Tuesday 30 December 2014

எஸ்.டி.பி.ஐ !(11)

கருப்பு பணத்தை
காங்கிரசும் மீட்காது!

பா.ஜ.கவும் மீட்காது!

ஏனென்றால்
இரண்டும் கார்பரேட் எனும்
குட்டையில் ஊறிய மட்டைகள்!

     

Sunday 28 December 2014

வெள்ளைக் காகிதம்..!! (1500வது பதிவு)

ஒவ்வொரு விடியலும்
ஓர் வெள்ளைக் காகிதத்தையும்
ஓர் பேனாவையும் நம் கைகளில்
தந்து விடுகிறது !

கவிதையெழுத போகிறாயா.!?
கசக்கி காகிதத்தை எறியப் போகிறாயா.!? என
முடிவை நம் கையில் தந்தும் விடுகிறது!

    

Saturday 27 December 2014

எஸ்.டி.பி.ஐ.!(10)


உமரோட ஆட்சிதான்
காந்தியின் கனவு!

காந்தியின் கனவு நிறைவேற்ற
உமரை நேசிப்பவர்கள்
ஆட்சிக்கு வரவேண்டும் !

      
//உமர் (அவர்களைப் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக//

எஸ்.டி.பி.ஐ !(9)

துப்புரவுத் தொழிலாளர்களே!

உன்னை கீழானவனாக எண்ணும்
"வெளக்கமாருடன் "நடிக்கும்
குப்பைகளை நம்பிடாதே!

உன்னைச் சகோதரனாக எண்ணி
உனக்காக் தோள்கொடுக்க வரும்
எஸ் .டி.பி.ஐ யில் இணைந்திடு!

Friday 26 December 2014

எஸ்.டி.பி.ஐ.! (8)

தனிமனித துதி
இங்கில்லை!

அதற்காக அலைபவனுக்கு
இக்கட்சியில் இடமில்லை !

Thursday 25 December 2014

எஸ்.டி.பி.ஐ.!(7)

அடிமையாகத்தான் இருப்பாயாயின்
எக்கட்சியிலும் இருந்துக்கொள்!

சுயமரியாதையுடன் இருக்கனுமேயாயின்
எஸ்.டி.பி.ஐ யில் இணைந்திடு!

Wednesday 24 December 2014

எஸ்.டி.பி.ஐ !(6)

சுதந்திரத்திற்கு
ரத்தம் சிந்தியவர்கள்
மௌனித்ததால்தான்!

ரத்தக்கறைகளெல்லாம்
"சுத்தத்தை" பேசுகிறது!

Tuesday 23 December 2014

எஸ்.டி.பி.ஐ! (5)

கொள்ளைகளும்
கொலைகளும்
இத்தேசத்தை ஆளுகையில்!

கொள்கைகளும் 
ஆளும்காலம் வரும்!

Monday 22 December 2014

எஸ்.டி.பி.ஐ ! (4)

இதொன்றும்
ஊதினால் அணையும்
மெழுகுவர்த்தி தீயல்ல!

சூறைக்காற்றிலும்
கொழுந்து விட்டெரியும்
காட்டுத் தீ!

Sunday 21 December 2014

எஸ்.டி.பி.ஐ ! (3)

நீ என்ன 
எஸ் .டி.பி.ஐக்காரனா..!?-என
கேள்வி வருது !
என் முன்னால்!

சமூகநீதியை விரும்புபவன்
எஸ்.டி.பி.ஐக்காரன் என்றால்
நானும் எஸ்.டி.பி.ஐக்காரன்தான் -எனச்
சொல்லிக்கொள்கிறேன்!
அவர்கள் முன்னால்!

எஸ்.டி.பி.ஐ !(2)

அதிமுக - அம்மா கட்சி!
திமுக-அய்யா கட்சி!

எஸ்.டி.பி.ஐ- சமூகநீதியாளர்கள் கட்சி!

Friday 19 December 2014

எஸ்.டி.பி.ஐ ! (1)

இது
அடக்கப்பட்டவர்களின்
அழுகுரலல்ல!

அடங்க மறுப்பவர்களின்
ஆவேசக் குரல்!

Wednesday 17 December 2014

கவிதையே!

கவிதையே!
என்னை விழுங்கும்
விதையே!

ரோஜா இதழ்களைப்போல்
என்னிதழில் உரசுகிறாய்!

ரசித்து லயிக்கும் வேளையில்
முள்ளால் குத்தியும் கிழிக்கிறாய்!

கோடையில் மழைச்சாரலாய் வந்து
உள்ளம் குளிரச் செய்கிறாய்!

கொலைவெறிக்காற்றுடன் வந்து
குலை நடுங்கவும் செய்கிறாய்!

சிந்தனையெனும் சிகரத்திற்கு அழைத்துச் சென்று
சித்தம் சிலிர்க்கச் செய்கிறாய்!

திடுமெனச் சிகரத்திலிருந்து தள்ளிவிட்டு
கைக்கொட்டிச் சிரிக்கவும் செய்கிறாய்!

சொல்வதெற்கெல்லாம்
பூம் பூம் மாட்டைப் போல
தலையையும் ஆட்டுகிறாய்!

அசந்திருக்கும் வேளையிலே
ஆளைக் கொல்ல பாய்ந்து வரும்
ஜல்லிக்கட்டு காளையாகவும் மாறுகிறாய்!

பருவப்பெண்ணாய் வெட்கத்தால்
சிவக்கவும் செய்கிறாய்!

பக்கம் வரும் வேளையிலோ
பளப்பளக்கும் அருவாளை நீட்டுகிறாய்!

சொல்லிடு!
கவிதையே சொல்லிவிடு!

நீ என்னை
கவிஞனாக்கப் போகிறாயா.!?

இல்லையென்றால்
கழுத்தை நெரிக்க நெருங்குகிறாயா..!?

       

Monday 15 December 2014

குயில்ப்பேச்சு..!!

குயில்களும்
கைப்பேசிகளைப் பாவிக்கறதா.!? என
சந்தேகங்கொண்டேன்!

நீ!
முதன்முதலாக
என்னை கைப்பேசியில் அழைத்தப்போது!

     

Sunday 14 December 2014

மச்சான் ..!!

"என்ன? மச்சானை
கண்டுக்க மாட்டேங்குற!?"என்றபோது!

"இரு!வீட்ல சொல்லுறேனு"
கடுப்படித்த "முறையானவர்கள்"!

"என்ன ?கண்டுக்காம போறீங்கனு"
கேட்கும் வார்த்தை உணர்த்தியது!

எனக்கு வயசாகி விட்டதை..!!

      

Sunday 7 December 2014

தார்ச்சாலை..!

தேர்ப்போல
நீ நடந்துப் போன பிறகுதான்!

தார்ச்சாலையின்
பெயர் மாறிப்போனது!

"தேர்"ச்சாலை என்று!

        

Saturday 6 December 2014

கவிச்சமுத்திரம்..!!

உனது கண்களைக் காணும்
நேரத்தில் கவிச்சமுத்திரமென
எண்ணி இறங்கி தத்தளிக்கிறேன்
கரையேறத் தெரியாமல்!

கண்மாய்த் தண்ணீரைக் கண்ட
சந்தோசத்தில்
சரசரவென தண்ணீரில்
இறங்கி தத்தளித்திடும் குழந்தையைப்போல் !

             

Friday 5 December 2014

நீ தான்..நீயே தான்..!!

பள்ளத்தாக்கு நானானேன்!
பசுமை நீயானாய்!

உச்சிமலை நானானேன்!
உரசிடும் வென்மேகம் நீயானாய்!

மணற்வெளி நானானேன் !
நீந்திடும்நதி நீயானாய் !

கவிஞன் நானானேன் !
கவிச்சிந்தனை நீயானாய்!

உதடுகள் நானானேன் !
வார்த்தைகள் நீயானாய் !

பயணம் நானானேன் !
பாதை நீயானாய் !

அதுப்போலவே
வாழ்க்கை நானானேன்!
வசந்தம் நீயேயானாய்!

       

Thursday 4 December 2014

இடைவெளி.!

வார்த்தைக்கு வார்த்தை
இடைவெளி விட்டு
கவிதையெழுதுவதால்தானோ என்னவோ!

உனக்கும் எனக்குமான
இடைவெளியும்
எனக்கு கவிதைகளாகத் தெரிகிறதோ.!!

       

Wednesday 3 December 2014

நீயும்-நானும்.!

நீ!
உன்னையெழுதச் சொன்னாய்!

நான்
என்னையெழுதினேன்!

எனக்குள்தான்
நீயென்பதால்!

     

Tuesday 2 December 2014

புதுப்பேனா.!

என்ன எழுதிப்பார்க்கலாமென
சிந்திக்கும்போதே!

உன் பெயரையெழுதி விடுகிறது
நான் வாங்கிய புதுப்பேனா!

      

Monday 1 December 2014

தென்றலே !நஞ்சாக மாறிப்போ.!


ஓ தென்றலே!

என்னைவிட்டு ஒதுங்கிப்போ!
முடிந்தால் நஞ்சாக மாறிப்போ!

ஈழத்து ரத்தத்தைப் பார்த்து பதறியவர்கள்!
குஜராத் ரத்தத்தை மறந்தார்கள்!

அங்கு அறுத்துயெறியப்பட்டதுதான் அநீதியா!?

இங்கு நடந்ததென்ன நீதியா!?

டெல்லி நிருபயாவிற்கு குலுங்கி நின்றது இத்தேசம்!

சுல்தானாவிற்கும்,வினோதினிக்கும்,புனிதாவிற்கும் நடந்தபோது சடலம்போல் சலனமற்றுக் கிடந்தது இதே தேசம்!

அங்கு நடந்தது பாலியல்வன்கொடுமை!
இங்கு நடந்ததென்ன பாசாங்குகொடுமையா!?

ஐந்து மீனவர்கள் மீண்டு வந்தபோது நான்,நீ என மார்தட்டுகிறார்கள்!

ஆறுநூறுக்கும் மேல் மீனவர்கள் செத்தழிந்து இருக்கிறார்கள்!

இதற்கு யார் காரணம் என சொல்வார்களா!?

இல்லை மக்களை ஏமாளிகளாக எண்ணுகிறார்களா!?

தனியாருக்கு தாரைவார்த்த காங்கிரஸை துப்புக் கெட்ட அரசு என்றவர்கள்!

தற்போது பாஜக வாரி வழங்குவதை வாய்மூடி பார்க்கிறார்கள்!

இந்நாட்டில் மனசாட்சி மடிந்து விட்டதா!?

இல்லை
மனசாட்சியில் மாசுப்படிந்து விட்டதா!?

எல்லைப் பாதுகாப்பிற்கு கோடிகணக்கில் நிதி ஒதுக்கப்படுகிறது !

