Monday 11 May 2015

ஜனநாயகத்தை நேசிப்போரே உங்களைத்தான் ..!!


            எல்லாத்தரப்பின மக்களும் சமமாக வாழவே விரும்புவார்கள்.யாரிடமும் அடிமைப்பட விரும்ப மாட்டார்கள்.தன் மீது பிறருடைய அடக்குதல் கரங்கள் ,அழுத்திடும்போது திமிறி எழவே முயற்சிப்பார்கள்.ஆனாலும் அடக்குமுறைகளும்,அதற்கு எதிரானப் போராட்டங்களும் காலங்காலமாக நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.அதனடிப்படையில் இன்றைக்கு இந்தியாவில் ஆட்சியில் அமர்ந்திருக்கும் பாசிச பா ஜ க ஆட்சியிலேறியதிலிருந்து மத துவேசப் பேச்சுகள்,உணர்ச்சிவசப்படுத்தக் கூடியப் பேச்சுக்கள் அதிகமாகவே கேட்க முடிகிறது.இது எதிர்பார்த்தது தான்,பா ஐ க அவ்வாறு நடக்கவில்லை என்றால் தானே ஆச்சர்யம்.!?

          இன்றைய காலக்கட்டத்தில் பா ஜ க ஆட்சியில் அமர்ந்து விட்டதால் ,ஒருசாரார் விரக்தியின் உச்சத்திற்கு சென்று விட்டார்கள்.இன்னொரு சாரார் கோபத்தின் உச்சத்திற்கு சென்றுவிட்டார்கள்.இதில் விரக்தியடைய ஒன்றும் இல்லை,ஏன் விரக்தியடைய வேண்டும்.!?வரலாறு நெடுகிலும் அநீதி மேலோங்குவதும்.,அதனை நீதி வெல்லுவதும் நடந்தேறி உள்ளது.இனி நடந்திடவும் உள்ளது.இருட்டினால் விடிந்துதானே ஆக வேண்டும்.!?.இன்னும் சிலர் சமூக வலைத்தளங்களில் கோபத்தில் திட்டி எழுதுவதும்,ஆபாச வார்த்தைகளில் எழுதுவதும்,இன்னும் அபாயகரமானமாக எழுதுவதும்,முகம் சுழிக்கச் செய்கிறது..!?நாம் இதன் மூலம் என்ன மாற்றத்தை நிகழ்த்திட முடியும்.!?இன்னும் தகாத வார்த்தைகளை எழுதுவதினால் ,நடுநிலையான நபர்கள் கூட எதிரிகளாக மாறிட கூடும்.இன்னும் சிலரோட சிந்தனை எழுத்துக்கள் சிலிர்க்க வைக்கிறது.அதேவேளையில் சமூகத்தளங்களில் எழுதுவதும்,கொஞ்சம் பிரயோசனம் ஆகுமே தவிர,தீர்வாகும் என சொல்லிட இயலாது,
   
                          ஜனநாயகத்தை,சமத்துவத்தை,சமூக அமைதியை விரும்பக் கூடிய இந்திய மக்களாகிய நாம்,சற்று நிதானமாக சிந்திக்க கூடிய சூழலில் இருக்கிறோம்.இந்த பாசிசவாதிகள் எவ்வாறு ஆட்சிக் கட்டிலில் அமர முடிந்தது.!? . அதொன்றும் நேற்று சிந்தித்து ,இன்று நடைப்பெற்ற நிகழ்வு அல்ல.மாறாக நீண்டகாலத் திட்டம் கொண்ட ,ஆர்.எஸ்.எஸ். ன் ஒரு பகுதிதான் பா ஜ க எனும் கிளை.எண்பது கால கட்டங்களில் தொடங்கிய பா ஜ க எப்படி இருமுறை நாட்டை ஆளும் வாய்ப்பு கிடைத்தது.?நாம் சற்று சிந்திக்க வேண்டும்.நீண்டகாலப் பயணம் வேண்டும்,அப்படி ஒரு பயணம் இல்லாமல் ,இந்த பாசிசத்தை ஒன்றும் செய்திட முடியாது.

          இன்றைய காலகட்டத்தில் ஜனநாயக அமைப்புகள் ஒன்று கூடி ,பாசிசத்திற்கு எதிராக களமாடுகிறார்கள்.அதில் உங்களது பங்களிப்பைச் செய்யுங்கள்.அதில் பாப்புலர் ப்ரண்ட் எனும் அமைப்பும் (இஸ்லாமியர்கள் மட்டுமே இதில் இணைய முடியும்),எஸ்.டி.பி.ஐ எனும் அரசியல் கட்சியும் இந்தியா முழுவதும் ,போராடிக் கொண்டிருக்கிறார்கள் .இதில் ஏதாவது ஒன்றில் நீங்கள் இணைந்துச் செயலாற்றுங்கள்.அல்லது உங்களுக்குப் பிடித்தமான அமைப்பில் இணைந்துக் கொள்ளுங்கள் .ஆதலால் விரக்தியடையவோ,ஆத்திரமடையவோ தேவையில்லை.இன்றைய தேவை அறிவுப்பூர்வமான ,ஆக்கப்பூர்வமானப் போராட்டமே தேவை.


             ஓர் கவிஞன் சொன்னான்.
"ஓடாத மானும்
போராடாத மக்களும்
உயிர் வாழ்ந்ததாக சரித்திரமில்லை" என்று..

           

No comments:

Post a Comment