Monday 31 December 2012

முகலாயர்களே....(23)

ஆட்சியாளராக-
இருந்த -
மன்னர்!

சிறைவாசியாக-
ஆனார்!

நாடு-
கடத்தப்பட்டார்!

ரங்கூனில்-
சிறைவைக்கபட்டார்!

தள்ளாத-
வயதிலும்-
தளர்த்திகொள்ளவில்லை-
துணிவை!

சிறைகம்பிகளுக்கு-
உணர்வுகள்-
இருக்குமானால்-
தானாக -
திறந்திருக்கும்-
கதவை!

ஆண்டுகள்-
கழிந்தது!

உடலின்-
நிலை-
பலவீனம்-
அடைந்தது!

பகதூர்ஷா-
கன்னங்களை-
ஈரமாக்கியது-
கண்ணீர் -
துளிகள்!

பார்ப்போம்-
அது-
என்ன -
காரணங்கள்!?

என் ஆட்சியையும்-
அதிகாரமும்-
எங்கே!?

பெற்ற பிள்ளைகள்-
எங்கே!?

பொன்னும்-
பொருளையும்-
எங்கே!?

மாட மாளிகைகள்-
எங்கே!?

மன்னிப்பு-
எழுதக்கூடிய-
காகிதங்கள்-
எங்கே!?

என்றெல்லாம்-
அழவில்லையே!!

என்னை-
புதைக்க-
என் தேசத்தில்-
கொஞ்சம் இடம்-
இல்லையா!?-என்பதை-
தவிர -
வேறில்லையே!

சிறையிலேயே-
இருந்தார்!

அதிலேயே-
இறந்தார்!

அந்தமான்-
சிறையில்-
இன்னொருவர்-
இருந்தார்!

உயிர் பிச்சை-
கேட்டு-
வெளியே-
வந்தார்!

காந்தி கொலை-
வழக்கில்-
முக்கிய-
குற்றவாளிகளில்-
ஒருவர்-
அவர்!

தேசத்தை-
துண்டாடும்-
"சிந்தாந்தத்தை"-
உருவாக்கிய-
ஊற்றுக்கண்களில்
ஒருவர்-
அவர்!

இவர்தான்-
இன்று காந்திக்கு-
அருகில்-
நாடாளுமன்றத்தில்-
புகைப்படமாக-
தொங்கி கொண்டிருக்கிறார்!

அவர்தான்-
வீர(!!!)சாவர்க்கர்!

பாவம்-
காந்தி-
உயிரோடு-
இருக்கையிலும்-
"துரத்தியவர்கள் !"

"படத்தை கூட"-
விடாமல்-
துரத்திகொண்டிருக்கிறார்கள்!

ஆம்-
நாம் "உண்மையை-"
மறக்கிறோம்!

"பொய்யை"-
தெரிந்தோ-
தெரியாமலோ-
ஏற்கிறோம்!

மன்னரின்-
உடலையாவது-
விட்டார்களா!?

ஆங்கிலேயர்கள்-
அவ்வளவு-
நல்லவர்களா!?

சொல்கிறேன்-
கொஞ்சம்-
பொறுத்து-
கொள்கிறீர்களா!?

(தொடரும்....)

குறிப்பு-பி ஜே பி ஆட்சிகாலத்தில்-
கலாம் அவர்களால்-நாடாளுமற்றதில் சாவர்க்கர்
புகைப்படம் திறக்கப்பட்டது)






Sunday 30 December 2012

முகலாயர்களே....(22)

"ஒண்ட வந்த-
பிடாரி-
ஊர் பிடாரியை-
விரட்டினது-
போல!

விழும் நிழல்களை-
தனக்கே-
சொந்தமென-
நிலங்கள்-
வாதிடுவது-
போல!

பசுமையோடு-
கலந்த-
மக்களை-
கொன்றுவிட்டு-
நிலத்தை-
அபகரித்து விட்டு-
பசுமை புரட்சின்னு-
சொல்வது-
போல!

ஜனங்களை-
பிணங்களாக்கி விட்டு-
ஜனநாயகத்திற்கு-என
சொல்வது-
போல!

பொழைக்க வந்த-
வெள்ளையர்கள்!

அடிமடியிலேயே-
கை வைத்தார்கள்!

வியாபாரம்-என
வந்து விட்டு!

நயவஞ்சகத்தால்-
மக்களை-
பிளந்து விட்டு!

தேச வளங்களை-
சுரண்டி கொண்டு!

மன்னரை-
கைது-
செய்வார்களாம்!

ராஜ துரோக-
வழக்கும்-
போடுவார்களாம்!

யாருக்கு-
யார் -
வழக்கு-
போடுவது!?

ராஜா பகதூர்ஷாதான்-
அவ்வழக்கை-
போடணும்-
அவர்களுக்கு!

மண்ணை-
ஆண்டவன்-
கைதியாம்!

வயிற்றை-
கழுவவந்தவன்-
நீதிபதியாம்!

மன்னருக்கு-
கொடுக்கப்பட்ட-
தண்டனை-
இல்லை-
அநியாயம்-
ஆயுள் தண்டனையாம்!

ஆங்கிலேயர்கள்-
செய்தது-
துரோகம்!
துரோகம்!
துரோகம்!

களங்கமில்லாமல்-
பகதூர்ஷா-
செய்தது-
தியாகம்!
தியாகம்!
தியாகம்!

அந்தோ-
பரிதாபம்-
மறந்து போனது-
அவரின்-
சமூகமும்!

நம்-
தேசமும்..!!

(தொடரும்.....)



Saturday 29 December 2012

முகலாயர்களே...(21)

கட்சியிலும்-
பங்கு!

ஆட்சியிலும்-
பங்கு!

இன்றைய-
அரசியல் -
தலைவர்களின்-
வாரிசுகளுக்கு!

கக்கூஸ்-
கட்டினாலும்!

பாதாள-
சாக்கடை-
கட்டினாலும்!

கமிசன்-
பங்கெடுக்குறான்-
ஒவ்வொரு ஆளும்!

காற்றலை-
ஊழலை-
ஊளையிடுறாங்க-
"கலாசார -
காவலர்கள்"!

"காவலர்களுக்கும்"-
பங்குள்ளதாக-
சி.பி.ஐ.தகவல்கள்!

குடும்பம்-
நடத்தவே-
பொண்டாட்டி-
இல்லை!

இதுல-
புள்ளைக்கு-
பேர்தேடுறவன்-
கதையா-
இல்ல!?

மின்  உற்பத்தி-
இல்லையின்னு-
சொல்றாங்க!

அப்ப-
என்னத்துக்கு-
இலவச மின் பொருட்கள்-
கொடுத்தாங்க!?

என்னமோ-
போங்க!?

இப்ப-
வரலாறுக்கு-
வாங்க!

தலைநகரில்-
புகுந்தது-
காட்டேரிகள்!

ரத்தங்களில்-
குளித்தும்-
அடங்கவில்லை-
வெறிகள்!

செங்கோட்டையை-
விட-
சிகப்பானது-
மணற்மேடுகள்!

சக்கரை-
மண்டியானது-
பள்ளிவாசல்கள்!

வாளுக்கு-
தீனியானார்கல்-
மன்னரின்-
உறவுகள்!

பிழைத்தது-
கடைசி-
இருவாரிசுகள்!

இருந்தார்-
மன்னர் -
சிறையில்-!

வருகிறது-
உணவைபோல்-
தாம்புல-
தட்டில்!

அதில்-
இருந்ததோ-
மன்னரின்-
இருமகன்களின்-
வெட்டப்பட்ட-
தலைகள்!

போராளிகள்-
இப்படிதான்-
காட்சியளிப்பார்கள்-என
கொக்கரித்து-
மன்னர்-
சிரித்தார்கள்!

நாட்டுக்காக-
அனைத்தையும்-
இழந்தார்கள்!

பொறுமை-
கொண்டார்கள்!

இவர்களா!?-
நாட்டின்-
துரோகிகள்!?
பாவிகள்!?

சுருக்கு கையிற்றை-
முத்தமிட்டு-
கிடைத்த -
சுதந்திரம்!

ஒரு சிலரிடம்-
மட்டும்-
சுருங்கிடவா!?-
அடைந்தோம்-
சுதந்திரம்..!!

(தொடரும்...)



Friday 28 December 2012

முகலாயர்களே...(20)

நிக்கல்சன்-எனும்
ராட்சசன்!

ஆங்கிலேய-
படையின்-
தளபதிகளில்-
ஒருவன்!

போகும்-
வழிகளில்-
பிணங்களில்-
தொங்கி-
 கொண்டிருந்தால்!

இவன்-
கடந்ததாக-
சொல்லும்-
மௌனத்தால்!

போய்கொண்டிருக்கிறான்-
டெல்லியை-
நோக்கி!

அவனுக்கு-
தெரிந்திருக்கவில்லை-
போவது-
மரணத்தை-
நோக்கி!

ஆனால்-
டெல்லியிலே!

பக்த்கான்-
மிர்சா முகல்-
தலைமையிலே!

ஆயத்தம்-
கொண்டிருந்தார்கள்-
பதுங்கு குழிகளிலே!

அடைத்துவிட்டனர்-ஆங்கிலேயர்கள்-
போராட்டகாரர்களுக்கு-
கிடைக்கும்-
உதவிகளின்-
வழிகளை!

போராளிகளோ-
மனம் தளரவில்லை!

பசி-
வயிறு-
விலா எலும்பை-
ஒட்டுவது-
போல!

தாகம்-
உள் நாக்கோடு-
பெரு நாக்கு-
ஒட்டியது-
போல!

