Friday 29 June 2012

விறகு சுமப்பவளே....



பொடி சுள்ளிகளையும்!
விறகு கட்டுகளையும்-
சுமப்பவளே!

உன் "சுமையை"-
மாத்திடதான்-
ஒரு நாதியும் இல்ல!

உச்சந்தலையை-
அழுத்தாம இருக்க-
"சும்மாடு"- துண்டு-
தலைக்கு!

உன் மன அழுத்தத்தை-
குறைக்க ஏதும்-
வழி இருக்கு!?

"மணந்தவனோ"-
மானங்கெட்ட மது-
மயக்கத்திலே!

மனசே இல்லாதவங்க-
டாஸ் மாக்கை திறக்குறவங்க-
ஆட்சியிலே!

நீ!
விறகு பொறக்குறது-
அடுப்பு எரிய!

மின்சாரமே கனவு-
போல வருமா?-தெரியல
விளக்கு எரிய!

இல்லை மின்சாரம்-
மின் பொருட்கள்-
இலவசம்!

உறங்க முடியாது-
உண்ணாம -
உணவு பொருளை-
வாங்குனால் !-
போகணும் பரதேசம்!

வேகமா விறகுகளை-
கட்டி விடு!

அதிகாரி கண்ணில்-
படாமல்-
சென்று விடு!

வனத்துறை அதிகாரி-
பார்ப்பாரேயானால்-
உனது ஆயுதத்தை-
பறிமுதல் செய்து-
விடுவார்!

"பேரழிவு"ஆயுதம் என-
வழக்கும் போட்டிடுவார்!

"மொட்டை" அருவா-
ஒரே சொத்து-
உனக்கு!

அதிகாரிக்கோ-
பதிந்து விட்டதில் சந்தோசம்-
ஒரு வழக்கு!


ஒருவன் ஹீரோ ஆக-
ஒருவனை வில்லன் வேஷம்-
போடுவது போல!

அதிகாரிகள்-
மெடல்கள் வாங்க-
அப்பாவிகளை சுட்டு விட்டு-
தீவிர வாதி என-
சொல்வது போல!

ஏழை தாயே-
உன் "நிலை" மாறும்-
ஒரு நாள்-உன்
மகனால்!

நம் தாய்நாட்டிலும்-
போலி வேசதாரிகள்-
முகதிரை கிழியும்-
ஒரு நாள் வரும்-
வளரும்தலைமுறையால்!!!

Wednesday 27 June 2012

கைபந்து போட்டியும்-கைப்புள்ள நானும்!



இருக்கும்-
குப்பைகாடுகளாக!

மாறும்-
விளையாட்டு திடல்களாக!

மறக்க முடியுமா!?

விரவி கிடந்த-
மலத்தையும்!
சிதறி கிடந்த-
பாட்டில் சில்களையும்!

சுத்தம்-
செய்த கைகளையும்!
மண்ணின் மேல்-
நேசம் கொண்ட-
எம்மக்களையும்!

விரைந்து ஓடும்-
"பட்டணக்காரர்களே"!

உங்களை விட-
ஒரு படி மேல-
கிராமத்தவர்களே!

"வாழ்வதற்காக"-
படிப்பது-
பட்டணம்!

வாழ்விலேயே பாடம்-
படிப்பதுதான்-
கிராமம்!

நீண்ட நாள்-
ஆசை ஒன்னு!

உள்ளூரில் கை பந்து-
போட்டி நடத்தனும்னு!

திட்டங்கள்-
தீட்டப்பட்டது!

நிதிகள்-
திரட்டப்பட்டது!

துண்டு பிரசுரங்கள்-
அச்சிட பட்டது!

சுற்றுவட்டாரங்களில்-
விநியோகிக்கப்பட்டது!

போட்டி நாளும்-
வந்து விட்டது!

"கடைசி" பேருந்தும்-
வந்து விட்டது!

அணிகள்-
வகுக்கப்பட்டது!

களத்தில்-
இறக்கப்பட்டது!

சூடாக இருந்தது-
தேநீரும்!
புரோட்டாவும்!
விளையாட்டு-
தளமும்!

ஆதாரங்களை பார்க்காமல்-
"நம்பிக்கை" அடிப்படையில்-
தீர்ப்பு சொல்லும்-
நீதி மன்றங்களை போல!