எல்லைக்குள்ளோ சாதியின்பேராலும்,மதத்தின் பேராலும் உயிர்கள் சூறையாடப்படுகிறது.!

எல்லையை மட்டும் பாதுகாத்தால் போதுமா?

எல்லைக்குள் பாதுகாப்பில்லாமல் இருப்பது தகுமா!?

ஓ தென்றலே!

ஆதலால்தான் சொல்கிறேன் !

மனிதம் மறந்த மனிதர்கள் வாழ்கிறார்கள் !

ஆதலினால் நஞ்சாக மாறிடு!


         

முன்னாடி ..! (நகைச்சுவை )

(பேருந்து நிலையத்தில்..)

     "சார்! மதுரைக்கு எந்த வண்டி முன்னாடிப் போகும்..!?"

     "எல்லா  ஊருக்கும் எல்லா வண்டியும் "முன்னாடித்தான்" சார் போகும்..!!

        

வெளிநாட்டு ஊழியர்.!(17)

காவியங்களின்
கண்ணீர்களும் உண்டு!

இவர்களது
கண்ணீரைப் பிளந்துப்பார்த்தால்
காவியங்களும் கரைப்புரண்டு வரும்!

      

Friday 28 November 2014

வெளிநாட்டு ஊழியர்.!(16)

விறகின் எரிதலில்
நெருப்பு உருவாவதைப் போல்!

இவர்கள்
இளமையின் எரிதலில்தான்
பணப்பூக்கள் பூக்கின்றன !

     

Thursday 27 November 2014

வெளிநாட்டு ஊழியர்.!(15)

புல்லைத் தின்னவும்
பழகிக்கொண்ட புலிகள்!

      

Wednesday 26 November 2014

வெளிநாட்டு ஊழியர்.!(14)

சொல்லாதக் காதல்
வாழ்நாள் முழுவதும்
ரணம்!

சேர்ந்தக் காதல்
பிரிந்து வாழ்வது
உயிருடன் மரணம்!

       

Tuesday 25 November 2014

வெளிநாட்டு ஊழியர்.!(13)

ஓர் துளித்தேனுக்காக
ஒரு கிண்ண வேப்பஞ்சாற்றை
அருந்துபவர்கள்!

       

Monday 24 November 2014

வெளிநாட்டு ஊழியர்.! (12)

தொப்புள்கொடி அறுபட்டபோது
நாமழுததை ஊரறியும்!
நாமறியோம்!?

தாய்மண்ணைப் பிரியும்போது
உள்ளமழுவுவதை
ஊர் அறியா.!
நாமறிவோம்.!

     

அய்ந்து ஆடுகள்..!!

ஆயிரக்கணக்கில்
ஆடுகளைக் குத்தி குதறிய கைகள்!

அய்ந்து ஆடுகளை
அவிழ்த்து விட்டதால்!

வேட்டையாடிய கைகள்
தற்போது காக்கும் கைகளாகி விட்டது!

         


வெளிநாட்டு ஊழியர்.! (11)

தாய் நாட்டின்
வெப்பக்காற்றின் அருமையை
வெளிநாட்டு
ஏசிக்காற்றில் அறிவார்கள் !

      

Saturday 22 November 2014

வெளிநாட்டு ஊழியர்.! (10)

வறுமை விலங்கை
உடைக்க!

தனிமை விலங்கில்
அகப்பட்டவர்கள்!

       

Friday 21 November 2014

வெளிநாட்டு ஊழியர்..!!(9)

காதலைக் கரம்பிடித்திட
கடலைத் தாண்டியவர்களுமுண்டு!

கடலைக் கடந்துச் சென்றதால்
காதலைத் தொலைத்திட்டவர்களுமுண்டு!

         

Thursday 20 November 2014

வெளிநாட்டு ஊழியர்..!! (8)

சமுத்திரத்தையடைந்த பின்
ஊற்றுக்கண்ணிற்கு திரும்ப முடியாத
நதிகள்!

      

Wednesday 19 November 2014

வெளிநாட்டு ஊழியர் ..!! (7)

கிளைகள் தழைத்தோங்க
நீரைத் தேடி
மண்ணில் புதையும்
ஆணிவேர்கள்!

      

Tuesday 18 November 2014

வெளிநாட்டு ஊழியர்..! (6)


பூக்களின் வாசங்களை
நுகர முடியாத!

பூங்காக்களின்
உரிமையாளர்கள்!

      

Monday 17 November 2014

வெளிநாட்டு ஊழியர்கள்.!!(5)

கனவுகளுக்காக
கண்களை விற்றவர்கள்!

         

Sunday 16 November 2014

முத்தப் போராட்டம்.!

அடச்சே!
கார்த்திகை மாசம்
நாய்கள் தொல்ல(லை)!

தாங்க முடியல!

     

வெளிநாட்டு ஊழியர்..!! (4)

தாயின்
பாரபட்சத்தினால்!

செவிலித்தாயின்
பால்குடிக் குழந்தைகளானவர்கள்!!

     
//குறிப்பு-இவ்விடத்தில் தாய் என்பதை அரசாங்கம் என பொருள் கொள்க//

Saturday 15 November 2014

வெளிநாட்டு ஊழியர்..!!(3)

வாசனைத்
திரவியங்களுக்காக!

ரத்தங்களைச்
சிந்துபவர்கள்!

       

Friday 14 November 2014

வெளிநாட்டு ஊழியர்..!! (2)

இவர்கள்
தேடியெடுத்ததை விட!

தேடியதால்
தொலைத்தது அதிகம்!

       

Wednesday 12 November 2014

வெளிநாட்டு ஊழியர்...!! (1)

உங்களைத் தொட்டு
எழுத முனைகையில் !

பேனா முனையும்
கண்ணீர் வடிக்கிறது.!

       

Monday 10 November 2014

ஒன்னுமே தெரியாத..!! (நகைச்சுவை )

        "மாப்ள..!! என்னைப் பத்தி ஒன்னுமே தெரியாதப் பொண்ண கட்டிக்கச் சொல்லி வீட்ல தொந்தரவுப் பண்ணுறாங்கடா..!!

       என்னடா செய்ய.!?உன்னை "நல்லா"தெரிஞ்சிக்கிட்டா,யார்டா கல்யாணம் பண்ணிக்குவா..!?

       

Sunday 9 November 2014

வழி(லி)..!!

கண்களின் வழி
கவிதையைத் தந்துவிட்டு
இலவச இணைப்பாகவா
கண் வலியை தந்தாய்.!?

       

Saturday 8 November 2014

கருப்புப் பருக்கை..!!

மணமில்லாதப் பூவை
மல்லிகையில் தேடுவதைப் போல்!

கருப்புப் பருக்கையை
சோற்றுப்பானையில்  தேடுவதைப் போல்!

காயமில்லாதவர்களை
போர்களத்தில்  தேடுவதைப் போல்!

நுரைகளில்லாத அலைதனை
கடலலையில் தேடுவதைப் போல்!

நீலமில்லாதப் பகுதியினை
நீளவானில் தேடுவதைப் போல்!

நிழல் விழாத உருவப்படிமங்களை
நிலம்தனில் தேடுவதைப் போல்!

மனிதச் சமுத்திரத்தில்
கவலையில்லாத மனிதர்களைத் தேடுவது..!!

     

Friday 7 November 2014

தவங்கள்.!!

மேகத்தின் தவம் மழை!

சிப்பியின் தவம் முத்து!

மண்ணின் தவம் வைரம்!

கருவறையின் தவம் குழந்தை !

விதையின் தவம் மரம்!

பருத்தியின் தவம் பஞ்சு!

கிளைகளின் தவம் கனி!

யோகியின் தவம் தியானம்!

எனது தவம் கவிதை!

     


Thursday 6 November 2014

நெருங்குங்க....!! (நகைச்சுவை )

      (கூட்ட நெரிசலான பேருந்தில் நடத்துனரும்,பயணியும் ..)

      "சார்..!! நெருங்கி நெருங்கி நில்லுங்க..!இன்னும் ரென்டு டிக்கட் ஏறனும்...!!

     "யோவ்! கண்டக்டரு..அதுக்கு நீயும் ,டிரைவரும் எறங்கிட்டு,அந்த ரென்டுப் பேர ஏத்துய்யா.!!

         

Wednesday 5 November 2014

பேசும்ஊமை..!!

வான்மழையாலேற்படும்
உயிரிழப்புகளை சொல்லும்
ஊடகங்கள்!

மதுவாற்றின்
தாலியறுப்புகளைச் சொல்லாத
ஊமைகள்!

   

தண்ணீர்..!! (நகைச்சுவை )

(செய்தித்தாள் படித்துக் கொண்டிருப்பவர்..)

        "மாப்ள! தமிழ் நாடே தண்ணியில மிதக்குதுனுப் போட்டிருக்கு..!!

     "எந்த தண்ணியில..!? மழைத் தண்ணியிலயா.!? டாஸ்மாக் தண்ணியிலயா..!?

            

Monday 3 November 2014

தடை...!!

தன் வீட்டில்
அடுப்பெரிய உழைக்காதவன்
சொல்கிறான்!

தலைவன் படத்திற்கு
தடையென்றால்
தமிழ் நாடு எரியுமென்று..!!

        

Sunday 2 November 2014

மேகப்பானை..!!

மேகமெனும்
மண்பானையின் மீது
குளிர்க்காற்றெனும் கற்களை
வீசியது யார்..!?

      

Saturday 1 November 2014

எண்ணத்துளி..!!

துளிகளாய்  விழுந்து
மண்ணைக் குளிரச்செய்த
மழையே!

எனக்குள்
எண்ணத்துளிகளை மேலெழச்செய்து
என்னை ஏன் கொதிக்கச் செய்தாய் .!?

        

Friday 31 October 2014

தீண்டாத்தண்ணீர்..!!

தெருவிலோடிய மழைத்தண்ணீரில்
உன் வீட்டுத் தண்ணீரை நானறிந்தேன்!

என்மீது படாமல்
அத்தண்ணீர் ஒதுங்கிச் சென்றபோது !

         

Thursday 30 October 2014

மேகப்பெண்..!!

ஓ!
மேகப் பெண்ணே!
ஏன் கதறிக்கொண்டு
கண்ணீர் வடிக்கிறாய்!

ஆதிக்கவெறி நாய்களால்
குதறப்பட்ட
என் தேசப் பெண்களைப்போல்!

     

மழை..!!

கொட்டிய மழை
நின்று விட்டது!

என்னுள்
நினைவுமழையை
கொட்டச் செய்துவிட்டு.!!

       

Sunday 26 October 2014

சரித்திரம்..!!

தடுத்தும்
அடித்தும்
களமாடும்
கிரிக்கெட் வீரனைப்போல !

ஓடியும்
ஓங்கி எத்தியும்
இலக்கையடையும்
கால்பந்தாட்ட வீரனைப்போல!