லட்சியவேட்கையால்-
ஜொலித்தார்கள்-
நெருப்பில் இட்ட-
இரும்பை-
போல!

எதிரிப்படை-
வந்தது!

போராளிகள்-
"வலைக்குள்"-
சிக்கியது!

ஆம்-
நிக்கல்சனை-
இளம் ஆலிம்-
ஒருவரின்-
தோட்டா-
துளைத்தது!

இன்னொரு-
படைத்தளபதி-
வில்சனை-
ஆட்டம் கொள்ள -
செய்தது!

திரும்பி-
செல்ல -
நினைத்தவனை-
அவன்கூட-
வந்தவர்கள்-
அதிருப்தி-
நிலை கொள்ள-
செய்துவிட்டது!

புதிய கனரக-
ஆயுதங்கள் !

மேலும்-
படைபலங்கள்!

எதிரிகளை-
பலம் கொள்ள-
செய்தது!

நம் தேச தியாகிகளை-
உயிர் தியாகிகளாக-
மாற்றியது!

சமபலம்-
மோதிகொண்டால்-
போர்க்களம்!

பட்டினியான
மக்களோடு-
மோதுவது-
அடாவடித்தனம்!

அத்தியாகிகள்-
கொண்ட -
போரில் -
தோற்றிருக்கலாம் !

லட்சியத்தில்-(வீரமரணம்)
வென்றதால்-
மகிழ்ச்சி பாய்ந்திருக்கும்-
அவர்கள்-
மனமெல்லாம்!

இப்படியாக-
செத்தொழிந்த-
சமூகத்தினரின்-
இன்றையபெயர்கள் !!?

அச்சமூகத்தின்-
நிலைகள்!?

சொந்தங்களே!
நீங்களே!-
சிந்தியுங்கள்....!!?

(தொடரும்....)






Thursday 27 December 2012

முகலாயர்களே....(19)

தேனடையை-
சுவைக்கும்-
நாம்!

தேனீக்களின் -
உழைப்பை-
அறிந்தோமா!?

நதிகளை-
ரசிக்கும்-
நாம்!

அது-
கடந்து வந்த-
கரடுமுரடுகளை-
அறிந்தோமா!?

கவிதை-
வாசிக்கும்-
நாம்!

சிந்தனைகள்-
பிரசவிக்கும்-
வலிகளை-
உணர்ந்தோமா!?

கலை-
நயத்தில்-
லயிக்கும்-
நாம்!

லயிக்கும்போது-
நைந்த விரல்களை-
அறிவோமா!?

சொகுசான-
பயணங்கள்-
மேற்கொள்ளும்-
நாம்!

சாலையில்-
புதையுண்டிருக்கும்-
சரளை கற்களை-
அறிவோமா!?

பச்சிளம்-
குழந்தையை-
உச்சி முகர்ந்து-
முத்தமிடும்-
நாம்!

பேறுகாலத்தின்போது-
மரணத்தின் எல்லையை-
தொட்டு திரும்பும்-
தாய்மையை-
உணர்வோமா!?

புரட்சி-
புத்தகங்களை-
புரட்டி-
படிக்கும்-
நாம்!

அப்புரட்சியின்போது-
புரண்ட-
சில தளபதிகளை-
இன்று-
பார்ப்போமா!?

செங்குருதி-
சிந்தி-
செங்கோட்டையை-
காத்தவர்கள்!

ஆங்கிலேய-
படையை-
ஆட்டங்கான-
செய்தவர்கள்!

பக்த்கான்-
மௌலவி சர்ப்ராஜ் அலி-
போன்றவர்கள்!

இறக்கும்வரை-
போராடுவோம்!-என்று
சபதம்-
ஏற்றவர்கள்!

அச்சபதத்தை-
அடைந்தவர்கள்!

இரண்டாயிரம்-
போராளிகளுடன்-
இணைந்து-
போராட்டகளம்-
கண்டவர்கள்!

இத்தாத் அலிகான்-
மௌலவி நவ்ஜிஸ் அலி-
போன்றவர்கள்!

சதைகளும்-
ரத்த நாளங்களும்-
கொண்டது-
நம் உடலாகும்!

அந்த -
உடலை-
 கேடயமாக வைத்து -அடைந்ததே-
நம் சுதந்திரமாகும்!

சுதந்திரம்-
ஒவ்வொருவரின்-
பிறப்புரிமை!

அதனை-
பறிக்க-
யாருக்கும்-
இல்லை-
உரிமை...!!

(தொடரும்....)


Wednesday 26 December 2012

முகலாயர்களே...(18)

உலகை-
உலுக்கி-
உள்ளது-
போர்கள்!

பூமியை-
குளிக்க-
செய்திருக்கிறது-
குருதிகள்!

மண்ணை-
வெற்றி-
கொண்டால்!

அவ்வளங்களை-
கொள்ளை -
கொள்வதால்!

பெண்களை-
சொல்ல வாய்-
கூசும்-
"அளவுக்கு"-
நடப்பதால்!

சடலங்களால்-
மலை-
அமைப்பதால்!

இதனையே-
சாதனையாக-
எண்ணினார்கள்-
குரும்புத்தியால்!

இது-
மடமை காலம்!

படிப்பறிவில்லாத-
காலம்!

மனிதநேயம்-
மடிந்த காலம்!

எப்படியெல்லாம்-
முடியுமோ-
உங்களால்-
திட்டி கொள்ள-
கூடிய காலம்!


அதெல்லாம்-
உண்மைதாங்க!!

அக்காலம்-
கொடுமைதாங்க!?

இப்பமட்டும்-
என்ன-
"வாழுதுங்க"..!!?

பேருந்தில்-
ஒரு-
சகோதரி-
சீரழிக்கபட்டாள்!

ஒரு சில-
நாய்களால்-
குதறபட்டாள்!

மனிதநேயம் உள்ள-
அத்தனை பேரும்-
மன சஞ்சலத்தால்-
அலைக்கழிக்கபட்டார்கள்-
அச்சம்பவத்தால்!

இது போன்ற-
சம்பவங்கள்!

இதை விட-
கொடூரமானவைகள்!

நடந்திருக்கிறது-
நடந்துகொண்டுதான்-
இருக்கிறது!

யாருக்கோ-
நடக்கிறது!

நமக்கென்ன-
வந்தது!?

இப்படியாக-
நாமெல்லாம்-
இருந்தது!

இப்பொழுது-
தலை நகரை-
தலைகுனிய-
வைத்திட்டது!

குழந்தைகள்-
பெண்கள் இருக்கும்-
இடம்களில்-
அம்பு எய்தல்-
கூடாது!

இது-
நபிகளார்-
வாழ்வானது!

யுத்தங்களிலும்-
தத்துவம்-
சொன்னது!

எதிரிகளின்-
நாற்பத்திரண்டு-
பெண்கள்-
குழந்தைகள்-
சமயலறையில்-
ஒளித்து-
வைத்திருந்தார்!

பகதூர்ஷா-
மன்னர்!

உயிரைகாக்க-
இதனை-
செய்தார்!

எதிரிகளின்-
ரத்த உறவுகளை-
கூட-
நேசித்தார்!

தன்-
சிப்பாய்களை-
கட்டுபடுத்திடுவார்!

தேசமெங்கும் வந்த -
சிப்பாய்கள்!?

ஒளிந்து இருந்தவர்களை-
ஒளித்து கட்ட-
முனைந்தார்கள்!

மன்னரோ-
கலங்கி போய்-
நின்றார்கள்!

அவர்களின்-(ஒளிந்து இருந்தவர்கள்)
கொலைகளுக்கு பின்-
ஆறாத-
ரணங்களுடனே-
வாழ்ந்தார்கள்!

சொல்லுங்க-
அப்பேர்பட்ட-
ஆட்சியாளன்-
எங்கே!?

பிணங்களின் மேல்-
ஆட்சிகள்-
புரிகின்ற-
இன்றைய-
யோக்கியர்கள்!!-
எங்கே...!?

(தொடரும்....)




Tuesday 25 December 2012

முகலாயர்களே....(17)

மரம்-
வெட்ட -
தடையுண்டு!

மயிலை-
பிடிக்க-
தடையுண்டு!

மானை-
சுட-
தடையுண்டு!

மனிதனை-
வெட்டுவது-
சாதாரண-
நிகழ்வானது-
இன்று!

கங்கை-
யமுனை-
காவேரி-
ஆறுகளுக்கு-
பெண்களின்-
பேருண்டு!

பூமியை-
தாய்-
என்பவர்களும்-
உண்டு!

கடலை-
அம்மா -
என்பவர்களும்-
உண்டு!

மணிக்கு-
ஒரு-
கற்பழிப்பு-
வீதம்-
நடக்கிறது-
இன்று!

பயம்-
தீராமல்-
அணு உலை-
திறக்கப்பட-
மாட்டாது-என
பிரச்சாரம்-
சொன்னவர்கள்-
உண்டு!

லத்தியால்-
அடி கொடுத்து-
திறக்க-
 முனைகிறார்கள்-
இன்று!

சில்லறை-
வர்த்தகத்திற்கு-
மத்திக்கு-
ஆதரவு-
உண்டு!

மாநிலத்திற்கு-
எதிர்க்கிறார்கள்-
இன்று!

இருந்த-
இடத்தில-
பள்ளி கட்டி -
கொடுக்கப்படும்-
சொல்லிய -
கட்சி-
உண்டு!

அவர்கள்-
அமைத்த -
கமிசனையே-
மறந்தார்கள்-
இன்று!

