Wednesday 29 February 2012

துடைப்ப கட்டை....

கஷ்டமாக இருந்தது-
ஈக்கிகளால்ஆனது!

கொஞ்சம் இலகுவா-
இருந்தது-
புல்லால்ஆனது!

நோகாம-சுத்தம்
செய்ய வந்தது-
இயந்திர மானது!

மாற்றம் கண்டது-
விளக்கமாருகள்!

கட்டாயமாக-
இருந்தது!

கண்துடைப்பாக-
மாறியது!

கண்டால் யாராவது-
"இருப்பது"போல-
காட்டி கொள்வது!

மாறியது-
மனிதன் கடைபிடிக்கும்-
ஒழுக்கங்கள்!

சொல்வாங்க -
கழுதை தேய்ந்து-
கட்டெறும்பாக ஆனதுன்னு!

அதுபோலவே-
ஒழுக்கம்-
"ஒழுகி ஒழுகி"-
ஒழுக்க சீர்கேடானது!
---------------------------------
துடைப்பகட்டையை -

"பயத்தை"மட்டும் தரும்-
தாய பெத்தவ-
எடுத்து வரும்போது!

"பதம்"பார்த்துவிடும்-
தாய் கோபத்துடன்-
எடுத்து வரும்போது!


துடைப்பகட்டை-
எடுத்து வருது-
"நாட்டு கட்டை"-
என கவிதை வருது-
காதலியானவ எடுத்து-
வரும்போது!
-----------------------------

Tuesday 28 February 2012

தொப்புள்!"

அருட்காட்சியா?
பொருட்காட்சியா?
தொப்புளை -
காட்டாத படகாட்சியா!?
----------------------------------
பம்பரம் -
விட்டாச்சி!

ஆம்லேட் -
போட்டாச்சி!

இனி-
இடுப்புல சோறு காச்சிரவனுக்கே-
தமிழ் நாட்டு-
"ஆசி"!
---------------------------------------
வெயில் இல்லாத-
கோடைகாலமா!?

பனி இல்லாத-
வசந்த காலமா!?

தொப்புளை காட்டாத-
தமிழ் படமா!,?
--------------------------
எழுதபடுது-
இடைதானா-
இன்பகடைதானா?-என!

இடை என்ன?-
பலசரக்கு-
கடையா!?
------------------------
வயிரிலிருந்து-
இறங்குது-!
காலில் இருந்து-
ஏறுது!-
பாவாடை!

வயிரிலிருந்து-
ஏறுது!
கழுத்தில் இருந்து-
இறங்குது!-
ரவிக்கை!

இவைகள் பயணிப்பது-
எந்த "இலக்கை!?"
------------------------------
தீண்டாமை சட்டம்-
தடை பெண்கள்-
போட ரவிக்கை!

எவன் போட்டான்-
சட்டம்!
போட்டும் போடாதது போல -
ரவிக்கை- இருக்க!?
------------------------------------
அங்கங்களை மறைக்க-
உள்ளாடை போட்டு-
மேலாடை அணியப்பட்டது!

இப்ப -
உள்ளாடை தெரிய-
மேலாடை போட படுது!
------------------------------
எழுதிட பயன்பட்டது-
எலும்பு-
மரப்பட்டை!

இன்றைக்கு-
"வரைந்து" கொள்ளும்-
இடம் - இடையா!?

அது என்ன-
கரும்பலகையா!,?
----------------------------
கருவில இருக்கும்-
குழந்தை-சுவாசிக்க
உதவும் -
இடம் அது!

நாகரீகம் என்ற-
பெயரில் ஏன் படாபடுது!?
--------------------------------
பெண் என்பவள்-
மனிதகுலத்தின்-
பாகம்டா!?

ஏன்டா பாக்குறீங்க-
போகபொருளா!?
------------------------

Monday 27 February 2012

யாரை குற்றம் சொல்ல.....

கல்லை கொண்டு-
போராடும் மக்களையா!?

கல்லுக்கு " தோட்டா" -
கொடுப்பவர்களையா!?

தொடர் குண்டு-
வைத்தவர்களையா!?

அதற்க்கு காரணமான-
"இடித்தவர்"களையா'!?

தேடப்படும்-
குற்றவாளிகளையா!?

தெனாவாட்டாக -
தொடர்ந்து -
"இம்சிப்பவர்களையா!?

"ஓடும்" -
பெண்களையா!?

வரதட்சணை-
அயோக்கிய ஆண்களையா!?

புருசனுக்கு-
சோறு போடா மறுக்கும்-
சீரியல்" பொண்டாட்டிகளையா!?

டி.வி வங்கி வந்த-
புருசனையா!?

மின்சார உற்பத்தி-
இல்லாமல் - 
மின் பொருட்கள்-
கொடுத்தவர்களையா!?

இலவசம் என்பதால்-
வாக்களித்து விட்டு-
வாழ்விழந்த மக்களையா!?

கத்தி கொண்டு இருக்கும்-
பள்ளி மாணவர்களையா!?

அடித்து கொள்ளும்-
சட்ட சபையில் - 
முன்னோடியான-
அமைச்சர்களையா!?

அணு நிரப்பும்-
நாடுகளையா!?

அதை தடுக்கும்-
அணு குண்டு -
நாடுகளையா!?

மது அருந்தி விட்டு-
வாகனம் ஓட்டும்-
மடயர்களையா!?

மதுபானம் விற்கும்-
மனிதாபிமானம் -
இல்லாதவர்களையா!?

"திருந்தாம" திருந்த -
சொல்லும் -
அப்பன்களையா!,?

அப்பனை "பார்த்தும்"-
திருந்தாத -
மகன்களையா!?

ப்ரௌசிங் சென்டரில்-
சல்லாபம் -
செய்பவர்களையா!?

அதை படம்-
எடுத்து வெளியிடும்-
நாய்களையா!?

யார் முதல்-
குற்றவாளிகள்!

நியாயவான்களே-
பதில் இருந்தால்-
சொல்லுங்கள்!!

Sunday 26 February 2012

தாஜ் மகால்!

எப்படி இருக்குது-?
பிரமாண்ட படம்-
எடுக்கும்போது!

