Wednesday, 6 October 2021

வாப்பமார்கள்..!

 எதெற்கெடுத்தாலும்

கோபப்படும்

வாப்பாமார்கள்

இப்போதெல்லாம்

பொறுமையாக இருப்பதின்

காரணமெல்லாம்

தன் கோபத்தால் தான் இழந்தவைகள்

நினைவிற்கு வந்துப் போவதால்தான்..!

Monday, 4 October 2021

உன்னோடு நான் பேச..

 உன்னோடு பேச ஆரம்பித்ததோ

பேச்சை நிறுத்தியதோ

நினைவில் இல்லை...

எப்போது 

ஏன் தடைப்பட்டது

தெரியவில்லை..

திடீரென்ற உள்ளுணர்வில்

உன் எண்களை கைப்பேசியில்

தேடிப் பார்க்கிறேன்

அதிலும் இல்லை..

ஆனால்

நீ வாசித்ததாக பகிர்ந்த

கதைகளும் கவிதைகளும்

அலமாரியில் வைத்திருக்கிறேன்...

ஒருவேளை

அதனை மீண்டும்  நான் வாசிக்கையில்

உனக்காக அது என்னிடம்

உரையாடலாம்..

மலர்கள்.!

படுக்கைக்கென்றும்

பாடைக்கென்றும்

மலர்கள் தன் மணத்தை

மாற்றிக் கொள்வதில்லை..!

Tuesday, 13 October 2020

கண்ணீர்!

 பெண்ணின் முந்தானைக்குள்ளும்

ஆணின் புன்னகைக்குள்ளும்

புதைந்து போவதுண்டு.!


#கண்ணீர்

Monday, 10 August 2020

புதைந்த நினைவுகளைத் தோண்டும் புகைப்படங்கள்..!

 காற்றில் கலந்திட்ட உன்னை

கவிதையில் ஒளிந்திட்ட உன்னை

ஸ்பரிசத்தில் நிறைந்திட்ட உன்னை

கரும்பில் கரைந்திட்ட உன்னை

உணர்வில் உறைந்திட்ட உன்னை 

புகைத்தில் எங்கே தேடுவேன் உன்னை.!



Tuesday, 4 August 2020

அனுமதி.!

மரணம்
தன்னை சந்திக்க
இறைவன் தரும் அனுமதி.!

Monday, 3 August 2020

கவலைப்படாதிரு...

இறைவன்
விதித்த ஒன்று
விலாசம் மாறி போவதில்லை .!