Thursday 30 July 2020

ஒளியும் மனிதர்களும்,உலா வரும் மிருகங்களும்.!


சிங்கங்கள் தன் கர்ஜனையை மறந்ததினால்
ஓநாய்கள் ஊளையிடுகிறது

மயில்கள் தோகையை விரிக்காததினால்
வான்கோழிகள் நடனத்தை தொடங்கி விடுகிறது

பள்ளங்கள் தனக்காக பங்கை கேட்காததினால்
மேடுகள் நாட்டமை செய்ய ஆரம்பித்து விடுகிறது

புலிகள் பாய்ச்சலை நிறுத்தியதினால்
வெள்ளாடுகள் வியாக்கியானம் பேசுகிறது

அதுப்போலத்தான்
நீதியை பேசாது மனிதர்கள் ஒளிந்ததினால்தான்

மிருகங்கள் உலா வருகிறது.!

No comments:

Post a Comment