Thursday 3 May 2012

பணம்!

அவசியமானது!
அத்தியாவசியமானது!

"அது" மட்டுமே-
வாழ்வாகாது!
-------------------
பணத்தை-
தேடலாம்!

"அதுலேயே"-
தொலையலாமா!?
-----------------------
நடை பயிற்சி-
நல்லது -
உடலுக்கு!

அதே பயிற்சி-
உயிருக்கே கேடு-
பணக்காரர்களுக்கு!
------------------------
பணம்-
வழி காட்டும்-
அம்பு குறி!

பக்குவமானவனுக்கு-
நல்வழி!

பதற்றமானவனுக்கு-
நாச வழி!
------------------
பணத்தால்-
குப்பை மேடு -
கோபுரமாகலாம்!

குப்பை மனசு-
சுத்தமாகுமா!?
-------------------
பள்ளத்தை-
மேலும் பள்ளாமாக்குவது-
முறையா!?

மேட்டில் உள்ளதை-
வெட்டி போடுவது-
பிழையா!?

பெரும் பள்ளமும்-
பெரும் உயரமும்-
உள்ள சாலையால்-
விபத்து!

உயிருக்கு-
ஆபத்து!

"மேட்டு குடி"-
"கீழ்" குடி-
தொடர்ந்தால்-
அழியும் -
மனித குடி!
-------------------
பகட்டு வாழ்கை-

கடலில் பயணிக்கும்-
துளையுள்ள -
பாய் மரம்!

எளிய வாழ்கை-
மூழ்காமல்-
மிதக்கும்-
கட்டு மரம்!
-----------------
"இருந்தால்" உதவலாமே-
கலங்குபவன்!

பணத்தால்-
இல்லாதவன்!

மனத்தால்-
சீமான் அவன்!

"இருப்பதை"-
தனக்கு மட்டும்-
வைத்து கொள்பவன்!

ஊருக்கு -
சுகவாசி!

உள்ளளவில்-
பரதேசி!
--------------
கைகளை இறுக்கி-
மூடி கொள்ளாதீர்கள்!

முழுவதுமாகவும்-
திறந்தும்-
விடாதீர்கள்!

நடுநிலையாக-
நடந்து கொள்ளுங்கள்!-
இறைவாக்கு!

அன்பானவர்களே-!
கொஞ்சமாவது-
ஏழைக்கும்-
உறவினர்களுக்கும்-
வழங்கு!

நாம் வாழ்வோம்-
வாழ்வாங்கு!!
-----------------------

30 comments:

  1. //பணத்தை-
    தேடலாம்!

    "அதுலேயே"-
    தொலையலாமா!?///

    நல்ல வரிகள்......+ சிந்திக்க வைப்பன

    ReplyDelete
  2. அன்பானவர்களே-!
    கொஞ்சமாவது-
    ஏழைக்கும்-
    உறவினர்களுக்கும்-
    வழங்கு!
    அருமையான வரிகள் .

    ReplyDelete
    Replies
    1. sasikala;
      ungal varavukkum karuthukkum-
      mikka nantri!

      Delete
  3. பணம் - தெளிவாக சொன்னீர்கள்

    ReplyDelete
    Replies
    1. appadiyaa!?

      rompa santhosam!

      mana saatchi!

      Delete
  4. எங்கே ஒளிந்துகொண்டாய் - என
    கலைவாணர் திருப்பதி உண்டியலில் தேடியதாயிற்றே..
    "அளவின் சிறிதெனில் நாம் ஆளலாம்..
    அதுவே பெரிதேனில் அது நமை ஆளும்"

    ReplyDelete
    Replies
    1. maken!

      ungal karuthukku-
      vanthathukku nantri!

      Delete
  5. அருமையான கருத்துக்களை எண்டர் தட்டி அசத்துறீங்க சகோ.சிந்திக்க வைத்த வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. asiya!

      ungal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  6. //கைகளை இறுக்கி-
    மூடி கொள்ளாதீர்கள்!

    முழுவதுமாகவும்-
    திறந்தும்-
    விடாதீர்கள்!//
    யதார்த்தம் நிறைந்த வரிகள்!

    ReplyDelete
    Replies
    1. ayya!

      ungal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  7. //"இருப்பதை" தனக்கு மட்டும் வைத்து கொள்பவன்
    ஊருக்கு சுகவாசி!
    உள்ளளவில் பரதேசி!//

    இப்படியெல்லாம் எழுதுவது
    உங்களுக்கே உள்ள கைராசி.

    ReplyDelete
  8. asarath!
    ungal varavukkum-
    karuthukkum mikka nantri!

    ReplyDelete
  9. பகட்டு வாழ்கை-
    கடலில் பயணிக்கும்-
    துளையுள்ள -
    பாய் மரம்!
    எளிய வாழ்கை-
    மூழ்காமல்-
    மிதக்கும்-
    கட்டு மரம்! .... nice lines....

    ReplyDelete
    Replies
    1. rishvan!

      ungal muthal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  10. //அன்பானவர்களே-!
    கொஞ்சமாவது-
    ஏழைக்கும்-
    உறவினர்களுக்கும்-
    வழங்கு!//

    நல்ல வரிகள்!.

    ReplyDelete
    Replies
    1. ibramsha!

      ungal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  11. அன்பானவர்களே-! கொஞ்சமாவது- ஏழைக்கும்- உறவினர்களுக்கும்- வழங்கு! நாம் வாழ்வோம்- வாழ்வாங்கு!!
    -பிரமாதம் சீனு! மொத்தக் கவிதையும் மனதைக் கவர்ந்தது என்றாலும் இந்த வரிகள் மனதில் பச்சக்கென்று ஒட்டிக் கொண்டன. தொடரட்டும் அழகுக் கவிதைகளின் அணிவகுப்பு! நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ganesh!

      ungal muthal varavukkum
      -karuthukkum mikka nantri!

      Delete
  12. //பணத்தால்-
    குப்பை மேடு -
    கோபுரமாகலாம்!

    குப்பை மனசு-
    சுத்தமாகுமா!?//

    இந்த வார்த்தைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்த்தது,
    ஒட்டுமொத்த கவிதையும் சூப்பர். இன்று தான் முதல் வருகை. இனி தவறாது வருகிறேன். அனைத்தையும் வாசிப்பேன்.

    ReplyDelete
  13. Replies
    1. seenu!

      ungal
      muthal varukaikkum-
      karuthukkum-
      membaraaka inaintharhukkum-
      naanum ungalathu bloggaril-
      inaiththathukkum rompa santhosam!

      Delete
  14. எளிய வாழ்க்கை மூழ்காமல் மிதக்கும் கட்டுமரம்// பிரமிக்கவைக்கும் கற்பனை நயம் சீனி சிறந்த கவிதைத்துளிகள்.

    ReplyDelete
  15. mikka nantri!

    sakotharaa!

    ReplyDelete
  16. ஒவ்வொரு வரிகளிலும் சமூக அக்கறையோடு ஆழமான சிந்தனை.இப்படியே எல்லோருமிருந்துவிட்டால் உலகம் எவ்வளவு அழகாகும் !

    ReplyDelete
    Replies
    1. hemaa!

      ungal varavukkum karuthukkum-
      mikka nantri!

      Delete
  17. தங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு நட்போடு அழைக்கிறேன் .

    ReplyDelete
  18. panam thevai thane aanal atthu than valkkai enttu ninaikkathe.
    nalla gunam thane valkkai

    ReplyDelete
  19. panam thevai thane aanal atthu than valkkai enttu ninaikkathe.
    nalla gunam thane valkkai

    ReplyDelete