ஒரு அணி வெற்றி பெற-
மறு அணி தோல்வியுற-
சரிந்தது- அடிக்கி வைத்த
அட்டை பெட்டிகள் போல!

கூடி கொண்டிருந்தது-
முட்டல்களும்!
முறைப்புகளும்!

நேரம்-
கரைந்து கொண்டிருந்தது!


அணிகள்-
குறைந்து கொண்டிருந்தது!

எதிர்பார்த்த படியே-
நடக்க இருந்தது!

"எதிர்பார்க்க"கூடாதது-
"நடந்திடுமோ"-
பதற்றமாக இருந்தது!

முதல் பரிசுக்கு-
மோத இருந்தது-
உள்ளூர் அணியும்!

அடிக்கடி "உரசி" கொள்ளும்-
வெளியூர் அணியும்!

ஜெயித்தது-
இரு அணிகளும்-
ஆளுக்கொரு "கரைகள்"!

ஆடுபவர்களிடையே-
சிராய்ப்புகளால்-
ரத்த கறைகள்!

கடைசி பந்து-
வெற்றி நிர்ணயிக்கும்-
பந்து!

வந்தது-
எதிரணி இடம்-
இருந்து!

வந்ததை -
லாவகமாக-
எடுத்து கொடுத்தான்!

திரும்பவே கூடாதென-
இடியென அடித்தான்-
ஒருவன்!

எதிரணி கையில்பட்டு-
பின்புறம் சென்றது-
பந்து!

"வெற்றியை " -
திருப்புவதற்காக-
ஒருவன் ஓடி கொண்டிருந்தது!

ஒரு சிந்தனை துளியை-
தந்தது!

வெல்கிறோமோ !?-
வீழ்கிறோமோ!?-
அதுவல்ல -வாழ்வில் முக்கியம்!

வாழும் வரை-
போராடனும்-
என்பதே-முக்கியம்!

Tuesday 26 June 2012

கர்ப்பவதி! $



மாத தேதி-
"தள்ளி "போனால்-
மங்கை அவள்-
மகிழ்வும்-
மயக்கமும் -
அடைவாள்!

பரிசோதனைக்காக -
அழைத்து-
செல்லபடுவாள்!

மழலை மலரும்வரை-
மருத்துவமனையே-
மறு வீடாகும்!

மருத்துவர்கள்-
ஆலோசனையோ-
கொஞ்சம்!

சுற்றத்தார்-
யோசனைகளோ-
அதனையே மிஞ்சும்!

மலரிலும்-
மெல்லியது-
பெண்மை!

மெல்லியதிலும்
மென்மை-
தாய்மை!

தாயை மறந்தவன்-
தரம் கெட்டவன்-
என்பதே-
பேருண்மை!

கர்ப்பிணியை கண்டால்-
கல் நெஞ்சிலும்-
ஈரம் வருமடா!

கர்ப்பிணி வயிற்றை
கிழித்து -
சிசுவை கொளுத்தியது-
ஏனடா!?

மத வெறியன்-
அடுத்த பிரதம-
வேட்பாளராம்!!

ஆனாலும்-
இது- மத சார்பற்ற-
நாடாம்!!

நாட்கள் ஓட-
ஓட!

உயிரணு ஆரம்பிக்கும்-
உருவமாக -
மாற!

துடிக்கும்-
குழந்தை-
வயிற்றினுள்ளே!

இனிமை தரும்-
தாய்மை அடைந்தவளின்-
மனதினிலே!

கேலி பேசுவார்கள்!

பத்து மாதத்தில்-
பெண்ணின் "சுமை"-
குறைந்திடும்!

ஆணுடைய தொந்தி-
வயிறு எப்போது-
மாறிடும்!!?

பெண் வயிறு-
உயிரின் உறைவிடம்!

ஆண் வயிறு-
கொழுப்பின் இருப்பிடம்!

இதுவே-
என் வாதம்!

ஆண்களுக்கோ-
"ஆம்பிள்ளை " என-
நிருபித்து விட்டதாக-
நினைப்பு!

தாய்மை அடைந்தவளுக்கோ-
ஏறி இறங்கும்-
நாடி துடிப்பு!

