பெண்ணே!
ஆணின் வாழ்வுக்கு-
அர்த்தம் தருகிறாள்!
பாவாடை தாவணியில்-
இருந்தவள்!
புடவைக்கு-
மாறிடுவாள்!
பட்டாம் பூச்சியாக-
சிறகடித்தவள்!
குடும்ப பொறுப்பால்-
தன் சிறகை-
சுருக்கி கொள்வாள்!
சாலையோர -
சோலையானவள்!
சொந்தங்களுக்காக-
சோலையிலே-
சாலையாவாள்!
ஸ்திரத்தன்மை-
கட்டிடங்களுக்கு-
அஸ்திவாரம்!
உறவினர்களுக்கு-
சம்சாரம்!
கடைக்கண் பார்வை கூட-
அடுத்தவன் மீது-
விழ கூடாது -
என்பது -
ஆண்கள் புத்தி!
ஆண்களே!-i
என்றாவது எண்ணியுள்ளோமா-
நம்ம" யோக்கியதை-"
பற்றி!?
கற்பு என்பது-
பெண்ணுக்கு -
மட்டுமல்ல!
ஆண்களுக்கு-
அது விதி விலக்கல்ல!
பெண்ணென்றால்-
அடிமை அல்ல!
அப்படி நினைத்தால்-
அவன் ஆம்பிள்ளை-
இல்லை!
ஒற்றை-
உடன்படிக்கையால்!
"மற்றதையெல்லாம்-"
ஒதுக்கி விட்டு-
வந்தாள்!
நம்பி வந்தவனும்-
முற்கள் செடிஎன்றால்-
அவள் என்னாவாள்!!
"உங்களில் யார்-
சிறந்தவர் என்றால்!
உங்கள் மனைவியர்களில்-
சிறந்தவராவார்-என்றுள்ளது
நபி மொழி இப்படி!
சொந்தங்களே-
நம் நடந்து கொள்வது-
எப்படி....!!???
z