மத கலவரங்கள்-
நடந்தி-
மனிதங்களை-
கொன்றவர்கள்-
உண்டு!

மத நல் இணக்கத்திற்கு-
உண்ணாவிரதம்-
இருப்பதாக-
கேலி பண்ணுகிறார்கள்-
இன்று!

இதெல்லாம்-
சொல்லபடுது-
அரசியல்-
சாணக்கியத்தனம்-
என்று!

சுதந்திர-
புரட்சியில்-
ஐந்தாவது-
மகன்-
மிர்சா முகல்-
வீர மரணம்-
அடைந்தது-
நம்மில் எத்தனை-
பேருக்கு-
தெரிந்த -
ஒன்று!?

இந்துக்களும்-
இஸ்லாமியர்களும்-
எனது இரு கண்கள்-என்று
பகதுர்ஷா-
சொன்னதை-
நம்மில் -
எத்தனை பேர்-
அறிந்த-
ஒன்று!?

இவர்களை-
வசைபாடவாவது-
யாருக்கு-
யோக்கியதை-
இருக்குது-
இன்று..!!?


(தொடரும்.....)





Monday 24 December 2012

முகலாயர்களே....(16)

அடி!-
அடி!-
அடி!

அடிக்கமாட்டேன்-
மனைவியை -என
சொல்லும்வரை-
அடி!

கொடுத்தது-
தந்தை-
பகதூர்ஷா!

வாங்கி-
கட்டியது-
ஒன்பதாவது-
மகன்-
மிர்சா!

எண்பதாயிரம்-
சிப்பாய்கள்-
சுதந்திரத்திற்காக-
குழுமிய -
தருணம்!

தியாக திருநாள்-(ஹஜ் பெருநாள்)
வரும் காலம்!

இரு சமூகங்களுக்கிடையே-
ஒரு-
மன சஞ்சலம்!

மாடு பலியிட-
போவதாகவும்!

அதை-
மாற்று மத சகோதரர்கள்-
வெறுப்பதாகவும்!

அறிந்தார்-
மன்னர்!

உத்தரவை-
பிறப்பித்தார்!

யாரும்-
மாடு பலியிட(குர்பானி)-
கூடாதென!

மீறினால்-
பீரங்கியில் வைத்து-
சுட்டுவிடுவேன்-
என!

அடி-
கொடுத்தார்-
பெண்ணுக்கு-
அடி-
விழுந்ததால்!

மனமாச்சர்யம்-
இல்லாமல் முடிவெடுத்தார்-
சமூகங்கள்-
பிளக்குமானால்!

வாள் எடுத்தார்-
பிறந்த மண்ணுக்கு-
"ஒன்றென்றால்"!

இம்மன்னரையும்-
மறைக்கலாமோ-
மத சாயத்தால்!!?

இன்று நாம்-
மறந்தோம்-
உயிர் தியாகிகளை!

நம்பி-
ஏமாறுகிறோம்-
போலிகளை!

அதில்-
ஒன்றானது!

இனி-
நான்-
சொல்லபோவது!

தேசம்-
நிறைந்துள்ளதாம்-
ஊழலாக!

எழுந்தால்-
ஒருவர்-
புயலாக!

ஆனார்-
அனைத்து -
பத்திரிக்கையிலும்-
தலைப்பு-
செய்திகளாக!

இப்போது-
ஆகி விட்டார்-
காணாமல்-
போன-
ஆளாக!!

நமக்கெல்லாம்-
தெரியும்-
அந்த-
"டெல்லி வாலா"!

போராட்டம்-
காண்கிறார்-
தனி ஒரு-
ஆளா!

உண்ணாவிரதம்-
இருக்கிறார்-
பன்னிரண்டு-
வருடங்களா!

மூக்கின் வழி-
செல்வதுதான்-
உடலுக்கு-
ஆகிறது-
ஆகாரங்களா!

ஒரே-
கோரிக்கை-
சிறப்பு அதிகார சட்டத்தை-
மாற்ற மாட்டார்களா!?

நம்மில்-
எத்தனை பேர்-
அறிவோம்-
இச்சகோதரி-
பெயர்-
சர்மிளா......!!!

(தொடரும்.....)

(குறிப்பு- வரலாற்று ஆதாரங்களை-
தொடரின் கடைசியில் குறிப்பிடுகிறேன்)

Sunday 23 December 2012

முகலாயர்களே....(15)

பாரதத்தின்-
இதயம்!

டெல்லி-
மாநகரம்!

பார்த்து-
கொண்டிருக்கிறது-
இன்று -
வரைக்கும்!

வரலாறுகள்!

தகராறுகள்!

ரத்தங்கள்!

யுத்தங்கள்!

தியாகங்கள்!

சத்தியாகிரகங்கள்!

மண்ணுக்காக-
மடிந்தவர்கள்!

மடிந்தும்-
மறக்க-
முடியாதவர்கள்!

இன்னும்-
எத்தனையோ-
ரணங்கள்!

சுகங்கள்!

அவ்விதயத்தில்-
இருப்பவைகள்!

கலங்காதிரு-
ஓ!
இதயமே!

உன் ரணங்கள்-
ஒரு நாள்-
மாறுமே!

உலகின்-
நியதி-
அசத்தியம்-
அழிவதும்-
சத்தியம்-
ஜெயிப்பதுமே!

உன்னை போலவே-
எங்குது-
என்-
உள்ளமே!

சொல்வார்கள்-
மன்னன் எவ்வழியோ-
மக்கள் அவ்வழி!

மன்னன்-
பகதுர்ஷா -
நடந்தது-
நல்வழி!

அதனால்தான்-
தலைநகரத்தில்-
ஜொலித்தது-
அறிவின் ஒளி!

கார்னல்-
வில்லியம்ஸ் -எனும்
எழுத்தாளன்-
எழுதியுள்ளார்!

ஆக்ஸ்போர்ட் பல்கலை-
கழக மாணவர்!

ஏழுவருட-
படித்து -
ஆலிம்பட்ட்ம்-
பெற்றவர்!

இருவரும்-
ஒரே தகுதியுள்ளவர்!

இவ்வாறாக-
முகலாய-
பேரரசை -
பற்றி-
எழுதியுள்ளார்!

அன்று-
அறிவு ஒளியாக-
இருந்த -
மக்கள்!

இன்று-
சிறைவாசியான-
மக்கள்!

நம் நாட்டில்-
நிலவர செய்தி!

சிறைக்கம்பிக்கு-
பின்னால் --
அதிகரிக்கும்-
முஸ்லிம்கள்!-இது
இந்தியா டுடே-
அட்டைப்பட செய்தி!

இதெல்லாம்-
யாருடைய-
சதி....!!

(தொடரும்.....)







Saturday 22 December 2012

முகலாயர்களே....(14)

இளமை-
பருவமானது!

எண்ணங்களை-
விதைக்கும்-
பருவகாலமது!

விதைகள்-
மரமாகும்!

எண்ணங்களே-
நம் வாழ்வாகும்!

இன்றைய-
இளைஞர்கள்-
காலம் -
எப்படி-
கழிகிறது!?

பொருந்தும்-
அதை கொஞ்சம்-
எண்ணி-
பார்ப்பது!

ஒரு-
பள்ளி மாணவன்!

பாட்டில்-
குத்தி-
செத்தான்!

ஏன்-
பாட்டில்-
வயிற்றில்-
குத்தியது!

பாட்டிலை-
இடுப்பில்-
மறைத்து-
வைத்தது!

மறைக்கும்-
அளவிற்கு-
என்ன-
அது!?

அதுதான்-
மதுபான-
பாட்டில்-
அது!

ஒரு-
வளாகத்தில்-
ஒரு பெரியவர்-
மலந்து-
கிடந்தார்!

யார்-
இவர்!?-
பள்ளி -
தலைமை ஆசிரியர்!

கிடந்த-
இடம்-
பள்ளி கூடம்!

காரணம்-
மதுவின்-
போதையாகும்!

இவைகள்-
பழைய-
செய்தி!

நேற்றைய -
செய்தி!

புனிதா-
எனும்-
சகோதரி!

பதிமூன்று-
வயது-
இளம் சிறுமி!

படிக்க-
சென்றாள்!

மறுநாள்-
புதரில்-
செத்து கிடந்தாள்!

கைது-
செய்யபட்டான்-
சுப்பையா -எனும்
மிருகம்!

காரணம்-
சொன்னான்-
போதையால்-
ஏற்பட்ட -
காமம்!

"ஒத்துழைக்க-"
மறுத்ததால்-
அச்சிறுமியை-
ஆக்கி இருக்கிறான்-
சடலம்!

வெளியில்-
தன்னை -
சொல்லிடுவாள்-என்ற
பயம்!

வருமானத்தை-
சொல்லுபவர்களே!

அதனுடைய-
அவலங்களையும்-
சொல்லுங்களே!

மதுவும் தான்-
நம் -
இளைய சமூகம்-
கடக்க வேண்டிய-
சோதனை!

எத்தனையோ-
பலியாகிவிட்டார்கள்-என்பதுதான்-
வேதனை!

அரசு-
செய்யுமா-
பரிசீலனை!?

ஆனால்-
மன்னர்-
பகதூர்ஷா-
அவர்கள்!

வீர விளையாட்டிலும்-
வேட்டையாடுதலிலும்-
உடல் வலிமை-
சேர்த்தது-
இளமை காலங்கள்!

தன்-
அறை எங்கிலும்-
மூலிகை மருந்து-
சோதனை-
கூடங்கள்!

கொட்டி கிடந்த-
செல்வங்களை-
எட்ட நின்றே-
பார்த்தவர்!

