Tuesday 31 January 2012

எதுக்கு?

தேன் நிலவு என-
வீண் அலைச்சல் -
எதுக்கு?

நிலவென முகமும்-
தேன் இதழுடையவள்-
அருகில் இருக்க!!

ஏன் இந்த கொலைவெறி..!

கடல் அட்டை-
கடல் குதிரை-
இருக்கு-
பிடிக்க தடை!

கடல்ல மீன் பிடிக்க செல்லும்-
மீனவனை சுட்டு -
கொல்ல எவன் கொடுத்தான்-
உரிமை!

அவையெல்லாம் -
அறிய வகை-
உயிரிணமாம்!

அரசு -
கண்டுக்க மறுக்குதே-
அதை விட -
மீனவன் என்ன-
அற்ப ஜென்மமா?

ஒரு -
தடவை நடந்தால்-
அது தவறு!

அதுவே -
தொடர்ந்தால்-
திமிரு!

ஒண்ணா இரண்டா?
செத்து இருக்காங்க -
ஐநூறுக்கும் மேலடா!

கண்டன ஆர்ப்பாட்டம்-
கண்ட பொதுக்கூட்டம்-
நடந்து இருக்கு-
எத்தனை!

அரசு கண்டுக்காம இருந்தா-
என்ன முறை!

மரண தண்டனை கூடாதுன்னு-
குரல் எழும்புது-
கொலை செய்தவனுக்கும்!

ஏன் இந்த கதி-
என்நாட்டு மீனவனுக்கு!

இந்தியனுக்கே நடக்குது-
உயிர் இழப்பு!

நியாயம் பேசினால்-
வழக்கு பாயுது -
இந்திய இறையாண்மைக்கு-
எதிர்ப்புன்னு!

நாட்டை நேசிப்பது -
குடிமகனின் உரிமை!

குடிமகனின் உயிரையும்-
உடமையையும் காப்பது-
அரசின் கடமை!

செய்யாமல்-
கடமையை!

எதிர்பார்க்கலாமோ-
உரிமையை!

உயிர் இழப்பு நடக்கும்போதும்-
கலவரங்கள் நடக்கும்போதும்-
நடவடிக்கை எடுத்து தடுக்கல!

ஒரு நாயும் பயப்படாது-
"அறிக்கை" மட்டும் -
வெளியிடுரதுல!

Monday 30 January 2012

என்ன தோணுது...!!?

சாட்சிகள் இல்லாமல்
பார்த்து கொள்ளுங்கள்-
கொலை செய்யும்போது!

கைரேகை பதியாமல்
பார்த்து கொள்ளுங்கள்-
திருடும்போது!

அப்படிதான் நினைக்க -
தோணுது!

ஆணுறை அணிந்து -
"பிறரிடம்"-
"உறவு "கொள்ளுங்கள்-என
அரசு விளம்பரம்-
செய்யும்போது!!!

வினோதம்!

காதல்-
கண்ணை -
கட்டி கொண்டு-
செல்லும் காடு!

கல்யாணம்-
கண்ணை-
 திறந்து கொண்டே-
விழும் கிணறு!

Sunday 29 January 2012

விசித்திரம்!

அன்று-
கிழிந்த ஆடையை-
அணிந்திருந்தால்-
வறுமை!

இன்று-
ஆடை வாங்கி-
"கிழித்து" விட்டு-
அணிந்தால்-
பெருமை!

என்ன ஒரு-
மக்களின் அறியாமை!?

இனியவளே....

எழுதிவிட்டேன்-
எத்தனையோ-
காதல் கடிதங்கள்-
உன்னை நினைத்து கொண்டே!

முதுமை -
அடைந்து விட்டேன்-
எந்த கடிதத்தை முதலில்-
கொடுப்பது!-என்று
யோசித்து கொண்டே!

மீத வாழ்வை -
கழித்துடுவேன்-
இருக்கும் -
கடிதங்களை-
படித்துக்கொண்டே!

Saturday 28 January 2012

என்னவளே...

குறைத்து விட்டேன்!-
சிலுப்பி கொண்டிருந்த-
பிடரி முடியை!

கத்தரித்து கொண்டேன்-
முறுக்கி இருந்த-
மீசையை!

இறக்கி விட்டுட்டேன்-
தூக்கி கட்டி இருந்த-
வேஷ்டியை!