பிரதானமா -
கோமண துண்டளவு-
"நடிகர்கள் " கட்டி கொண்டு-
நடிக்கும்போது!

கேட்கிறது -
எனக்கு!

தாஜ் மகாலே-
நீ-
காரி துப்புவது!
--------------------------
உன்னுள் இருப்பது-
இரு உடல்கள் அல்ல!

புதைக்க பட்டு இருக்கு-
ஒரு வரலாறு!
-------------------------------
சொல்றான்-
உன்னை கட்டியது-
மனைவி மேல் உள்ள-
நேசத்தால்!

செங்கோட்டையவும்-
டெல்லியவும்- 
உருவாகினானே-
ஷாஜகான் !
அது என்ன -
நாட்டின் -
மேலுள்ள -
 விரோததாலா?
-------------------------------

பாப்ரி இடிப்பு-
வழக்கு!

சர்ச்சை குரிய இடம்-
வழக்கு!

ராம ஜென்ம பூமி-
வழக்கு!

இப்படி பத்திரிகை-
எழுதுது!

நியாத்தை எழுத -
வேண்டியது !

காலத்துக்கு தக்க-
உருமாருது!

அதே போல்தான்-
நீ !

அன்று-
கலையின் களஞ்சியம்-
நீ!

இன்று-
காதலின் சின்னம்-
நீ!

நாளை சொல்லலாம்-
காமத்தின் உச்சம்-என
நீ!
---------------------------------
மாற்றப்படலாம்-
உனது வெண்மை-
நிறத்தை!

"பூச" படலாம்-
"காவி" நிறத்தை!
----------------------------
அந்தமான்-
சிறையிலே!
அடைந்து -
கிடக்கையிலே!

கேட்டார்-
உயிர் பிச்சை-
பேரோ !-
"வீர"சாவர்கர்!
நாடாளு மன்றத்தில்-
அவர் படம் தொங்குது!

மன்னிப்பு என்ற -
வார்த்தையவே-
உச்சரிக்காம- 
சிறையிலேயே-
மடிந்து போன-
பகதூர் ஷா-
வரலாறு-
 ஏன் மறைக்க -
படுது!
---------------------------------------
"ஆக்ராவினால்"-
ஈட்டபடுது-
வருமானம்!

அயோத்தியால்-
ஊட்ட படுது-
மதவாதம்!

நாட்டில்-
நீதிக்கு வந்த நோயோ-
பக்கவாதம்!
---------------------------------
கலைத்து இருக்கேன்-
"கரு" ஒன்றை-
கவிதையாக்க!

கலங்கி நிக்கிறேன்-
என்ன காரணம்-?
இத்தனை அநியாயம்-
நடக்க!
-------------------------------

Saturday 25 February 2012

பனி!

நெருக்கத்தின்-
இனிமையை-
பிரிவின்போது-
விளக்குவது!
----------------------
நினைத்து கொள்வேன்-
காதலித்த தருணங்களை!

"வாட்டாமல்"-இருக்க
"வாடை" என்னை!
------------------------------

அழியுது காலையிலேயே-
முற்றம் தொளிக்கும்-
முறை!

எனக்கு ஒன்னும்-
இப்ப கவலை-
இல்ல!

தொளிக்க நீயும்-
நீயும் இல்ல!

பார்த்து நனைய-
நானும் இல்ல!
---------------------------
வாய்ப்பு இருந்தும்-
பேச மறுத்தவள்-
நீ!

தினமும் உன்-
நேசத்தை சொல்லி-
விடுகிறது-உன் வீட்டு
பூ!
----------------------------
காதை அடை-
குளிர் தெரியாமல்-
இருக்க!

என்ன செய்ய-
உன் நினைப்பு-
வராமல் இருக்க!
------------------------
வானத்தில் காட்சி-
மேகம் நிலவை-
உரசி செல்வது!

அதே காட்சி-
என் தெருவில்-
மேகம் போல-
பனியில்!
நிலவை போல-
என்னவள் செல்வது!
--------------------------
மேலே குளிரும்-
உள்ளே சுடும்-
கண்மாய் தண்ணி!

குளிரையும்-
சூட்டையும்-இரண்டையும்
அடைகிறேன்-
உன்னை எண்ணி!
----------------------------
பனி காலம்-
மண்ணை ஈரப்டுத்துது!

அதே காலம்-
என்னை பாடா படுத்துது!
-------------------------------
பகலவன்-
பனியின் துளியை-
பஸ்பம் ஆக்குது!

உன் நினைவோ-
என்னை துரும்பாக்குது!!
------------------------------------

Friday 24 February 2012

வட்டி!

மூட்டை பூச்சி-
ரத்தத்தை -
உறிஞ்சும்!j

வட்டி-
வாழ்வையே-
உறிஞ்சும்!

பூச்சி-
பெருகும்-
அழுக்கு உள்ள-
இடத்தில்!

அழுக்கு பெருகும்-
வட்டி வாங்குபவன்-
மனதில்!

வட்டி மேல்-
வட்டி போட்டு கொடுக்கலாம்-
பாசத்தை!

மொதலுக்கு-
மேல் வட்டி வாங்கி-
அடையாதே-
பெரும்பாவத்தை!

வாங்கியவன்-
தற்கொலைக்கு-
தள்ளபடுகிறான்!

வட்டிக்கு கொடுப்பவன்தான்-
தற்கொலைக்கு தள்ளியவன்-
ஆகிறான்!

இருக்கு -
கணக்கு-
தற்கொலை செய்த -
 விவசாயிகள்-
எண்ணிக்கை!

ஏன் சொல்லல-
அது வட்டியினால்-
வந்த விளைவை!?

சொல்ல பட்டது-
வட்டி இன்றி-
உலகில்லை!

உணர பட்டது-
வாழ்வை கெடுப்பது-
வட்டி இன்றி-
வேறில்லை!

ஊளை இடபடுது-
உலகில் பொருளாதார-
வீழ்ச்சியை!

காரணம்-
வட்டியின் வளர்ச்சியே!

பைசா வட்டி-
ஒரு ரூபாய் வட்டி-
அஞ்சு ரூபாய் வட்டி-
மீட்டர் வட்டி-
பேர்கள் உண்டு -
வட்டியில!