தற்காத்தும்
தாக்கியும்
தன்பலத்தை நிலைநாட்டும்
குத்துச்சண்டை வீரனைப்போல!

தடைகளை தகர்த்து
சூழ்ச்சிகளை மிதித்து
வாழத்துணிந்தவனே
சரித்திரமாகிறான்!

         

Saturday 25 October 2014

மூத்தரச் சந்து..!! (நகைச்சுவை )


       "மாப்ள! சொல்ல மறந்துட்டேன்டா..!! கவிதா உன்னை விரும்புதான்டா..!!

     "இல்ல பரவாயில்லடா..!! அவ அண்ணே உன்ன "மூத்தரச் சந்துல கவனிச்சான்"னு கேள்விப்பட்டேன்டா..!!

            

Friday 24 October 2014

தேடுகிறேன் ...!!

கவலையில்லாத மனிதர்களை..!

பொன்னை விரும்பாத பெண்டிர்களை.!

விடுதலையை நேசிக்காதப் போராளிகளை!

தமிழகத்தில் மின்வெட்டில்லாத ஒரு நாளை..!


தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறாத அரசியல் கட்சிகளை..!

தோல்வியைச் சுவைக்காத வெற்றியாளர்களை..!

டாஸ்மாக் குறுக்கிடாதச் சாலைப் பயணத்தை.!

பாலியல் வன்கொடுமையில்லாத நாளிதழை..!!

தேடுகிறேன் !

கிடைக்காதென்றுத் தெரிந்தும்
தேடுகிறேன் !!

       

Monday 20 October 2014

நீயில்லை..!!

காலைத் தேநீர் சுவைத் தரவில்லை!

தீண்டும் தென்றலும் குளிரவில்லை !

பௌர்ணமி நிலவும் கதைச் சொல்லவில்லை !

கடல்நுரையும் கால் நனைக்க வரவில்லை !

பிடித்தக் கவிதையும் தலைக் கோரவில்லை !

முயலின் கண்களிலும் அழகில்லை !

புறாக்களின் சிறகில் மென்மையில்லை!

காரணம்
என்னருகில் நீயில்லை!

     
     

Saturday 18 October 2014

கனா..!!

நாம் வாழ்ந்து
திரும்பியது!

திரும்பவும்
விரும்பினாலும்
நுழைந்திட முடியாதது!

குழந்தைகளின்
கற்பனை உலகம்!

       

Friday 17 October 2014

சாக்கடை..!!

கோலங்களை அலங்கோலமாக்கிடும்
தெருவிலோடும் சாக்கடைத் தண்ணீரைப்போல்!

குடும்பமெனும்  கோலங்களை
அலங்கோலப்படுத்துகிறது
டாஸ்மாக் "தண்ணி"யானது!

Thursday 16 October 2014

தெரியுமா.!? (நகைச்சுவை )


(இருவர் சுவராசியமாக பேசிக்கொண்டிருக்கும்போது..)

     "மாப்ள! உனக்கு "ஒன்னுத்"தெரியுமா.!?

   "ம்ம்..!!"ஒன்னு,ரென்டு,மூனுனு ஆயிரம் வரைக்கும் தெரியும்..!!

       

Wednesday 15 October 2014

இந்தியா தூய்மையாகிட....!!

மதவெறிகளை மாய்த்திட வேண்டும்!

தீண்டாமையை தீயிலிட வேண்டும்!

பெண் வன்கொடுமையாளர்களைத் தூக்கிலிட வேண்டும்!

மதுபானக்கடைகளுக்கு திறக்காத பூட்டை மாட்ட வேண்டும்!

வரதட்சணையாளர்களை ஆண்மையற்றவர் என அழைக்க  வேண்டும்!

மத,சாதிவெறிப் பேச்சாளர்களைச் செருப்பால் அடிக்க வேண்டும்!

பொய்யைப் பரப்பும் ஊடகங்களை ஊமையாக்கிட வேண்டும்!

ஆள்பவனையும்,ஆளப்படுபவனையும் ஒரே மாதிரி பார்க்கும் சட்டங்கள் வேண்டும்!

கல்விக்கூடங்கள்,மருத்துவங்களும்  இலவசமாக வேண்டும்!

அதிகாரவர்க்கம்,அடிமைவர்க்கம் எனும் சொல்லே இல்லாமலாக வேண்டும்!

விவசாயிகளை புனிதர்களாக மதிக்க வேண்டும்!

ஊழல் அரசியல்கட்சிகளுக்கு
நிரந்தரத்தடை  விதிக்க வேண்டும்!

இத்தனையும் நடந்திட மனிதத்தை  நேசிப்பவர்கள் ஆட்சியாள வேண்டும்!

         

Tuesday 14 October 2014

பொறுமை இழந்தேன்..!!

நாவைப்பறித்து விட்டு
பேசச்  சொன்னாய்!

குரல்வளையை அறுத்து விட்டு
பாடச் சொன்னாய்!

மிளகாய்த்தூளை முகத்தில் வீசி விட்டு
சிரிக்கச் சொன்னாய் !

நகத்தை பிச்சியெடுத்து விட்டு
நகச்சாயம் பூசச் சொன்னாய்!

சுவாசத்தை அபகரித்துக்கொண்டு
வாசனையை நுகரச் சொன்னாய்!

மைனாவின் சிறகுகளைப் பிடுங்கி விட்டு
பறக்கச் சொல்லி வான் நோக்கி வீசினாய் !

இத்தனைக்கும் பொறுமைக் கொண்ட நான்!

எப்போது பொறுமையிழந்தேனென்றால்..!

"நீ!எழுதும்போது என்னை நினைக்காதே..!!"-என
நீ சொன்னபோதுதான்!

       

Sunday 12 October 2014

உனது முகமே...!!

கவிதையெழுதி கிழித்துப்போட்ட
காகிதங்களிலும் உனது முகந்தான் தெரிகிறது!

சில்லுச் சில்லாய் உடைந்த
கண்ணாடிச் சிதறலில் தெரியும்
பல முகங்களைப் போல்!

      

Saturday 11 October 2014

சாப்பாடு.!

பரிமாறிய உணவு
குறைவதால்
மனம் நிறைபவர்கள்!

குடும்பப்பெண்கள்!

         

Thursday 9 October 2014

நட்சத்திரம்!

அட!
வானமகள் கன்னத்தில்
வெள்ளியினாலானப் பருக்கள் !

      

Wednesday 8 October 2014

மின்னல்..!!

என்னத் திமிர்
இந்த மின்னலுக்கு.!?

பூமிப்பெண் குளிக்கும்போது
இப்படி புகைப்படம் எடுக்கிறது !!

 

Saturday 4 October 2014

முதலை..!!

இன்னும் சிக்காத
முதலைகள் கைதட்டுகிறது!

சிக்கிய
பெருச்சாளியைப் பார்த்து!

       

Wednesday 1 October 2014

காந்தி ஜெயந்தி !

காந்தியை
காப்பாற்ற முடியாதவர்களால்
கொண்டாடப்படுகிறது !

காந்தியின் பிறந்தநாள் !

      

மௌன மொழி..!!

ஆண் கிளியின் கழுத்துக்கோடு!

ஈரக்கூந்தலில் ஒற்றை ரோஜா!

சேலையை தாண்டிப்பார்க்கும் கட்டைவிரல் !

எரிந்து விழும் நட்சத்திரம்!

சோளக்காட்டுப் பொம்மை!

சேவலின் கொண்டை!

கிடாயின் தாடி!

தூங்கத்தில் குழந்தையின் புன்முறுவல் !

அடைகாக்கும் கோழி!

கரையொதுங்கிய படகுகள் !

பென்சிலால் கோடிட்டதுப்போல் முதல் பிறை!

தேவாலய மணிக்குண்டு!

இவைகளெல்லாம்
என்னிடம் எதையுமே பேசாவிட்டாலும் !

நீண்டநேரம் பேசியதுப்போல் உணரச்செய்பவைகள்!

பேசாத பிரியமானவர்களின்
பேசிச் செல்லும் மௌனங்களைப்போல்!

     



Monday 29 September 2014

வாழு...!!

வாழ்ந்திட
வழியில்லதவர்களை விட!

வழியிருந்தும்
வாழத்தெரியாதவர்களே
இவ்வுலகில் அதிகம்!

         

சட்டை..!

குண்டூசிகளால்
காயம்படுகிறது!

ரோஜாப்பூவால்
அலங்கரிக்க விரும்பும்
சட்டைகள் !

      

Sunday 28 September 2014

விமானம்!

கனவுகள் சுமந்தவர்களை
தனக்குள் சுமந்துச் செல்லும்
உலோகப் பறவை!

       

Saturday 27 September 2014

நஞ்சு ..!

செடிகளுக்கு
பூச்சி மருந்தைத் தெளிப்பது போல்!

மனிதப்பூச்சிகளுக்கு
மதுவெனும் நஞ்சு விற்கப்படுகிறது !

        

Thursday 25 September 2014

வீச்சம்..!

பழகி,பழகி
பழக்கமானதால்!

சாக்கடை
நாறுவதில்லை
பன்றிகளுக்கு!

மதுவின் வீச்சத்தில்
மதியிழந்த
மனிதர்களைப்போல்!

     

நோக்கம்.!

ஏக்கத்திலும்
தூக்கத்திலும்
வாழ்வை பாழாக்காதே!

ஓர் நோக்கத்திற்காக (லட்சியம் )
வாழ்ந்து அர்த்தமாக்கு.!!

     

Tuesday 23 September 2014

ஓராயிரம் .!

கிடைத்திருப்பது
ஒரே ஒரு வாழ்க்கைத்தானே!

அதற்குள் ஏன்
ஓராயிரம் கவலைகள் !?

         

Sunday 21 September 2014

வீரன்..!!

பிரம்புக்கு பயந்து ஓடும்
மாணவனாக இராதே!

இலக்கை நோக்கி ஓடும்
வீரனாக இரு!
 
       

மூன்றெழுத்து .!

வாழ்க்கை எனும்
நான்கெழுத்தை
பணம் எனும்
மூன்றெழுத்து
விழுங்காதிருக்கட்டும்!

      

Friday 19 September 2014

கவிதையேதான்.!

சிரித்தாலும் !
முறைத்தாலும்!

பேசினாலும் !
மௌனித்தாலும்!

அழுதாலும்!
அடம்பிடித்தாலும்!

தவழ்ந்தாலும்!
தாவினாலும்!

முத்தமிட்டாலும்!
எச்சில்படுத்தினாலும்!

இப்படியான
குழந்தைகளின் செய்கைகளெல்லாம்!

கவிதைதான்!
கவிதைதான் !
கவிதையே தான்!

      

Thursday 18 September 2014

முந்தானை ..!!

வெயிலுக்கு குடையாவாய்!

முகத்திற்கு திரையாவாய்!

கொஞ்சம் மடித்தால் தலையணையாவாய்!