தன்னை-
இவ்வுலகில்-
வழிபோக்கராகவே-
எண்ணியவர்!

(தொடரும்.....)

(குறிப்பு-புனிதா சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் தாதன்குளத்தில்-
நடந்தது)





Friday 21 December 2012

முகலயர்களே.....(13 ) (600வது கவிதை!)

கல்வியானது!

ஆணும்-
பெண்ணும்-
காலமெல்லாம்-
கற்க வேண்டியது!

கற்க-
கற்க-
கல்வி-
கரையாதது!

ஆனால்-
இன்று-
கல்வியோ-
ஏழைகளுக்கு-
எட்டா கனியானது!

எட்டாத-
தூரத்திற்கு-
யார்-
விற்பனை-
பொருளாக்கியது!?

வீதி தோறும்-
பாடசாலை-
அமையனும்-
நம் முன்னோர்கள்-
சொல்லாகும்!

தெருவெங்கும்-
கள்ளு கடை-(டாஸ்மாக்)
வைத்ததே-
அரசின்-
சாதனையாகும்!

தன் மானத்தோடு-
வாழ்ந்தால்தான்-
மனுசனடா!!

மானங்கெட்ட-
குடி-
கேவலம்டா!!

அன்றைய-
அரசர்கள்-
என்றால்!

நமது-
மன கண்களுக்கு-
வருவது-
முன்னால்!

அந்தப்புரங்கள்!
அந்தரங்கங்கள்!

அழிச்சாட்டியங்கள்!
அழித்து கொள்ளும்-
சண்டைகள்!

சர்வாதிகாரம்!
தலை கணம்!

உடனடி-
நினைவுக்கு-
வருவது-
இவைகள்!

இவைகளையெல்லாம்-
செய்பவன் யாராகிலும்-
அரசன் அல்ல-
அசிங்கங்கள்!

இது-
பொருந்தும்-
முக்காலங்கள்!

பகதூர் ஷா-
மன்னன்!

கல்விமான்!

பலமொழிகள்-
அறிந்தவ்ரும்கூட!

பல நூல்கள்-
எழுதியவரும் கூட!

கவிஞரும்-
கூட!

அன்றைய-
பிரபலமான-
கவிஞர்கள்-
காலிப்-
ஜாக்-
இவர்களும்-
இருந்தார்கள்-
மன்னர் கூட!

இன்னும்-
சொல்கிறேன்-
கொஞ்சம் பயணியுங்கள்-
என் கூட!

(தொடரும்.....)



Thursday 20 December 2012

முகலாயர்களே.....(12)

அஸ்தமனமே-
இல்லாத-
ஆட்சியென-
இருந்தவர்களை!

அகங்காரங்களை-
கிரீடமாக-
சுமந்தவர்களை!

ஆட்டங்கான-
செய்தவர்!

முதல் சுதந்திர-
போராட்ட நாயகர்!

அறிக்கை போர்-
நடந்தி கொண்டு-
"பீற்றி"கொள்ளும்-
இந்நாளில்!

அறுக்கவும்-
அறுபடவும்-
போர்க்களம்-
கண்டார்-
அந்நாளில்!

கொள்கை கொண்டவர்களை-
குலை நடுங்க -
செய்வது-
பாசம்!

அப்பாசத்தை-
மிஞ்சி இருந்தது-
அவரிடன்-
ரோசம்!

களம் காண-
துணிந்தவர்-
எண்பத்தி இரண்டு-
வயதில்!

போராட்ட தலைமை-
பதவி-
அமர்ந்தது-
அவரது-
தலையில்!

எத்தனை-
அரசர்கள்-
வெள்ளையனுக்கு-
கப்பங்கட்டி-
 வாழ்ந்தார்கள்-
வாயை மூடி!

கப்பமா!?-என
கர்ஜித்ததில்-
சிலும்பியது-
அந்த சிங்கத்தின்-
பிடரி முடி!

"மன்னிப்பு-
எனக்கு பிடிக்காத-
வார்த்தை "-என
வசனம் பேசியவர்-
எதிர்க்கட்சியாக-
 பதவி ஏற்பு!

"அவ்வார்த்தையை-"
உச்சரிக்காமல்-
உண்மையாக-
இருந்த நாயகன்-
பெயரோ-
இருட்டடிப்பு!

ஆம் -
அவர்தான்-
மாமன்னர்!

முகலாய வம்சத்தின்-
வழி வந்த-
பேரரசர் பகதூர் ஷா ஜாபர்!!

(தொடரும்......)





Wednesday 19 December 2012

முகலாயர்களே.....(11)

மனிதர்களின்-
வாழ்வானது!

பலதரப்பட்ட-
பழக்க வழக்கங்களை-
உள்ளடக்கியது!

பல தேச-
கலாச்சாரங்களை-
நாமே அறியாமல்-
பின்பற்றுவது!

பண்டைய தமிழனின்-
உழைப்பை -
உள்வாங்கி உள்ளதாம்-
பிரமிடுகள்!

அதற்காக-
பிரமிடுகளை-
நம் வீடென்றால் -
எத்தனை பேர்-
நகைப்பார்கள்!?

திருக்குறள்-
தனது -
வாழ்வின் வழிகாட்டி-என
சொன்னார்-
அயல் நாடு-
அறிஞர் ஒருவர்!

அவரை-
தமிழ் நாட்டுக்காரர்-
என்றால்-
எத்தனை பேர்-
ஒத்து கொள்வார்கள்!?

இன்றைக்கு-
பல மனைகளில்-
மேற்கத்திய கழிவறைகள்-(வெஸ்டர்ன் டாய்லட்)
வைக்கிறார்கள்!

அதற்காக-
சில வருடம்-
கழித்து-
அயல் நாட்டினர்-
தன் வீடென்றால்-
எத்தனை பேர்-
அமைதி கொள்வார்கள்!?

அவ்வாறே-
நமது -
பண்டைய கால-
கட்டிடங்களில்-
மிளிர்ந்தது-
திராவிட கட்டிட-
கலைகள்!

வழிபாட்டு-
தளங்கள்!

வீட்டு மனைகள்!

இன்னும்-
அரண்மனைகள்!

இன்னும்-
இருக்கிறது-
எண்ணிலடங்காதவைகள்!

இரு சமூகங்களின்-
வழிபாட்டுத்தலங்கள்-
ஒரே மாதிரி-
தூண் என்றால்!

அதன்-
அர்த்தம்-
உடைத்துதான்-
கட்டியது-
என்றால்!

இவைகள்-
எத்தனைதான்-
பொய்களை-
பரப்புமோ!?

இன்னும்-
எத்தனை-
உயிர்களை-
பறிக்குமோ!?


ஔரங்கசீப்-
பிறர் மத-
வழிபாட்டு தளங்களை-
உடைத்தவர்!

என்றெல்லாம்-
தன் மேல்-
பழியை-
சுமந்துள்ளவர்!

இன்றும்-
நாடெங்கும்-
பல தொண்மை-
தளங்கள்-
இருக்கின்றது!

அப்பொழுது-
"அவர்"-
கண்களில் இருந்து-
எப்படி தப்பித்தது!?

கஜோரா-
அஜந்தா -
சிற்பகலைகள்-
இன்றும்-
இருக்கிறதே!?

இவைகளெல்லாம்-
கலவரக்காரர்களின்-
கூற்றை பொய்யென-
உரைக்கின்றதே....!!

(தொடரும்....)





Tuesday 18 December 2012

முகலாயர்களே......(10)

வெள்ளையர்கள்-
வியாபார வழி-
வருமானம்!

அதை விட-
மிகுதியாக-
இருந்தது-
தன்மானம்!

வந்த-
வேலையை-
பார்த்தால்-
பொறுத்தார்!

பிழை ஒன்று-
செய்தால்-
வெறுத்தார்!

அன்றைய-
உலகில்-
முப்பது சதவிகித-
மக்களை-
ஆண்டார்!

ஆனாலும்-
ஆடம்பரம்-
தவிர்த்தார்!

நல்லவர்களுக்கு-
நாட்டில்-
இடம் தந்தார்!

அழிச்சாட்டியம்-என்றால்
"களம் "-
கண்டார்!

அன்றைக்கு-
எவரி -என்றவன்
கடற்கொள்ளையில்-
ஈடுபட்டார்!

கோபத்தில்-
ஔரங்கசீப்-
கொதித்தார்!

வெள்ளைய -
அதிகாரிகளை-
சிறையில்-
அடைத்தார்!

வெள்ளையர்கள்-
ஆறு லட்சம்-
பவுண்டுகள்-
அபராதம்-
கட்டினார்கள்!

மண்டியிட்டு-
மன்னிப்பு கேட்டு-
வயிறு பிழைத்தார்கள்!

ஔரங்கசீப்-
"இருந்தவரை"-
ஆங்கிலேயர்கள்-
அடங்கி-
ஒடுங்கி கிடந்தார்கள்!

அவ்வீர-
ஔரங்கசீபை-
வசை பாடுகிறார்கள்!

நன்றி கெட்ட-
கூட்டங்கள்!

இன்னைக்கு-
என்ன நிலமைங்க-
ஆகி போச்சி!!?

பணமெல்லாம்-
"கருப்பாக-"
சுவிஸ்ல-
பதுங்கிருச்சி!

"சில்லரையிலும்"-
மண்ணு -
விழுந்திருச்சி !

ராமேஸ்வர -
கடலின் நிறம்-
சிகப்பாகிருச்சி!!

போபல்-
நடந்து-
இருப்பத்தேழு-
வருசமாச்சி!