ஆனால்- 
சீரழிவில்-
வித்தியாசம் இல்ல!

செலவை குறைக்காமல்-
வட்டியில் விழுபவன்-
"அரை முட்டாள்"!

சந்தர்பத்தை பயன்படுத்தி-
வட்டிக்கு விடுபவன்-
"முழு அயோக்கியன்"!

Thursday 23 February 2012

கள்ளியும் ! கல்லும்!

பாவையும் -
வைரமும் -
ஒண்ணுதான்!
அழகிலும்-
அடாவடியிலும்!

------------------------------------

வைரத்தை-
 விழுங்கியபோது-
கிழிந்தது-
தொண்டை குழி!

பாவையை-
 நினைக்கும்போது-
கலங்குது-
நெஞ்சுக்குழி!
----------------------------------

கருங்கல்லாக தெரிந்தது-
நான் அணிந்திருக்கும்-
வைர கல்லும்!

வைரமாக ஜொலித்தது-
அவள் அள்ளி போடும்-
உப்பு கல்லும்!
----------------------------------
கொள்ளையிட்டான்-
வெள்ளையன் -
மொகலாயர்களின்-
வைரங்களை!

பதுக்கி வைத்தானோ-?
என்னவளின் -
செவ்விதழின் உள்ளே!
-----------------------------

கல்லை செதுக்கினால்-
சிற்பம்!

சதைகளால் -
ஆன சிற்பமே!

உன் உள்ளம் மட்டும்-
கல்லோ!?

---------------------------

இறுமாப்பு கொண்டிருந்தேன்-
விலையுயர்ந்த "கற்களாக"-
என்னை!

வெறும் கூலாங்கற்காலானேன்-
உன் பார்வையின்!
பின்னே!
------------------------------
கிடப்பது தெரியாது-
தண்ணீர்-
சலவைகற்களில்!

கவலை தெரியாது-
காதலில் சஞ்சரித்தவன்-
முகத்தில்!
----------------------------------

வெடிமருந்தால்-
கற்குவியலாகும்-
மலையும்!

அரும் மருந்தாகும்-
நீ பார்க்கும்-
பார்வையும்!

--------------------------

Wednesday 22 February 2012

ஏமாற்று பேர்வழி!

தலைவா-!
நீ எப்ப-
வருவா!?

வடக்கே நீ-
கிளம்பினாய்!

நாடாளுமன்றத்தையே-
மிரட்டினாய்!

மணிக்கு-
ஒரு பெண்-
கற்பழிக்க படுறாங்க!

வருடம்தோறும்-
கூடுது பசியில -சாவுற
குழந்தைங்க!

எத்தனை-
சாதிய கொடுமை!

கணக்கே எடுக்க-
முடியாது-
நடந்த-
மத கலவரத்தை!

வாழ்வாதார-
பிரச்னை எத்தனை?

வாழ்வை நாசமாக்கும்-
அணு உலை போராட்டங்கள்-
எத்தனை?

பனியன் போட்டான்-
தாழ்த்தப்பட்ட-
சகோதரன்!

அதுக்காக கொளுத்த பட்டன-
ஐம்பது குடிசைகள்!

பதவி உயர்வு-
அப்பாவிகளை தீவிரவாதி-என
பொய் சொன்ன-
இரத்தின சபாபதிக்கு!

உயிர் இல்லையே-
உண்மை தீவிரவாதிகளை-
கைது செய்த-
ஹேமந்த் கர்கரேக்கு!

துள்ள துடிக்க-
கொல்லபட்டார்கள்-
குஜராத்ல!

சுத்தமானவனா-
வேஷம் போடுறாங்க-
மேடையில!

கொடுமைகள் நடந்தது-
இத்தனையும்!

மக்கள் மறந்தது-
எத்தனையோ?

வரவில்லை நீ!
அப்போதெல்லாம்!

பேச வில்லை-
நியாயத்தைஎல்லாம்!

சூளுரைத்தாய்-
ஊழலை ஒழிப்பதாக!

தெரியவில்லை-
எடியூரப்பா ஊழலை-
பேசியதாக!

நாடு முழுக்க-
கேட்டது -
உண்மை பயங்கரவாதம்-"காவியாக"!

நீ வந்து -
மாறினாய்-
தலைப்பு செய்தியாக!

நீ போராடியது-
ஆகிவிட்டதோ-
சட்டமாக!?

வருத்தம் இல்லை/-
உன் மீது!

வருத்தம் எல்லாம்-
உன்னை நம்பி -
ஏமாந்த மக்கள் மீது!

புயலாக -
வந்தாய்!

ஒன்னையும்" புடுங்காம "-
காணாம போயிட்டாயே!!

Tuesday 21 February 2012

காதலியே - உன்னை காணலியே!

பல நிறங்கள் -
சேர்ந்தால்தான் -
ஓவியமடி!

ஒரே நிறத்தில்-
இருக்கும்-
ஒரே ஓவியம்-
நீயடி!
--------------------------------------------------

சாபமாக-
இருந்தது -
பகலும்-
நாம்-
"பன்மையில்"-
இருக்கையில்!

பாரமாக இருக்கிறது-
சாமமும்-
நான்-
"ஒருமையில்"-
இருக்கையில்!

--------------------------------------

ரசிக்காமல்-
இருந்ததில்லை-
நிலவை!

இப்போ-
பார்க்க கூட -
மறந்துவிட்டேன்-
நிலவை!

அசை போட்டு -
கொள்கிறேன்!-
அவளது நினைவை!
---------------------------------------

உன் வரவு -
காலமெல்லாம் -
வாழலாம் -என
நினைக்க வைத்து!

உன் பிரிவோ-
கவிதைகளோட-
வாழ வைத்து விட்டது!

குடும்பம்!

கணவனே-!
கட்டியவளை-
உதாசீதனம் படுத்திவிட்டு-
உழைத்து கொடுப்பதிலே-
பிரயோசனம் இல்லை!

கட்டியவளே!
கணவனிடம்-
கோபத்தை காட்டிவிட்டு-
கழுத்தில் -
பொன்னகைகளை-
போடுவதில் -
புண்ணியமில்லை!

