Thursday 21 August 2014

நான் காஸா..!!

அழிவுப்பறவைகள்
எங்கள் வானங்களில் வட்டமிடுகிறது
அழிவுகளை வீசிக்கொண்டே!

எங்கும் குண்டுகளின்
சப்தங்கள்!

எத்திசையிலும்
அலறல் சப்தங்கள்!

சல்லடைகளாகிறார்கள்
எம்மண்ணின் மைந்தர்கள்!


ஆனாலும்
மனிதம் பேசும் உலகமோ
எங்கள் விசயத்தில் மௌனிக்கிறது!

எங்கள் ரத்தங்களை பாராமல்
குருடாகி விட்டது!

எங்கள் அலறல்களை கேளாதவண்ணம்
செவிடாகி விட்டது!

ஓ!
உலகமே!
ஒன்றை புரிந்துக்கொள்ளுங்கள்!

அநீதங்களும்
அட்டூழுயங்களும்
எங்களுக்கு புதிதல்ல!

அநியாயக்காரர்க்களும்
அட்டூழிக்காரர்களும் வென்றதாக
வரலாறும் இல்லை!

        

No comments:

Post a Comment