சொந்தங்களில்-
சூடு பிடிக்கும்-
விவாதம்-
ஆண் பிள்ளையா!?
பெண் பிள்ளையா!?

எக்குழந்தை. -
ஆனாலும்-
அக்குழந்தை நம்-
வம்சங்களின்-
கிளை இல்லையா....!?



Saturday 23 June 2012

தப்பிசிட்டேனோ ....!?



சுண்டு விரல்கள்-
பிடித்து!

சாலையோரம்-
நடந்து!

உள்ளங்கையில்-
முகம் புதைத்து!

உச்சி வரை-
கத கதப்பை-
உணர்ந்து!

மயிலிறகால்-
முதுகு தண்டை-
துழாவுவதாக-
நினைத்து!

என் நிலையை-
நானே மறந்து!

உன் கூந்தலெனும்-
காட்டில் தொலைந்து!

வெளியேற -
வழி தெரியாமல்-
அலைந்து!

நறுமணம் வரும்-
திசை நோக்கி -
பயணித்து!

நாசி துவாரத்தை-
வந்தடைந்து!

பூந்தோட்டதிற்கு-
சென்றோம்-நாம்
இருவரும் இணைந்து!

மலர்களை பார்க்க-
மறந்தேன்-
உன் முகம்-
பார்த்து!

துவண்டிடும்போதேல்லாம்-
தோள் சாய்ந்து!

கோதி விட்ட-
கை ரேகை பார்த்தே-
கண்ணயர்ந்து!

ஊரும் உலகமும்-
தூங்கி விட்டது!

இமைகளுக்கிடையே -
உன் நினைவுகள்-
இருந்து!

மூடிட தடை செய்தது-
வழிதனை-
மறைத்து !

இத்தனை-
ஆசையும் அவஸ்தையும்-
எனக்கு ஏன்-?
நடக்கிறது!

ஒரே கணம்தான்-
என்னை நீ-
ஓர பார்வை பார்த்து!
கடந்து சென்றது!

உன் ஒத்த பார்வையிலேயே-
இருக்கிறேன்-
"பித்து" பிடித்து!

நாம் ஒன்றாக-
வழ்ந்திருப்போமேயானால்-
இணைந்து......!!!!?



Thursday 21 June 2012

மீனவன்!



இரும்பே -
இத்து போகும்-
துருபிடித்து!

அத்தனை வலிமை -
கொண்டது-
கடல் காத்து!

வாட்டும் குளிரில்-
வாடியதுண்டா!?

கொல்லும் வெயிலில்-
செத்ததுண்டா!?

இதனை அனுபவிக்க-
மீனவனா வாழ-
உங்களுக்கு தைரியம்-
உண்டா!?

கடலை விட்டு-
வெளியே வந்து-
காய்ந்தால்தான் -
கருவாடாகும் -
மீன்கள்!

கடலுக்கு மேலேயே-
காய்ந்து கருவாடாகுபவர்கள்-
மீனவர்கள்!

அலைகளில் -
அசைந்தாடும்-
படகுகள்!

கடல் நீரில்-
மிதக்கும்-
"போயாக்கள்"!

நீருக்குள்-
விரித்து இருக்கும்-
வலைகள்!

பார்த்ததுண்டா!,?-
கரை ஒதுங்கையில்-
"மடி"அறுந்து-
என் மீனவர்கள் படும்-
அவதியை!

ஆனாலும் -
மறந்தும் -
காட்டி கொள்ளமாட்டார்கள்-
கண்ணீரை!

கரை சேராதவர்கள்-
எத்தனை பேர்!?

"கரை" ஏறாத -
குமருகள் எத்தனை-
பேர்!?

தாய் மடி-
எல்லோருக்கும்-
கிடைக்கும்-
அரியணை!

அரிதாகிவிட்டதே-
கண்டிட-
அரியணையை -
அரவணைக்கும் -
மகன் -மகளை!

முள்ளில்லாத மீனை-
தின்ன ஆசைபடுகிறோம்!

முதுகு எழும்பு-
ஒடிய கரை வலை-
இழுக்கும் -மக்களின்
வலியை-எத்தனை பேர்
உணர்ந்தோம்!?

மீனவனின்-
வேதனையை -
வார்த்தையில்-
வடித்திட முடியாது!

சொற்களிலும்-
சுருக்கிட முடியாது!

