Saturday 24 March 2012

அதிர்ஷ்டம்!

தேடினாலும் கிடைக்காது-
"படுத்தே"கிடக்குரவனுக்கு!

தேடி வரும்-
"பாடுபடுகிறவனுக்கு"!
-----------------------------
வைத்துகொள்ள தெரியல-
வியர்வை துளியின்-
பணத்தை!

லாட்டரி எனும்-
தீயில் போட்டு விட்டு-
தேடுறான்-
அதிர்ஷ்டத்தை!
-------------------------
அதிர்ஷ்டத்தின் அளவீடு!
வச்சிருக்கும்-
பணத்தின் மதிப்பீடு!

இரு துருவம் கொண்டது-
காந்தம்!

இரு நிலைகள் கொண்டது-
நாள்!

நன்மை செய்ய -
வழியும்!

பாவம் செய்யுது-
விழும்-
படுகுழியும்!

பணம்!
----------------
கற்களை அணிந்தால்-
அதிர்ஷ்டம் வருமாம்!

செலவு வருதே-
"கல்"அடைப்பு வந்தால்!
---------------------------
கல்லுடைக்கிற குழைந்தைங்க-
நிலையே மாறல!

கல்லை வாங்கி போடுறவனுக்கு-
வருமோ- அதிர்ஷ்டம்
கையில!?
-------------------------------
தொடர்ந்து முயற்சிப்பவன்-
பேர் -
"வெட்டி பய!"

வெற்றி பெற்றுவிட்டாலோ-
"அதிர்ஷ்ட " கார பய!
---------------------------
நேற்றைய-
வறுமையானவர்களே!

இன்றைய-
சாதனையாளர்களே!

அவர்கள் "அடைந்து" கிடக்கல-
அதிர்ஷ்டம் என்ற -
சொல்லுல!
----------------------
கொடுக்குற நாயன்-
கூரையை பிச்சி கொண்டு-
கொடுப்பான் என்று-
சொல்லுவாங்க!

குறைந்த பட்சம்-
கூரையை பிச்சி(முயற்சி)யாவது-
செய்யனும்லங்க!

மனுஷனுக்கு-
தாகத்தை தந்தவன்!

மண்ணுக்குள்ள தண்ணிய-
வைத்து இருக்கானே!-
என்ன நான் சொல்லுரதுங்க!?
--------------------------------
முதலில் உன்னில்-
உள்ள திறமையை
நம்பு!

பிறகு-
உழைப்பை-
நம்பு!

"எல்லாத்தையும்"-
கேட்காமலே தந்த-
இறைவன் - வெற்றியை
தருவான்-
சத்தியமா-
நம்பு!
------------------

6 comments:

  1. நல்ல கவிதைகள்
    சிறப்பான சிந்தனைகள்

    ReplyDelete
    Replies
    1. seythali;

      ungal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  2. ரொம்ப சுப்பரா இருக்கு சீனு ....

    நல்ல நல்லா எழுதுறிங்க முன்பைவிட ...
    எழுத்துக்கள் ரொம்ப சுப்பரா மாறிக்கிட்டே வருது ...


    வாழ்த்துக்கள் சீனு ..

    ReplyDelete
    Replies
    1. kala;

      ungal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  3. முயற்சிதான் அதிஷ்டம்ன்னு சொல்றீங்க.சும்மா இருந்துகிட்டு அதிஷ்டம் கூரையைப் பிச்சுகிட்டு விழுமின்னும் இருக்காங்களே சீனி !

    ReplyDelete
    Replies
    1. Hemaa!

      athuthaan "pichi"vaikkira muyarchiyaavathu-
      pannanum!

      ungal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete