சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
Wednesday, 26 September 2018
சொர்க்கம்.!
காலம் நம் தலையில்
வெள்ளை அடித்தால் என்ன .!?
நாம் சொர்க்கத்தில் இளமையாகத்தானே
சந்திக்கப் போகிறோம்..!
Thursday, 30 August 2018
பாடல்..!
மறந்தப்
போன
பாடலொன்றை
திரும்ப
கேட்கும்
போதெல்லாம்
உன்
முகமே
தெரிகிறது
!
Thursday, 23 August 2018
அறிவு ஞானம்.!
நீ
உலகை
தெரிந்துக்
கொள்வது
அறிவு
உன்னையே
அறிந்துக்
கொள்வதுதான்
ஞானம்
.!
Sunday, 12 August 2018
கவிஞன் ..
காசு
பணம்
இருக்க
வேண்டும்
என்று
எந்த
கட்டாயமும்
இல்லை
கொஞ்சம்
கவிஞனாக
இருந்தாலே
போதும்
நிலவின்
மடியிலும்
கொஞ்சம்
தலை
சாய்த்திட
..!
Sunday, 5 August 2018
மௌனம்..
மௌனம்தான்
என்
சிறை
மௌனம்தான்
என்
சிறகு
மௌனம்தான்
என்
காதல்
மௌனம்தான்
என்
காயம்
மௌனம்தான்
என்
வாசிப்பு
மௌனம்தான்
என்
கவிதை
மௌனம்தான்
என்
பார்வை
மௌனம்தான்
என்
பயணம்
மௌனம்தான்
என்
வலி
மௌனம்தான்
என்
வழி
மௌனம்தான்
என்
சரணம்
மௌனம்தான்
என்
மரணம்
.
Saturday, 28 July 2018
காகித கப்பல்..!
அளவில்லாத
சந்தோசங்களை
சுமந்து
செல்வதால்
புறப்பட்ட
சிறிது
நேரத்தில்
கவிழ்ந்து
விடுகிறது
காகித
கப்பல்கள்
.!
Friday, 27 July 2018
விட்டில்..!
விளக்கில்
எரிந்துதான்
சாக
வேண்டும்
என்று
விதியாக
இருக்கையில்
பாவம்
விட்டில்
பூச்சிதான்
என்ன
செய்யும்
..!?
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)