Saturday 30 April 2016

கைக்குட்டைகள்!

தான் துடைத்த கண்ணீர்களை
தம்பட்டம் அடித்து சொல்வதில்லை
கைக்குட்டைகள்!

    

Friday 29 April 2016

மறக்கத்தான் நினைக்கிறேன்...!!


நனைத்த கோடை மழையையும்
தங்கவிட்டு தள்ளிவிட்ட பூவிதழையும்
குளிர்ந்த வேப்பமர நிழலையும்
மூழ்கச்செய்த கவி வரிகளையும்
விழுங்கிய புன்னகையையும்
வருடிய மயிலிறகையும்
வாட்டியெடுத்த வாடையையும்
இறுக்கியணைத்த இளங்காற்றையும்
இத்துடன் சேர்த்து என்னையும் !

"மறக்கத்தான் நினைக்கிறேன்"!

   

Thursday 28 April 2016

தண்ணீர்.!

பெரும் தாகம் கொண்ட நாவிற்கே
தேனாய் இனிக்கிறது
தண்ணீர்!

     

Wednesday 27 April 2016

சிரிப்புச் சப்தம் !

என் கவிதைப் பூந்தோட்டம்
காய்ந்து போய் விட்டது!

உன் சிரிப்பு சத்தம் கேளாமல் !

      

Tuesday 26 April 2016

தெரு நாய்கள்.!

எதிர்த்து நிற்பவர்களிடம்
தன் வாலை ஆட்டுவதில்லை
தெரு நாய்கள் !

     

Sunday 24 April 2016

மிதிவண்டி !

சுமைகள்தான் என்றாலும்
சுமந்துதான் செல்கிறது
மிதி வண்டிகள்!

      

Friday 22 April 2016

தூக்கணாங்குருவிகள்!

கைகளில்லா விட்டாலும்
கூடிகளில்தான் வாழ்கிறது
தூக்கணாங்குருவிகள்!

       

Monday 18 April 2016

எலிகள்.!

கடுமையான மலைகளையும்
தனக்கான விளையாட்டுத் தளமாக்கி கொள்கிறது
எலிகள்!

      

Sunday 17 April 2016

ராசிக்கற்கள் .! (1700 வது பதிவு)

கல்லில் ராசி இல்லாததினாலேயே
விற்கப்படுகிறது
ராசிக்கற்கள்!

     

சாய்வு நாற்காலிகள்!

யாரோ ஒருவர்
சாய்ந்துக் கொள்ளவதற்காகவே
தயாரிக்கப்படுகிறது
சாய்வு நாற்காலிகள்!

     

Thursday 14 April 2016

பருந்து.!

எவ்வளவோ உயர்த்தில் பறந்தாலும்
தன் இலக்கை(இரை) மறப்பதில்லை
பருந்துகள்!

       

Wednesday 13 April 2016

மா மரங்கள் !

கல்லெறியும் கைகளுக்கும்
பழங்களைத்தான் கொடுக்கிறது
மா மரங்கள் !

     

Sunday 10 April 2016

ஆடை.!

ஆடு மாடுகளையும்
வெட்கப்பட வைக்கிறது
நவீன ஆடைகள்!

      

Friday 8 April 2016

சகுனம் !

சகுனம் பார்த்து
தன் சிறகுகளை விரிப்பதில்லை
பறவைகள்!

     

Monday 4 April 2016

பாம்பு..!!

விஷப்பாம்பிற்கு
இவ்வுலகம் வைத்திருக்கும் பெயர்தான்
"நல்ல பாம்பு" !

     

Sunday 3 April 2016

கருவேப்பிலை !

குழம்பிற்கு வாசமேத் தந்தாலும்
ஒதுக்கத்தான் படுகின்றது
கருவேப்பிலைகள்!

     

Saturday 2 April 2016

அருவி..!

வீழ்ந்தாலும்
அழகுதான்
அருவிகள்!

     

Friday 1 April 2016

கை !

வலிமைக்காகத் தான்
வலியைத் தாங்கிக்கொள்கிறது
கைகள்!!