Saturday, 26 November 2011

பனை மரமும்-மனிதர்களும்!



பனை மரமே!

மழை இல்லாம-
கலங்கி நிக்குறதும் -
மழைதண்ணி -
ஓடுதுன்னு-
அடிசிகிட்டு  நிக்கிறதும் -
நாங்க!

யாரோ -
பெத்த புள்ளைங்க -
பெருநாளை -
பேரானந்தத்துடன்-
ஊஞ்சலாடி கொண்டாட -
சுமைகளை-
 தாங்கி கொள்வது -
நீங்க!

தொட மாட்டோம் -
தன் தலையில இருந்து -
விழுந்த முடியை!

உன் தலையிலிருந்து-
விழுந்த ஓலையால் -
பயனடையாத -
உண்டா-
ஏழைங்க!?

உச்சியில இருந்தா -
நொங்காகவும்-
மண்ணுல-
புதஞ்சா-
பனை கிழங்காகிராய்!

வாழ்வில்-
''உச்சத்தில் ''இருந்தா-
அலட்டி கொள்கிறோம்-
''கீழே ''வந்தா-
கலந்குறவங்க -
நாங்க !

மனிதர்கள்-
 சொல்கிறார்கள்-
பனை மர நிழலை -
நம்பாதே -என!

உன் நிழலில் இருந்து -
வெட்டி பேச்சு -
பேச முடியல
என்கிற -
ஆதங்கத்துல!

வீடுகள் உறுதியாக -
நீ!
தந்தாய்-
சட்டங்களை!

தன் தப்பை -
நியாய படுத்த -
எழுதிகொண்டான்-
சட்டங்களை!

நேரங்களை கடைபிடிக்க -
நீயே உதாரணம்-
காலையில -
இறக்குனா -
பதநீர் -
நேரம் தவறி-
மாலையில இறக்குனா -
''கள்ளு'' நீ!

முயற்சியே செய்யாமல் -
காலத்தை-
 குறை சொல்வான் --
மனிதனே!

அடி முதல் நுனி வரை-
உங்களிடம் எவ்வளவோ-
''பலன்கள்''!

உருப்படாத புள்ளைகளை-
''ஏண்டா''? பனை மரம் போல -
நிக்கிறே''-என திட்டுறவங்க -
நாங்க !


Wednesday, 23 November 2011

எதை சொல்ல..!?

என்னத்த-
 சொல்ல-
எப்படி நான்-
 சொல்ல-
என் எண்ணத்தை -
சொல்ல!

புத்தகமே-
பார்த்திடாத-
பருவத்தையா!?

பட்டு,பட்டு-
அறிந்த-
பட்டறிவையா!?


''சுத்தமானவனா'-
இருக்க-
நினைத்ததையா!?-

தாவணிகளை -
சுத்தி கொண்டு-
அலைந்ததையா!?

செருப்பில்லாமல் -
நடந்தபோது-
சுட்ட மணலையா!?

பொறுப்பில்லாமல் -
சுடு சொல்லில்-
திட்டிய மனிதர்களையா!?

பழைய கஞ்சியும் -
பழைய ஆனமும்-(குழம்பு)
தந்த ருசியையா!?

பகட்டு வாழ்கை -
வாழ்வதாக-
 எண்ணி கொண்டு-
பசியில்லாமல் -
இருப்பதையா!?

தொட்டு சென்ற -
தென்றலையா!?

புரட்டி எடுத்த -
புயலையா!?

தட்டியும் -
திறக்காத -
இதய கதவுகளையா!

தட்ட கூட வேணாம்-
தொட்டால் போதும்-என
இருந்த இதயங்களையா!?

அரட்டி எழுப்பியும்-
எழும்ப விரும்பாத -
காலைகளையா!?

அரண்டு கொண்டே -
வேலைக்கு செல்ல -
தூங்காத -
இரவுகளையா!?

எழுதி ,எழுதி -
அழிச்ச-
காதல் கடிதங்களையா!?

அழுது,அழுது -
அழிக்க-
நினைச்ச-
 நினைவுகளையா!?

நன்றி -
செலுத்த முடியாத -
நட்பையா!?

நன்றி கெட்ட-
நாதாரிகள் பற்றியா!?

பசியமர்த்திய -
கைகளையா!?

பசியோட இருக்கையில -
தன் பசியை மட்டும் -
அமத்தி கொண்ட-
வயிறை பற்றியா!?

தவறிடும்போதெல்லாம்-
தாங்கிய விரல்களையா!?

தவறி விழும்போதெல்லாம் -
கை தட்டி கொண்ட -
கைகளையா!?

எதை சொல்லி விட-
எதை சொல்லாமல்-
விட!?

என்னத்தை சேர்க்க -
என்னத்தை ஒதுக்க!

எல்லாவற்றையும் -
ஏற்று கொள்கிறேன்!