மனதிற்கு பிடித்தவர்கள் நனைந்திட்டால்
துவாளையாவாய்!

சிறுபிள்ளைகள் பிடித்து பின்தொடர வழிகாட்டியாவாய்!

காற்றிலாடி கையாட்டுவாய்!

இப்படியாக
உன்னை ஊரார் அறியவார்கள்!

ஆனால்
முந்தானையே!
பெண்களின் கண்ணீரை
நீ மட்டுமேயறிவாய்!

     

Tuesday 16 September 2014

நதி..!!

குட்டையாக தேங்கிடவோ!
காட்டாறாக சீறிடவோ!
எனக்கு விருப்பமில்லை !

நதிப்போல் நிற்காமல்
பயணிக்கவே விரும்புகிறேன் !

      

Monday 15 September 2014

மணல்மேடு !

எத்தனையோ இரவுகள்
உன் மடியில் !

எத்தனையோ கனவுகள்
உன் கதகதப்பில்!

வானம்பார்த்து!

மண்ணில் முகம் வைத்து!

பேசிய கதைகள் !

மிதித்து பேசிய நட்புகள்!

தண்ணீர் சுமந்துச் சென்ற தாரகைகள்!

சாடையில் வீசிச் சென்ற வார்த்தைகள் !

இப்படியாக எத்தனையோ
நினைவுகளை தந்தது!

ஏக்கங்களை தந்தது!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு
மீண்டும் உன் மடி மீது அமர்ந்தபோது!

உணர்வுகளின் அழுத்தங்கள் தாளாமல்!

அவசரமாக தோளில் கிடந்த
துண்டை விரித்து படுத்துக்கொண்டேன்!

கொஞ்சம் மனதும் ஆறுதல் கொண்டது!

தாயோட சேலை வாசத்தில்
நிம்மதியடைந்த குழந்தையைப்போல் !

      

Sunday 14 September 2014

திப்பு சுல்தான் !

வரலாறுத் தெரியாத
முட்டாள் மட்டுமே சொல்வான்!

திப்பு சுல்தானே!
உன்னை மதவெறியெனென்று!

         

Saturday 13 September 2014

புதுக்கவிதை..!!

அழகுசாதன பூச்சுக்கள்
இல்லாமலே!

அன்புக்குரியவர்கள்
என்றைக்கும்
அழகுதான் !

வார்த்தை ஜாலங்கள்
இல்லாமலே!

அர்த்தம் தரும்
புதுக்கவிதைகளைப் போல்!

     

Friday 12 September 2014

ஒன்றுக்குள் மற்றொன்று..!!

மரத்தில் விதைகளும்
விதைகளினுள் மரங்களும் அடங்கி இருப்பதுப் போலும் !

சிந்தனைகள் எழுத்தாவதும்
எழுத்திற்குள் சிந்தனைகள் பொதிந்திருப்பதுப் போலும் !

நதியின் கீழ் பூமியும்
பூமியினுள் நீரூற்றுகள் ஓடுவதைப் போலும்!

லட்சியவாதிகளின் தியாகங்களும்
தியாகியாக துணிபவர்களே லட்சியவாதிகளாகுபவர்களைப் போலும்!

எனக்கு நீயும்!

உன்னை கவிதையாகவும்
கவிதைக்குள் உன்னையும்
பார்க்கிறேன் !

     

Wednesday 10 September 2014

கவிதைகளாக ..!!

அடி வெளுக்கும்
அதிகாலை வானம் !

கடல் விழுங்கும்
மாலைநேர சூரியன்!

ஆழ்கடலின் மௌனம்!

குழந்தைகளின் குறுநகை!

நீளமான  தேசிய நெடுஞ்சாலை !

சிறுவர்கள் கட்டும் மணல்வீடு!

நிலவினை மறைக்கும் மேகம்!

மொட்டை பனைமரம் !

கரைவலை இழுத்தச் சொந்தங்களின்
"காய்த்த"கைகள் !

இப்படியான காட்சிகள்
எனக்குத் தெரிகிறது
கவிதைகளாக !

எனக்கு
கவிதைப்புத்தகங்கள்  கிடைக்காத
தருணங்களிலெல்லாம்!

Tuesday 9 September 2014

திட்டம்..!!

திட்டமிடுபவன்
மனிதன் !

திட்டமிட்டதினுள்
தீர்வை வைப்பவன்
இறைவன் !

     

Monday 8 September 2014

ஈக்கள் !

மலத்தை மொய்க்கும்
ஈக்களை நினைவூட்டுகிறது !

"டாஸ்மாக்"கில் குவிந்திருக்கும்
மனிதக் கூட்டம்!

        

Saturday 6 September 2014

மனிதன் !

படைப்புகளிலேயே
சிறந்தவன்!

தன் செயல்களினால்
கேவலப்படுபவன்!

       

உள்ளங்கள் ..!!

காந்தத்தில் ஒட்டிக்கொள்ளும்
இரும்புத்துகள்களைப் போல்!

நீர்நிலைகளில் வட்டமிடும்
பறவைகளைப் போல்!

கூந்தலில் சேர்ந்திடும்
மல்லிகையைப் போல்!

கரையொதுங்கி கடலுக்குள்
ஓடி மறையும் நண்டுகளைப்போல்!

எழுத்தின் வாயிலாகவும்
இணைந்திடுகிறது
சில உள்ளங்கள் !

        

Thursday 4 September 2014

அருட்கொடை..!!

இறைவா!

நீ கொடுத்த
அருட்கொடைகளையே
"எண்ணி"ப்பார்த்திட முடியாதபோது!

எப்படி
நான் நன்றிக் கடன் தீர்ப்பது .!?

           

முதியவர்கள்!

நாளைய
நமது நிலையை காட்டும்
கண்ணாடிகள்!

     

Tuesday 2 September 2014

காகிதம்..!!

உச்சம் தொட துணிந்த
காகிதமே
பட்டமாகிறது!

அச்சம் கொண்ட
காகிதமோ
காலில் மிதிப்படுகிறது!

     

Monday 1 September 2014

எனது கவிதைப்புத்தகம்!

எல்லா புகழும் இறைவனுக்கே!
---------------------------------
          எனது மூன்றாவது கவிதைப்புத்தகமான  ''பேரொளி''வெளிவந்துவிட்டது.''பேரொளி''யும் முந்தைய கவிதைப்புத்தகங்களும் ,ரஹ்மத் பதிப்பகத்திலும் {தொடர்புக்கு -கவிஞர் உஸ்மான் அவர்கள்.கைப்பேசி-9444025000}இலக்கியச்சோலை பதிப்பகத்திலும் {இலக்கியச்சோலை,26, பேரக்ஸ்ரோடு,பெரியமேடு,சென்னை-3.போன்.+91
44 256 109 69}கிடைக்கும்.

      தற்போது மதுரையில் நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் புத்தக கண்காட்சியில் கடை எண் -153 {இலக்கியச்சோலை}மற்றும் கடை எண்-158,159 {ரஹ்மத் பதிப்பகம்} இவ்விடங்களில் கிடைக்கும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

     

Sunday 31 August 2014

பாழுங்கிணறு.!

இவ்வுலகில்
பாழுங்கிணற்றில் விழுந்து
செத்தவர்களை விட!

மதுப்பாட்டிலினுள் மூழ்கி
மடிந்தவர்களே அதிகம்!

          

Saturday 30 August 2014

கழிவு..!!

துருநாற்றமாக வெளியேறும்
மனிதர்களின் கழிவுகளைப்போல்!

"டாஸ்மாக்"கில் குவிகிறார்கள்
மனிதர்களில் கழிவுகள்!

        

Friday 29 August 2014

குடிவெறி!

வெறி நாய்கள் கூட
வருவோர் போவோரைத்தான்
கடித்து குதறும்!


ஆனால்
"குடிவெறி"நாய்களோ
தன் குடும்பத்தையே
அசிங்க வார்த்தைகளால்
குதறிவிடுகிறது!

      

Thursday 28 August 2014

கஷ்டம்தான்!

உன்னையே எழுதினேன்!
யார் இது !?என
கேள்வியெழுப்புகிறாய்!

யாரையோ எழுதுவேன்!
என்னைத்தானே!?என
குழைகிறாய்!

பேசிப்பழகிடும்
என்னையே புரிந்துக்கொள்ளாத
உன்னால்!

என் எழுத்தைப்
புரிந்துக்கொள்வது
கஷ்டம்தான்!

      

Tuesday 26 August 2014

இல்லைதான் !

குளிர்சாதன அறை!

அதிவேக இணைய இணைப்பு !

ஐந்து நிடத்திற்கொரு பேருந்து வசதி!

திறந்ததும் கொட்டிடும் தண்ணீர் குழாய்!

பச்சைபசேல் புல் வெளிகள் !

கடந்திடும் ஒப்பனை முகங்கள் !

இத்தனையும் இல்லைதான் !

ஆனால் நிம்மதி இருக்கிறது!

நான் பிறந்த ஊரில்!

             

Monday 25 August 2014

பொக்கைவாய்..!! (1400வது பதிவு)

ஆச்சாக்களுக்கும்! (பாட்டிகள் )
குழந்தைகளுக்கும் மட்டுமே
அழகு சேர்க்கிறது !

பொக்கைவாய் சிரிப்பு!

பொம்மை !

வாங்கிக்கொடுத்த பொம்மைக்கு
பிண்ணனிக்குரல் கொடுப்பவர்கள் !

அப்பா-ஆச்சாமார்கள்!
(தாத்தா-பாட்டிமார்கள்)

      

கைக்குட்டை !

கண்ணீர் துடைக்க அல்ல!

வியர்வை துடைக்க!

       

Sunday 24 August 2014

முன்னோக்கிச் செல்வோம்!

தீபங்களின் எரிதலும்!

நதிகளின் பயணங்களும்!

விதைகளின் வளர்ச்சிகளும்!

இருள்களின் விடியல்களும்!

பறவைகளின் இரைத்தேடலும்!

இத்தனைக்கும்
பயணம் முன்னோக்கித்தான்!

நேற்று
முன்னோக்கிப் பயணித்தவர்கள்!
இன்றைய வரலாறுகள்!

இன்று
முன்னோக்கிப் பயணிக்க போகிறவர்கள்தான்
நாளைய வரலாறுகள்!


     

Friday 22 August 2014

காதலன்!

நான்
காதல் கவிஞனல்ல!

கவிதைகளின்
காதலன்!
   
      

Thursday 21 August 2014

நான் காஸா..!!

அழிவுப்பறவைகள்
எங்கள் வானங்களில் வட்டமிடுகிறது
அழிவுகளை வீசிக்கொண்டே!

எங்கும் குண்டுகளின்
சப்தங்கள்!

எத்திசையிலும்
அலறல் சப்தங்கள்!

சல்லடைகளாகிறார்கள்
எம்மண்ணின் மைந்தர்கள்!


