சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
Wednesday, 13 February 2019
அனாதை.!
மனிதர்களைப் போலவே
பிரியங்களும் அனாதையாய்
அலைவதும் உண்டு.!
Monday, 4 February 2019
புன்னகை..!
யாருக்காகவும்
எதற்காகவும்
உன் புன்னகையை இழக்காதே..!
Saturday, 19 January 2019
வீடு.!
சென்னையில் ஒரு வீடு
மதுரையில் ஒரு வீடு
இராமநாதபுரத்தில் ஒரு வீடு
பாவம்
தாய் தகப்பபனை இருக்க வைக்கத்தான்
ஒரு அறை இல்லாமல் போய் விட்டது
இன்றைய மகன்களுக்கு ..!
Sunday, 30 December 2018
காயம்.!
நீ ஏற்படுத்திய
காயத்திலிருந்தே கசிகிறது
உனக்கான கவிதைகள்.!
Wednesday, 19 December 2018
கடல் நீர்.!
உலகத்தின்
கண்ணீரால்
கடல்
உப்பு
கரித்து
விட்டது
நீயும்
அழுது
நீர்மட்டத்தை
உயர்த்தி
விடாதே
..!
Saturday, 8 December 2018
பூக்கடை..!
பூக்கடையை
கடந்து
செல்லும்
போதெல்லாம்
நீ
என்னுள்
தோன்றி
மறைகிறாய்
.!
Friday, 7 December 2018
மௌனம்..!
ஏன்
என்
மௌனத்தை
கலைத்திட
இவ்வளவு
பிடிவாதம்
கொள்கிறாய்
.!?
என்
மௌனம்
உனக்கு
கோழைத்தனமாகவோ
வீரத்தனமாகவோ
முதிர்ச்சித்தனமாகவோ
முட்டாள்தனமாகவோ
அமைதியாகவோ
அதிர்ச்சியாகவோ
அடக்கமாவோ
அடாவடியாவோ
இப்படியாக
ஏதோ
ஒன்றாக
உன்
விருப்பப்படி
என்னைப்
பற்றி
பிம்பத்தை
வரைந்துக்
கொள்
அதைப்பற்றி
நான்
கவலைப்பட
போவதில்லை
.
என்
மௌனத்தை
மட்டும்
கலைத்திட
விரும்பாதே
ஒருவேளை
என்
மௌனம்
உடைப்படும்
தருணம்
உன்
கண்ணில்
சில
கண்ணீர்த்துளிகள்
விரயமாகலாம்
.!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)