அனைத்தையும்-
தாங்கி கொள்கிறேன்!

செழிப்பான மரமாக-
நல்ல தண்ணியும் -
ஆட்டு புழுக்கையும் -தேவை
உரமாக!

வலிகளையும்-
வாழ்த்துக்களையும்-
தறுபவர்களும் தேவை-
வாழ்வில்-சாதிக்க!!
'


Tuesday, 22 November 2011

பொண்டாட்டி!

 வியர்திடும்போது-
வசந்த காற்றும்-
அவளே!

வியர்க்க வைக்கும்-
வெப்பமும் -
அவளே!

சிரிப்பிலும் -
கசப்பை-
தருபவள்!

கடுப்பிலும் -
இனிப்பை-
தருபவள்!

புள்ளையை-
 திட்டுவதாக -
கணவனையும்-
கணவனை-
 திட்டுவதாக -
தன்னை தானே -
திட்டி கொள்பவள்!

ரோஜாவை போன்றவள்-
எப்போது !?
மணக்கும்-குத்தும்
என்பது-தெரியாது!

தீபத்தை போன்றவள்-
ஒளி வீசவும் -
தீயால் ஆபத்தை -உண்டாக்குபவள்!

இந்நாளில்-
தாதியாக-
 கவனிப்பவள்!-

முன்னாள்-
காதலி போல -
'கவனிகாமல் "-
போகிறவள்!

ஒத்த பார்வையால் -
துளிர் விட செய்பவள்!

ஒத்த வார்த்தையில் -
கருகிடவும் செய்பவள்!

இனிக்கும் வெல்லமும்-
அழிக்கும் வெள்ளமும்-
அவளே!

புது உறவுகளுக்கு-
வழியும் -
பழைய உறவுகளுக்கு-
வேலியும்[தடை]-
அவளே!

வீணை கம்பிகளை -
போன்றவள்!-

இருக்கம கட்டினால் -
அறுந்து விடும்!

தொய்வா கட்டினால் -
இசை தர -மறுத்து விடும்!

வாசிக்க தெரிந்தவனுக்கே-
வீணை கட்டு படும்!       

கலவை!



சீதேவி-
மூதேவி-கலவைதான்
டி.வி!

முடிவு-[ரிமோட்]
உங்களிடம்தான்!

எங்கே நிம்மதி!

நாடுகளின் -
எல்லை -
கொள்கை -
பிரச்சனையில!
உலகமே-
 அமைதியா இல்ல !

மதம் .சாதி -
சண்டையில -
நாடுகளில்-
சாந்தி இல்ல!

ஆண்-பெண் -
உரிமை-
பிரச்சனையில-
வீட்டிலும்
நிம்மதியில்ல!

காணாமல் போனது....



"கரை வலை"-
 இழுக்கையில -
இருந்தது!-

ஏரோ ப்ளான் ஏறுனதும்-
இல்லாது போனது!

''இரக்க குணம்''!

அஞ்சடியில-[பிளாட் பாரம்]
இருக்கையில இருந்தது-
அடுக்கு மாடியில -
மாறினதும்-
இல்லாம போனது!-
''அன்பு''!

பழைய கஞ்சி-
 இல்லாத போது-
இருந்தது!-
பீசா '' கிடைக்கும் காலத்தில் -
இல்லாது -
போனது!
''பாசம்''!

கண்களில் ஆரம்பித்து-
காலமெல்லாம் இருந்தது -
கம்ப்யூட்டரில் ஆரம்பித்த-
உடனே -
காணாமல் போனது!-
''நேசம்''!

விளக்கு இல்லாத -
காலத்திலும் இருந்தது-
விளக்கு இல்லாத -
இடத்தை தேட வேண்டிய -
காலத்தில் -
இல்லாது போனது-
''விட்டு கொடுப்பது!''

தவமா இருந்து -
குழந்தை-
 பெத்த காலத்தில் -
இருந்தது!-

டெஸ்ட் ட்யூப் பேபி -
பிறக்குற காலம் -
இப்போது-
இல்லாது போனது-
''தாய் பாசம்''!

மாறுதல் தேவைதான்-
வாழ்க்கைக்கு!

"வாழ்வையே மாற்றும் "-
என்றால் -
தேவையில்லையே-
மாற்றங்கள்!

Monday, 21 November 2011

வலி மிக்கது...

பளு தூக்கும் வீரன் -
தூக்குகிறார் -
கிலோ கணக்கில்!

முதலில் பயிற்சியில் -
தூக்கி இருப்பார்-
கிராம் கணக்கில்!

கிராம் களை-
தூக்க முயலாதவன்!

எப்படி -
தூக்க முடியும்-
''கிலோ'களை!?

சோதனையை -விட
''வலி''மிக்கது-
சாதனைகள்!

அதனால் தான்-
தோல்வி களை-
 தாங்குபவனுக்கே-
கிடைக்குது -
வெற்றிகள்!