விட்டு விட்டேன்-
"கூட்டத்தோட"-
சுத்துவதை!

சிரித்து மாத்தி கொண்டேன்-
சிடு சிடு என -இருந்த
முகத்தை!

மறந்து விட்டேன்-
கெட்ட வார்த்தையில்-
திட்டுவதை!

தவிர்த்து விட்டேன்-
என்னிடம் உனக்கு-
பிடிக்காததை!

தவித்து விட்டேன்-
தெரிந்த பின்-
என்னையவே உனக்கு-
பிடிக்காததை!!

Friday 27 January 2012

என் நாட்டு மக்களே...

என்னருமை -
இந்திய மக்களே!
பதில் இருந்தா -
சொல்லுங்களேன்!

மக்கள் தொகையோ-
நூறு கோடிக்கு மேல'!

எத்தனையோ-
 மக்கள்கிடக்குறாங்க -
தெரு கோடியில!

சுதந்திரம் கிடைத்து-
ஆகிவிட்டது-
அறுபது ஆண்டுக்கு-
மேல!

அதிகமா பசியில-
சாவுறாங்க -
குழந்தைங்க-
நம்ம நாட்ல!

எத்தனையோ பேர்-
இறந்தாங்க-
சுதந்திர போராட்டத்துல!

இப்ப நடக்குற அரசியலோ-
மண்ண அள்ளி போடுடுசி-
அவங்க நினைப்புல!

நாட்ல உயர்வது-
அம்பானிகள்"!

இதில் -
எங்கே இருக்காங்க -
ஏழைகள்!?

வெள்ளைக்காரன்-
பிரித்தாளும் சூழ்ச்சியால்-
ஒண்ணா இருந்த-
ஹிந்து-முஸ்லிம் மக்களை-
பிரிச்சான்!

இப்ப ஆட்சி வெறி -
பிடிச்சவங்க -
மதவெறி-
ஊட்டி மக்களை -
அடிச்சிக்க வைக்கிறான்!

கலவரம் செய்து-
கொல்வது -
பாசிச பயங்கரவாதம்!

சுட்டு கொல்வது(போலி என்கௌன்டர்)-
அரச பயங்கரவாதம்!

மக்களை திசை திருப்ப
பயன்படும் சொல்-
தீவிரவாதம்!

காங்கிரசால் -
நாடு உருப்படாம -
போனது!

பி ஜே பி யால்-நாடு
சுடுகாடானது!

ஓ!
வஞ்சிக்க பட்டவர்களே!
வாழ வழி இல்லாதவர்களே!

சிறுபான்மை மக்களே!
சிறுமை படுத்தபட்டவர்களே!

தாழ்த்த பட்டவர்களே!
தாழ்ந்தே "இருக்க -கட்டாயபடுத்தபட்டவர்களே!

உங்களுக்கு கவலை-
வேண்டாம்!

இனி கண்ணீர்-
வேண்டாம்!

உங்களது உரிமையை-
மீட்டெடுக்க!

உங்களுக்காக-
குரல் கொடுக்க!

கணிசமான வாக்குகள்-
கடந்த சட்டமன்ற தேர்தலில்!

"கண்ணியமான"வெற்றிகள்-
உள்ளாட்சி தேர்தலில்!

கண்டிட வேண்டுமா-?
மக்கள் கண்ணீர் வடிக்காத
காட்சியை!

மக்கள் அனைவரும்-
இணையுங்கள் -
எஸ்.டி.பி.ஐ என்ற -
தேசிய கட்சியில்!

Thursday 26 January 2012

நண்பா...

ஓட்டை விழுந்த-
அரைக்கால் சட்டை-
போட்டு இருந்த போதும்!

பித்தான்கள் இல்லாத-
சட்டை அணிந்து இருந்த-
போதும்!

வேப்பங்கொட்டை -
சேர்த்த போதும்!

வெறுங்கையோட-
அலைந்த போதும்!

வீதிகளில்-
சுற்றிய போதும்!

புழுதிகளில்-
உருண்ட போதும்!

கண்மாய் தண்ணிய-
"கலக்கிய"போதும்!

கண்மாய் வற்றிய போது-
கண்கலங்கி நின்ற போதும்!

தேவையில்லாததுக்கு-
அடிசிகிட்ட போது!

அடிச்சிக்க வேண்டியதுக்கும்-
சிரிசிகிட்ட போதும்!