(மீனவ மக்களுக்கு அர்ப்பணம்)



Wednesday 20 June 2012

வீடு!



பறவைக்கு -
ஒரு கூடு!

விலங்குக்கு-
ஒரு காடு!

மனிதனுக்கு-
ஒரு வீடு!

அழியும்-
பட்டியலில்!

பறவைகள்!
விலங்குகள்!
மனிதர்கள்!

வேடிக்கை பார்க்குது-
பாதுகாக்க வேண்டிய-
நாடு!

இதை மறைத்துவிட்டு-
பொருளாதார வளர்ச்சின்னு-
பேசுவது-
வெட்ககேடு!
-----------------------------
மனைகள்-
இருந்தது-
மகிழ்ச்சியின் -
தொழிற்சாலையாக!

இப்போது-
அடித்துகொள்கிறார்கள்-
"அலை வரிசை"-
மாற்றுவதற்காக!

தொடர்களில் -
அழுவுபவார்கள்!-
காசை வாங்கி கொண்டு!

வீட்டுல உள்ளவங்க-
அழுவுறாங்க-
கேபிள் பணம்-
கட்டி கொண்டு!

போடுற நிகழ்ச்சியெல்லாம்-
கோடீஸ்வர நிகழ்ச்சி!

மக்களின் -
வாழ்வாதாரமோ-
அவலகாட்சி!
------------------------------
நேற்றைய அறிமுகங்கள்-
விருந்தினர் என்ற பேரில்-
நடு வீட்டிலே!

நாம் உலகிற்கு-
வர வழியானவள்-
செல்லமாய் வளர்த்தவள்-
செல்ல பிராணிக்கு-
அருகிலே!
--------------------------
கோடிகளை கொட்டி-
கட்டிய வீடானாலும்-
என்ன செய்ய முடியும்!

மழலையின் மொழி-
கேட்கவில்லை என்றால்-
பிச்சை பாத்திரம்-
ஆகி விடும்!
-------------------------
எத்தனை வேலையாட்கள்-
கவனித்தாலும்-
குழந்தைக்கு போதாது!

ஒரு தாயின் அன்புக்கு-
ஈடாகாது!
-----------------------------------


Monday 18 June 2012

வேலையும்/கடமையும்!



பாறையினுள்ளேதான்-
சிற்பம்-தேவை இல்லாததை
ஒதுக்குவதே-
சிற்பியின் வேலை!

மாணவனுக்குள் தான்-
மாண்புகள்-
மேருகேற்றுவதுதான்-
ஆசிரியர் வேலை!

தன் பிள்ளையினுள்ளேதான்-
சிறந்த தலைவன்!-
சிறப்புகளை-
சீர் செய்வதுதான்-
பெற்றோர்களின் வேலை!

தன் மனைவி தான்-
தேவதை-
மனையாளை உண்மையாய்-
நேசிப்பதுதான்-
கணவனின் வேலை!

சிதிலமடைந்த சமூகத்தை-
சீரமைப்பதுதான்-
சீர்திருத்தவாதிகளின்-
வேலை!

வெளங்காத -
நாட்டு மக்களையும்-
துலங்கும் மக்களாக்குவதுதான்-
நாட்டு தலைவர்களின் -
வேலை!

வேலையை கடைமையேன-
செய்திட வேண்டும்!

கடமையை-
கண்ணின் இமையாய்-
பாதுகாக்க வேண்டும்!

வேலையை-
வேண்டா வெறுப்புடன்-
செய்பவன்-
"இருக்கும் வரை"-
நினைவில் இருக்கிறான்!

வேலையை கடமையாக-
செய்பவன்-
"இல்லாதபோதும்"-
நம் நினைவோடு -
இருக்கிறான்!

Saturday 16 June 2012

தோல்வி!



ஜல்லிக்கட்டில்-
பரிசு-
தொங்குவது-
கொம்பில் !

வாழ்வின் வெற்றி-
தொங்குவது-
தோல்வியில்!

சிராய்வுகளை-
சந்திக்க துணியாதவன்-
"களத்தில்"-
இறங்காதே!

தோல்விகளை-
தாங்க முடியாதவன்-
வெற்றி என்று கூட-
சொல்லாதே!
---------------------
தோல்வி!

