Thursday 14 July 2022

தெரு விளக்கு.!

 யாருமில்லையென்றாலும்

தெரு விளக்கு எரிந்துக் கொண்டுதான்

இருக்கிறது..!

Wednesday 13 July 2022

நீ.!

 நான்

வார்த்தைக்குள் நினைவுகளை

புதைக்கிறேன்

அதில் கவிதைகளாய்

நீ முளைக்கிறாய்.!

கவிதையானாய்.!

 வறுமையாய் வந்தாய்

உழைப்பாயானாய்.!


வியர்வையாய் வந்தாய்

ஊதியமானாய்.!


கண்ணீராய் வந்தாய்

புன்னகையானாய்.!


வெறுப்பாய் வந்தாய்

விருப்பமாயானாய்.!


அறியாமையாய் வந்தாய்

அறிவானாய்.!


கல்லாய் வந்தாய்

சிற்பமானாய்.!


பசியாய் வந்தாய்

தேடலானாய்.!


காயமாய் வந்தாய்

கவிதையானாய்.!

Tuesday 12 July 2022

கண்ணாடி.!

 கவிதையென்பது

 ஒரு கண்ணாடி

அதை எட்டிப்பார்ப்பவர்கள் 

முகம்தான் அதில் பிரதிப்பளிக்கும்.!

பூ-முள்!



பூ நிலவு

முள் இருள்


பூ அழகு

முள் அதிகாரம்


பூ மென்மை

முள் வன்மை


பூ நீ

முள் நான்

கண்ணாமூச்சி..!

 எனது 

கண்ணாமூச்சி ஆட்டத்தில்

தொலைந்ததும்

தேடுவதும்

என்னைத்தான்.!

Saturday 9 July 2022

ஞாபகங்கள்.!

 மனப்புத்தகத்தை 

தட்டும்பொதெல்லாம் தூசியாய் 

ஞாபகங்கள்.!

Thursday 30 June 2022

சருகுகள்.!

 நதியிடம் 

தன்னை ஒப்படைத்துக் கொண்ட

சருகுகள் கிழிப்படுவதில்லை.!

Monday 27 June 2022

பாதை.!

 பாதங்கள் எனதென்றாலும்

பாதை நீ காட்டியது.!

Wednesday 1 June 2022

விரயம்.!

 பார்வைகள் பசியாரும்போது

வார்த்தைகள் 

வீண்விரயம்தான்.!

Tuesday 31 May 2022

யாசகம.!

 பூவின் வாசத்தை

யாசிக்கிறாயா.!?

அது 

முள்ளால்  ஆசிர்வதிக்கும்

பரவாயில்லையா.!,

கதை.!

 ஞாபகங்களுடன் கதைக்கும்

இத்தருணத்தை

யாருமற்ற இரவென்று

யார் சொன்னது.!?

Wednesday 18 May 2022

அர்த்தங்கள்.!

 சொற்கள்தான் 

எனது தலையணை

அதன் அர்த்தங்கள்தான்

எனது போர்வை.!

Monday 16 May 2022

மலர்.!

 வேரில் எதைக் கொட்டினாலும்

மலர்களென்னவோ சிரிக்கத்தான்

செய்கிறது.!

பனி.!

 மலர்களின் மௌனம் கேட்க

நெருங்கியபோது

மலர்களின் கண்ணீராய்

பனித்துளிகள்.!

Saturday 7 May 2022

கதவு.!

 இறைவன் 

கதவுகளை திறந்தே வைத்திருக்கிறான்

மனிதன்தான்

கண்களை மூடிக்கொண்டான்..

Tuesday 3 May 2022

வாசம்.!

பிடித்த வரிகளிலும்

உன் வாசம்.!

Monday 2 May 2022

சந்தோசம்..

 சந்தோசங்கள் 

விரவிக் கிடக்க

ஏன் அழுகையைத் தேடி

எடுக்கிறாய்..!?

பேசு.!

 வானமோ

பூமியோ

நீ பேசாதவற்றையா

என்னிடம் பேசிட போகிறது..!?

Sunday 1 May 2022

கவிதை.!

 கசக்கும் வாழ்க்கையில்

இனி்ப்பு பலகாரமாய்

கவிதை.!

எழுத்து.!

 எழுதப் பிடிக்கிறது

எழுதுவதால் 

என்னைப் பிடிக்கிறது

அவ்வளவுதான்.!

சட்டுவம்.!

 சட்டுவம் கொத்தும்

சத்தத்திலுமா

ஒளிந்திருப்பாய்.!?

கவிதை.!

 கவிதையின் 

விரல்களைப் பிடித்து

நடக்கிறேன்

அது நான் இருக்கும்

உலகத்தை 

அழகாக்கிறது..

Friday 8 April 2022

ஆசை.!

 சாமரம் வீசுவதை விட்டு விட்டு

சிம்மாசனத்தின் மீது

ஆசைப்படு.!

அனுபவங்கள்.!

 வாழ்க்கை தரும்

மிச்சமென்ன.!?

அனுபவங்கள்தானே.!

Tuesday 5 April 2022

ஆயுள்.!

 விரலிடுக்குகளில் ஒழுகும்

நீரைப்போல

வாழ்நாளும் கசிகிறது .!

Sunday 3 April 2022

நீயே.!

 சோகமென்ன

சுகமென்ன

வாழ்வென்ன

தாழ்வென்ன

பிறப்பென்ன

இறப்பென்ன

இருளென்ன

ஒளியென்ன

மொழியென்ன

மௌனமென்ன

எல்லாவற்றிலும்

இறைவா நீயே.!

Saturday 2 April 2022

சிறகு.!

 எனது 

கண்ணீரையும்

கவலைகளையும்

சுமைகளையும்

பொறுப்புகளையும்

இறைவா.!

உன்னிடம் ஒப்படைக்கும்போதெல்லாம்

எனது சிறகுகளை விரிக்கிறேன்.!

கருணை.!

 இறைவா.!

உனது கருணையையன்றி

வேறெது

என்னை கரை சேர்க்க போகிறது.!?

இறைவா..

 வெறுமை நிறைந்த

உள்ளத்தில்

வசந்தத்தை நுழைவித்தாய்

எங்களிறைவா.!!

படைத்தவனே..

 பாசிசம்

என்ன செய்து விடும்!?

படைத்தவனே 

உன் துணையிருக்க.!

அதிபதி.!

 அதிகார பீடங்கள் ஆடும்போதெல்லாம்

அகிலத்தின் அதிபதியோ

புன்னகைக்கிறான்..

Saturday 5 February 2022

கலப்பு.!

 இரண்டற கலந்திட்டப்போது

இதழின் மென்மையென்ன

முள்ளின் வன்மையென்ன!?

Wednesday 2 February 2022

கண்ணாடி.!

 அது சரியில்ல

இது சரியில்ல

எதுவும் சரியில்ல என

பிதற்றிக் கொண்டே இருக்கிறான்

தன்னை இன்னும் கண்ணாடியில்

பார்க்காதவன்.!

நம்பிக்கை.!

 மௌனத்தினுள்

என்னைத் தேடிக் கொண்டிருப்பதெல்லாம்

ஏதோவொரு கணத்தில்

என்னை கண்டடைந்து விடுவேனென்ற

நம்பிக்கையில்தான்..!

Friday 7 January 2022

புத்தகங்கள்.!

 புத்தகங்களை 

நான் வெறுப்பேனென்றால்

நானே என்னை  வெறுப்பதற்கு

ஒப்பானது..