ஆனாலும்
மனிதம் பேசும் உலகமோ
எங்கள் விசயத்தில் மௌனிக்கிறது!

எங்கள் ரத்தங்களை பாராமல்
குருடாகி விட்டது!

எங்கள் அலறல்களை கேளாதவண்ணம்
செவிடாகி விட்டது!

ஓ!
உலகமே!
ஒன்றை புரிந்துக்கொள்ளுங்கள்!

அநீதங்களும்
அட்டூழுயங்களும்
எங்களுக்கு புதிதல்ல!

அநியாயக்காரர்க்களும்
அட்டூழிக்காரர்களும் வென்றதாக
வரலாறும் இல்லை!

        

Wednesday 20 August 2014

மௌன மொழி!

சாலையும்!
சருகுகளும்!

ஏரிகளும்!
துடுப்புகளும்!

தென்றலும்!
மலர்களும்!

மலைகளும்!
மேகங்களும்!

பேசியக்கொண்ட
 மொழிகள்!

நினைவூட்டியது!

நாம் பேசாமல்
புரிந்துக்கொண்ட
மௌன மொழிகளை!

     






Tuesday 19 August 2014

பள்ளத்தாக்கு !

பள்ளத்தாக்கான
என் உள்ளத்தில்!

பசுமையாக
நிறைந்திருக்கிறது !

உன் நினைவுகள் !

    

Monday 18 August 2014

பதவி!

தீப்பந்தம் போன்றது!

தானாக கிடைத்தால்
வழிகாட்டும்!

தனக்கே
சொந்தமென்று தொட்டால்
சுட்டு விடும்!

     

Sunday 17 August 2014

வியர்வை..!

வியர்த்திட்ட
உன் முகத்தினை
நினைவூட்டுகிறது !

பனியில் நனைந்த
ரோஜா!

      

ரோஜாத்தோட்டம்..!!

தோட்டத்தை
சுற்றிப்பார்த்து விட்டு
திரும்புகையில்!

உடமைகளை
சரிப்பார்த்துக்கொண்டேன்!

நான் என்னை தோட்டத்தினுள்
தொலைத்துவிட்டதை அறியாமல்!

       




Friday 15 August 2014

துளிகளாய்..!!

நீல கடல்!
சுடு வெயில் !

பால் வண்ண அலை!
குழிகள் கொண்ட பாறை!

கடற்கரை மணல்!
கானல் நீர்!

இறுக்கி குலுக்கிய கைகள் !
ஆச்சரியமாக பார்த்த கண்கள் !

ஆறு கைகள் எடுத்துக்கொண்ட
ஒரு தட்டு சாப்பாடு!

புன்னகைத்த உதடு!

இத்தனைக்குள்ளும்
இருந்தது !
எனக்கான பாசத்துளிகள்!

மழை நின்றும்
இலைகளில் தங்கிய
மழைத்துளியாய்!

       

Wednesday 13 August 2014

இந்தியா..!! (9)

நானும்
ஓர் காதலன்தான்!

என் தேசமே
உன்மேல் கொண்ட காதலால் !

      

இந்தியா..! (8)

தாய்நாடே!
நான் தாய்மடியில்
இருப்பதுபோலவே உணர்கிறேன் !

ஏனென்றால்
உன் மடியான தென்னகத்தில்
நான் பிறந்து வாழ்வதால்!

             

இந்தியா..!!(7)

தேசியக்கொடியே!

தலைநிமிர்ந்து
உனக்கு மரியாதை செய்கிறேன் !

உனக்காக
உருண்ட தலைகளை எண்ணிக்கொண்டே.!

     

இந்தியா..!! (6)

குரங்கிலிருந்து
மனிதன் வந்தான் என்பதில்
எனக்கு நம்பிக்கையில்லை!

மண்ணிலிருந்தே
மனிதன் வந்தான் என்பதில்தான்
நம்பிக்கை எனக்கு!

தாய்மண்ணே!
அதனால்தான் என்னவோ!

எனக்கு உன்மேல்
நேசம் அதிகம் !

        

இந்தியா..!!(5)

செம்மண் சாலைகளை
எப்போதுப்பார்த்தாலும்!

சுதந்திரத்திரத்தியாகிகளின்
ரத்தங்களாகவே!

எனக்கு
காட்சியளிக்கிறது!

     

இந்தியா..!!(4)

தாய் நாடும்
தாய் மடியும்
ஒன்றுதான் !

நம்மைத் தாங்குவதால் !

     

இந்தியா..!(3)

என் தேசக்காற்றே!

நான்
எத்தனையோ
வாசங்களை
சுவாசித்திருக்கிறேன்!

ஆனாலும்
உன்னை உள்ளிழுக்கும்போதுதான்
உள்ளம் மகிழ்கிறேன் !

     

Monday 11 August 2014

இந்தியா..!! (2)

மண்ணின் மீது
ஆசையில்லை
எனக்கு!

ஆனால்
தாய்மண்ணே
உன் மீதான நேசமோ.!
என் நெஞ்சமெங்கும்
நிறைஞ்சி இருக்கு!

      

இந்தியா ! (1)

என் பாரதம்
அழகிய மலர்வனம் !

அம்மலர்வனத்தில்
நானும் ஓர் மலரென்பதால்!

ஆனந்தம் கொள்கிறது
என் மனம்!

      

Sunday 10 August 2014

தேன் ..!!

தேடித் தொட்டவனுக்குத்தான்
தேன் கூட இனிக்கும்!

       

Saturday 9 August 2014

மாற்றம்..!

தன்னைத்தானே
மாற்றிக்கொண்டவர்களே!

உலகை
மாற்றியிருக்கிருக்கிறார்கள்!

        

Friday 8 August 2014

அழகுதானே..!!

எப்போது எடுத்தது!

எப்படி எடுத்தது!

பூங்காவனத்தின்
புகைப்படங்களை!

அதுசரி!

எப்படியானாலும் !
எப்போதானாலும்!

அழகு!
என்றைக்கும்
அழகுதானே.!?

      

Thursday 7 August 2014

தூரம்..!!

தூரமென்பது
நிலப்பரப்பிற்குத்தான்!

எண்ணங்களுக்கில்லை!

        

Wednesday 6 August 2014

அர்ப்பணிப்பு!

அர்ப்பணிப்பு உள்ளங்கள்
யாரிடமும் எதிப்பார்ப்பதில்லை!

ஆதலால் அவ்வுள்ளங்களிற்கு
ஏமாற்றங்களில்லை!
-----------------------
 //எனதருமை உறவுகளே!
தற்போது பயணத்தில் இருப்பதாலும், இணைய வசதி சரிவர கிடைக்காத காரணத்தாலும் ,எந்த வலைப்பூக்கள் சகோதர/சகோதரிகள் பக்கங்களுக்கு வர முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரியப்படுத்திக்கொள்கிறேன்.//

Tuesday 5 August 2014

கணவன் -மனைவி!

நாரே!
பூக்களை நீ தாங்குவதால்
இறுமாப்பு கொள்ளாதே!

பூக்களை தாங்குவதால்தான்
உனக்கு பூமாலையென்று பேரு.!!

     
          

Monday 4 August 2014

தேடிச்செல்கிறேன்...!!

கடலைத்தேடும்
நதியாக!

வாசிப்பைத்தேடும்
வாசகனாக!

வேடந்தாங்கலைத்தேடும்
பறவையாக!

பாதாளத்தைத்தேடும்
அருவியாக!

குழியைத்தேடும்
நண்டாக!

மின்சாரத்தைத்தேடும்
தமிழகமாக!

நானும்தான் தேடிச்செல்கிறேன்
விட்டுப்பிரிந்த பாடங்களை
மீண்டும் தொடர்வதற்காக!

     

Sunday 3 August 2014

ஓடுவது எதைத்தேடி ..!?

அதிகாலையில்
கண் விழித்து!

இளஞ்சூடான
கிணற்று நீரில் குளித்து!

சிமென்ட் சாலையில்
சரக் சரக் என நடந்து!

விடிவதற்குமுன் இருக்கும்
வானத்தைப்பார்த்து!

செருப்பினில் நுழைந்திடும்
மண்ணை உதறிவிட்டுக்கொண்டு!

கூரையின் மேல் நின்று கூவும்
சேவலைப்பார்த்துக்கொண்டு!

ஆழ்ந்த உறக்கத்தில் கிடைத்த
மன அமைதியோடு!

தொழுகையில் கிடைத்த
நிம்மதியோடு!

யோசித்துக்கொண்டிருக்கிறேன்!

சுற்றியிருக்கும்
சந்தோசங்களை மறந்துவிட்டு !

மனித சமுக எதைத்தேடி
ஓடுகிறதென்று!?

     

Saturday 2 August 2014

களவு..!!

நான் களவுப்போனதில்லை
கன்னிகளின் பேச்சில்!

ஆனால்
தொலைந்துதான் போகிறேன்
மழலைகளின் பார்வைகளில்!

              

Friday 1 August 2014

கவிதை நிறம்..!!

கவிதைகளுக்கு
நிறமில்லை என
இதுவரை எண்ணியிருந்தவன்
நான்!

அது தவறென்று
புரிந்துக்கொண்டது!

கருவாச்சி
உன்னை கண்ட பின்னால்தான்!

           

Thursday 31 July 2014

உப்பு..!! (நகைச்சுவை )


     (விளம்பரத்தார்)- "உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா..!?

     (பொதுமக்களில் ஒருவர் )- "பல் செட் வாங்கவே காசில்லாம இருக்கேன்..!இதுல பேஸ்ட் எங்கேயா வாங்க..!?

     

கும்பகோணத்தீ விபத்து !

குழந்தைகளை எரித்த
தீயே!

நீ!
நீதியையுமா..!?
எரித்துவிட்டாய்!

      

Wednesday 30 July 2014

இனி...!!

இதுவரைக்கும்
என் ஓட்டத்திற்கு
ஓர் அர்த்தம் இருந்தது !

இனி
அர்த்தமாக்கவே
என் ஓட்டம்  இருக்கும்!

   

Tuesday 29 July 2014

பெருநாள்..!!

இவ்வருட
நோன்பு பெருநாளில்!

அருகிலிருக்கும்
சொந்தங்களுக்காக
உதடுகள் சிரிக்கிறது !

ஆனால்
காஸாவின் கதறலாலோ
கழுத்து நெரிக்கப்படுகிறது!

          

Monday 28 July 2014

குர்ஆன்பற்றிய கவிதைகள்..!! (12)

குர்ஆனை
ஏற்றவர்களுக்கும்!

ஏற்கப்போகிறவர்களுக்கும்!

நன்றாகத் தெரியும்!

சோதனைகள்
தம்மை
சுழற்றியடிக்கும் என!
------------------------
முதியோர் இல்லங்கள்
இல்லாமலாகி விடும்!

இல்லங்கள்
முதியோர்களால்
அலங்கரிக்கப்படும்!