ஒரு தெரு நாய்-
ஓடினால்-
துரத்தும்!

"உறுதியா" நின்றால்-
திரும்பி ஓடும்!
-------------------
ஆழ்கடலுக்கு-
செல்பவனுக்கே-
முத்துக்கள்!

கரையே கதியென்றால்-
தொட்டிட முடிந்தவை-
நுரைகள்!

அலைகளை -
தாண்டினால்தானே-
சிப்பி!

தோல்விகளை-
ஏற்றுகொள்பவனுக்கே
வெற்றி!
---------------------
வெற்றி பெற்றவனின்-
தோள்கள் தாங்கலாம்-
மாலைகள் !

அம்மாலைகளை-
ஒதுக்கி -
அவனது நெஞ்சத்தை-
கேட்டு பார் அது சொல்லும்-
பட்ட அவமானங்களை!
---------------------------
ஆயுதங்களை தரித்து கொண்டு-
மக்களை கொன்று-
குவிப்பது தோல்வியே!

நிராயுதபாணிகள்-
"முனங்கல்கள் "கூட-
நீதிக்கான-
வெற்றியே!
------------------------
வெற்றி ஊராரை-
மெச்சிடவும் வைக்கும்!
வஞ்சிடவும்-
வழி வகுக்கும்!

தோல்வி-
வாட்டத்தையும் தரும்!

வாழ்கை பாடத்தையும்-
கற்று தரும்!
----------------

Wednesday 13 June 2012

மாற்று திறனாளிகளே ...



ஆரோக்கியமானவன்-
அடாவடியில்-
ஈடுபடுவதும்!

தெம்பா இருப்பவன்-
வம்பை தேடி-
அலைவதும்!

மலைகளையும்-
குடைந்து விடும்-
எலிகள் கூட்டம்!

பலசாலியவும்-
பலமிழக்க செய்யும்-
கவலை எனும்-
வாட்டம்!

கொள்கை கூட்டம் என-
சொல்லி கொண்டு-
கொள்ளை கூட்டம்-
ஆவதும்!

தேர்தல் அறிக்கையில்-
'சேது' நிறைவேற்றனும் என-
சொல்லி விட்டு-
இன்று -தேசிய சின்னமா-
அறிவிக்க அறிக்கை-
விடுவதும்!

இந்திய இறையாண்மையை-
'இடித்து' ஒழித்து விட்டு-
இந்தியா ஒளிர்கிறது-
என்பவனும்!

'உரிமையானவர்களை'-
ஒதுக்கி விட்டு-
கள்ள தொடர்புகளை-
தொடர்பவர்களும்!

நெஞ்சை-
நிமிர்த்தி அலைகிறார்கள்-
இந்த ஈன பிறவிகள்!

மனிதத்தின் -
அவலங்கள்!

எனதருமை-
மாற்றுதிறனாலிகளே!

நீங்கள் உடல் -
குறை உள்ளவர்களல்ல!

மாற்று திறனாளிகள்-
செய்திடாத-
சாதனையே இல்லை!

எல்லோருக்கும் வெளிச்சம்-
தரும் மின் விளக்கு!

அதை கண்டுபிடித்த-
எடிசன் காது கேளாதவர்-
என்பதை-
விளங்கு!

'மறைத்த' பின்தான்-
உருவாகும் -
வரலாறு!

சிலபேர்களை -
இடையிலேயே வாரிடலாம்-
இடர்பாடு!

ஆனால் உங்களின்-
விடா முயற்சியினால்-
நீங்கள்-
வாழும் வரலாறு!

சாமானிய-
என்னை போன்றவர்களுக்கு-
நீங்களே!
தன்னம்பிக்கை வேர் !

'வரும்போது'-
பொட்டளவு-
துணி கிடையாது!

'திரும்பா'பயணத்தின்போது-
போர்த்திட-
துணி கிடைக்குமா?-
தெரியாது!

நண்பர்களே!
உங்களுக்காக-
வாழும்காலங்களில்-
பொன்னாடைகள்-
தவம் இருக்கிறது!

Tuesday 12 June 2012

கேலியா தெரியுது போல...?



மனம் வீசும் என-
எண்ணி-மொட்டுகளின் மேல்-
எரி திரவகத்தை ஊற்றுவதை-
போல!