வேடிக்கை பார்க்கும்-
காவல் துறை-"
மத வெறி"-
சொற்பொழிவு நடக்கும்போதும்!

முன்னெச்சரிக்கை-
நடவடிக்கை என-
நம்மை கைது பண்ண-
முயன்ற போதும்!

கன்னிகளை-
 பார்த்த உடனே-
காதல் வயபட்ட போதும் !

காதலித்தவள்-
வேறொருவனை-
மணக்கும் போதும்!

இரண்டையுமே-
ஒரே போல-
நினைத்து-
 கவலை இல்லாமல்-
இருந்த போதும்!

"அடி மேல் அடி-
விழுந்த போதும்!

அடிக்கு அடி-
திருப்பி அடித்தபோதும்!

அடிக்கடி இது-
தொடர்ந்த போதும்!

கல்யாணம் முடிஞ்சா-
"பிரிஞ்சிடுவானுங்க"-என
மூத்தவங்க சொன்னபோதும்!

விதண்ட வாதம் பேசி-
அவங்க வாயை-
அடைத்த போதும்!

இத்தனைக்கும்-
நாம பிரியல-
பிரியவும் மனம் வரல!

எங்கோ பிறந்து-
வளர்ந்து!

திருமணம் என்ற-
ஒப்பந்தத்தில்-
இணைந்தது!

இணைந்து "வாழ்ந்ததால்"-
ஒரு குழந்தையும் -
பிறந்து!

தாய் தகப்பன்-
வயோதிகம் அடைந்து!

தங்கை இருக்கிறாள் -
பூப்படைந்தது!

தம்பியும் இருக்கிறான்-
கல்லூரி செல்ல பரீட்சை -
முடிவை எதிர் பார்த்து!

இத்தனை பேரும்-
இவன் உழைக்க போக -
மாட்டானா? -என
இருக்கிறார்கள்-
என்னை எதிர்பார்த்து!

நண்பா..!

நாம சென்றோம் -
பிரிந்து !

"பொறுப்புகளை"-
சுமந்து!

பொறுப்புகளை யாரும்-
சுமக்க விரும்புவதில்லை!

ஒவ்வொருவர் மீதும்-
பொறுப்புகள்-
 ஏறாமல்-
இருப்பதில்லை!

தன் மீதே கண்ணீரை-
ஊற்றி கொள்ளும்-
மெழுகுவர்த்தியை போல!

சிலரின் தேவைக்காக-
இலக்கே இல்லாமல் பயணிக்கிறோம்-
ஓடையில் விழுந்த -
சருகுகளை போல!!

பசி!

பருவத்தின் பசி-
காதல்!

அறிவின் பசி-
தேடல்!

Wednesday 25 January 2012

தாய்க்கு ஒரு தகவல்...$

சனியன் பிடிச்சவ-
மாமியாளுக்கு!

முட்டா சிரிக்கி-
தகப்பனுக்கு!

பொழைக்க தெரியாதவ-
சொந்தகாரவங்களுக்கு!

ஆம்பள புள்ளையை பெத்தவ-
பொறாமைகாரர்களுக்கு!

உயிருள்ள பொம்மை-
பேரன் பேத்திகளுக்கு!

தகப்பனிடம்-
 தகவல் சொல்லும்-
தபால் பொட்டி-
மகன்களுக்கு!

எதிரானவ (தெரியாதவ)-
எரி வாயு அடுப்புக்கு!

உறவானவ-
விறகு அடுப்புக்கு!

சந்திராயன்-
 போனதாம்-
நிலவுக்கு!

முருங்கை கீரையை-
"சுத்தமா" கழுவனுமே-
என்ற கவலைதான் -
உனக்கு!

மாவட்ட ஆட்சியாளராக-
ஆசை இருந்தது-
எனக்கு!

கிடைத்ததோ-

மாவை பிசைந்து-
புரோட்டா போடுறேன்-
இப்போதைக்கு!

ஆசை இருந்த-
 என்னிடம்-
காசு இல்ல!

பாசம் இருந்த-
 உன்னிடமும்-
பணம் இல்ல!

படிக்க வைக்க முடியாம -
போனவளே!

"மனுசனா" என்னை-
வளர்க்க மட்டும்-
மறக்கலையே!

பணம் பணம் என்ற-
ஆசையிலே!