இறைமறையை
புரிந்துக்கொண்டால்!
------------------------
எத்தனை சட்டங்கள்
போட்டாலும் !
பெண்சிசுக்கொலையை
தடுக்க முடியாது!

குர்ஆனைப்படித்துப்
பாருங்கள் !
அநியாயமாக எவ்வுயிரையும்
கொல்ல மனம் வராது!
-------------------------------
     

Sunday 27 July 2014

கைப்பேசி ..!!

வாழ்வில் கைப்பேசியை
தொலைக்கிறார்களோ.!?
இல்லையோ.!?

கைப்பேசியினுள்
வாழ்க்கையை தொலைக்கிறார்கள்!

     

Friday 25 July 2014

கேள்விக்குறிகள்...!!?

கடற்கரை காற்று!
கடலலை சப்தம்!

கொடுக்காப்புலி மரங்கள்!
கல்லடிப்பட்ட புளியங்காய்கள்!


செம்பருத்தி பூக்கள் !
ஆலமர சருகுகள்!

களமாடிய மைதானம்!
பிளந்திருக்கும் நிலம்!

"வாப்பா"வின் கோபம்!
"உம்மா"வின் பாசம் !

இலக்கணப்பிழையான
மழலை பேச்சுக்கள் !

வரம்புமீறிய நண்பனின்
விமர்சனங்கள்!

எத்தனையைத்தான்
இழப்பது
இப்படியாக !

பணத்தை மட்டுமே
தேடுவதாலே!

ஒன்றை இழந்தால்தான்
இன்னொன்றை பெறலாம் என்பது
சரிதான்!

அவ்வொன்றுக்காக (பணம்)
இழப்புகளை கணக்கிட்டால் அடுக்கலாம்
கேள்விக்குறிகளைத்தான்..!!

     

Thursday 24 July 2014

கணக்கு வழக்கு..!!

பெத்ததையெல்லாம்
பெத்தவங்க வளர்க்குறாங்க.!

பெத்தவங்களை
பெத்ததுங்க பார்க்கனும்னா.!

கணக்கு வழக்கு
பார்க்குறாங்க..!!

        

Wednesday 23 July 2014

தெரியாது..!!

சுடும் நெருப்புக்கு
தெரியாது!

தாம் சுடுவதால்
தங்கம் ஜொலிக்கிறதென்பது!

      

Tuesday 22 July 2014

கனவு..!!

என் கண்களை
விமர்சிப்பவர்களுக்கு
தெரியாது!

அது
சுமந்திருக்கும்
கனவுதனை.!

         


Monday 21 July 2014

பாலஸ்தீனம்..!!

வரலாறு தெரிந்தவர்களுக்கு
நன்றாகத் தெரியும்!

பாலஸ்தீனமென்பது!

வீரத்தின் விளைநிலமென்பது.!!

   

Sunday 20 July 2014

குர்ஆன்பற்றிய கவிதைகள்..!!(11)

கல்மனதையும்
கரையச்செய்யும்!

பதறும்மனதையும்
பலமடையச்செய்யும்!

குர்ஆன் வசனங்கள்!
--------------------------
எதை எதையோ எழுவதற்கு
நான் சலித்தவனில்லை!

ஆனால் குர்ஆனைப்பற்றி
எழுத முனைகையில் திணறித்தான்
போகிறேன் !

நீச்சல் தெரியாதவன்
ஆழ்கடலில் சிக்குண்டதுப்போல்!
---------------------------------
மரணத்தண்டனையே தீர்வு
கற்பழிப்பிற்கு என
ஓங்கி முழங்குகிறார்கள்!

குர்ஆன் அன்றே சொல்லியதை
நினைவூட்டினால்
ஏனோ..!?
முனுமுனுக்குகிறார்கள்!
-------------------------
போராட்டங்கள்
வெடிக்கவில்லை!

கோஷங்கள்
முழங்கவில்லை!

ஆனாலும்
பெண்களின் பாதுகாப்பு
உறுதிசெய்யப்பட்டது !

இறைவசனங்களால்!
------------------------

Saturday 19 July 2014

அடையாளம்..!!

கட்டவிழ்த்து விடப்பட்ட
அநியாயங்கள்தான்!

அடையாளம் காட்டுகிறது!

மனித நேயம் கொண்டவர்களை!

     

தூக்கு..!!

நீதியும்
தூக்கில் தொங்குகிறது!

கொல்லுபவனையும்
கொல்லப்படுகிறவனையும்
பார்த்தே!

தீர்ப்புகள்  வேறுபடுவதால்!

     

Friday 18 July 2014

சிகப்பு ரோஜாக்கள்..!!

ரத்தச் சிகப்பு ரோஜாக்களில்
மனம் திளைத்தது உண்டு!

காஸாவில்
ரத்தத்தில் சிவந்த ரோஜாக்களால்
நெஞ்சி அறுபடுகிறது இன்று!

       

Thursday 17 July 2014

குர்ஆன்பற்றிய கவிதைகள்..!!(10)

நீங்கள்!
குர்ஆனைப் படிக்க
முஸ்லிமாக இருக்க வேண்டிய
அவசியமில்லை !

குர்ஆனை படித்ததும்
முஸ்லிமாகிடனும் என்கிற
கட்டாயமும் இல்லை !

விருப்பப்பட்டால்
ஏற்றுக்கொள்ளலாம்!

விரும்பாவிட்டால்
தவிர்த்துக்கொள்ளலாம்!

இது எனது
கருத்தல்ல!

குர்ஆனின் கருத்தும்
இதுதான் என்பதும்
பொய்யில்லை !
-----------------------
குர்ஆனை ஏற்றவர்கள்
வாட்களுக்கு பயந்து
ஏற்கவில்லை !

வாழ்வியல் மாற்றத்திற்காகவே
ஏற்றார்கள்!

ஏற்கிறார்கள்!
----------------------
மனிதர்களிடையே
நிற,உருவ வேறுபாடுகள் !

அடையாளம் கண்டுகொள்ள
இறைவனின் ஏற்பாடுகள்!

அதனைக்கொண்டு
அடித்துக்கொள்கிறது
"அரைவேக்காடுகள்''!
--------------------------
"எந்தவொரு ஆத்மாவிற்கும்,
அது தாங்கிக்கொள்ள முடியாத,
சோதனையை இறைவன் கொடுப்பதில்லை!"-என
இறைமறை சொல்லுதுங்க!

இதனை நம்பிய மனதில்
விரக்தி வருமாங்க..!?
--------------------------

பேனா மை..!!

தனி'மை'யை
மையாக நிரப்பிக்கொள்கிறது!

கவிதைப் பேனாக்கள்!

     

Monday 14 July 2014

குர்ஆன்பற்றிய கவிதைகள்..!! (9)

குர்ஆன் கூறும்
பொருளாதாரச் சட்டம்!

பணக்காரர்களை
கட்டுப்படுத்தும் !

ஏழைகளை
கண்ணியப்படுத்தும்!
------------------------
நீங்கள்!
அறிஞராகவோ,
கவிஞராகவோ,
சிந்தனையாளராகவோ,
இருக்கலாம் !

உங்கள் சிந்தனைக்குள்
வந்திடாத சிந்தனைகளை
படித்திடனுமா..!?

வாருங்கள்
இறைமறையில்
படிக்கலாம்!
------------------------------
இறைவனின் வார்த்தைக்கும்
மனிதனின் வார்த்தைக்கும்
வித்தியாசம் அறிய ஒரே வழி!

குர்ஆனைப் படிப்பதுதான்!
-------------------------------
நீங்கள்!
குர்ஆனைப் படிக்க
முஸ்லிமாக இருக்க வேண்டிய
அவசியமில்லை !

குர்ஆனை படித்ததும்
முஸ்லிமாகிடனும் என்கிற
கட்டாயமும் இல்லை !

விருப்பப்பட்டால்
ஏற்றுக்கொள்ளலாம்!

விரும்பாவிட்டால்
தவிர்த்துக்கொள்ளலாம்!

இது எனது
கருத்தல்ல!

குர்ஆனின் கருத்தும்
இதுதான் என்பதும்
பொய்யில்லை !
------------------------
     


குர்ஆன்பற்றிய கவிதைகள்..!!(8)

இறைமறையை
புரிந்தால் !

வறுமைக்கு பயந்து
கருவை கலைக்க மாட்டார்கள் !

வரதட்சணை பயத்தால்
கள்ளிப்பால் ஊற்றமாட்டார்கள்!
---------------------------------
மத வெறி!
இன வெறி!

மொழி வெறி!
தேச வெறி!

இப்படியான
வெறிகளையெல்லாம்!

அறுத்து எறிந்திடும்
குர்ஆன் வரிகள்!
--------------------------
குர்ஆனின் சட்டங்கள் !

ஆண்களுக்குத்தான்
கடுமையானது!

பெண்களுக்கோ
மென்மையானது!

இதனையறியாமல்
ஊரு,உலகம்
என்னன்னமோ பேசுது.!
-----------------------
ஓர் உயிரின்
உன்னதம் புரிய..!

அதற்கு படித்திருக்கனும்
இறைமறையை.!
---------------------
 

Sunday 13 July 2014

கழுதைக்குப் பேரு..!!!?

கிராமங்களில்
ஓர் சொல்லாடல் உண்டு!

"கழுதைக்குப் பேரு
முத்து மாணிக்கமா.!?" என்று!

அதுப்போலத்தான்
இருக்கிறது!

இரக்கமில்லாமல்
கொலைகள் நடத்தும்
இக்காலக்கட்டத்தை !

அறிவியல் காலகட்டமாக
சொல்வது !

      

Saturday 12 July 2014

குர்ஆன்பற்றிய கவிதைகள்..!!( 7)

அடுத்தது பெண்ணாக
இருக்கமோ என
கலக்கம் இருக்காது!

அடுத்ததும்
பெண்ணாக வேண்டும் என
ஆசை இருக்கும்!

பெண்ணின் மேன்மையைப்பற்றி
குர்ஆன் சொல்லிருப்பதை
அறிந்திருந்தால் .!
--------------------------
பெண்களுக்கு
ஓட்டு உரிமை கிடைத்தது
கடந்த நூற்றாண்டிலே!

அதனை
சாதனையென
சிலாகிப்பவர்களே!

பதினான்கு நூற்றாண்டுக்கு முன்னரே
சொத்துரிமை கொடுக்கச் சொல்லிருக்கு
குர்ஆனிலே!

அதனை
எப்போதுதான் உணர்வீர்களோ..!?
-----------------------\--------------
ஐந்து பெண்பிள்ளை பிறந்தால்
அரசனும் ஆண்டியாவான் என
சொல்லுவாங்க!

குர்ஆன் சொல்லும்படி
திருமணம் நடந்தால் !