இழப்பீடு கூட-
கிடைக்காம-
அம்மக்கள்-
வாழ்வு-
கண்ணீரில்-
கரைந்து போச்சி!

இதுல-
கூடன்குள-
திறப்பு பற்றி-
பேச்சி!!?

தேவைதான்-
தேச வளர்ச்சி!

அதைவிட-
முக்கியம்-
மக்களின்-
உயிர் மூச்சி!

என்ன செய்ய-
நாம புலம்புவதே -
வேலையா -
போச்சி!!

ஆனாலும்-
நம்பிக்கை துளிர்கிறது-
நம் நாட்டில்-
மலரும் நல்லாட்சி!

(தொடரும்.....)






Monday 17 December 2012

முகலாயர்களே....(9)

சிங்கம்டா-என
போஸ்டர் ஓட்டுறான்-
சிங்கிள் டீக்கு-
"சிங்கி"-
 அடித்தவனெல்லாம்!

"அப்பாடாக்கர்-"என
அலப்பரை கூட்டுறான்-
"அல்லக்கைகள்"-
எல்லாம்!

கொலை வழக்குல-
தலையிடுதுக-
கிளை செயலாளர்-
"பொறுப்புகள்"-
எல்லாம்!

மாநில பிரமுகரை-
வரவேற்பதில்-
கொலை வரை-
செல்கிறது-
மாவட்ட பொறுப்புகள்-
எல்லாம்!

சின்ன சின்ன-
பதவிகூட-
"பவுசு"-
காட்டுது!

"எக்ஸ்"என்ற -
அடையாளம்கூட-
"படம்-"
காட்டுது!

இவைகளெல்லாம்-
விளக்க தேவையில்லை-
ஆதாரங்கள்!

நாட்டில்-
நடக்கும்-
சாதாரண-
நிகழ்வுகள்!

அன்றைக்கு-
ஔரங்கசீப்-
உலகின் ஐந்து-
பெரிய சாம்ராஜ்யங்களில்-
ஒரு-
சக்ரவர்த்தி!

சிறிதளவு-
நம்-
சிந்தனைக்கு-
அவர் வாழ்வு முறை-
பற்றி!

முகலாய -
மன்னர்களில்-
மிகபெரும்-
செல்வந்தரும்-
அவர்தான்!

எளிமையாக-
வாழ்ந்தவரும்-
அவர்தான்!

தொப்பி-
விற்றும்!

உடைகள்-
விற்றும்!

அவ்வுணவில்-
மகிழ்ச்சி கொண்டது-
அவர் வாழ்வும்!

தலையணை கீழ்-
வைத்திருந்த பணத்தை-
செலவழித்து-
கொண்டது-
அவரது-
மரணம்!

இம்மன்னர்களை-
புகழ-
 இக்கவிதைகள்-
இல்லை!

இம்மன்னர்களின்-
வாயிலாக-
மனிதர்கள்-
மத்தியில்-
பிணக்கங்கள்-
உருவாக்கபடாமலில்லை!

பிணக்கங்கள்-
தவிர்க்க-
இணக்கங்கள்-
உருவாக -
இக்கவிதைகள்-
ஒரு துளியானால்-
என் மன-
மகிழ்வுக்கு-
அளவே இல்லை!

(தொடரும்......)




        

Sunday 16 December 2012

முகலாயர்களே...(8)

செலுத்துகிறோம்-
நாம் ஈட்டிய-
வருமானத்தில்-
வருமான வரி!

வாங்க -
முடியாத-
விலைவாசியானாலும்-
பொருளில்-
சேர்ந்திருக்குது-
விற்பனை வரி!

பொறுத்து -
கொள்கிறோம்-
மின்சாரமே -
இல்லாமல்-
மின்சார கட்டண-
உயர்வு!

வாழ்வாதார-
பால்-
விலை உயர்வு!

உயிரை உறிஞ்சும்-
மது விற்பனை-
சாதனை -
அளவு!

இன்னும்-
என்னன்னா -
விற்கிறதோ-
அத்தனையிலும்-
இருக்கிறது-
வரி!

நாட்டுக்குத்தானே-
போகிறது-
வரி!

நினைத்து-
கொண்டால்-
அதுவும்-
சரி!

இதனை-
மனதில்-
நிறுத்துவோம்!

அடுத்து-
வரலாற்றுக்கு-
போவோம்!

என்ன-
இந்த -
ஜிஸ்யா வரி!?

இது-
முகலாயர்கள் மீது-
பெரிதுபடுத்தப்படும்-
ஒரு வகுப்புவாத-
வதந்தீ!

இவ்வரியாவது(ஜிஸ்யா வரி)-
முஸ்லிம்கள் அல்லாத-
மக்கள் மீது-
விதிக்கப்படும்-
பாதுகாப்பு -
வரி!

இப்பணம்-
மன்னரின் -
சமூகத்திற்கு-
செலவழிக்கபட்டதா-
சிந்திப்பதே-
சரி!?

இல்லை-
என்பதே-
சரி!

மன்னரின்-
சமூகத்திற்கும்-
இருந்தது-
வரி!

அதன்-
பெயர்-
ஏழை வரி!(ஜகாத்)

இருக்கும்-
வீட்டை -
தவிர்த்து!

கணிசமான-
அளவிற்கு மேல் -
அசையும் சொத்து-
அசையா சொத்து-
அத்தனைக்கும்-
வரி வாங்கப்பட்டது!

இத்தனையும்-
அரசு கஜானாவில்-
சேர்க்கபட்டது!

சொல்லுங்கள்-
சொந்தங்களே!

இதில்-
யாருக்கு-
அதிக வரி!

ஏன்-
ஒருதலைபட்சமாக-
பிரசாரத்தின் வழி-
விதைக்கபடுது-
கொலை வெறி!?

(தொடரும்.....)

(குறிப்பு-ஜகாத் பணம் யார் நிர்பந்தமும் இல்லாமல் இறைவனுக்காக கொடுப்பவர்களும்-
இருக்கிறார்கள்-கொடுக்காதவரை நிற்பதிந்து கொடுக்கவும் -வைக்கப்பட்டுள்ளார்கள்!
இது ஜகாத் இஸ்லாமியர்களின்-
நான்காவது கடைமையும் கூட)






Saturday 15 December 2012

முகலாயர்களே......(7)

முகலாய-
மன்னர்களில்-
அதிகம்-
விமர்சிக்கபடுபவர்!

மன்னர்-
ஔரங்கசீப்-
ஆவார்!

கொஞ்சம்-
பார்ப்போம்-
இவர்-
எப்படிபட்டவர் -
ஆவார்!!

தந்தை-
ஷாஜகானை-
கைது செய்தவர்-என
குற்றசாட்டு !

ஏன் செய்தார்-என
சிந்தித்தோமா-
நம் மனசாட்சியை-
தொட்டு!?

காரணம்-
தாஜ் மகாலை-
கட்டியதுதான்!

பைத்துல் மால்(பொதுநிதி)-
எடுத்து அதை -
கட்டியதுதான்!

ஒரே-
வித்தியாசம்!

தந்தைக்கும்-
மகனுக்கும்!

தந்தை-
கட்டிடத்தை-
ரசனையாக-
பார்த்தார்-
கட்டி முடித்தார்!

தனயன்-
நீதியை நேசித்தார்-
வீட்டில்-
சிறை வைத்தார்!

கன்றுக்காக-
தன் மகனையே-
கொன்றவரை-
மனு நீதி சோழன்-
என்கிறோம்!

பொதுநிதியை-
செலவழித்ததால்-
சிறை வைத்தவரை-
"வெறியன்"-
என்கிறோம்!

இன்றைக்கு-
அமர்ந்து விட்டால்-
ஆட்சியில்!

எல்லாம்-
அனுபவிக்கிறார்கள்-
ஓசியில்!

ஒருவர் கலந்து-
கொள்ளும்-
நிகழ்ச்சிக்கு!

இலவசமாகுது-
குடும்பத்துக்கு!

சொல்கிறார்கள்-
விமான சேவை-
நஷ்டம் என்று!

ஏன் சொல்ல-
மறந்தார்கள்-
ஒவ்வொருவரின்-
ஆட்சிகால செலவு-
இவ்வளவு-
என்று!?

"இப்படிப்பட்ட-"
ஆட்சியாளர்களை-
பார்த்தே பழகிவிட்ட-
நாம்!

"அப்படிப்பட்ட-"
ஆட்சியாளனை-
தூற்றுவோம்தாம்!!

(தொடரும்.........)





Friday 14 December 2012

முகலாயர்களே.....(6)

அச்செய்தி -
சொல்லியது!

அதன்-
சுருக்கம்-
இது!

"ஒரு இஸ்லாமிய-
அமைப்பு (பெயர் குறிப்பிட்டு இருந்தது)-
அதனை செய்ததாகவும்!

மீனாக்ஷி அம்மன் கோவில் -
உலக அதிசயமானால்-
தாஜ்மகால் மௌசு-
குறைந்திடும்-
என்பதாலும்!

என்றெல்லாம்-
எழுதி இருந்தது!

முஸ்லிம்கள் கூட-
கடிந்து -
கொண்டார்கள்-
அவ்வமைப்பினர்களை!

கொட்டி தீர்த்தார்கள்-
வார்த்தைகளை!

ஒரே சமூகத்தை-
சார்ந்தவர்களே-
இப்படி என்றால்!

எப்படி -
கொதித்து-
இருப்பார்கள்-
அக்கோவிலை-
புனிதமாக-
கருதும்-
சகோதரர்கள்!