பெத்த புள்ளயை-
வேலைக்காரர்களிடம்
ஒப்படைத்து-
போறவங்க-
மத்தியிலே!

உன் வாழ்கையவே-
எங்களுக்காக-
இழந்தாயே!

உன்"கடனை"-
எப்படி நான் தீர்ப்பேன்-
என் தாயே!?

Tuesday 24 January 2012

பண்ணை!

மாட்டு பண்ணை!
ஆட்டு பண்ணை!

சேவல் பண்ணை!
கோழி பண்ணை!

மனிதனுக்கு பண்ணை!?

அதுக்குதான்-
நாகரிக பேரை சொல்லி!

இருக்குதே-
"மழலையர் பள்ளி"!

விளம்பரம்!

அன்று-
இன்னார் மகன்-
நான் !-
என்று சொன்னதுங்க!

இன்று-
ஐ அம் காம்பளான் "பாய்"-என
சொல்லுதுங்க!

தாய் தந்தையை -
விடங்க!

தொலைக்காட்சி -
உறவாகி போனதை-
என்னவென்று சொல்வேனங்க!?

Sunday 22 January 2012

அய்யா....! சாமி..!

ஊருக்கு-
காத்து வர-
ஜன்னலை திற!

அறைக்குள்-
கதவை சாத்து-
எதை வேணும்னாலும்-
திற!

மக்கள் ஏன் தான்-
மறுக்கிறார்கள்-
அறிவுகண்ணை-
திறக்க!

சீடரே-
கேமரா கண்ணை -
திறந்து வைக்க!

ஆசாமிக்கு-
சபலம் வந்தது-!

வெளிச்சத்திற்கு-
வந்தது!

கற்பழிப்பு புகழ்-
பிரேமானந்தா!

வெடிகுண்டு புகழ்-
அசிமானந்தா!

வீடியோ புகழ்-
நித்தியானந்தா!

மக்கள் ஏமாற-
மாட்டார்கள்-கொஞ்சமாவது
அறிவு இருந்தா!

ஆயிரம் வேர்களை-
கற்றால் தான்-
அரை வைத்தியன்-என்பதுதான்
முதுமொழி!

ஆயிரம் பேரை கொன்றால்தான்-
அரை வைத்தியன்-என்பதாக
மாறியது -புது மொழி!

அன்று-
மண்ணாசை-
பொன்னாசை-
பெண்ணாசை-
துறந்தவன்(வெறுத்தவன்)
முற்றும் துறந்தவன்-
ஆவானே!

இன்று-
முழுசா"தொறக்குரதுதான்-
முற்றும் துறந்தவன்-
என்று எண்ணினார்களோ!
என்னவோ!

Saturday 21 January 2012

கொலை வெறி!

நடந்தது என்னவோ-
கொலைவெறி -
தாக்குதல் தான்!

கொடுமை என்னவென்றால்-
வழக்கே இல்லாமல் -
ஆனதுதான்!

சாட்சிகள்-
வேண்டுமாம்-வழக்கு
"நிக்க"!

அவள் என்னை-
தாக்க!

பதைபதைப்புடன்-
நான் நிக்க!

பயன்படுத்திய -ஆயுதம்
சிறு புன்னகையை!

நான் எங்கே-
தேடுவேன் சாட்சியை!

இனிப்பு...

வார்த்தைகளை-
தேடுகிறேன்-
கவிதை எழுதிட!

என்னவளே!
உன் பார்வையை தேடுகிறேன்-
வாழ்வு இனித்திட!

Friday 20 January 2012

"பொம்பள பொறுக்கி!"

மறைந்து கொண்டு-
பார்ப்பதும்!

மறையும் வரை-
பார்ப்பதும்!

சிரித்து விட்டு-
சிணுங்குவதும்!

சிணுங்கி கொண்டே-
சிரிப்பதும்!

சாடையாக-
பேசுவதும்!

சத்தமாக -
பேசியதும்!

வேகமாக -
நடப்பதும்!

நடையின் வேகத்தை-
குறைப்பதும்!

தொலை பேசியில்-
அழைத்து விட்டு-
பேசாமல் இருப்பதும்!

பேசாமல் இருக்கவே-
தொலை பேசிக்கு-
அழைப்பதும்!

செய்கைகளால்-
வினாக்கள் தொடுத்தவள்-
நீயே!