மகள்களை பெத்தவர்
"பிச்சாதிபதியாக" இருந்தாலும்
லட்சாதிபதியாக ஆகிடுவாருங்க.!!
-------------------------------
பெண்களை போகப்பொருளாக
எண்ணும் மூடர்களே!

குர்ஆன் சொல்வதை
படித்துப்பாருங்கள்!

அதன் பின்
பெண்களை
உங்கள் இதயத்துண்டாக
பாதுகாப்பீர்கள்!
-----------------------------

கோரப்பற்கள்!

வெடித்துச் சிதறிய
உடல்களில் தெரிகிறது!

கொலைவெறி நாய்களின்
கோரப்பற்கள்!

      

குர்ஆன்பற்றிய கவிதைகள்..!! (6)

தன்
தாயையோ
தாரத்தையோ..!

தன்
பெண்மக்களையோ..!!

கிஞ்சிற்றும்
வெறுக்கமாட்டார்கள்!

இறைவசனங்களை
நேசிப்பவர்கள் !
------------------
நான் செய்யும்
தவறுகளுக்கெல்லாம்
நானே பொறுப்பு !

ஆனால்
நான் ஓர் தூசியளவு
நற்செயல் செய்தாலோ.!?

அது
இறைமறை
எனக்குள் ஏற்படுத்திய
பாதிப்பு.!
-------------------------
அநியாயக்காரர்களிடம்
அடங்கி போக மாட்டார்கள் !

ஆனாலும்
அநியாயக்காரர்களிடமும்
அப்பாவிகளிடமும்
அத்துமீற மாட்டார்கள் !

அவர்கள்தான்
குர்ஆனின் வசனங்களை
படித்து புரிந்தவர்கள் !
---------------------------
மன்னாதி மன்னரும்
துறவிப்போல் வாழ்வார் !

மண் வீட்டுக்காரரும்
செல்வந்த மனநிலையில் வாழ்வார்!

குர்ஆனின் வசனங்கள்
மனதில் செய்யும் மாற்றங்கள்
பலவுண்டு!

மேலே குறிப்பிட்டது
அதிலொன்று.!
-------------------------
   

Friday 11 July 2014

தரங்கெட்டவர்கள்!

பச்சிளம் குழந்தைகள் மீது
ஆயுதத்தை பிரயோகிப்பவர்கள்!

அஞ்சி அஞ்சி வாழும்
கோழைகள் விட!

தரங்கெட்ட கோழைகள் !

      

Thursday 10 July 2014

குர்ஆனைப்பற்றிய கவிதைகள்..!! (5)

எத்தனையோ புத்தகங்கள்
உங்கள் மனதை தொட்டு
இருக்கலாம் !

குர்ஆனைப் படித்துப்பாருங்கள்
உங்கள் ஆழ்மனதை தட்டுவதை
உணரலாம் !
-----------------------------
உறவுகளால்
உதறி எறியப்பட்டவரா..!?
நீங்கள்.!?

இறைமறையை
படித்துப்பாருங்கள்!

வெறுத்தவர்களையும்
நேசிக்க ஆரம்பித்து விடுவீர்கள் !
--------------------------------
குர்ஆன் !
கோழைக்குள்
வீரத்தை விதைக்கும்!

அவ்வீரத்திற்குள்ளோ
இரக்கமே மிகைத்திருக்கும்!
-----------------------------
இறைவசனங்கள்!
மூர்க்கமானவர்களையும்
முரடர்களையும்
மனிதர்களாக மாற்றி இருக்கு!

அவ்வரிசையில்
நானும் ஒருவன் என
சொல்லிட
எனக்கென்ன தயக்கம் இருக்கு..!?
-------------------------------

       

Wednesday 9 July 2014

ரமழான் ..!!

தாயின் அரவணைப்பில்
துயில்கொள்ளும்போது!

தொட்டிலில் போட செல்கையில்
சிணுங்கி அழும் குழந்தையைப்போல்!

ரமழான் கடக்கிறது என
எண்ணுகையில்!

மனதும் கலங்கதான் செய்கிறது
அக்குழந்தையைப்போல்!

     

Tuesday 8 July 2014

இறை நினைவில் சில வரிகள்.!


இறைவா..!!
எப்படிப்பட்டவர்களிடமும்
பணிந்து நடக்கும்
உள்ளத்தையும்!

உன்னையன்றி
எப்பேர்ப்பட்டவர்களிடமும்
அடிபணிந்திடாத
நெஞ்சுரத்தையும்
எங்களுக்கு தந்தருள்வாயாக..!!
---------------------------
 இறைவா..!!

கருவறையில்
எங்களை பாதுகாத்த
 ரஹ்மானே!

மண்ணறையிலும்
எங்களை பாதுகாத்திடு
எங்கள் இறையோனே..!!
 --------------------
இறைவா..!!

ஆயிரக்கணக்கில்
வார்த்தைகளை எழுதுகிறேன்!

ஓர் புள்ளியாவது
உன் திருப்பொருத்தமடைய வேண்டி
ஏங்குகிறேன்!

எங்கள்
சிந்தனையை சீராக்கு!

எங்கள்
எழுத்துக்களை நேராக்கு!
---------------------------
இறைவா..!

நீ கொடுத்த அறிவைக்கொண்டே
நான் உன்னை புகழ்கிறேன்!

உன்னால் பெற்ற அறிவிற்கு
நன்றி செலுத்த முடியாமல் உழலுகிறேன்!

இறைவா..!!
நீயே நிலையானவன்!

நீயே எங்களது பாதுகாவலன்!
---------------------------

இறைவா..!!

இரவையும் பகலையும்
படைத்தாய்!

அதற்கு விளக்காக
சூரியனையும் சந்திரனையும்
வைத்தாய்!

அதுப்போன்றே
நன்மை தீமை கலந்த
இவ்வுலகில் மனித சமூகத்தை படைத்திருக்கிறாய்!

நல்லது கெட்டதையறிய
உனது மொழியையும் {குர்ஆன்}
நபிகளாரின் வழியையும் வைத்தே இருக்கிறாய்!

இறைவா..!!
எங்களது உள்ளத்தை
சத்தியத்தில் நிலைப்படுத்துவாயாக!

அசிங்கத்தில் விழுந்திடாமல்
காப்பாற்றுவாயாக!
--------------------

இறைவா..!

இப்படிதான்
பயணிக்கனும் என
பயணிக்கிறேன்!

எப்படி மாறும்
பயணம் என்பதை
அறியாதவன் நானே!

மாறுவதால்
கலக்கம் எனக்கில்லை!

உன் கோபத்திற்கு
ஆளாகிட கூடாதே என்ற அஞ்சத்தில்
கண்ணீர் வடிப்பதை தவிர வேறு வழியில்லை!

உனது  அருளை எங்கள் மீது பொழியச்செய்வாயாக!

உனது பொறுமைக்குள்
எங்களை புகுந்திடச்செய்வாயாக!!
------------------------------------

குர்ஆன் பற்றிய கவிதைகள்..!! {4}

குர் ஆனின் வரிகள்
நபிகளாரின் வாக்கல்ல!

நபிகளின் வழியாக வந்த
இறைவனின் வாக்கு!
----------------------
சிந்தித்து அறிய கூடிய மக்களுக்கு 
பல அத்தாட்சிகள் இக்குர்ஆனில்
உள்ளது!

இக்குர்ஆனை படித்திடத்தான்
நம்மில் எத்தனை உள்ளங்கள்
தயாராக உள்ளது.!?
------------------------------
ஆழ்கடலிலும் மூழ்கிடாத 
கட்டுமரங்களைப்போல்!

இறைவசனங்களை நெஞ்சில் தாங்குபவர்கள்
யார் முன்பும் தாழ்த்துப்போவதில்லை!
--------------------------------
குர்ஆன் 
மானுடத்தை பார்த்து
அதிகம் கேட்கும் கேள்வி!

"சிந்திக்க மாட்டாயா..!?
சிந்திக்க மாட்டாயா..!? -என்று!"

ஓ!
மானுடமே!
சிந்திக்கச் சொல்வதாலா.!?
குர்ஆனை படிக்க மறுக்கிறாய்.!?
-----------------------------------   
    
      

Monday 7 July 2014

இறையச்சம்.!

எண்ணெய் இன்றி
தீபங்கள் ஒளிர்வதில்லை!

ஆனால்
நோன்பு மாதத்திலோ.!

உணவில்லாத
இரைப்பையிலிருந்து!

இறையச்சம் எனும்
ஒளி வீசுகிறது!

உள்ளம் வெளிச்சம்
பெறுகிறது!

   

Sunday 6 July 2014

இறையோனே..!!

இறைவா!

எங்களது
வார்த்தைகளையும் !
எழுதுதலையும்!

பாதையையும்!
பயணத்தையும் !

வாசிப்பையும்!
நேசிப்பையும்!

ஏக்கத்தையும்!
நோக்கத்தையும் !

உணர்வுகளையும்
உணர்ச்சிகளையும் !

உறவு கொண்டாடுதலையும்!
பிரிவு கொள்வதையும் !

ஆவேசத்தையும்!
பொறுமையையும்!

இளமையையும்!
முதுமையையும்!

வாழ்தலையும்!
மரணித்தலையும்!

இறைவா!
எங்களது
அத்தனை நிலைகளிலும் !

உனக்கு
பொருத்தமானதாக ஆக்கிடுவாயாக!

நீ!
எங்களை பொருந்திக்கொள்வாயாக!

அன்பாளனே!
அருளாளனே!

உன்னையன்றி
எங்களது பாதுகாவலன்
யாரிருக்கா..!?
இறையோனே!

   

Saturday 5 July 2014

குர்ஆனைப்பற்றிய கவிதைகள்...!!(3)

சோதனையின்போது
தலை கவிழ்ந்திட மாட்டார்கள் !

சாதிக்கும்போது
நெஞ்சை நிமிர்த்திட மாட்டார்கள் !

யார் அவர்கள் !?

அவர்கள்தான் !

குர்ஆனின்
வசனங்களைப் படித்தவர்கள்!

படித்து உணர்ந்தவர்கள்!
----------------------------
குர்ஆனின் வசனங்கள்!

அடிமைத்தனத்தையும்
ஆதிக்க எண்ணத்தையும்
ஆட்டங்காண செய்வது!

ஆதலால்தான்
ஆதரவும் எதிர்ப்பும்
நிரந்தரமானது!
-------------------------
குர்ஆன் என்பது
ஆன்மீகப்பெட்டகம் மட்டுமல்ல!

அறிவியலின்
சுரங்கமும் கூட!

படித்தால்
உணரலாம் !

தயக்கமின்றி
தமிழாக்கத்திலும் படிக்கலாம் !
--------------------------------
ஓ!
மானுட சமூகமே!

பிறப்பிற்கு முன்னாலும்
இறப்பிற்குப் பின்னாலும்
நம் நிலை என்ன..!?