சில-
நாட்கள்-
சென்றது!

உண்மை-
வெளிவந்தது!

அச்செயலை-
செய்தவர்கள்-
முஸ்லிம்கள் -
அல்லாதவர்கள்!

பூக்கடை-
ஏல விவாகாரத்தில்-
நடந்த-
பிரச்சனைகள்!

ஒருவர் மற்றவரை-
பழிவாங்கவே-
இக்குண்டு வைத்த-
சம்பவங்கள்!

ஒரு துளிகூட-
சம்பந்தமில்லை-
அவ்வமைப்பினர்கள்-
மீது!

எதற்க்காக-
இல்லாததை-
பொல்லாததை-
அப்பத்திரிக்கைகள்-
எழுதுகிறது!?

எழுதிட-
முடியும்!

பத்திரிகை-
பெயரையும்!

அவ்வமைப்பினர்-
பெயரையும்!

ஆனாலும்-
நாகரீகம்-
கருதி-
நான் -
தவிர்த்தது!

இன்னும்-
இது போன்ற-
செய்திகளை-
பரப்பவே-
செய்கிறார்கள்!

மக்களே!-
நீங்களே-
உண்மையா-என
சிந்தித்து பார்த்து-
கொள்ளுங்கள்!

பிணந்தின்னி-
கழுகள்-
பிணங்களைதான்-
தின்னும்!

இக்கழுகுகளோ-
மனிதர்களை-
சண்டையிட்டு-
சாகவே-
எழுத்தையும்-
பயன்படுத்தும்!

எத்தனையோ-
பத்திரிக்கைத்துறை-
நண்பர்கள்!

உண்மையை-
தேடி உயிரையும்-
பணயம் வைக்கிறார்கள்!

அப்பேர்பட்டவர்களில்-
இது போன்ற-
அசிங்கங்களும்-
இருக்கிறார்கள்!

கட்டபொம்மன்கள்-
மத்தியில்-
எட்டப்பன்களும்!

திப்பு சுல்தானை-
சுற்றி -
தப்பான-
வரலாற்று திரிபுகளும்!

நிறைந்தே-
காணபடுகிறது!

உண்மை எது-
பொய் எது-
சிந்திப்பதே-
சாலசிறந்தது!

(தொடரும்....)





Thursday 13 December 2012

முகலாயர்களே....(5)

பெரும்பாலான-
மக்கள்-
விரும்புவது!-
சமூக-
நல்லிணக்கத்தை!

சிலர்-
விஷத்தை-
விதைத்து-
அதில்-
நிரப்பி கொள்கிறார்கள்-
தன் வயிற்றை!

மதுரை-
என்றால்-
மல்லியும்!

மீனாக்ஷி அம்மன்-
கோவிலும்!

சுதந்திர போராட்ட-
தியாகி-
மருதநாயகம்-
"தலை " அடக்கம்-
செய்யப்பட்ட-
சம்மட்டிபுரமும்!

பல பசுமையான-
நினைவுகளை-
தரும்!

வாசத்திற்கும்-
பேர் இருக்கு!

பாசத்திற்கும்-
மனசிருக்கு!

கடல் இல்லாத-
ஊரு!

அரசியல் புயல்கள்-
மையம் கொள்ளும்-
ஊரு!

நான் -
சொல்ல போற-
செய்தி வேறு!

சில வருடங்களுக்கு-
முன்னால்!

மதுரைஎங்கும்-
ஒரு செய்தியை-
பரப்பியது-
விளம்பர-
 பலைகையினால்!

உலக அதிசயமவதற்க்கு-
மீனாக்ஷி அம்மன் கோவிலுக்கு-
வாக்களிக்குமாறு!

வாகனங்கள்-
மதுரையில் -
காண முடிந்தது-
இப்பதகைகளை-
சுமந்தவாறு!

இவ்வேளையில்-
ஒரு வார இதழ்-
செய்தி வெளியிட்டது!

அது-
"கோவிலில் குண்டு-
கண்டுபிடிக்கப்பட்டது-"என
எழுதியது!

நல்லிணக்கம் -
விரும்பும்-
எல்லோரையும் -
நசுக்கியது!

அச்செய்தியானது.....!!!

(தொடரும்......)

(குறிப்பு;மருதநாயகம் சுதந்திரத்திற்கு போராடியதால் உடலை வெள்ளையர்கள் கண்ட துண்டமாக வெட்டி தலையை மட்டும் மதுரையில் புதைதுள்ளார்கள்-
மற்ற உறுப்புகளை வேறொரு ஊருகளில் புதைத்தார்கள்)


Wednesday 12 December 2012

முகலாயர்களே......(4)

நிலவை-
வார்த்தையில்-
வடிப்பவன்-
கவி-
பித்தன்!

காதலுக்காக-
காலத்தை-
இழப்பவன்-
காதல்-
பித்தன்!

மண்ணில்-
நிலவை-
சலவை செய்து-
"அதிசயம்"-
செய்தவன்-
கலை-
பித்தன்!

அப்பித்தன்தான்-
தாஜ்மகால்-
கட்டிய-
முகலாய மன்னன்-
ஷாஜகான்!

இந்தியா -
என்றால்-
தாஜ்மகாலும்!

தாஜ்மகால்-
என்றால்-
இந்தியாவும்!

ஒன்று சேர-
நினைவுகள்-
வந்து விடும்!

வெண்ணிலாவிடம்-
ஒளியை கடன்-
வாங்கி கட்டியதுபோல்-
அற்புதம்!

பார்க்க-
பார்க்க-
வியக்க வைக்கும்-
கலைகளின்-
களஞ்சியம்!

உலகின்-
அதிசயங்களில்-
முதலிடம்!

அக்கட்டிடத்தின்-
சொந்தம் கொண்டாட-
கூடிய மக்களோ-
நாட்டில்-
கடைசி இடம்!

ஓ!
ஷாஜகானே!
முகலாய மன்னனே!

இன்று-
உன் வாரிசுகளுக்கு-
வாடைகைக்கு -
வீடுகள் கூட-
மறுக்குதே!

நாட்டை ஆண்ட-
சமூகம் -
நடுத்தெருவில்-
நிக்குதே!

எத்தனை-
கமிசன்கள்-
வச்சாச்சி!

அத்தனையும்-
அவலத்தை-
சொல்லிருச்சி!

நடை முறைபடுத்தாமல்-
மனசு ஏனோ-
அரசுகளுக்கு-
மரத்து போச்சி!

ஏன்-
நியாயம் தேடும்-
கண்களில்-
மண்ணு விழுந்திடுச்சி!?

தாஜ்மகால்-
உலகபோரின்போது-
குண்டுகளில் இருந்து-
பாதுகாக்க-
மூங்கில்களால்-
கட்டப்பட்டது!-

புகைபடியாமல்-
இருக்க-
குறிப்பிட்ட தூரம்-
புகைவண்டிக்கு-
தடை விதிக்கப்பட்டுள்ளது!

கட்டிடத்தை-
பாதுகாக்கும்-
உங்களுக்கு!

மக்களின் நிலையை-
 கண்டும் காணாமல்-
இருப்பது-
எதற்கு!?


(தொடரும்.....)




Tuesday 11 December 2012

முகலாயர்களே...(3)

நிலவினை-
பாடாத-
கவிஞர்களா!?

நிலவு-
தராத-
கற்பனைகளா!?

வர்ணங்கள்-
ஜாலங்கள்-
புரிவதுண்டு!

ஒரே-
வர்ணம் கொண்ட-
நிலவே!-
நீ!
எத்தனை-
சலனங்கள்-
தருவதுண்டு!

கொள்ளைகொள்ளும்-
குழந்தை-
சிரிப்பாகவும்-
தெரிகிறாய்!

நேசமானவளின்-
முகத்தை-
நினைவூட்டுகிறாய்!

ஒதுக்கியவளின்-
நினைவை-
தூரத்தில்-
இருந்து  தந்து-
துன்புறுத்துகிறாய்!

பிறையாக-
தெரிந்து-
மௌனமாக-
சிரித்தவளின்-
சிணுங்களை-
நினைவூட்டுகிறாய்!

நட்சத்திரங்கள்-
புடை சூழ-
ராணி போல்-
வலம் வருகிறாய்!

வெறித்து பார்க்கும்-
என்னவள்-
பார்வையை -
போலும்!

திரும்பி-
நான் பார்த்தால்-
மறைந்து கொள்வது-
போலவும்!

நிலவே!
பௌர்ணமி-
நாளில்-
ஒளியை -
கொட்டுகிறாய்!

அண்ணாந்து-
பார்க்கையில்-
மேகத்துக்குள்-
மறைந்து-
கொள்கிறாய்!

எத்தனை-
ரசனை வருது-
உன்னை-
பார்த்து!

எழுத முடியாத-
என் நிலையை-
பார்த்து-
எழுத்துக்கள்-
சிரிக்கிறது-
என்னை-
பார்த்து!

படைப்பான-
உன்னையே-
முழுவதும்-
அறிய முடியவில்லை!

உன்னை-
படைத்தவனின்-
பெருமையை-
எப்படி-
வார்த்தைகளில்-
அடக்கி சொல்ல!

"முகலாயர்-"
தலைப்பை-
வைத்தேன்!

முழு நிலவை பற்றி-
எழுதி இருக்கிறேன்!

இரண்டின்-
தொடர்பை-
தொடருங்கள்-
சொல்கிறேன்!

(தொடரும்....)






Monday 10 December 2012

முகலாயர்களே......(2)

இல்லை-
இல்லை -
என்று-
கத்தினார்கள்-
கதறினார்கள்-
அம்மக்களும்-
ஆய்வுகளும்!