பாலம் பாதியே-
கட்டி விட்ட நிலையில்-
ரயில் சேவை தொடங்குவது -
போல!

அதிக மகசூலுக்கு-
ஆசைபட்டு-
பூச்சி மருந்து எனும் -
விசத்தை தெளிப்பது -
போல!

தொண்ணூறு சதவிகிததும் மேல்-
அணு உலை நம்பி இருந்த-
ஜப்பானில் மூட-
இது வரை நடப்புல-
இல்லாத அழிவு உலையை-
நம் நாட்ட்டுல திறக்க-
நினைப்பது போல!

சமாதான புறாக்களை-
பறக்க விடுவது போல்-
பறக்க விட்டு-
துப்பாக்கிகள் குறி -
வைப்பது போல!

பசுமை நேசிப்பதால்-
வெளியேற மறுக்கும்-
பழங்குடி மக்களை-
வெளியேற்ற விரட்டி அடிப்பதை-
பசுமை புரட்சின்னு-
சொல்வதை போல!

பாலியல் செயலுக்கு-
மூடபடுவதற்க்கு-
பேரோ -'பீடம்'-
கொலைவழக்கு உள்ள-
மூடபடாததின்-
பேர் 'மடம்'-
என்பதை போல!

கேரளத்தில் மீனவனை-
சுட்டதுக்கு கைது-
ராமேஸ்வரத்தில் செத்தாலும்-
அறிக்கை விடுவது போல!

பட்டினியில் சாவும்-
குழந்தைகள்-
குழந்தை தொழிலாளர்களை-
வைத்துள்ள நம் நாடு-
வல்லரசு என பீற்றுவது -
மக்களை மடையர்கள் என-
எண்ணி விட்டார்கள்-
போல.......!


[குழந்தை தொழிலார்கள் எதிர்ப்பு தினத்தில்-
எனக்கு தோன்றிய எண்ணங்கள்!]

Monday 11 June 2012

வார்த்தைகள்!



வார்த்தை-

சிலது-
வெல்லும்!

சிலது-
கொல்லும்!

வஞ்சி !~
உந்தன்-
மௌனமோ-என்னுள்
பிரளயமே-
உண்டு-பண்ணும்!

-------------------------------

ஆர்பரிக்கும்-
கடலலை!

கேட்கிறது-
சில வார்த்தைகளை!

உன்னை பார்க்க-
விருப்பம் இல்லை!

காரணம்-உன்னுடன்-
உன் நிழல் வரவில்லை!

பூவை தாங்காத-
தண்டா!?

நீ!
மட்டும் வரலாமோ?-
தண்டமா!?
-----------------------------
வார்த்தை-

சொல்லும் வரை-
செல்லா காசு!

சொல்லிய பின்னே-
செலவான காசு!
------------------------------------
பூக்களை-
ரசித்து இருக்கிறேன்!

புல்லின் மேல்-
படுத்தும்-
இருக்கிறேன்!

மா கவிகளின்-
வார்த்தைகளான-
கவிதைகளை-
படித்தும் -இருக்கிறேன்!

மழலைகளின்-
மொக்கை வாய்-
சிரிப்புக்கு முன்னால்-
மறந்து நிக்கிறேன்!
------------------------------------
நாம் -
வாய் பேசிட -
சில ஆண்டுகள் -
தாமதம் ஆனதால்-
வாடியவர்கள்-நம்
'நலன் விரும்பிகள்'!

இன்றோ நாம்-
'வாய் கூசாமல்'-
பேசிடும் பேச்சால்-
வாடுகிறார்கள்-
அதே-உறவுகள்!

மனிதர்கள்-
இந்த ஈன தனமான-
நன்றி கெட்ட-
செயலை புரிகிறார்கள்!

'நன்றி கெட்ட நாயே'-என
நன்றி உள்ள பிராணியை -
திட்டுகிறார்கள்!
----------------------------------

Saturday 9 June 2012

மின்னாத மின் மினிகள்...



எண்ணெய் படிய-
தலை சீவி!

வலது பக்கம்-
எடுத்த வகிடு!

விழுந்து முளைக்க-
ஆரம்பித்த-
பற்கள்!

விளையாடி -
அடிபட்டு -
ஆற ஆரம்பிக்கும்-
புண்கள்!

