Sunday 12 February 2012

விவசாயி....

வர்ணிக்கபடுகிறவர்கள்-
நாட்டின் முதுகெலும்பாக!

வாழ்பவர்கள்-
உழைத்து உழைத்து-
வளைந்து போன-
முதுகெலும்போட!

விதைத்து விட்டு -
வானை பார்ப்பார்கள்-
மழைக்கு!

ஆள்பவர்களை போல-
ஏமாற்றும் மழையும்!

விதைக்க தெரிந்தவர்கள்-
மண்ணை பிளந்து!

பிழைக்க தெரியாதவர்கள்-
பிறர் நலன்களை மறந்து!

விவசாயிகளுக்கு மிச்சம்-
வறண்டு போன பூமியும்!

ஒட்டி போன-
வயிறும்!

இருந்தது -
நாட்டுக்கே-
சோறு போட்ட-
 பெருமை!

நடக்கிறது-
தன் பசிக்கு-
 எலி கறி தின்னும் -
கொடுமை!

விரும்ப மாட்டார்கள்-
வாடி போன பயிரை -
பார்க்க!

மறந்தவர்கள்-
தனது-
பசித்த வயிறை-
கவனிக்க!

என் நாட்டு-
ஆட்சியாளர்கள்!
கொடுப்பார்கள்-
மூக்கனாங்கயிறுகளை!

கொடுக்க மாட்டார்கள்-
மாடுகளை!

அதே போல்தான்-
இலவச மோட்டார்-
கொடுப்பார்கள்!

அது ஓட -
மின்சாரம்-
 கொடுக்க மாட்டார்கள்!

சேராதவர்களையும்-
இணைத்து கொள்வார்கள்-
ஆட்சியை பிடிக்க!

நதிகளை -
தேசிய மயமாக -
மாற்றிட மாட்டேங்குறாங்க!
விவசாயி நலம் கொழிக்க!

"படிச்சவனு "சொல்லி கொண்டு-
அணு உலை வச்சிகொண்டு-
அழிக்க பாக்குறான் -
மக்களை!

விவசாயிகளே-
உங்களை நீங்கள்-
வருத்தி கொண்டு-
மக்களின் பசியாத்த -
விதைக்கிறீர்கள்-
விதைகளை!

நூறு மாடி-
 கட்டடத்து மேல-
கிடந்தாலும்-
குப்பை குப்பைதான்!

மண்ணுக்கடியில் -
கிடந்தாலும்-
வைரம் வைரம்தான்!

மக்களின் மீது -
அக்கறை இல்லாமல் -
அறிவும் அதிகாரம் இருந்தாலும்-
அவர்கள் குப்பைதான்!

நெல் மணிகளை -
விதைத்து விட்டு-
வியர்வை துளிகளை-
வடித்து கொண்டு இருக்கும்-
விவசாயிகளே!-
நீங்கள்
வைரம்தான்!

வைரத்தின் நிறம்-
முதலில் கருமை தான்!

தீட்டிய பிறகு-
 ஜொலிப்புதான்!

விவசாயிகளே!
உங்கள் கஷ்ட வாழ்வு-
மாறும்!

உங்கள் வாழ்வில்-
வெளிச்சம் பிறக்கும்!

இது வார்த்தை -
ஜாலம் இல்லை!

நல்லவங்க -
கஷ்டத்திலேயே-
அழிந்ததா-
 வரலாறு இல்லை!

4 comments:

  1. எத்தனை அருமையான , யதார்த்தம் சொல்லும் வரிகள் சீனி.
    அவர்கள் எதிர்காலம் பிரகாசம் என்று சொன்ன உங்கள்
    கைக்கு ஒரு தங்க பேனா பரிசு.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரவாணி !
      உங்களது கருத்துக்கும்-
      ஆதரவுக்கும் மிக்க
      நன்றி!

      தங்க பேனாவை விட-
      உங்க கருத்துக்கள்-
      என்னை திருத்தும்!
      அது போதும்!

      Delete
  2. சமூக அக்கறையோடு நல்ல வரிகள் கொண்ட கவிதை.
    வாழ்த்துகள் சீனி !

    ReplyDelete
    Replies
    1. Hemaa!
      ungalathu karuththukku
      mikka nantri!
      ungaludan "versatile blogger award"
      pakirnthu kollavirumpukiren!

      paarkka thalaippu;
      ellaa pukazhum iraivanukke!

      Delete