நம்ப மாட்டோம்-
இருக்குது-
"பேரழிவு ஆயுதம்"-
என்றார்கள்-
கொடுத்தவர்களும்!
எதிரியாக-
மாறியவர்களும்!

அதன்-
விளைவானது!

ஒரு நாடே-
சுடுகானாது!

இது-
ஒரு புறம்!

இனி-
மற்றொருபுறம்!

ரயிலில்-
ஒரு பகுதி-
எரிந்தது!

பிறகு-
பொய் பிரச்சாரம்-
பரவியது!

ஒரு-
மாநிலமே -
மனிதத்தை-
தொலைத்தது!

கலவரம்!
கலவரம்!

எங்கும்-
கொலைகளம்!

முன்பு-
உலகளவானது!

பின்பு-
நம் -
தேசமானது!

சில வருட-
ஆட்சியிலே!

இத்தனையும்-
செய்து முடிக்கையிலே!

உடனடியாக-
ஒளிபரப்பு-
செய்கிற
ஊடகங்கள்-
இருக்கையிலே!

முகலாயர்களே!
உங்கள்-
எண்ணூறு வருட-
ஆட்சியிலே!

தேசத்தையே-
புரட்டி இருக்கலாமே-
உங்கள்-
அதிகாரத்தினாலே!

நீங்கள்-
மதவெறியர்கள்-
என்றால்!

மதமாற்றம்-
செய்தவர்கள் -
என்றால்!

ஏன்-
இன்னும்-
உங்கள்-
சமூகம்-
சிறுபான்மை-
மக்கள்!?

இன்னும்-
அத்தனை-
சமூகமக்களும்-
வாழ்கிறதே!

இதுவே-
உங்கள் மீது-
சுமத்தப்படும்-
குற்றங்களை-
துடைக்கிறதே!

ஆனால்-
மனங்கள்-
புரிந்திட-
மறுக்கிறதே!!

(தொடரும்.......)



Saturday 8 December 2012

முகலாயர்களே....(1)

முகலாயர்களே!
ராஜபுத்திர-
அரசர்-
அழைத்ததால்-
பாரதம்-
வந்தீர்கள்!

வந்த-
நீங்கள்-
கொள்ளையா-
 அடித்தீர்கள்!?

உங்கள்-
தேசமான-
காபூலுக்கா-
கொண்டு சென்றீர்கள்!?

இல்லையே-
இங்குதானே-
இருந்தீர்கள்!

மண்ணோடும்-
மக்களோடும்-
மலர்களாக-
மணம் வீசினீர்கள்!

அரண்மனைகளையும்-
ஏன்!?-
இன்றைய தலைநகர்-
நிர்மானித்தவர்களும்-
நீங்கள்!

செங்கோட்டையில்-
கொடியேற்றுவார்கள்-
சுதந்திர-
தினத்தன்று!

அது-
நேதாஜி அவர்களின்-
ஆசை என்று!

செங்கோட்டையின்-
சொந்தங்களுக்கு-
இடஒதுக்கீடு கூட-
கிடைக்க மறுக்குதே-
இன்று!

வெள்ளையன்-
கொள்ளையிட-
வந்தான்-
நம் -
தேசத்தை!

அப்போது-
ஆண்ட நீங்கள்-(முகலாயர்கள்)
வளமிக்க நாடாக-
மாற்றி இருக்குறீர்கள்-
நம் தேசத்தை!

அப்படிஎன்றால்-
நால்லாட்சிதானே-
ஆண்டிருக்கும்-
நம்-
தேசத்தை!

அப்போது-
ஏன்-
நீங்கள்-
கொடுங்கோலர்கள்!

கொள்ளையிட்டு-
அடிமைபடுத்திய-
வெள்ளையர்கள்-
நாகரீக -
புருஷர்கள்!

கூப்பிட்டதால் வந்த-
நீங்கள்-
"படை எடுத்தவர்கள்"!

சுரண்ட வந்த-
வெள்ளையர்கள்-
"வருகை புரிந்தவர்கள்"!

இவ்விசத்தை-
சுமக்கிறது-
பாட புத்தகங்கள்!!

ஏன்-
இந்த-
விஷ வித்துகள்!

ஒரு-
சமூகத்திற்கு-
எதிரான-
வன்மங்கள்!

(தொடரும்...)





Friday 7 December 2012

வெளிச்சங்கள்"! (10)

"நடந்த காரியங்களுக்கு"  -
காரணத்தை-
கண்டறிந்தவன்-
நீ!

எல்லாம்-
"செய்து விட்டு"-
எதுவும் -
தெரியாததுபோல்-
திரிந்தவர்கள்-
தெருவுக்கு-
இழுத்தவன்-
நீ!

"காவலாளிகள்"-என்று
சொல்லி கொண்டிருந்தவர்களை-
காவாளிகள்-என
உலகிற்கு காட்டியவன்-
நீ!

எங்கிருந்து-
தொடங்குது-
ஏன் -
தொடர்கிறது-
என்பதற்கு எல்லாம்-
பதிலை-
படித்தவன் -
நீ!

தேசபக்தன் -என்று
"மெச்சி" கொண்டவர்களை-
நெஞ்சி சட்டையை-
பிடித்து இழுத்தவன்-
நீ!

அநியாங்கள்-
சுமத்தப்பட்ட-
சமூகத்தை -
சுத்தம்-
செய்தவன்-
நீ!

தப்பு செய்த-
உண்மை குற்றவாளிகளை-
தண்டிக்கணும்-என்ற
நெஞ்சழுத்தம்-
கொண்டவன்-
நீ!

மர்மங்களை-
மறைக்காமல்-
வெளியுலகிற்கு-
சொன்னவன்-
நீ!

ஏதோ-
ஒன்றை மறைக்க-
எங்கோ ஓன்று-
நடக்க-
சம்பந்தபடுத்தி-
பார்த்தவன்-
நீ!

உன் மரணத்திலும்-
மர்மங்களை-
மறைத்து கொண்டே-
மறைந்து-
விட்டாயே!
நீ!

நீ!
வீரன் அல்ல-
மாவீரன்-
ஹேமந்த் கர்கரே-
நீ!

உன்னை போன்ற -
ஒரு சில-
வீரர்களால்தான்-
நீதி-
இன்னும் -
சாகாமல்-
இருக்கு!

உன்னை போன்றவர்கள்-
"நடவடிக்கைகள்-"
பலரின் தூக்கத்தை-
"கெடுத்து இருக்கு"!

எங்கிருந்தோ-
வந்தவனுங்க-
"உண்ம்மையை" சொன்ன -
உன்னை கொன்றதுதான்-
மர்மமாகவும்-
சந்தேகங்களையும்-
புதைத்து-
இருக்கு....!!!!!

---------முற்றும்-----

Wednesday 5 December 2012

வெளிச்சங்கள்"! (9)

"இருந்ததை"-
இடித்தார்கள்!

"இல்லாததை-"
இருக்குது-
என்கிறார்கள்!

அரசே-
கமிசன்கள்-
அமைத்தார்கள்'

உலக சாதனைக்கு-
பதியலாம்-
அத்தனை-
தவணை -
நீட்டிப்புகள்!

அக்கமிசன்-
சொன்ன-
முக்கிய -
குற்றவாளிகள் மேல்-
பாய மறுக்குது-
வழக்குகள்!

அப்போ-
எதற்கு-
நடத்திட-
உத்தவு-
பிறப்பிக்கணும்-
கமிசன்கள்!

தெரியாமல்-
நடந்தால்-
விபத்தினால்-
மரணம்!

அனைவரும்-
பார்க்க-
நடந்ததுவோ-
அக்கிரம-
கொலைவெறியாகும்!

எல்லோரும்-
பார்க்க!

அரசுகளும்-
மௌனிக்க!

பாதுகாப்பு-
படைகளும்-
கண்ணை-
மூடி கொண்டிருக்க!

நடந்து-
முடிந்தது-
அச்சம்பவம்!

குத்தி-
கிழித்து-
தொங்கி கொண்டிருக்கிறது-
மதசார்பற்ற நாடு-என்ற
சொல்லாகும்!

உலகே-
தேசத்தை-
அகிம்சை-
பூமி-
என்றது!

இல்லை-
இனி-
அடாவடி பூமி-என
இச்செயல்-
சொல்லி சென்றது!

"மாட்டிறைச்சி -
சாப்பிடுவதை-
நிறுத்தி விடு-
இம்மக்கள் -
மாடுகளை-
புனிதமாக-
கருதுகிறார்கள்-என
தனயன்-
ஹுமாயுனுக்கு-
அறிவுறுத்திய-
பாபரே!

புனிதமாக-
மதிப்பதை கூட-
தவிர்க்க சொன்ன-
நீயா!!

அம்மக்கள்-
உயிராக
மதிக்க கூடிய-
வழிபாட்டு தளத்தை-
இடித்திருப்பாயா!?

அதில்-
வேறொரு -
வழிபாட்டு தளத்தை-
எழுப்பிருப்பாயா!!?

சந்தேகம்-
இல்லாமலில்லை!

உண்மை-
உறங்கியே-
கிடைப்பதில்லை!

விழுந்த-
கடப்பாரை-
இறை இல்லத்தில்-
மட்டும்-
இல்லை!

இறையாண்மையின்-
இதயத்திலும்-
விழுந்த இடி-என்பதை
மறுப்பதற்கில்லை!

(குமுறல்கள் தொடரும்....)



