சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
Friday, 28 November 2014
வெளிநாட்டு ஊழியர்.!(16)
விறகின் எரிதலில்
நெருப்பு உருவாவதைப் போல்!
இவர்கள்
இளமையின் எரிதலில்தான்
பணப்பூக்கள் பூக்கின்றன !
Thursday, 27 November 2014
வெளிநாட்டு ஊழியர்.!(15)
புல்லைத் தின்னவும்
பழகிக்கொண்ட புலிகள்!
Wednesday, 26 November 2014
வெளிநாட்டு ஊழியர்.!(14)
சொல்லாதக் காதல்
வாழ்நாள் முழுவதும்
ரணம்!
சேர்ந்தக் காதல்
பிரிந்து வாழ்வது
உயிருடன் மரணம்!
Tuesday, 25 November 2014
வெளிநாட்டு ஊழியர்.!(13)
ஓர் துளித்தேனுக்காக
ஒரு கிண்ண வேப்பஞ்சாற்றை
அருந்துபவர்கள்!
Monday, 24 November 2014
வெளிநாட்டு ஊழியர்.! (12)
தொப்புள்கொடி அறுபட்டபோது
நாமழுததை ஊரறியும்!
நாமறியோம்!?
தாய்மண்ணைப் பிரியும்போது
உள்ளமழுவுவதை
ஊர் அறியா.!
நாமறிவோம்.!
அய்ந்து ஆடுகள்..!!
ஆயிரக்கணக்கில்
ஆடுகளைக் குத்தி குதறிய கைகள்!
அய்ந்து ஆடுகளை
அவிழ்த்து விட்டதால்!
வேட்டையாடிய கைகள்
தற்போது காக்கும் கைகளாகி விட்டது!
வெளிநாட்டு ஊழியர்.! (11)
தாய் நாட்டின்
வெப்பக்காற்றின் அருமையை
வெளிநாட்டு
ஏசிக்காற்றில் அறிவார்கள் !
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)