Friday 30 March 2012

சொட்டு!

முத்து -
சிப்பியில்-
நீர் சொட்டு!

சொத்து-
தம்பதிகளுக்கு-
கருவில்-
உயிர் சொட்டு!

முக்குளிப்பவன்-
துணிந்தவனே!

முக்கி முனங்கி-
பெத்தவளே!

முக்குளித்தவனின்-
வலியும்-
வேதனையும்-
உன் கண்ணீர் சொட்டளவே!
---------------------------------
வடியும்-
குடுவையின் ஓட்டையில்-
இருந்து-
நீர் சொட்டு!

பேனாவில்-
வடிந்து எழுத்தாவது-
மை சொட்டு!

ஆயுள் நமக்கு-
கரையுது-
நிமிட சொட்டாக!
------------------------
ஊத்தபடுவது-
போதுமான ஆரோக்கியத்துக்கு-
போலியோ சொட்டு!

"போகும்போதே"-
அடக்கம் செய்ய வைத்தது-
போலியான சொட்டு!
------------------------------
துப்பாக்கியின்-
சொட்டுகள்-
தோட்டாக்கள்!

ரத்தத்தை வடித்து-
விட்டு - மடிந்தது
உயிர்கள்!

விசாரித்து தண்டனை -
கொடுக்கும் நாடுகள்-
காட்டு மிராண்டிகள்!

கொன்று விட்டு-
விசாரிப்பவர்கள்-
வல்லரசு மனிதாபிமானிகள்!
----------------------------
விதைகளுக்கும் இறக்கம்-
இல்ல!
உப்பு நீருக்கு-
முளைப்பதில்ல!

கண்ணீர் சொட்டுகளால்-
விவசாயிகள்-
விவசாயம் செய்து-
இருப்பாங்கள!
--------------------
ஓ!
அதிகாரத்தில்-
இருப்பவர்களே!
கண்ணீர் சிந்தவைக்காதீர்கள்-
அப்பாவிகளை!

உங்களை ஒரு நாள்-
மூழ்கடித்து விடும்-
அவர்களின் கண்ணீர்-
சொட்டுகளே!!!
--------------------------

15 comments:

  1. //ஓ!
    அதிகாரத்தில்-
    இருப்பவர்களே!
    கண்ணீர் சிந்தவைக்காதீர்கள்-
    அப்பாவிகளை!

    உங்களை ஒரு நாள்-
    மூழ்கடித்து விடும்-
    அவர்களின் கண்ணீர்-
    சொட்டுகளே!!!//

    சொட்டுக் கவிதை எழுதிய தங்களுக்கு ஓர்
    ஷொட்டுக் கொடுக்கத் தோன்றுகிறது! ;)))))

    ReplyDelete
    Replies
    1. ayya !
      ungal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  2. துளிகளே சமுத்திரங்கள் என
    மிக அழகாக விளக்கிப்போகும்
    தங்கள் படைப்பு அருமையிலும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ayya!

      ungal varavukkum-
      urchaaka moottalukkum-
      mikka nantri!

      Delete
  3. நல்ல கவிதைகள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. vimalan!
      ungal varavukkum-
      karuthukkum-
      mikka nantri!

      Delete
  4. என்ன நண்பா ரூம் போட்டு யோசிக்கிரிரோ....//
    அருமையான கவிதை

    ReplyDelete
    Replies
    1. sittu kuruvi!

      roompu podalaam-
      vasathi illa -
      manasula pattatha ezhuthuren!

      ungal aatharavukku-
      mikka nantri!

      Delete
  5. சமூகதுடிப்புள்ள உங்கள் கவிதை.... தங்களது சமூக கண்ணோட்டத்திற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. maniyan!

      mikka makizhchi-
      naan samooka akkarai kondavanaaka
      nampum ungalukku!

      Delete
  6. சுப்பரா இருக்கு சீனு

    ReplyDelete
    Replies
    1. kalai;

      neenga enge poneenga?
      ivvalavu naalaa ungal-
      karuththai kaanaamal-
      kavithai kalai" izhanthum-
      karuthum " pochi!

      ippavaavathu vaantheengale!
      mikka nantri!

      Delete
  7. வார்த்தை என்னும் சிப்பிக்குள் துளிகளை சேகரித்து கவிதை என்னும் முத்தை பரிசளித்த சகோவுக்கு நன்றிகள். கவிதை அருமை சகோ. பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. raji!
      ungal varavukkum-
      azhakiya pinnoottathukkum-
      mikka nantri!

      Delete
  8. சொட்டுச் சொட்டாய்ச் சேகரித்த துளிகள் வரிகளாய்.உங்கள் எண்ணங்கள் வியக்கவைக்கிறது சீனி.ஒவ்வொரு கவிதைகளிலும் இந்த வசனத்தைச் சொல்ல நினைக்கிறேன் !

    ReplyDelete