பெற்றோர்களே!
சந்ததிகள்-
சந்தனமாவதும்-
சாக்கடையாவதும்-
உங்கள்-
 சண்டை சச்சரவும் -
காரணம் என்பதும் -
பொய்யில்லை!

வயசு!

செய்ய கூடியதும்-
செய்ய கூடாததும்-
விளங்கி கொள்ள -
முடியாதது!

காலமெல்லாம்-
வலிகளையும்-
வலிமைகளையும்-
"அனுபவங்களை"--
தருவது!

"பருவ வயது"!

Monday 20 February 2012

நாய"...

தெருவுல-
கடித்து கொள்ளும்-
சிலது!

வேடிக்கை பார்க்கும்-
பலது!

இவைகள்-
எச்சி இலை-
நாய்கள்!

கர்நாடகாவுல-
"ஈடு" பட்டது-
சிலர்!

"போட்டு"-அதை
பார்த்தது!
மூவர்!

இவர்கள்-
கலாசார" நாய"கர்கள்!

Sunday 19 February 2012

கண்டன பொதுக்கூட்டம்!

வாருங்கள் -
தோழர்களே!

கேளுங்கள் -
அநீதிகளை!

விண்ணை முட்டியதாக -
எண்ணுவார்கள்-
அறிவியல் கள்!

ஒழுக்க சீர்கேட்டில்-
இருக்கும்-
 அரைவேக்காடுகள்!

விரும்புவர்கள்-
எல்லோரும் -
தனக்கு நல்லது -
செய்யனும்னு!

நினைக்க கூட-
 மாட்டார்கள்-
புன்னகையாவது-
பிறருக்கு கொடுக்கணும்னு!

வலை வீசுவார்கள்-
காதலென்று!

காத்திருப்பார்கள்-
"காரியம்" முடிவதற்கு!

கேவல படுத்துவார்கள்-
"படங்களை"இணையத்தில்-
வெளியிட்டு!

வெப்பம் கூடுதாம்-
பூமியில!

புகையை குறைக்கவாம்-
தொழிற்சாலையில!

நாடு முழுக்க-
திறக்கிறான்-
அணு உலைகள'!

அன்னைக்கு-
சுட்டான் கோட்சே-
காந்தியை!

இஸ்மாயில் என-
கையில குத்திகொண்டான்-
"பச்சையை"!

இன்னைக்கு -
தன் அலுவலகத்திலே-
தானே குண்டு வைத்தார்கள்-
தென்காசியில!

பாகிஸ்தான் கோடியை-
ஏற்றினார்கள்-
கர்நாடத்திலே!

நாடகம் ஆடுறாங்க-
நாட்ல!

பழியை போடுறாங்க-
"அப்பாவிகள்" மேல!

ஒரு ரூபாய்-
அரிசி விக்கையிலேயே-
விலைவாசி தாங்க -
முடியலன்னு-
முனங்குனாங்க!

இருபது கிலோ அரிசி-
இலவசமா கிடைக்கும்னு-
ஓட்டு போட்டாங்க!

விலைவாசி ஏறாம -
என்ன செய்யுங்க!?

மனைவி இறந்து விட்டால் -
ஆண்-
இன்னொரு திருமணதிற்கு-
தேடுகிறான்-
பெண்ணை!

விதவை சகோதரி-
மறுமணம் செய்து கொண்டால்-
ஏளனம் பேசுறான்-
அப்பெண்ணை!

ஆண்கள் வரலாம்-
மாலை சூடி!

பெண்களுக்கு ஏன்-
பேர் வைக்கிறீங்க-
வாழா வெட்டி!

கடவுள் படைத்து-
இருக்கிறான் -
ஜோடி ஜோடியாக!

ஏன் "இணைய "விரும்புறான்-
எதிர்பதமாக!
ஓரின சேர்கையாக!

இதெல்லாம்-
செய்வது-
நாங்களா?
நீங்களா?

தப்புகள் செய்வது-
நீங்க!

கேவலமா பாக்குறீங்களே-
எங்களை ஏங்க!?

எங்களுக்கு -
அஞ்சறிவு!

உங்களுக்கு-
ஆறறிவு?

பயன்படுத்துங்க-
ஆறாவது அறிவை-!

அப்புறம்-
ஒத்துகொள்கிறோம்-
எங்களுக்கு இருக்கும்-
அஞ்சறிவை!

மனுசனா -
நீங்க வாழுங்க!

பிறகு-
எங்களை" மிருகம்னு"-
சொல்லுங்க!

காட்டுல-
கண்டன பொது கூட்டத்தில்-
இதனை பேசியது-
"தலைவர்"சிங்கமுங்க!

மொழி பெயர்ப்பு-
மட்டும் -
"சீனிங்க"!

தகுதி...

மொத்தமா இருக்கணும்-
நல்ல குணங்கள்!

"சுத்தமா" இருக்கணும்-
ஒழுக்கங்கள்!

இவ்வளவும் இருக்கணும்-
வரக்கூடிய -
மருமகளுக்கு !

ஒத்த நல்லவார்த்தை -
பேசாதவனுக்கு!

ஒழுக்கமா அப்படின்னா..?- என 
கேட்குறவனுக்கு!

"தகுதி " என்று கூட-
சொல்ல -
தகுதி இல்லாத -
மகனுக்கு!

அப்படியெல்லாம் ஆசை-
பெத்தவங்களுக்கு!

ஆயிரம் பொய் சொல்லியும்-
கல்யாணம் பண்ணலாம்-என்ற
எண்ணம் புரோக்கருக்கு!

மனிதர்களோட -
சேர்ந்து மனிதன் -
மனதை போல!

"அழுக்கு" படிந்த-
ஜோல்னா பை -
தொங்குது-
புரோக்கர் தோள்ல!!

Saturday 18 February 2012

விடாதது...

பெத்தவ அடித்தும்-
சோறு தராமல் -
இருந்தும்!

நேசித்தவள்-
திட்டியும்-
பேசாமல் இருந்தும்!