Tuesday 4 December 2012

"வெளிச்சங்கள்"! (8)

உறவென்று-
சொல்ல -
யாருமில்லை!

பெற்றவர்கள்-
தவறியதால்-
இந்த-
நிலை!

மாமன் என-
ஒருவரிடம்-
தஞ்சம்!

அவரிடமோ-
பாசத்துக்கு-
பஞ்சம்!

வேறு-
 வழியுமில்லை!

ஏச்சும் பேச்சும்-
அவரிடமிருந்து-
கொஞ்சமில்லை!

பிரிந்திடும்-
நேரம்-
வந்தது!

பசியால்-
பரிதவிக்கிற-
நிலை -
அவனுக்கு-
ஏற்பட்டது!

வாழ வழி-
தெரியவில்லை-
இவனுக்கு!

ஒரு-
கை நீண்டது-
இவனை-
தாங்குவதற்கு!

அன்று முதல் -
இவனை படிக்கவைக்க-
அந்த கைகள்-
சுமைகளை-
சுமந்தது!

இன்று-
அவனை-
பட்டதாரியாக்கியது!

படித்தவன்-
மேடையில்!

படிக்க வைத்தவன்-
வருகிறான்-
மேடை நோக்கிய-
பாதையில்!

கைதட்டலில்-
அதிர்ந்தது-
அரங்கமே!

ஒரு இஸ்லாமிய-
சகோதரனுக்கு-
உதவியது-
இந்து சகோதரனின்-
மனமே!

தன் கதையை-
மேடையில்-
சொன்னான்-
பட்டதாரி!

"அரங்கதிலுள்ளவர்கள் "-
கண்களிலோ-
கண்ணீர் துளி!

காணொளி கண்ட -
என் கண்களிலும்-
அதே துளி!

இரு சமூகங்களின் -
ஒற்றுமை-
சுதந்திர கனவை-
நனவாக்கியது!

"அடிமைபடுத்தியவன்-"
"அடித்துகொள்ளட்டும்"-என
வாரலாற்றை-
திரித்து-
எழுதியது!

வரலாற்று-
திரிபுகள்-
வெடிக்காத-
அணு குண்டுகள்-
ஹிட்லர் சொன்னது!

அத்திரிபுகள்-
இன்றும்-
திரியாக-
கலவரதீயை-
அணையாமல்-
வளர்த்து கொண்டிருக்கிறது!

உண்மையான-
வரலாறை-
நாம் என்றைக்கு-
விளங்குவது!?

நம் தேசம்-
திருந்துவது!?

(குமுறல்கள் தொடரும்....)





Monday 3 December 2012

வெளிச்சங்கள்"! (7)

காலங்காலமா-
தொடரும்-
கொடுமை!

நம் மண்ணை-
ரத்த சகதியாக்குது-
தீண்டாமை!

எத்தனையோ-
சட்டங்கள்-
போட்டாச்சி!

அதெல்லாம்-
கிணத்துல-
போட்ட -
கல்லாச்சி!

"ஒரு காதல்"-
சேர்ந்திருச்சி!

பல வீடுகள்-
எரிஞ்சிருச்சி!

அந்தோ-
பரிதாபம்-
மனிதர்களா-
கொல்லபட்டார்கள்!?

இல்லை-
மனிதங்களையல்லவா-
கொல்கிறார்கள்!?

பிரச்சனையில்லாத-
உலகில்லைதான்!

"பிறப்பை"-
வைத்து-
ஏன் இந்த-
கொடுமை நிலை!?

உணவுக்காக-
"பிராணிகளை"-
கொல்வதை-
எதிர்க்கிறாங்க!

உயிரோட மக்கள்-
எரியும்போது-
மௌனிக்கிறாங்க!

பெரும்பான்மை-
ஓட்டு வாங்கினால்தான்-
ஆட்சியை -
பிடிக்கலாம்ங்க!

பெரும்பான்மையான-
சமூகம்-
இங்கே-
தாழ்ந்தவனாங்க!?

நிறங்கள்-
உருவங்கள்-
மனிதர்கள்-
அடையாளம்-
கண்டுகொள்ளவே!

இதை வைத்து-
சில மிருகங்கள்-
கொல்லுதே!

ஏன் ஒரே-
சமூகமாக-
இறைவன் படைக்கவில்லை-
சிலரின்-
கூப்பாடு!

இங்குதான்-
பயன்படனும்-
நம் பகுத்தறிவின்-
செயல்பாடு!

தண்ணீரை-
வாயினுள்-
செலுத்தினாலும்!

மூக்கினுள்-
செலுத்தினாலும்!

சேரும் இடம்-
வயிறுதான்!

இதுபோலவே-
நல்லதையும்-
கெட்டதையும்-
படைத்துள்ளான்-
இறைவன்!

இதுல-
வியாக்கியானங்கள்-
கொண்டு அலைகிறான்-
மனிதன்!

தெளிந்தவன்-
அறிஞன்!

தெளிவில்லாதவன்-
மூடன்!

பிறப்பால்-
குலத்தால்-
யாரையும்-
உயர்ந்தவன் -என்று
சொல்லவில்லை-
படைத்தவனே!

நமக்கென்னடா!-
உரிமை இருக்கு-
"அற்ப துளியில்-"
பிறந்தவனே!

(குமுறல்கள் தொடரும்.....)

Sunday 2 December 2012

வெளிச்சங்கள்!" (6)

வள்ளுவரை-
"அய்யன்"-
என்கிறோம்!

காந்தியை-
தாத்தா-
என்கிறோம்!

நேருவை-
மாமா-
என்கிறோம்!

பெரியாரை-
தந்தை-
என்கிறோம்!

அண்ணாதுரையை-
"அண்ணா"-
என்கிறோம்!

இவர்கள்-
நமக்கென்ன-
உறவின் முறை!?

மனித குலத்திற்கு-
ஏதோ ஒரு வகையில்-
அறிவுரை தந்திருக்கிறது-
அவர்களின்-
வாழ்வின் முறை!

உறவை சொல்லி-
அழைப்பதில்-
பிழை இல்லை!

முத்துராமலிங்க தேவர்!

ஆமினா-எனும்
தாயிடம்-
பால் குடித்து-
வளர்த்தவர்!

தேவரிடம்-
"நீதான்யா-
அதிகமா -
பால் குடிச்சேன்னு-
கேலியாக பேசுவாராம்-
நாகூர் கனி-
அத்தாயின் மகனார்!

முன்பெல்லாம்-
மாமன் ,மச்சான்-என
அழைத்து கொள்ளும் முறை-
அனைத்து சமூக-
மக்களிடமும்-
இருந்தது!

இன்றோ-
அப்பாச-
 அழைப்புகள்-
அணைந்து-
 போனது!

இதற்கு-
யாரை-
காரணம்-
சொல்ல!?

சாதியை சொல்லியும்-
மதவெறியை ஊட்டியும்-
ஓட்டுக்கு அலையும்-
அரசியலையா!?

எத்தனை முறை-
பட்டாலும்-
திருந்த மறுக்கும்-
மக்களையா!?

    

Saturday 1 December 2012

வெளிச்சங்கள்"! (5)

"என் தேசம்-
பூங்காவை போன்றது-
பல வண்ண-
மலர்கள் இருப்பது போல்-
பல சாதி மதங்கள்-
கொண்டது-என
நேரு சொன்னார்கள்!

இன்றைய-
மக்களின் நிலையை-
காண்பாரேயானால்-
நொந்தே மடிந்திருப்பார்கள்!

பெரும்பகுதி-
மலர்கள்-
கருகி விட்டது!

ஒரு-
பகுதி வளர்ச்சி-
சாதனையாக-
காட்டபடுது!

சுதந்திரம்-
வாங்கி-
அறுபது ஆண்டுகளுக்கு-
மேலாகி விட்டது!

இன்னும்-
வறுமை -
மாறவில்லை!

பட்டினி-
சாவுகள் -
குறையவில்லை!

தமிழ் நாட்டில்-
மின்சாரமே-
 இல்லை!

இதுக்கா-
நம் சுதந்திர போராட்ட-
தியாகிகள்-
மடிந்தார்கள்!?

மண்ணில்-
புதைந்தார்கள்!!

சிலர்-
பணக்கார பட்டியலில்-
இடம் பிடித்து-
விட்டால்!

ஏழைகள்-
வயிறுகள்-
நிறைப்பிடுமா-
அச்சாதனை-
பட்டியல்!?

ஒவ்வொரு-
முறையும்-
வறுமையை-
ஒழிப்போம்!
ஊழலை-
ஒழிப்போம்-என
சொல்றாங்க!

கேட்டு கேட்டு-
நம் காதுகளே-
"புளிச்சி"-
போச்சிங்க!

எதிர் கட்சி-
போன முறை-
நாடாளு மன்றத்தை-
நடத்த விடவில்லை!
காரணம்-
ஊழல்னு-
சொன்னாங்க!

இவங்க-
சவ பெட்டியிலேயே-
"ஆட்டைய-"
போட்டவங்க!

இந்த முறையும்-
முடக்குவோம்னு-
சொல்றாங்க!
காரணம்-
சில்லறை வணிகத்தில்-
அந்நிய முதலீடுனு-
சொல்றாங்க!

இவங்கதான்-
போன முறை-
ஆளும்போது-
அடித்தளம்-
இட்டவங்க!

இது-
எப்படி -
இருக்குங்க!?

எது-
எப்படியோ-
மக்கள் வரிபணங்கள்-
"மண்ணா போச்சிங்க!"

மக்களோ-
நடுதெருவுல-
நிக்குறாங்க!!

(குமுறல்கள் தொடரும்....)