விடை தேடி-உன்
வீட்டை சுற்றியவன்-
நானே!

உனக்கு-
"அப்புராணி" என்ற -
பெயரும்!

எனக்கு-
"பொம்பள பொறுக்கி"-
என்ற பெயரும்!

ஏனடி!?

பெருந்தன்மை!

தன் மேல் கிறுக்கி-
அசிங்கம் செய்தவனுக்கும்-
நிழல் கொடுக்கிறது!
"நிழற்குடை!"

Thursday 19 January 2012

எங்கே நீதி!

"அம்மாவை"-
பத்தி எழுதுன-
"நக்கீரன் "-
உடைப்பு!

"தீர்ப்பு" வழங்குனா-
மாணவிகளோட -
பேருந்து எரிப்பு!

அஞ்சா நெஞ்சர்" பத்தி-
கணிப்புனா-
தினகரன்"ஆட்கள் -
எரித்து கொலை!

"தோழர்"பத்தி சொன்ன-
"மக்கள்" தொலைகாட்சிக்கு-
தொல்லை!

இத்தனையும்-
செஞ்சவாங்க-
ஜனநாயக வாதி!

"கேலி சித்திரம்"-
"தினமலர்" முன்னால்-
ஆர்பாட்டம் செஞ்சா -
ரத்தம் சொட்ட சொட்ட-
லத்தி அடி!

இதுல எங்கே-
இருக்கு நீதி!?

சிற்றின்பம்!

பெண்ணின் -
சிரிப்பும்!

உதட்டில் புகையும்-
சிகரட் நெருப்பும்!

தெரியும்-
சிற்றின்பமாக!

தெரியாது -
மாறுவது-
பெரும் துயரமாக!

Wednesday 18 January 2012

அப்படி போடு..

இலவசமா போட்டாங்க-
சோறு தட்டுல!

அப்புறம்-
கூடுதலா -போட்டாங்க
முட்டையை!

இப்ப இலவசம் -என்கிற
பேர்ல போடுறாங்க -
மக்களுக்கு "பட்டையை"!

Tuesday 17 January 2012

அபராதம்!

அரசு தரும்-
தண்டனை!

சாலை விதி முறைகளை-
மீறுபவர்களுக்கு!

யார் தருவது -
தண்டனை!?

சாலையோர மக்களின்-
நிலை மாற்றாத-
அரசுகளுக்கு!

Monday 16 January 2012

உங்களை பற்றியதுதான்...

காய்ந்து போனது-
பூக்களும்!

மடிந்து போனது-
மரங்களும்!

ஆத்திரம் கொண்டது-
சமுத்திரமும்!

பிளவு பட்டது-
பூமியும்!

இருந்த இடம்-
-தெரியாமல் போனது-
எவரேச்டும்!

இழந்தது-
பலத்தை-
இரும்புகளும்!

வந்த வழியில்-
திரும்பி போனது-
மதம் கொண்ட யானையும்!

"கழண்டு" போச்சுன்னு-
சொன்னது -
உறவுகளும்!

நடந்தது இவ்வளவும்-
"மனதில் பட்டதை"-
சொன்னதும்!

நீங்கள் !
தியாகிகள்!

அதனால்தான்-
நான்-
எழுதுவதை-
கவிதை-
என்கிறீர்கள்!

Sunday 15 January 2012

குள்ளமாக இமயம்!

குள்ளமாக-
தெரிந்திடும்-
இமயமும்!

ஒன்று சேர்க்க-
முடியுமானால்-
காஷ்மீர் மக்களின்-
கண்ணீரை!

தாயே. ! கேவலம்...!

தாய் பால்-
கடவுள் கொடுத்த -
வரம்!

குழந்தைக்கு-
கொடுக்க மறுக்கும்-
தாய்தான் -
அடைகிறாள்
கேவலம்!

Saturday 14 January 2012

வலையுகம்: தமிழ் முஸ்லிம்களின் நாட்டார் மரபு பழமொழிகள்

வலையுகம்: தமிழ் முஸ்லிம்களின் நாட்டார் மரபு பழமொழிகள்

காதல் வந்தால்..

கழுதையின் சத்தம் -
கேட்கும் கவிதையாக!

கவிதை பேசும்-
கவிஞன் தெரிவான்-
கழுதையாக!