"வந்தவ"-
வெறுத்தும்-
கவலையோட இருந்தும்'

விடல-
விடவும் பிடிக்கல!

சொன்னாள் -
மகள்-
"வீசுது" -
விடு-என

ஆட்காட்டி விரலை-
நீட்டி கொண்டு!
கோபத்தில் பல்லை-
கடித்து கொண்டு!

யோசிக்க கூட -
இல்ல!
அன்று முதல்-
புகை" பிடிக்கல"!

ஏனோ தூக்கம் -
தர மறுக்குது-
இரவு!

உறுத்திக்கொண்டு இருக்குது-
மனது!

என் உயிரின் வரவான-
மகள் சொல்லும்படி -
நடந்து கொண்டதுக்கும்!

என் மேல் உயிராக இருந்தவர்களின்-
பேச்சை கேட்காமல்-
நடந்து கொண்டதுக்கும்!

முன் வினை பின்-
சுடும் என்பார்களே-
அது இதுதானோ!?

Friday 17 February 2012

கலங்கிய ......

"பயணம்" போகையில்-
கலங்கிய கண்களை-
கண்டதுண்டு-
உறவினர்களிடத்தில்!

அந்த செயலை-
கேலி பேசி சிரித்ததுண்டு-
நண்பர்களிடத்தில்!

கண் கலங்கி நிக்கிறேன்-
நான் உறவினர்களை-
பிரிந்து இருக்கும்-
ஏக்கத்தில்!

முதிர்ச்சி அடைந்தது-
எனக்கு!-
"பக்குவமா?"
அறிவா?

இல்லை-
பிரியமானவர்களின்-
பிரிவா?

Thursday 16 February 2012

கருவாச்சிக்கு...

எப்படி-
 நீ-
எண்ணிடலாம்-
நான்-
உன்னை வெறுப்பேன்-
என்று!

நீயாக வருந்திடுவாயோ-!?
எனக்கு உன்னை-
பிடிக்கவில்லை -
என்று!

தோலை பார்த்து-
 சம்மதிக்க-
நாம் நடத்த போவது-
ஆடை அலங்கார -
நிகழ்ச்சியா-!?

இல்லை -
குடும்ப வாழ்க்கையா!?

சிலருக்கு அழகு-
கிடைக்கலாம்-
அழகு சாதன பொருளால்!

அழகுசாதன பொருளுக்கே-
ஏக்கம் வரும்-
நீ !
பயன்படுத்தாததால்!

என் தாயும் -
தகப்பனும் -
உன் நிறமாக இருக்க!

என்னால் எப்படி முடியும்-
உன்னை நான் வெறுக்க!

காலம் முழுக்க-
ஒரே நிறம்தான்-
கடலும் வானமும்!

வெறுப்பதில்லை யாரும்-
இதனையாவும்!

உன்னிடம்-
 எனக்கு-
பிடித்தது-
எதார்த்தம்!

எனக்காக நீ-
செய்ய வேண்டாம் -
அலங்காரம்!

அடி பட்டு-
சாகும் மின் விளக்கில்-
ஈசல்!

மயங்கி கிடக்கிறார்கள்-
மனிதர்கள் விளம்பரத்தில்!

எல்லோரும் திட்டினார்கள்-
புகை இலை தயாரிக்க -
போன நிறுவனத்தை!

இது தராது-
லாபத்தை என!

விளம்பரம் செய்தார்-
"புகை"பிடிப்பது-
ஹீரோக்களின் அடையாளம்னு!

வாழ்வு நாசமாக-
சிகரட்டை வாங்கி வாங்கி-
ஊதுறாங்க!

"மண்ணாங்கட்டியை "வாங்கி கொள்-
முகத்தில் பூசிக்கொள்!

மத்தவங்களுக்கும்-
பிடிக்க-
மாப்பிள்ளைக்கும் -
பிடிக்க!

என்றெல்லாம்-
 காட்ட படுது-
விளம்பரத்திலடி!

அதுல ஏமாந்தது-
நீயும் ஒருத்தியடி!

உன் மேல்-
 வைத்து இருக்கிறேன்-
பாசத்தை!

உன்னிடம்-
 யாசித்து நிக்கிறேன்-
நேசத்தை!

(மண்ணாங்கட்டி அழகு சாதனபொருளுக்கு
நான் வைத்த கற்பனை பெயர்)

பிரிந்தவளுக்கு!

வாழ்த்துக்கள்-
பிரிந்தவளுக்கு!

நன்றிகள்-
அவளை-
நினைத்தவுடன் வரும்-
கவிதைகளுக்கு !

Wednesday 15 February 2012

கொண்டாடியாச்சா..?

கொண்டாடிவிட்டீர்களா-
அன்பர் தினத்தை!

கொண்டாட்டத்தில் -
நடந்தனவா-
இவைகள்!?

வலிய போய்-
 பேசுனீங்களா-
பேசாமல் இருந்த-
உறவுகளிடம்!

பரிவோட நடந்து-
கொண்டோமா-?
பக்கத்து -
வீட்டு காரனிடம்!

நினைத்தாவது -
பார்த்தோமா-?
வயதான தாயின்-
தியாகத்தை!

ஆதரித்தோமா!?-
கூடங்குளம் மக்களின்-
போராட்டத்தை!

மக்களுக்கு-
தொந்தரவுசெய்த -
தெருவுல கிடந்த -
கல்லையாவது-
ஒதுக்கி போட்டோமா!?

ஆறுதல்-
 சொன்னோமா-?
நோயாளிகளை-
 சந்தித்து!?

தன்னலம் இல்லாமல்-
நடந்தோமா-
தன் சகோதரனிடம்!?

"சுடும்"சொல்லை பிரயோகிக்காமல்-
இருந்தோமா-?
சக மனிதனிடம்!?

பாலாவது-
 வாங்கி கொடுத்தோமா-
பசியில அழுத-
 குழந்தைக்கு!?

இதுல ஏதாவது-
செய்து இருந்தால்-
உங்கள் "அன்பர்தினம்"-
அர்த்த படும்!

இல்லைஎன்றால்-
அந்த தினம்-
 கேவலப்படும்!

ஆணும் பெண்ணும்-
பரிமாறுவதுதான்-"
"அன்பு" அல்ல!