விடை கிடைக்க
ஒருமுறையாவது குர்ஆனை
 படித்தால்தான் என்ன.!?
---------------------------

தகுதி..!!

வலிகளைத் தாங்க
வலிமை இல்லாதவன் !

வெற்றிகளை ஏற்பதற்கு
தகுதி இல்லாதவன் !

       

Friday 4 July 2014

வெற்றிப்பூக்கள்..!!

கொடும் வெயிலில்
பழுத்திடும்
பேரீச்சம்பழத்தைப்போல்!

வேதனையின் அனலில்தான்
வெற்றிப்பூக்கள் மலர்கிறது!

     

சரிந்த கட்டிடம்.!

மனிதம் சிதைந்த
மனிதர்களால்!

சரிந்த கட்டிடத்திற்குள்
புதைந்துப்போனார்கள்
மனிதர்கள்!

  

Thursday 3 July 2014

குர்ஆன் பற்றிய கவிதைகள் {2}

கடல்தனை
கரையிலிருந்தும்
ரசிக்கலாம் !

விருப்பபட்டால்
கடலோடு பயணிக்கலாம் !

அதனை தவிர்த்து விட்டு
கடலை திரையிட்டு
மறைக்கலாகுமா..!?

கடலைப்போலவேதான்
திருக்குர்ஆனும் !
-----------------
மாம்பழத்தினை
மண்பானைக்குள்
ஒளித்து வைத்தாலும்!

அறை முழுக்க
மணக்கத்தான் செய்யும்!

அதுபோலவே
இத்திருமறையினை
அவதூறுகளால் மறைக்க முயல்கிறார்கள் !

ஆனாலும்
உலகமெங்கும்
"சத்திய வாசம்"வீசவே செய்கிறது!
---------------------------------
மெய்ஞ்ஞானம்!
விஞ்ஞானம் !

இவைகளின்
இருப்பிடம்!

படித்திராதவர்கள்
ஒரு முறையாவது
படித்துப்பார்த்தால்
உண்மை புலப்படும் !
-------------------
ஆயிரத்து நானூறு
ஆண்டுகள் மேலாகியும் !
ஓர் எழுத்துக்கூட
மாறவில்லை !

இனி எத்தனை
ஆயிரம் ஆண்டுகளானாலும்
ஓர் புள்ளிக்கூட
கூடிட போவதில்லை !

அதிசயம்தான்!
ஆச்சரியம்தான்!

சத்தியமாக
இது இறைவேதம்தான்!
------------------------

Wednesday 2 July 2014

திண்டாட்டம்!

எதை தொட!?
எதை விட!? என!

என்னைத் திண்டாட செய்வது
உணவு பதார்த்தங்கள் மட்டுமா!?

புத்தகங்களும்தான்!

     

Tuesday 1 July 2014

குர்ஆனை பற்றி கவிதைகள்! (1)

ஓர் துளி மட்டும் 
கடலில்லை!

ஆனாலும் 
ஓரு வேதமான திருக்குர்ஆன்
ஞானக்கடல் என்பது பொய்யில்லை!

சிந்தனையாளர்கள் 
இதனை படிப்பார்கள்!

அல்லது!

இக்குர்ஆனைப் படிப்பவர்கள் 
சிந்திக்க தொடங்குவார்கள் !
---------------------------
குர்ஆன் பிரதிகளனைத்தையும்
பதுக்கி வைத்தாலும் !

சில மணித்துளிகளின்
மற்றொரு பிரதி கிடைத்துவிடும் !

ஏனென்றால் 
குர்ஆன் காகிதங்களில்
வாழவில்லை !

மனித மனங்களில்
வாழ்கிறது!
------------------
தொட்டால் 
தீட்டு இல்லை!

படித்தால் 
பாவமில்லை!

திருக்குர்ஆன் எனும் 
இறைவேதம்!
யாருக்கும் பரம்பரை 
சொத்தும் இல்லை!

அந்த இறைமறை!
உலக பொதுமறை !
--------------------
மனிதர்கள் அனைவரும்
ஓர் ஆண் பெண்ணிலிருந்து வந்தவர்கள்!
இறைமறையின் கூற்று!

இதனாலேயே எதிர்க்கிறார்கள்
பிறப்பைச்சொல்லி மக்களைப்பிரிக்கும்
கூட்டமொன்று.!!
-------------------------------------

Monday 30 June 2014

வரதட்சணையெனும் ..!!

இளைஞனே!
ஏன் செய்கிறாய் !?
நிந்தனை !

எதற்கு கேட்கிறாய்!?
வரதட்சணை !

பாறைப்போன்ற
உனது வாழ்வில்
பூச்செடியாய் படர்ந்திட வாராளே.!!
அதற்காகவா..!?

கோடைப்போன்ற
உனது இளமைக்கு
வசந்தமாக வாராளே.!
அதற்காகவா.!?

ஒற்றை மரமான உனக்கு
வாழை மரமாக சந்ததி தர வாராளே.!!
அதற்காகவா..!?

படுக்கைக்கு பாயாகவும்
நோயின்போது தாயாகவும் மாறிட வாராளே.!!
அதற்காகவா.!?

ஒரு "ஒப்பந்தத்தினால்"
உன்னுடன் வாழும் நாளெல்லாம் பயணிக்க வாராளே.!!
அதற்காகவா.!?

சொல்!
எதற்கென்று சொல்!?

வரதட்சணையெனும்
பிச்சைக்காசு தான்
உனக்குத்தேவையென்றால்!

உனது பாலினம்
ஆணினம் இல்லையென்பதை
ஒத்துக்கொள்.!!

       


Sunday 29 June 2014

நோன்பு.!

இரும்பின் துருக்கள்
தீயினால் விலகுவதைப்போல்!

நோன்பு இருப்பதினால்
அகல்கிறது
உள்ளத்தின் அழுக்குகள்!

        

இறைமறை..!!

எத்தனையோ புத்தகங்கள்
படித்து முடிக்கும்வரை!

இத்திருமறையோ
மறுமைவரை
ஒளியாகும் இறைமறை.!!

      

ரமளான் மாதம்!

ரமளான் மாதத்தில்!

தேனில் ஊறிய
பேரீத்தம் பழத்தைப்போல்!

உள்ளம் திளைக்கிறது
ஆன்மீகத்தேனில்!

 

விஷேச நாட்கள் !

ஊரு ,உலகமே
மகிழ்ந்திருக்கும்
விஷேச நாட்களில்!

ஒவ்வொரு வீட்டிலும்
இரு கண்கள் மட்டும்
கலங்கி இருக்கும்!

அது
விரும்பியோ
விரும்பாமலோ!

தன் பிள்ளைகளை
பிரிந்திருக்கும்
தாயின் கண்கள் !!



நம்பிக்கையில்லை..!!

தன்
தாயையும்
தாரத்தையும்
நேசிக்காதவனா..!?

மற்ற உயிர்களை
நேசிக்கப்போகிறான்..!?

      

Saturday 28 June 2014

மாற்றமா..!!??

இந்தியாவில்
ஆட்சி மாற்றம் என!

யார்யா..!?
காமெடி பண்ணுறது!

ஆளும் கட்சியின்
பேர்தான்யா மாறி இருக்கு...!!

   

Friday 27 June 2014

கெட்ட பெயர்கள் !

மொத்த கெட்டப்பெயர்களையும்
நான் ஒருத்தனே பெற்றிருப்பேன்!

இறைவா..!!
உனது திருமறையையும்
நபிகளாரின் வாழ்வியலையும்
படிக்காமல் போயிருந்தால்..!!

      

Thursday 26 June 2014

வாசங்கள்..!!

பெருநாட்களின்
புதுச்சட்டை  வாசம்!

பள்ளிகூட காலங்களில்
கடந்துப்போன
சீகக்காய் வாசம்!

தேங்காய் சோற்றில்
கருவாட்டு ஆனத்தின் (குழம்பு )வாசம்!

முத்தமிட்ட
ஆச்சாவின் (பாட்டி) வெத்தலை வாசம்!

குழந்தை முகத்தில்
தாய்ப்பால் வாசம் !

மழைக்கால
மண் வாசம்!

மாலை நேர
மல்லிகை வாசம்!

நேசங்கள் மட்டுமா..!?
பாசத்தை சொல்கிறது !

இப்படியாக
வாசங்களும்தான்
நேசங்களை நினைவூட்டுகிறது !

         

Wednesday 25 June 2014

வினோதமான சிறை!

வெளிநாடு என்பது
ஒரு வினோதமான சிறை!

அதில்
உள்ளிருப்பவன்
வெளி வர தவிக்கிறான்!

வெளியிலிருப்பவன்
உள்ளே வர துடிக்கிறான் !

    

Tuesday 24 June 2014

ஓர் அதிகாலை...!!


சுற்றுச்சுவற்றினுள்
ஒட்டு திண்ணை!

அதன்மேல்
ஓர் தலையணை !

அதுதான்
எனது படுக்கை!

எழவா,!?
தொடரவா.!?

முடிவை தராதிருந்தது
மனம்!

பாதி கண்களை ஆக்கிரமித்திருந்தது
தூக்கம்!

மெல்லிய சப்தங்களில்
லயித்திருந்தது உள்ளம்!

பள்ளிவாசல் மினராவிலிருந்து
புறப்படும் 
புறாக்களின் சிறகடிக்கும 
சப்தத்தில்!

எங்கோ 
திருவிழாவில் கட்டப்பட்டிருந்த 
ஒலிப்பெருக்கியில் ஒலித்த
சோகப்பாடலில்!

மின் கம்பத்தில்
காகம் கரைவதில்!

கூட்டைத்திறந்ததும்
கோழிகள் "கெக் கெக்"என
 கத்தியதில்!

சர சரவென 
ஆட்டுக்கெடையின் நடையில் !

அக்கம்பக்கத்தில்
மழலைகள்  எழுந்திடாமல்
அழுததில்!

இத்தனைக்கும் ஊடாக
குமரிகளின் பேச்சு சப்தம் கேட்டது!

என் இடத்தை கடக்கும்வரை
அப்பேச்சுக்கள்
கொஞ்சம் தடைபட்டது!

இடத்தை
கடந்த பிறகு
ஓர் குரல் சொன்னது!

"படுத்து கிடக்கிறான் பாரு
தறுதலை"என!

உடனே சிரிப்பலை
"சல சல"வென!

அதில் ஓர் குரல் கண்டித்தது 
"அது தப்பு" என!

தறுதலை எனும் வார்த்தை 
எனக்கு சினத்தை தந்தது!

"தப்பு"என தடுத்த குரல் 
என்னை சிந்திக்க  வைத்தது!

என்ன செய்ய.!?
வாழ்வில் காயப்படுத்துகிறது
பல கத்தி முனைகள்!

மருந்திடும்
சில மயிலிறகுகளால்தான்
கத்தி முனைகள் மன்னிக்கப்படுகிறது!