சிறகு முளைக்கும்-
படகுக்கும்!

சிறகு விரிய மறுக்கும்-
பறவைக்கும்!

தெரு கோடி பிடிக்கும்-
மாடியில உள்ளவனுக்கு!

விண் மீனை சேர்த்து -
வீடுகட்ட தோண்டும்!-
குடிசையில் உள்ளவனுக்கு!

வன்முறை பேசும்-
சமாதான புறாவும்'!

பூக்களை துப்பும்-
துப்பாக்கியின் முனைகளும்!

அற்புதமாக்கும்-
அற்பனையும்!

அசிங்க படுத்தும்-
அழகனையும்!

உயிர் நண்பனையும் -
ஒதுக்கிட வைக்கும்!

ஒதுங்கி போறவளை-
உயிராய் நினைக்க வைக்கும்!

மணம் இருக்காது-
தன் வீட்டு மல்லிக்கு!

மூக்கை துளைக்கும்-
அவ வீட்டு ஊமத்தம் பூ!

காதல்-
எத்தனையோ-
மாற்றங்கள் தருவது!

எத்தனையோ பேருக்கு-
ஏமாற்றங்கள் தந்தது!

மகிழ்ச்சி!

கொடுத்தாலும்-
பெற்றாலும்-
மகிழ்ச்சி-
முத்தத்தில்-
பிரியமானவர்களுக்கு!

வென்றாலும்-
வீழ்ந்தாலும்-
மகிழ்ச்சி-
யுத்தத்தில்-
வீரர்களுக்கு!

கரகாட்டம்!

ஆடும்போது-
ஆடாத-
கரகத்தை-
பார்க்காம!

ஆடும்போது-
ஆடும்-
அங்கங்களை
பார்ப்பது!!

Friday 13 January 2012

கசங்கிய...

நேற்று இரவு-
நடந்த-
காதல் கலவரத்தை!

சொல்லாமல்-
 சொல்லியது-
"கசங்கிய ஆடைகள்"!

தேடுகிறேன்!

இணையத்தில்-
நண்பர்களை-
தேடுகிறேன்!

இணையத்தை-
கற்று தந்த-
நண்பனை -
தொலைத்து விட்டு!

பணம்!

சிலரை சேர்க்கும்!

பலரை பிரிக்கும்!

Wednesday 11 January 2012

"அகதி"தாய்! $

வெளியில்-
 உள்ளதை-
உள்ளிழுக்கும்-
பேரலை!

என்னிலிருந்து-
வெளிவந்தாய்
மகளே!

உன் பசியமத்த -
நெஞ்சுல-
பால் இல்ல!

பொருளாதார தடை-
விதிச்சவனுக்கோ-
நெஞ்சுல-
ஈரம் இல்ல !

என்னென்னமோ-
செஞ்சுகிட்டு!

ஏதேதோ-
பண்ணிக்கிட்டு!!

மக்களை அழிக்கிறான்-
குண்டுகளை வீசி கொண்டு!

மகளே!
உன் அப்பனோட-
நான் "தங்கியது"-என்
தவறா?

என் கருவுல-
நீ "தங்கியது-"
உன் தவறா?

வலியும் சுகமாக-
இருந்தது-
நீ கருவுல-
நெளிந்திடும்போது!

புதை குழியில் அசைவற்று-
கிடப்பதை பார்க்கையில்-
அழுதிட மனம் வெதும்புது!

மகளே!
பொறந்த மண்ணுல -
மடிஞ்ச சந்தோசம்-
உனக்கு இருக்கலாம்!

இந்த நிலைக்கு-
நம்மை தள்ளியவனுக்கு-
அடக்கம் செய்ய-
ஒரு-
புடி மண்ணு 
இல்லாம போகலாம்!

இனத்தின் பேரல்-
மொழியின் பேரால்-
மக்கள் மடிகிறார்கள்-
ஆக்கிரமிப்பு போரால்!

காரணங்கள் தெரியாமல்.
இருக்குமோ!-
என்னவென்று. !


தெரிந்த காரணம் தான். -
அது "எண்ணெய்"என்று!

மாறிடுது உலகம்-
ஒவ்வொரு நாளும்!

நிலையில்லாதது-
எந்த நிலையும்!

உலகை மிரட்டிய -
கிட்லருக்கு கிடைத்தது-
தற்கொலை!

