சாமரம் வீசுவதை விட்டு விட்டு
சிம்மாசனத்தின் மீது
ஆசைப்படு.!
சோகமென்ன
சுகமென்ன
வாழ்வென்ன
தாழ்வென்ன
பிறப்பென்ன
இறப்பென்ன
இருளென்ன
ஒளியென்ன
மொழியென்ன
மௌனமென்ன
எல்லாவற்றிலும்
இறைவா நீயே.!
எனது
கண்ணீரையும்
கவலைகளையும்
சுமைகளையும்
பொறுப்புகளையும்
இறைவா.!
உன்னிடம் ஒப்படைக்கும்போதெல்லாம்
எனது சிறகுகளை விரிக்கிறேன்.!