வறுமையாய் வந்தாய்
உழைப்பாயானாய்.!
வியர்வையாய் வந்தாய்
ஊதியமானாய்.!
கண்ணீராய் வந்தாய்
புன்னகையானாய்.!
வெறுப்பாய் வந்தாய்
விருப்பமாயானாய்.!
அறியாமையாய் வந்தாய்
அறிவானாய்.!
கல்லாய் வந்தாய்
சிற்பமானாய்.!
பசியாய் வந்தாய்
தேடலானாய்.!
காயமாய் வந்தாய்
கவிதையானாய்.!
No comments:
Post a Comment