Monday, 30 June 2014

வரதட்சணையெனும் ..!!

இளைஞனே!
ஏன் செய்கிறாய் !?
நிந்தனை !

எதற்கு கேட்கிறாய்!?
வரதட்சணை !

பாறைப்போன்ற
உனது வாழ்வில்
பூச்செடியாய் படர்ந்திட வாராளே.!!
அதற்காகவா..!?

கோடைப்போன்ற
உனது இளமைக்கு
வசந்தமாக வாராளே.!
அதற்காகவா.!?

ஒற்றை மரமான உனக்கு
வாழை மரமாக சந்ததி தர வாராளே.!!
அதற்காகவா..!?

படுக்கைக்கு பாயாகவும்
நோயின்போது தாயாகவும் மாறிட வாராளே.!!
அதற்காகவா.!?

ஒரு "ஒப்பந்தத்தினால்"
உன்னுடன் வாழும் நாளெல்லாம் பயணிக்க வாராளே.!!
அதற்காகவா.!?

சொல்!
எதற்கென்று சொல்!?

வரதட்சணையெனும்
பிச்சைக்காசு தான்
உனக்குத்தேவையென்றால்!

உனது பாலினம்
ஆணினம் இல்லையென்பதை
ஒத்துக்கொள்.!!

       


Sunday, 29 June 2014

நோன்பு.!

இரும்பின் துருக்கள்
தீயினால் விலகுவதைப்போல்!

நோன்பு இருப்பதினால்
அகல்கிறது
உள்ளத்தின் அழுக்குகள்!

        

இறைமறை..!!

எத்தனையோ புத்தகங்கள்
படித்து முடிக்கும்வரை!

இத்திருமறையோ
மறுமைவரை
ஒளியாகும் இறைமறை.!!

      

ரமளான் மாதம்!

ரமளான் மாதத்தில்!

தேனில் ஊறிய
பேரீத்தம் பழத்தைப்போல்!

உள்ளம் திளைக்கிறது
ஆன்மீகத்தேனில்!

 

விஷேச நாட்கள் !

ஊரு ,உலகமே
மகிழ்ந்திருக்கும்
விஷேச நாட்களில்!

ஒவ்வொரு வீட்டிலும்
இரு கண்கள் மட்டும்
கலங்கி இருக்கும்!

அது
விரும்பியோ
விரும்பாமலோ!

தன் பிள்ளைகளை
பிரிந்திருக்கும்
தாயின் கண்கள் !!



நம்பிக்கையில்லை..!!

தன்
தாயையும்
தாரத்தையும்
நேசிக்காதவனா..!?

மற்ற உயிர்களை
நேசிக்கப்போகிறான்..!?

      

Saturday, 28 June 2014

மாற்றமா..!!??

இந்தியாவில்
ஆட்சி மாற்றம் என!

யார்யா..!?
காமெடி பண்ணுறது!

ஆளும் கட்சியின்
பேர்தான்யா மாறி இருக்கு...!!