Sunday 31 July 2016

குழந்தையதிகாரம்.!(6)


ஆச்சர்யம்படும் பூவே
உன்னைத்தான் அதிசயமாய் பார்க்கிறது
பூக்கள் !

    

Friday 29 July 2016

குழந்தையதிகாரம்.!(5)


ஆண்மைக்குள்ளும் தாய்மைச் சுரக்கும்
மார்போடு தன் பூமகள் சாய்கையில்!

  

Wednesday 27 July 2016

குழந்தையதிகாரம்.!(4)


நிலவுகள்
பூமியிலும் உலாவுவதும் உண்டு!

 
     

Sunday 24 July 2016

குழந்தையதிகாரம்.!(3)


கொதித்திடும் கோபமும் குளிர்ந்திடும்
உன் சேட்டைச் சாரலினால்!

   

Thursday 21 July 2016

குழந்தையதிகாரம்.!(2)


முக்காடுத் துணிகளும்
புனிதம் அடைந்து விடுகிறது!

தேவதைகளை அலங்கரிப்பதினால்!

      

Sunday 17 July 2016

குழந்தையதிகாரம்.!(1)


நீ சாப்பிட்டு சிந்திய பருக்கையில்
சிதறிக் கிடக்கிறது கவிதைகள்!

    

Monday 11 July 2016

"ச்சும்மா...!"

வீட்டுவேலைச் சக்கரத்தினுள்
தன்னை சக்கையாக்கிக் கொள்ளும்
பெண்களைத்தான்!

சில ஆண்கள் சொல்வதுண்டு !

"என் பொண்டாட்டி வீட்ல "சும்மா"தான்
இருக்கிறாள்" என்று!

   

Thursday 7 July 2016

சீனி மரைக்கார் ..!(சிறுகதை) 9!


   
      ஒடைமர நிழலில் தூங்கிக்கொண்டிருந்த சீனி மரைக்காரின் கையினை ஏதோவொன்று நக்கிடுவதை உணர்ந்து,கையை உதறி விட்டு எழுந்தார் சீனி மரைக்கார்.கண் விழித்தவர்,தன் கையை நக்கிய ,வெள்ளாட்டுக் குட்டியை விரட்டி விட்டுட்டு ,"என்ன திமிரு..இந்த......" பாத்துமாளுக்கு,இவ்வளவு நேரமாகியும் ,என்னைத் தேடி வராம, இருக்கா...."என கோபமாக யோசித்தவர்.திடீரென நினைவு வந்தவராக,தன் சட்டைப் பையினுள் இருந்த ,"செய்யது"பீடியை பற்ற வைத்தார்.இழுத்தார்..இழுத்தார்....தன்னையறியாமலேயே கண்ணீர் வடித்தார்.கதறியழ மனம் வெம்பியது அவருக்கு.

        ஆம்..!! நேற்று கண்மாய்க்கு குளிக்கச் சென்ற பாத்திமா,நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சரிந்தவள் இறந்து விட்டாள்...!!

(முற்றும்)

    

Tuesday 5 July 2016

சீனி மரைக்கார் ..!(சிறுகதை) 8


      சீனி போதையில் கிடந்தாலும் ,அவரைத் தேடி அலைவாள் பாத்திமா .முடிந்தளவு வீட்டிற்கு அழைத்து வந்து விடுவாள்.வரும் அவர் பேசும் கெட்ட வார்த்தைகள்தான்,அவளுக்கானது.ஆனாலும் அவரை இவள் பாதுகாக்காமல் இருந்ததில்லை .

     "இவளக் கண்டு ,அந்த பேதியில போவானோட வாழுறா..,இன்னேரம் மத்தவளா இருந்தா.."அத்துக்கிட்டு"போயிருப்பா..." எனவும்,"நல்ல வேள..இந்த புருசன் கெடச்சான்,இல்லனா...இவள புடிக்க முடியாது..."எனவும் ஊரில் பெண்கள் பேசுவதும் உண்டு.

சில ஆண்டுகள் ஓடியது.அதே நிலையில் தான் குடும்பமும் தள்ளாடியது,போதையில் ஆடும் சீனி மரைக்காரைப் போல.பக்கத்து வீட்டு சுபைதாவுடன்,பாத்திமா பேசிக்கொண்டே ,குளிக்க கண்மாயை நோக்கிச் சென்றார்கள்.சுபைதா பேச்சை ஆரம்பித்தாள்.

   "ஏண்டி .ஒம்மவன் பரக்கத்துல்லா போன் பண்ணுனானா..!?