முசோலினிக்கு-
தூக்கு!

இது-
கடந்த கால-
வரலாறு!

இன்றைய அத்துமீற்பவர்களே!
இன்றைக்கும் நிலை மாறி வருதே!

நேற்று வரை -
நாட்டின் அதிபதி!

இன்று-
சிறை அறையில்-
கிடக்கிறார் அடைந்து!

அநீதி-
நிலைபெறாது!

ஒரு நாள் -
வெற்றி பெறும்-
நீதியானது!

மகளே!
பொறந்த மண்ணை-
விட்டு செல்கிறேன்!

சுவாசித்த காற்றை-
விட்டு செல்கிறேன்!

நாட்டை துறந்து -
செல்கிறேன்!
"அகதி'என்ற பேருக்குள்-
அடங்கிட போகிறேன்!

உயிர் வாழும் -
ஆசையில் இல்ல!

உயிரின் உருவமான-
மிச்ச குழந்தைகள்-
சாககூடாது-
என்பதாலே!

ஓ!
உலக மக்களே!
பதில் சொல்லுங்களேன்!

சொர்க்கம் என்-
குடும்பமாக இருந்தது!

நரகத்தை சுவைக்கத்தான்-
நான்-
போறதோ?

Tuesday 10 January 2012

வரம்...

பிரியாத வரம்-
வேண்டும்!

பிரிந்தபோதே-
புரிந்தது-
"சேர்ந்து வாழ்வது-"
சாபம்-
இல்லையென்று!

யுக்தி!

ஒன்று வாங்கினால்-
ஒன்று இலவசம்-
இது-
வியாபார யுக்தி!

கொஞ்ச நேர இன்பம்-
நீண்ட கால துன்பம்(எய்ட்ஸ்)-
இது-
விபசாரத்தின் புத்தி!

மன்னிப்பு!

மழையையும் -
இடிகளையும்-
தருவதுண்டு-
மேகம்!

அம்மேகங்களை-
வெறுப்பதில்லை!-
மனம்!

சூட்டினால்-
புண்ணாக்கிய-
உணவையும்-
சுவைக்க-
மறுப்பதில்லை-
நாக்கு!

சாலை விபத்துகளால்-
சாலை பயணத்தை யாரும்-
விடுவதில்லை!

தெருவுல வீசுவதில்லை-
தன் மடியில்-
சிறு நீர் கழித்த-
 குழந்தையை!

ரசிக்காமல் இருப்பதில்லை-
அழிவுகளை தந்த -
கடலையும்!

பிரச்சனை பேசுவதில்லை-
நேரந்தவறி வந்த -
பேருந்திடம்!

யாரும் விட்டு போக-
விரும்புவதில்லை-
பொறுமை இழந்து -
குலுங்கும்-
பூமியை!

இவையெல்லாம் -
ஏற்றுகொள்ளும்-
மனதுக்கு!

"காயபடுத்திவர்களை"-
மன்னிக்க மறுப்பது-
எதெற்கு?

எண்ணம்!

என் "எண்ணத்தை-"
உன்னிடம் -
சொல்லிட-
எனக்கில்லை-
தயக்கம்!

"இவன் கூடவா..!!?"-என
பரிதவிப்பியோ-
என்கின்ற-
தயக்கமே-
எனக்கு..!!



Sunday 8 January 2012

வாலிபனே...!

வாழ்வு என்பது-
நண்பர்களிடம் -
"மொக்கை" போடுவதும்!

பெண்ணை கண்டால்-
"கடலை"போடுவது தானா!?

ஆராய்ச்சி நடக்குதடா-
வட்ட நிலவுல!

அசிங்கம்டா -
"வட்ட வட்ட" -
புகை விடுவதிலே!

ஒரு கிராம்-
தங்கம் இருக்காம்-
ஒரு டன் -
மண்ணுல !

உன் குடும்ப எதிர்காலம்-
இருக்குதடா-
உன் வளமான-
வாழ்வுல!

உறக்கம் போதாதா?
ஓய்வும் போதாதா?-

இவ்விரண்டிலும்-
கழிவதுதான்-
உன் வாழ்வானதா?

பொறந்து இருக்கலாம்-
பணக்கார அப்பனுக்கோ!

கட்டி இருக்கலாம்-
பணக்கார பொண்ணையோ!