கழுத்து வரை-
மாட்டிய-
பித்தான்கள்!

கால் சட்டையை-
தாங்கி நிக்கும்-
அரைஞான் கயிறுகள்!

சென்றோம்-
விரல் பிடித்த-
கைகளை-
விட்டு விட்டு!

பிரம்புகள்-
பிடித்த-
கைகளிடத்து!

இன்று-
பள்ளி சேர்க்கை-
அளவீடு-
பணத்தை கொண்டு!

அன்று-
அளவீடு-
வலது கையால்-
இடது காதை-
தொடுவதைகொண்டு!

புது-
நட்புகள்!
புது-
கவலைகள்!

பெற்றோர்கள்-
எதிர்பார்ப்புகள்!

சில-
பாராட்டுகள்!
பல-
விரட்டுதல்கள்!

ஆதரிக்கும்-
நன் நெஞ்சங்கள்!
அலட்சியபடுத்திய-
வன்மை நெஞ்சங்கள்!

அடி இல்லாத-
வாளியை கொண்டு-
கடலை அள்ள-
முயல்வதை போல!

சில-எழுத்துக்களையும்!
எண்களையும்!-அறிந்து-
விட்டு!

நினைப்பு-
கல்வி கடலை-
குடித்து விட்டது போல!

குடும்ப சுமையை-
சுமக்கும்-
மூட்டை தூக்கும்-
தொழிலாளி!

குழந்தைகள் எடையை விட-
அதிகம் புத்தக-
சுமை தரும்-
பள்ளி!

ஓய்வில்லாமல் ஓடும்!
சந்திரனும்!
சூரியனும்!

அமாவாசையும்!
சூரிய கிரகணமும்-
அவைகளுக்கு-
விடு முறை!

குழந்தைகள் -
சுதந்திரமா இருக்க-
அனுமதி இல்லையா?
கோடை விடுமுறை!

பெற்றோர்களே!
நம் மனம்-
குளிர்வது-
பிள்ளைகளால்!

நமது-
'பேராசையினால்'-
நசுக்கி விடாதீர்கள்-
'விசேச'வகுப்புகளால்!

Thursday 7 June 2012

உலக உழைப்பாளிகளே ...



செய்வது-
சில்லறை வணிகம்!

சிதறிடாதது-
உங்களது-
உள்ளம்!

தலை கால்-
தெரியாமல் ,
ஆடுற உலகம்-
நாலு காசை -
'பார்த்த'பின்னாலே!

கொண்ட தொழிலை-
விடலியே-கை நிறைய
காசு -
'பார்த்த பின்னாலே'!

நூலை அசைத்தால்-
ஆடும்-
வானில் பறக்கும்-
பட்டம்!

வேர்களை கொண்ட-
பெரும் மரங்கள்-
நமது அசைப்பினால்-
காணுவதில்லை-
ஆட்டம்!

'கறைகள்' படிந்த-
கைகளுண்டு!

கண்ணாடி குடுவைகளினால்-
கீறல் தான்- உங்கள்-
கைகளில் உண்டு!

'சராமாரியான' பாதிப்பு-
சுழன்று அடிக்கும்-
காற்றினால்!

வயோதிகம் வந்தது-
உங்களுக்கு-
சுழன்ற காலத்தினால்!

நாட்டை ஏய்த்து-
ஏப்பம் விடுபவர்கள்-
வருகிறார்கள்-
பந்தாவாக!

உழைத்து உரமேறிய-
உடலைகொண்டவர்களே-
நீங்களோ இருக்கீங்க-
சாந்தமாக!

நேற்றைய பயணம்-
மிதி வண்டியில்!

இன்றைய-
மதிப்பு பல-
கோடிகளில்!

இந்த 'பாபாவுக்கு'-
ஆர்வமாம்-
ஊழலை ஒழிப்பதில்!

இதுபோன்ற -
நாடகங்கள் சாதாரணம்-
நம் நாட்டில்!

உழைப்பாளிகளே-
உங்களுக்கு கண்ணும்-
கருத்தும்-
உழைப்பில்!

உணவில் சிறந்தது-
தன் உழைப்பில்-
உண்பது-நபி மொழி!

உங்களை -
செம்மை படுத்திருக்கும்-
அம்மொழி!