மற்ற மக்களுக்கு-
உதவி செய்வதும்-
"அன்பு"இல்லையென-
யாரும் சொல்ல ல !

வாக்கு!

அன்னைக்கு -
மனிதன் -
மதிக்க பட்டான்-
"சொல்லிய வாக்கை"-
காப்பாற்றியதை வைத்து!

இன்னைக்கு -
மதிக்க படுகிறான்-
"செல்வாக்கை"-
வைத்து!

"தன்னையே "இழக்கவும்-
துணிந்தான் -
"சொல்வாக்கை"-
காப்பாற்ற!

தன் மானத்தையும்-
இழக்க துணிந்துவிட்டான்-
"செல்வாக்கை"-
காப்பாற்ற!

Tuesday 14 February 2012

செய்யிறது ஒன்னு! சொல்றது ஒன்னு!

மாணவன்-
தலைமை ஆசிரியரை-
பார்த்தான் -
வெறித்து!

"சாதிகள்" இல்லையடி -
பாப்பா -என்று
பாடம்
நடத்தியதை கேட்டு!

"சாதி" சான்றிதழ் இல்லாமல் -
ஆசிரியர்-
பள்ளியில் சேர்க்க -
மறுத்ததை நினைத்து!

Monday 13 February 2012

காதலர் தினம்!

பரிமாற படும்-
வாழ்த்து அட்டைகள்!

பறிபோக போகிறது-
பலரது வாழ்க்கைகள்!

அன்று -
இச்சைக்கு பிறகும்-
மிச்சம் இருந்தது-
காதலில்!

இன்று-
மிச்ச சொச்சமும்-
மிஞ்சி விரும்பபடுவது-
இச்சையே-
காதலெனும்-
கருமத்தில்!

கவிதை வடிப்பான்-
என் வாழ்வும்-
தாழ்வும் -
நீ என்று!

ஆளையே -
மாற்றி விடுவார்கள்-
காதலிப்பவர்-
போரடிக்கும்போது!

வசனங்களில் காதல்-
ரசம் கொட்டும்!

சில காலம் கழித்த பின்-
விஷ பாட்டிலே மிஞ்சும்!

ஹார் மோன் மாற்றம்தான்-
காதலென -
அறிவியல் சொல்லுது!

வாழ்வின் -
துவக்கம் என-
காதலிப்பவர்கள் -
சொல்வது!

காதலும்
கண்ணீரும் ஒன்னு-என
வரலாறு சொல்வது!

மனமும் மரியாதையும் -
மகளே நீ தான் என-
தாய் தகப்பன் எண்ணுவது!

"இன்பம்" என்பது-
ஆணுக்கும் பெண்ணுக்கும்-
ஒன்றுதான்!

"துன்பத்தில்" மாட்டுவது-
பெண்கள்தான்!

ஆண் அவன் மட்டும்தான்-
வருவான் ஓடிபோகயிலே!

பெண் குடும்ப மானம்-
தங்கைகளின் எதிர்காலம்-
அனைத்தையும் புதைத்து -
விட்டு போகிறாள்-
ஓடிபோகையிலே!

இனிக்கும் காதல்-
அப்பன் பணத்தில்-
சுத்தும்போது!

கசக்கும் காதல்-
தன் உழைப்பில்-
சோறு கூட-
சாப்பிடும்போது!

கழிசடைகளும் -
சுத்துகிறார்கள்-
காதல் என்ற பேரில்!

நம் வாழ்வையே-
 இழக்கனுமா-
காதல் என்ற சொல்லில்!?

குடு குடுப்பைகாரர்!

நல்ல காலம் -
பொறக்குது-என
சொல்கிறான் -
ஊருக்கே!

பிறகு -
வீடு வீடா-
அலைவார் -
சோறுக்கே!

ஊருக்கே-
 எதிர்காலத்தை-
சொல்கிறவர்!

தன் கஷ்டகாலத்தை-
மாற்றி கொள்ள-
 முயலாதவர்!

நாய் வாயை-
அடைத்து விடுவாராம்-
இவர் இரவு "ஊர்வலம்"-
வரும்போது!

பெரும் வருமானமே வரும்-
ஆண்களால்-
மாமியா -மருமகள் -
சண்டையில்
யாருடைய வாயையாவது-
அடைத்திட்டால் போதும்!

செல்ல பிராணி!

மனிதன் -
தன்னை-
பாதுகாத்து கொள்ள-
நோயிலிருந்து!

விருப்ப ஓய்வு கூட -
எடுக்க முடியாமல் -
இருப்பார் -
உடற்பயிற்சியில்-
இருந்து!

நடை பயிற்சியில்-
நலம் உண்டு-
மனிதர்களுக்கு!

ஏன் நம்மோட -
நடந்து -
"கஷ்ட" பிராணி-
ஆகிறது -
செல்ல பிராணிகள்!?

எல்லா புகழும் இறைவனுக்கே!(click)

அன்பார்ந்த உடன்பிறப்புகளுக்கு-
ஒரு செய்தி!
எனது வாழ்வில் விருது ஒன்று[வேர்சாடில் பிளாக்கர் அவார்ட்]
கிடைத்துள்ளது!
இத்தருணத்தில் நான் நன்றி சொல்ல
கடமை பட்டவர்களையும் சொல்வதுதான்
முறையானது!

எனக்குள்ள இருந்த எழுத்து திறனை_

எனக்கு அறிமுகம் செய்த காமில் அவர்களுக்கும்!
குட்டையில் கிடந்த கவிதைகளை-
நெட்டில் [இணையதளத்தில்]ஏற்றி உதவிட்ட -
அபு ப்ஹது அவர்களுக்கும் நன்றியினை
தெரிவித்து கொள்கிறேன்!

மேலும் என்னை மகிழ்ச்சி வெள்ளத்தில் -
ஆழ்த்திய எனக்கு விருது அளித்த சகோதரி-
யுவராணி தமிழரசன்
அவர்களுக்கு மிக்க நன்றியினை தெருவித்து கொள்கிறேன்!