"ஆமாம் அப்ப அப்ப பண்ணுவான்..."

"ஒம்மாப்ள ஏன் இப்படி ,ஒன்ன பாடாபடுத்துறான்..வீணாப் போனவன்..."

  "என்ன செய்ய..!?எந்தல விதி...ஒன்னுக்கு மூணு புள்ளாயாச்சி...அதுகளுக்கு கல்யாணம் காச்சி நடந்துருச்சினா..போதும்.."

"என்னமோமா..ஊரு ஒலகத்துல குடிச்சவனெல்லாம் திருந்தல..இவன்தான் இப்படி இருக்குறாம்மா..."

"சரி வேகமா குளிச்சிட்டு போகனும்..அந்தாளுக்கு போயி சோறு காச்சனும்...பசி தாங்க மாட்டாரு..."என பாத்திமா சொன்னதும்,சுபைதா திகைத்துதான் போனாள்.அவளது நல்ல மனதை நினைத்து.

இருவரும் கண்மாய்க்குள் இறங்கினார்கள்.கொண்டுப் போன அழுக்குத் துணி வாளியை இறக்கினார்கள்.அப்பொழுதுதான் யாரும் எதிர்ப்பார்க்காத நிகழ்வு ஒன்று நடந்தது.

(தொடரும்..)



Saturday 2 July 2016

சீனி மரைக்கார் ..!(சிறுகதை) 7



       "வேற என்னங்க...!? எம்மாவை எப்படிங்க ..நா வாரத்துக்குள்ள அடக்கம் பண்ணலாம்...!?"என குரலை உயர்த்தி கோபமாக கேட்டார் சீனி மரைக்கார்.

    "அதுக்கு...மயிரு நீ பேசுவே...நாங்க பொறுக்கனுமோ...."என கூட்டத்திலிருந்து சித்திக் குரல் கிளம்பியது.

பேசியவரை அடிக்க சீனி கிளம்ப,சித்திக்கும் கிளம்ப ,பிரச்சனை பெரிதானது.எல்லோருமாக சேர்ந்து இருவரையும் பிடித்து உட்கார வைத்தார்கள் .வைப்பாத்தான் அப்பா பேச ஆரம்பித்தார்.

    "ஏங்கடா..ஆளாளுக்கு சண்டைப் போடவா...இங்க வந்தீங்க..அப்ப எதுக்கு பஞ்சாயத்து கூடனும்...!?ஏம்பா சீனி ஒங்க உம்மா ,எல்லோரும் சேர்த்து அடிச்சி கொன்னா ,ஒனக்கு தெரியாம பொதச்சிட்டோம்..!?அதுக்கு ஆயுசு அவ்வளவுதான்..."என வைப்பத்தான் அப்பா சொல்லிக் கொண்டிருக்கும்போதே,சீனி கேட்டார்.

"அதுக்காக ,பெத்த புள்ள நான் இல்லாம...எப்படிங்க அடக்கம் பண்ணலாம்.." என்றார்.

  "ஒனக்கு ஆளு அனுப்பினோம்..நீ கடலுக்கு போனவன் ,எப்ப வருவேனு யாருக்கு தெரியும்...நீ வார வரைக்கும் "மய்யத்து"தாங்குமாடா...அதான் எல்லோரும் சேர்ந்து அடக்கம் பண்ணினோம்...இல்லனா..அழுகி போகும்டா....மத்த மத்த ஊருல "மவுத்து"னா,எனக்கென்னனு இருந்துருவானுங்க..நம்ம ஊரு புள்ளைங்க அதுல பெருமை படனும்,எல்லோரும் வந்துர்ராங்க..."என தொடர்ந்து பேசி முடித்தார்.சீனியிடம் பதிலில்லை ,மௌனமாக இருந்தார்.

"சரி ஊரை பேசுனதால,ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டிரு..எல்லார் கிட்டயும் எந்திருச்சி..மன்னிப்பு கேட்டுரு..."என பஞ்சாயம் பேசி முடிக்கப்பட்டது.


         மாறாத தகப்பனின் போக்கும்,வறுமையும்,உள்ளூர்வாசிகளின் ஏளனப் பார்வையும்,தானும் எல்லோரைப் போலவும் ,தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என வெளிநாடு செல்ல,சீனியின் மகன் பரக்கத்துல்லா முடிவெடுத்தான்.கடனை வாங்கி சவுதியில் வேலைப் பார்க்கச் சென்றான் பரக்கத்துல்லா.

(தொடரும்..)