கண்ணீர் வடிப்பதை தவிர வேறு வழியில்லை!
உனது அருளை எங்கள் மீது பொழியச்செய்வாயாக!
உனது பொறுமைக்குள்
எங்களை புகுந்திடச்செய்வாயாக!!
------------------------------------
உங்களுக்கான என் நன்றி ,காண்க >>.http://www.jokkaali.in/2014/07/blog-post_8.html
ReplyDeleteசிறப்பான வரிகள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஒவ்வொன்றும் அருமை சகோ
ReplyDeleteஇறைவன் கொடுத்த அறிவு..சிறிதாவது அவனுக்கே அர்ப்பணம் செய்வது நல்லது..
அருமை
இறைவனை வணங்கும் வரிகள் அருமை!
ReplyDeleteஇறைவனை வணங்குவோம். நிம்மதி பெறுவோம்....
ReplyDelete