கருத்து களை இட்டு என்னை -
எழுதிட ஊக்கமளித்து இருக்கும்
அய்யா ரமணி அவர்களுக்கும் நன்றி!

எனக்கு பிடித்தது;
படைப்புகளை நேசிக்காதவனை -
படைத்தவன் நேசிப்பதில்லை-[நபி மொழி]
படைப்புகள் அனைத்தையும் நேசிப்பவன் நான்!

நான் விருது[வேர்சாடில் பிளாக்கர் அவார்ட்] வழங்க விரும்பும்-
நபர்கள்!
1 கருத்தான விஷயங்களை கொண்ட எழுதுபவராகிய
அசரத்-சதக் மஸ்லாகி அவர்கள்!
2 தமிழின் மீது காதல் செய்ய வைக்கும்
தொகுப்பை தரும் குண சீலன் அவர்கள்!
3செய்திகளை தொகுத்து தரும் -
'சிந்திக்கவும்' அவர்கள்!
4 ஸ்ரவாணி அவர்கள்!
5 ஹேமா அவர்கள்!
எழுத்தாள நண்பர்களே !
இந்த விருதினை ஏற்று கொள்மாறு நான்
உங்களை கேட்டு கொள்கிறேன்!

இத்தருணத்தில் மேலும் மக்களுக்கு
நன்மை செய்யும் விதமாக எழுதிட விரும்புகிறேன்!

[எனது ப்ளொக்கரின் மேல் உள்ளது போல-
;கப்' உங்கள் ப்லோக்கரிலும் பொருத்தி கொள்ளுங்கள்!]http://seeni-kavithaigal.blogspot.sg/2012/04/2.html?m=0

Sunday 12 February 2012

விவசாயி....

வர்ணிக்கபடுகிறவர்கள்-
நாட்டின் முதுகெலும்பாக!

வாழ்பவர்கள்-
உழைத்து உழைத்து-
வளைந்து போன-
முதுகெலும்போட!

விதைத்து விட்டு -
வானை பார்ப்பார்கள்-
மழைக்கு!

ஆள்பவர்களை போல-
ஏமாற்றும் மழையும்!

விதைக்க தெரிந்தவர்கள்-
மண்ணை பிளந்து!

பிழைக்க தெரியாதவர்கள்-
பிறர் நலன்களை மறந்து!

விவசாயிகளுக்கு மிச்சம்-
வறண்டு போன பூமியும்!

ஒட்டி போன-
வயிறும்!

இருந்தது -
நாட்டுக்கே-
சோறு போட்ட-
 பெருமை!

நடக்கிறது-
தன் பசிக்கு-
 எலி கறி தின்னும் -
கொடுமை!

விரும்ப மாட்டார்கள்-
வாடி போன பயிரை -
பார்க்க!

மறந்தவர்கள்-
தனது-
பசித்த வயிறை-
கவனிக்க!

என் நாட்டு-
ஆட்சியாளர்கள்!
கொடுப்பார்கள்-
மூக்கனாங்கயிறுகளை!

கொடுக்க மாட்டார்கள்-
மாடுகளை!

அதே போல்தான்-
இலவச மோட்டார்-
கொடுப்பார்கள்!

அது ஓட -
மின்சாரம்-
 கொடுக்க மாட்டார்கள்!

சேராதவர்களையும்-
இணைத்து கொள்வார்கள்-
ஆட்சியை பிடிக்க!

நதிகளை -
தேசிய மயமாக -
மாற்றிட மாட்டேங்குறாங்க!
விவசாயி நலம் கொழிக்க!

"படிச்சவனு "சொல்லி கொண்டு-
அணு உலை வச்சிகொண்டு-
அழிக்க பாக்குறான் -
மக்களை!

விவசாயிகளே-
உங்களை நீங்கள்-
வருத்தி கொண்டு-
மக்களின் பசியாத்த -
விதைக்கிறீர்கள்-
விதைகளை!

நூறு மாடி-
 கட்டடத்து மேல-
கிடந்தாலும்-
குப்பை குப்பைதான்!

மண்ணுக்கடியில் -
கிடந்தாலும்-
வைரம் வைரம்தான்!

மக்களின் மீது -
அக்கறை இல்லாமல் -
அறிவும் அதிகாரம் இருந்தாலும்-
அவர்கள் குப்பைதான்!

நெல் மணிகளை -
விதைத்து விட்டு-
வியர்வை துளிகளை-
வடித்து கொண்டு இருக்கும்-
விவசாயிகளே!-
நீங்கள்
வைரம்தான்!

வைரத்தின் நிறம்-
முதலில் கருமை தான்!

தீட்டிய பிறகு-
 ஜொலிப்புதான்!

விவசாயிகளே!
உங்கள் கஷ்ட வாழ்வு-
மாறும்!

உங்கள் வாழ்வில்-
வெளிச்சம் பிறக்கும்!

இது வார்த்தை -
ஜாலம் இல்லை!

நல்லவங்க -
கஷ்டத்திலேயே-
அழிந்ததா-
 வரலாறு இல்லை!

Saturday 11 February 2012

வேண்டாமே...

பார்த்தாலே-
" தீட்டு-"என -
எண்ணுகிறவர்களே!

நாம்-
சுவாசிக்கும் காற்றில்-
"அவனின்"-
மூச்சு காற்றும்-
இருக்கும்தானே!

இது எந்த ஊரு -
நியாயம்டா !?

செத்த மாட்டு தோலை -
உரிச்சதுக்கும்!

மனித மலத்தை-
அவன் வாயில்-
 திணிச்சதுக்கும்!

வாராங்க -
மாறி மாறி-
ஆட்சிக்கு!

ஏன் மாறமாட்டேன் -
"இரட்டை குவளை "-
முறையிலிருந்து!

"தீட்டுங்குறான்-"
எடுத்ததுகெல்லாம்!

தீண்ட தகாதவனின்-
கைகள் படாமல்-
இருக்குமோ-
அவன் உடுத்தும்-
உடைகளெல்லாம்!

மனம் வெறுப்பதில்லை-
வண்ணங்களை!

மனிதன் என்றால்-
ஏன் பாக்குறான்-
வர்ணங்களை!!?

