சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
Tuesday, 31 March 2020
கேட்டு அறிகிறேன் ..
தொட்டு
தொட்டு
உணரும்
மாற்றுத்திறனாளியாய்
கேட்டு
கேட்டு
உணர்கிறேன்
வரிகளில்
உன்னை
!
Thursday, 25 July 2019
இறகு..0
இலக்குகளை தீர்மானி
இறகுகள் தானாய் முளைக்கும்...
Monday, 15 July 2019
பூந்தோட்டம் ..
பூந்தோட்டங்கள் நமக்காக பூக்களையே விரித்திருக்கிறது.ஆனால் நாமோ குப்பைத்தொட்டிகளை தேடி கிளறிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
Wednesday, 10 July 2019
தொடர்வேன்..
உன்னை தொடர்ந்தேன்
கவிதையை அடைந்தேன்
மௌனத்தை தொடர்ந்தேன்
என்னை கண்டடைந்தேன்...
Tuesday, 9 July 2019
ஆச்சர்யம்..
நீ தங்கியிருக்கும்
நெஞ்சுக் கூட்டிலிருந்து
கவிதைகள் தோன்றாம லிருந்தால்தான்
ஆச்சர்யம்...!
Thursday, 4 July 2019
காலடி..
அலை கரை வந்து வந்து போவது
உன் காலடியை தேடித்தான்..
Wednesday, 19 June 2019
மௌன விரதம்..
“ஏன் முன்புப்போல் எழுதுவதில்லை”என்று
கேட்பவர்களிடம்
எப்படி நான் சொல்வேன்
என் பேனாக்கள்
தன் மனக்காயங்கறை ஆற்றிட
மௌன விரதங்கள் இருக்கிறதென்பதை..!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)