Saturday 18 February 2012

விடாதது...

பெத்தவ அடித்தும்-
சோறு தராமல் -
இருந்தும்!

நேசித்தவள்-
திட்டியும்-
பேசாமல் இருந்தும்!

"வந்தவ"-
வெறுத்தும்-
கவலையோட இருந்தும்'

விடல-
விடவும் பிடிக்கல!

சொன்னாள் -
மகள்-
"வீசுது" -
விடு-என

ஆட்காட்டி விரலை-
நீட்டி கொண்டு!
கோபத்தில் பல்லை-
கடித்து கொண்டு!

யோசிக்க கூட -
இல்ல!
அன்று முதல்-
புகை" பிடிக்கல"!

ஏனோ தூக்கம் -
தர மறுக்குது-
இரவு!

உறுத்திக்கொண்டு இருக்குது-
மனது!

என் உயிரின் வரவான-
மகள் சொல்லும்படி -
நடந்து கொண்டதுக்கும்!

என் மேல் உயிராக இருந்தவர்களின்-
பேச்சை கேட்காமல்-
நடந்து கொண்டதுக்கும்!

முன் வினை பின்-
சுடும் என்பார்களே-
அது இதுதானோ!?

10 comments:

  1. என் உயிரின் வரவான-
    மகள் சொல்லும்படி -
    நடந்து கொண்டதுக்கும்!

    என் மேல் உயிராக இருந்தவர்களின்-
    பேச்சை கேட்காமல்-
    நடந்து கொண்டதுக்கும்!

    அருமை அருமை
    இந்த ஒப்பீடு என மனம் கவர்ந்தது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Ramani ayya!

      ungaludaya karuthukku-
      varavukkum mikka nantri!

      Delete
  2. ஒருபுறம் இப்படி அடிமையாகி கிடக்கும்
    அவர்கள் நிலையை
    நினைத்தால் பாவமாக இருக்கும்.
    நீங்கள் அவரைத் திருத்தி இருப்பது
    ஒரு உன்னதமான காரியம்.
    தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. srawani;
      ungaludaya karuthukkum-
      varavukkum mikka nantri!

      Delete
  3. நல்ல அருமையான வரிகள் வாழ்த்துக்கள்...... தொடரட்டும் உங்கள் பணி,,,,,

    ReplyDelete
    Replies
    1. puthiya thentral!

      ungal varavukkum-
      karuthukkum -
      mikka nantri!

      Delete
  4. “பெத்தவ”,
    “நேசித்தவ”,
    “வந்தவ”,
    “மகள்”.
    அழகான வரிசை. ஆணின் தந்தை பாசத்தை அழகாக சொல்லிவிட்டீர்கள். அருமை. பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. supramaniyan!
      ungal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  5. பிள்ளைகளை நீங்கள் திருத்துவது போக பிள்ளைகளே உங்களைத் திருத்தினால் இதைவிட வாழ்வில் அடி வேறென்ன வேண்டும்.அதுதான் மனம் குறுகுறுக்கிறது !

    ReplyDelete
  6. hemaa!

    ungal varavukkum
    karuthukkum nantri!

    naanaavathu makal
    sonna pirakaavathu thirunthitten!
    innum thurunthaavangalai-
    ennaiyum serththu nallaa thittunga!

    ReplyDelete