வாழ்வாதரத்துக்கு தானே-
பார்க்கிறான்-
தொழிலை!

"சாதியை" உருவாக்கலாமா?-
தொழிலின் அடிப்படையிலே!

பாதுகாக்க வேண்டுமாம்-
மாடுகளை!

மனிதன் என்றால்-
"பார்த்து கொல்கிறான்"-
மதங்களை!

ஏன் இந்த -
அகங்காரம்-?!

உயர்ந்தவன் -
தாழ்ந்தவன்-
என-எவன் தந்தான்
அங்கீகாரம்?

மனிதன் வாழ -
தேவை -
மனித நேயமே!

மனிதத்தை "கொல்லும்"-
"தீண்டாமை"-
வேண்டாமே!!

Friday 10 February 2012

கூடா நம்பிக்கை..

நல்லதாம் முழிச்சா-
நரி முகத்துல !

நாய வளர்க்காம-
நரியை வளர்க்க-
 வேண்டியதுதானே-
வீட்ல!

உருப்புடாதாம்-
ஆமை புகுந்த-
வீடு!

மீனவர்கள் உருப்படுராங்களே-
ஆமை கிடக்கும்-
கடல்ல புகுந்து-
மீன்களை பிடித்து!

சொல்றான்-
ராகு காலம்-
ஏழரை இருந்து-
எட்டரை!


கிழக்காலே போனால்-
பிடிக்குமாம்-
"ஏழரை!

கேட்டவன் -
மணியை பார்த்து -
ஆரம்பிக்காம இருப்பான்-
வேலையை!

சொன்னவன்-
கிழக்காலே போய்க்கிட்டு-
இருப்பான்-
தொடர-
அவன் தொழிலை!

காரியம் -
கைகூடாதாம்-
போனால்-
மூணு பேரு!

வெற்றிகரமா நிலவுக்கு-
முதல்ல போயிட்டு வந்தாங்க -
மூணு பேரு!

சொல்றான்-
செல்வம் கொட்டுமாம்-
ராசி கல் போட்டால்!

சொல்றவன் -
வாயடைத்த் போவான்!
நீ எந்த-
கோடீஸ்வரன் பட்டியலில்-
இருக்கிறாய் என கேட்டால்!


மோசம் போக வேண்டாம்-
இவர்கள் பேச்சை நம்பி!

செய்வோம்-
செய்யும் வேலையை-
விரும்பி!

உலகம் ஒரு நாள்-
பார்க்கும் -
நம்மை திரும்பி!

Thursday 9 February 2012

கோபம்!

அடுத்தவரிடம் இருந்து-
நம்மை பாது காக்கும்-
ஆயுதம்!-
தேவையான போது-
பயன்படுத்தினால்!

அடுத்தவர் நம்மை-
தாக்க வைக்கும்-
ஆயுதம்!
தேவையில்லாமல் -
பயன் படுத்தினால்!

சொரணை இல்லாதவனாகிறான்-
"சுத்தமா "இல்லாதவன்!

கொலை காரனாகிறான்-
"மொத்தமா" உள்ளவன்!

அற்புதம்!

வராது-
கனவுக்குள்-
ஒரு கனவு!

வளருது-
கரு!

உயிருக்குள்-
ஒரு உயிரு!

Wednesday 8 February 2012

படம் பார்த்த அமைச்சரு..

அத்வானி -
இந்தியாவின்-
 இதய துடிப்பையே-
"இடித்தாரு!

அதன் மூலம்-
ரத்த ஆறே -
ஓட்டுனாரு!

மத சார்பற்ற நாடுதான்-
நம்ம நாடு-
ஆனால்-
நாடே -
தன் வகைரயாவுக்கே-
சொந்தம்னு நடக்குறாரு!

அடுத்து வருபவரு-
மோடி சாரு!

தன் ஆட்சியின் கீழுள்ள-
மக்களையே -
இன சுத்திகரிப்பு-
செஞ்சவரு!

இப்ப மத நல்லினக்கதிற்கு-
உண்ணாவிரதம் இருக்குறாரு!

மராட்டியருக்கே-
மும்பை சொந்தம்னு-
சொல்லுறாரு!

பால் தாக்கரே-
என்பவரு!

நாட்டுக்குள்ளேயே-
பிரிவினை பண்ணுறாரு!

அணு ஆயுத ஒப்பந்தம்-
கூடாதுன்னு-
சொன்னாலும்
வழுக்கட்டாயமா-
ஒத்துகிட்டவரு!

ரங்கநாத் கமிசன்-
சச்சார் கமிசன்-
அமைச்சவரு!

அதை விவாதத்துக்கு-
கொண்டு வர மறுக்குறாரு!

அதிகமா குழந்தைங்க -
பசியில நம்ம நாட்டுல -
சாவுரது கவலை அளிக்கிறது!-
என பேட்டியில சொல்லுறாரு!

மனித குலத்திற்கே -
எதிரான கூடங்குளத்தில்-
அணு உலையை -
மூட சொல்ல -
மாட்டேங்குறாரு!

நம்ம பிரதமரு!

பி ஜே பி-மதவாத
கட்சின்னு சொல்லுறாரு-
கலைஞர் ரு!

குஜராத் கலவரம்-
நடக்கையில்-
கூட்டணியில்தான்-
இருந்தாரு!

கோவை கலவரம் நடக்கும்போதும்-
இவருதான் முதல்வரு!

இப்ப இந்நாள்-
முதல்வரு!

காத்தாடி -
கிரைண்டரு-
இலவசமா -
கொடுக்குறாரு!

அதை பயன்படுத்த-
கரண்டு எப்ப வரும்னு-
சொல்ல மாட்டேன் -
என்கிறாரு!

நான் ஆட்சிக்கு -
வந்தால் ஆறுமாதத்தில்-
மின்சாரம் சீர் செய்வேன்-
என்றாரு!

இப்ப உள்ள -
எதிர்க்கட்சி -
தலைவரு!

இவங்க வரிசையில-
புதுசா வந்துருக்காரு-
நீல படம் பார்த்த -
அமைச்சரு!

சொன்னாலும்-
சொல்வாரு -
நான்தான்-
அடுத்த பிரதமருன்னு!