Tuesday 31 May 2022

யாசகம.!

 பூவின் வாசத்தை

யாசிக்கிறாயா.!?

அது 

முள்ளால்  ஆசிர்வதிக்கும்

பரவாயில்லையா.!,

கதை.!

 ஞாபகங்களுடன் கதைக்கும்

இத்தருணத்தை

யாருமற்ற இரவென்று

யார் சொன்னது.!?

Wednesday 18 May 2022

அர்த்தங்கள்.!

 சொற்கள்தான் 

எனது தலையணை

அதன் அர்த்தங்கள்தான்

எனது போர்வை.!

Monday 16 May 2022

மலர்.!

 வேரில் எதைக் கொட்டினாலும்

மலர்களென்னவோ சிரிக்கத்தான்

செய்கிறது.!

பனி.!

 மலர்களின் மௌனம் கேட்க

நெருங்கியபோது

மலர்களின் கண்ணீராய்

பனித்துளிகள்.!

Saturday 7 May 2022

கதவு.!

 இறைவன் 

கதவுகளை திறந்தே வைத்திருக்கிறான்

மனிதன்தான்

கண்களை மூடிக்கொண்டான்..

Tuesday 3 May 2022

வாசம்.!

பிடித்த வரிகளிலும்

உன் வாசம்.!

Monday 2 May 2022

சந்தோசம்..

 சந்தோசங்கள் 

விரவிக் கிடக்க

ஏன் அழுகையைத் தேடி

எடுக்கிறாய்..!?

பேசு.!

 வானமோ

பூமியோ

நீ பேசாதவற்றையா

என்னிடம் பேசிட போகிறது..!?

Sunday 1 May 2022

கவிதை.!

 கசக்கும் வாழ்க்கையில்

இனி்ப்பு பலகாரமாய்

கவிதை.!

எழுத்து.!

 எழுதப் பிடிக்கிறது

எழுதுவதால் 

என்னைப் பிடிக்கிறது

அவ்வளவுதான்.!

சட்டுவம்.!

 சட்டுவம் கொத்தும்

சத்தத்திலுமா

ஒளிந்திருப்பாய்.!?

கவிதை.!

 கவிதையின் 

விரல்களைப் பிடித்து

நடக்கிறேன்

அது நான் இருக்கும்

உலகத்தை 

அழகாக்கிறது..