Wednesday 13 July 2022

கவிதையானாய்.!

 வறுமையாய் வந்தாய்

உழைப்பாயானாய்.!


வியர்வையாய் வந்தாய்

ஊதியமானாய்.!


கண்ணீராய் வந்தாய்

புன்னகையானாய்.!


வெறுப்பாய் வந்தாய்

விருப்பமாயானாய்.!


அறியாமையாய் வந்தாய்

அறிவானாய்.!


கல்லாய் வந்தாய்

சிற்பமானாய்.!


பசியாய் வந்தாய்

தேடலானாய்.!


காயமாய் வந்தாய்

கவிதையானாய்.!

No comments:

Post a Comment