Friday 27 November 2015

நெருப்பு..!!

நெருப்பைத் தின்று
வாழ்வதைப் போன்றது..!!

நினைவுகளை சுமந்து
வாழ்வதென்பது ..!!

    

Monday 23 November 2015

ரணம்!

எழுதுவது சுகம்!
எழுதிடாதிருப்பது ரணம்!

ரணமும் தேவைப்படுகிறது
சுகம்தனை முழுமையாக உணர...!!

     

Wednesday 18 November 2015

சோக சுகம்..!!

சோகம்தனை சுகமாகவும்
சுகம்தனை ரணமாகவும் அனுபவித்து
உணரலாம்!

கவிதை எழுதுகையில் !

 

Saturday 14 November 2015

வெப்பக் காதல்..!!

கதிரவனுக்கும்
மண்ணிற்கும் நடந்த வெப்பக் காதலால்!

பிரசவிக்கிறது
குளிர்விக்கும் மழலைகளாய்
மழைத்துளிகள் .!

   

Tuesday 10 November 2015

வியர்வை..!!

சோம்பேறிகளின்
வாசனைத் திரவியங்களை விட!

உழைப்பாளிகளின்
வியர்வைத்துளிகள் சிறந்தது!!

      

Monday 9 November 2015

விருட்சங்கள் !

விலங்கினங்களின்
எச்சங்களைப் பொருட்படுத்துவதில்லை!

"விருட்சங்கள்"!

   

Sunday 1 November 2015

நிராசை...!!(குட்டிக்கதை)

   
  "எத்தன தடவ சொன்னேன்..?நான்
அங்கேயே இருந்துக்குறேன்..ஏதாவது வேல செஞ்சிக்கிட்டு இருந்துக்குறேன் னு,யார் கேட்டீங்க..மலேசியாப் பொண்ணு னு கட்டி வச்சீக..ஒங்களுக்கு எந்தம்பி மலேசியாவுல இருக்கான்,எம்மவன் மலேசியாவுல இருக்கான் னு "பவுசி" பண்ணனும்,அப்புறம் கைலி தாவாணி கொடுத்து விட ,நான் இங்கே இருக்கனும்.ஒம்மவன் இங்கே வர விசா ஏற்பாடு செய்ய ஆளு வேணும்,இப்படி ஒங்க ஆசைக்கெல்லாம் என்னை இங்கே தள்ளி விட்டீங்க.....என் ஆசையில மண்ணள்ளி போட்டுட்டு.இப்ப என்ன ஊருக்கு வா ,ஊருக்கு வா னு அழுவுறீங்க....என்னால ஒடனே கெளம்பி வர முடியாது....உம்மா "மவுத்தா" போனா நான் என்ன செய்ய..!? தூக்கி அடக்கம் பண்ணுங்க...நான் வர முடியாது"என ஊரிலிருந்து,தன் தாய் மரணச் செய்தியைச் சொன்ன தன் அக்காவைத் திட்டு விட்டு ,

"அபாங்.., மோ ஆப்பா...!? என தன் மாமனார் உணவகத்தில் வேலையைத் தொடர்ந்தான் மலேசியாவில்யூசூப்.