Tuesday 5 June 2012

மாறும் மண் வாசம்....



விளக்குகள்-
தாங்கிய -
கோபுரங்கள்!

கூடு கட்டி-
வாழ்ந்த-
புறாக்கள்!

பிறரும்-
அமர்ந்திட-
இருந்த-
திண்ணைகள்!

இன்று-
மறைந்து போன-
சுவடுகள்!

மின்சார இணைப்பு-
இல்லாத காலத்திலும்-
அச்சமற்று -
தூங்கிய இரவுகள்!

பக்கத்து வீட்டுக்கும்-
சேர்த்து சமைத்த-
'விஷேச ' உணவுகள்!

புள்ளை பிறந்த-
வீடுகளில்-
மூக்கை துளைத்த-
பூண்டு-
வாசனைகள் !

குழந்தைகளை-
வளர்க்க-
மழலையாக-
மாறிய-
மூத்தவர்கள்!

நிலவின்-
வெளிச்சத்தில்-
அமுதுண்ட-
நாட்கள்!

அன்னத்தை -
கண்டவுடன்-
நிலவின் வெளிச்சம்-
கொண்ட முகங்கள்!

வற்றி விட்டால்-
விளையாட்டு திடல்-
கண்மாய் கரைகள்!

மழை பெய்தால் -
மக்களின் அழுக்கெடுக்கும்-
தொழிற்சாலைகள்!

அணில் விளையாடிய-
தென்னைகள்!

இன்று-
அணிலை தேடும்-
தென்னம் பாலைகள்!

ஊரை சுற்றி வந்தாலும்-
மனசு சுத்தமான-
மனிதர்கள்!

இன்று-
'சுதி'யுடன்-
அலையும்-
'சுள்ளான்கள்!

பெரிய பாக்கியமாக-
கருதப்பட்டது-
தவிச்ச வாயிக்கு-
தண்ணீர் கொடுப்பது!

நிரஞ்ச தண்ணிய-
குறைஞ்ச அளவு கொடுப்பது-
அரசியல் சாணக்கியத்தனமாக -
கருதபடுது!

அன்று-
குளிர்ந்த காற்று-
வீசும்போதும்!
சிறு சிறு தூறல்கள்-
சிந்திடும்போதும்!
மனதை குளிர்விக்கும்!
மண் வாசம்!

இன்று!
நாட்டு நடப்புகளும்-
அநாகரீக அரசியலும்-
மண்ணில் கலந்து -
விட்ட-'அணு' வாசமும்!
குருதிகள் நாற்றமும்!
மூச்சடைக்கும்-
காலம்!



Sunday 3 June 2012

வறுமை!



சுட்டிடும்-
நெருப்பு!

மூழ்கிடுவது-
தங்கம் என்றால்-
ஜொலிக்கும்!

வெறும் தாளேன்றால்-
சாம்பலாகும்!

இருபென்றால்-
ஆயுதம் ஆவோம்!

துரும்பென்றால்-
காணாமல்-
போவோம்!

நம்' தன்மையை'கொண்டே-
நிலை கொள்வோம்!

'உரு' மாறுவோம்!
-------------------------------------
வறுமை-
ஒருவனை-
செதுக்கும்!

செழுமையோ-
மயக்கும்!
---------------------------
இன்றைய-
சாதனையாளர்கள்!

நேற்று-
சோதனையின் மடியில்-
வளர்ந்தவர்கள்!
-------------------------------
வங்கியில்-
'இருப்பை' கொண்டிருப்பதால்-
'போகையில்'வருமோ-
கூடவே!

'இருப்பதை'-
பகிர்ந்துண்டால்-
கூடுமே-
நன்மையே!
-----------------------
ஏழையே -
துவளாதிரு!

பணக்காரனே -
ஆடாதிரு!

கீழே உள்ளது-
மேலே பறப்பதும்!

மேலே பறப்பது-
கீழே வருவதும்!

உலக-
இயல்பு!

ஏன்?-
'இல்லாததால்'-
மன கசப்பு!

'இருப்பதால்'-
இறுமாப்பு!
-------------------------
பண வரவில்-
இருக்கலாம்-
வறுமை!

மனதில்-
குடி கொண்டிட வேண்டாம்-
வெறுமை!
-----------------------------



'