இதில் சிறப்பு அடையுமோ-
உன் பிறவி பயனோ?

கௌரவம் இல்லை -
அடுத்தவன் பணம்-
லட்சங்களை வைத்து கொள்வதிலே!

மானமும் மரியாதையும்-
உள்ளது -
உழச்ச பணத்தில் மிச்சம் -
ஒரு ரூபாய்-
உன் கையில-
 இருப்பதிலே!

எச்ச"தண்ணிக்கும்"-
எச்சி பீடிகளிலும்-
கழியனுமா?-
உன் மிச்ச வாழ்கையும்!

பாட்டில்"களில்- 
பங்கு தருபவன்!
சாப்பாட்டில் -
பங்குதர மாட்டான்!

பெரியவங்களை குறை-
சொல்லாதே!

பெருசா-
 என்ன-
 நாம் செய்தோம் -
என்பதை -
எண்ண மறவாதே!

படைத்ததின் நோக்கத்தை -
அடையுதடா-
படைப்புகளெல்லாம்!

படைப்புகளில்-
சிறந்தவனே!

உன் வாழ்வு-
வீணாக கழியலாமா?

முழிசிகிட்டு இருக்கையிலேயே-
முழுசா முழுங்குற -
உலகம் இது!

இங்கே தூக்கத்துல -
இருந்தா என்ன ஆவது!

உனக்காக -
எனக்காக-
உலகம் நிக்காது!

உருப்படியான வாழ்வு-
வாழ நீ-
ஓடு !

ஓடுனால்தான் -
நீர் நதியாகும்!

தேங்கினால்-
அது-
சாக்கடையாகும்!

நீ எப்படி-
உயிருள்ள பிணமா!!?

இல்லை -
உயிர் போன-
பின்னும் -
வாழுபவனா?(சாதனையாளனா)

கூடா "குளம்

பேருந்து கட்டணம்-
உயர்வு!

பால் விலை-
உயர்வு!

தடையான -
மின்சாரம்!

தடையில்லா-
மது பானம்!

ஏன்?-
கொஞ்சம் கொஞ்சமாக-
சாவுறீங்க!

மொத்தமா சாவுங்க-
என்பது போல!

மடியட்டும்-
மனித குளம் என!

'அணு' நிலையத்தை -
தாங்கி நிக்குதோ-
"கூடங்குளம்"!

Saturday 7 January 2012

காதல்,கயிறு!

சொல்லபோகிறது -
காதலோ!!

மாட்டபோகிறது-
தூக்கு-
கயிறோ!!

நல்லா-
யோசித்துகொள்-
"மாட்டிய பிறகு"-
தப்பிக்க -
முடியாது!

Monday 2 January 2012

அது போதும்!

கைக்குள்ளே-
மடித்து வைக்கும் -
பத்த மடை-
பாயா!?

இலவம் பஞ்சு வைத்த -
மெத்தையா!?

பூக்கள் தூவிய-
படுக்கையா!

ஆனந்தம் படுத்தும்-
அருவியா!?

கண்ணுக்கு-
குளிர்ச்சி-
தரும் பசுமையா!?

உச்சியை உரசி செல்லும்-
உதகை மேகமா!?

இத்தனையவும்-
விட!

என்னவளின்-
இதழின் ஓரத்தில்-
இடம் போதும்-
நான் இருந்து -
விட!

''நான்'' ''தான்''

வேலையை -
பார்த்துகொண்டு-
போயிருக்கனும் தான்!

உன் வீட்டு -
கதவின் இடுக்கை-
பார்த்து இருக்க கூடாது -
நான்!

நீ-
என்னை பார்த்து -
கொண்டு இருந்ததை -
பார்த்தேன் தான்!

அந்த நொடி பொழுதில் -
தொலைந்தவன் -
நான்!

எப்படின்னு தெரியல!

ஆரம்பிக்கவும் -
தெரியல!

முடிக்கவும் -
முடியல!

கவிதை -
எழும்போது!

கன்னி -
அவளின்-
கண்களை-
பார்க்கும்போது!

அடியே....

அடி பாவி!
வாய்தாக்களும்-
விசாரிப்புகளும்-
உண்டு !-
கொலை-
குற்றத்திற்கும்!

என்னையவே -
தேடி அலைய வைத்து-
விட்டாயே-'
'உன்னை-
திரும்பி பார்த்ததுக்கு!