Wednesday, 26 October 2016

பனைக்காடு..!(சிறு கதை) (7)


        அதன் பிறகு நான் குடிப்பதில்லை ,காஜா மச்சானிடம் அடிப்பட்டது,போலீஸ் ஸ்டேசனில் இருந்தப்போது,உறவென்று சொல்பவர்கள் உதவிடாதது ,இச்சம்பவங்கள் என்னை சிந்திக்க வைத்தது.குடியினால்தான் இந்த நிலையென்று,வெறுத்து ஒதுக்கினேன் குடியை.எனக்கு மைதீன் உதவிட வந்த நன்றியுணர்வால்,அவன் சார்ந்திருந்த எஸ் டி பி ஐ கட்சியின் செயல்பாடுகளுக்கு சிறு சிறு உதவிகள் செய்தேன்.டெங்கு காய்ச்சல் தடுக்க "நிலவேம்பு கசாயம் "கொடுப்பதற்கு,சுற்றுவட்டாரங்களில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் நானும் கலந்துக் கொள்வதென.


    இப்படியான எனது செயல்பாடுகள் ,நானும் அக்கட்சியில் இணைந்து விட்டதாக ஊருக்குள் பேச்சு அடிப்பட்டது.அன்றிலிருந்து எனது உற்றார்,உறவுகள் எல்லாம் என்னை தலையில் தூக்கி வைத்து ஆடினார்கள் என்று சொல்ல முடியாது.குடிகாரனாக அலைந்தப்போது ,ஒரு அலட்சியமாக ,ஏளனமாக மட்டும் கடந்துச் சென்றவர்கள்,நான் கொள்கையாளர்களுடன் சுற்றுவது,ஏதோ ஓர் கலக்கம் ஏற்படுத்தி விட்டது,அக்கலக்கத்திற்கு பல காரணங்கள் இருக்கலாம்,இனி நான் காசுக்காக,போதைக்காக அவர்கள் சார்ந்திருக்கும் கட்சிகளுக்கு கொடி பிடிக்கப்போக மாட்டேன் என்பதும் அதிலொரு காரணமாக கூட இருக்கலாம்.அதனால் என்னிடம் அவர்களது ,அத்துமீறல்கள் தொடர்ந்தது,வார்த்தைகளாகவும்,பார்வைகளாகவும்.."


   ஆம்.!இன்றைய சூழலில் ஒழுக்கங்கெட்டு வாழ்வதை விட,ஒழுங்கோட வாழ முயல்வதென்பது,அவ்வளவு எளிதானதல்ல.

(முற்றும்)

     

2 comments:

  1. உண்மைதான். காலத்தின் கோலம்.

    ReplyDelete
  2. இனிய தீபாவளி வாழ்த்துகள்

    ReplyDelete