Sunday 17 May 2015

கவிதையே.!(1-5)

1)
கவிதையே
என்னைப் பிரிந்திட
எண்ணாதே!

பின்னாளில் 
நீ தான் 
கண்ணீருடன் அலைவாய் !
--------------------------------

கவிதையே..!!(2)
----------------
ஆயிரம் பேர்
உன்னை எழுதலாம் !

என்னைப்போல்
யார் உன்னை நேசிப்பார்..,!??
------------------------------
கவிதையே.!(3)
--------------
என்னை 
மற்றவர்களுக்கு மட்டுமல்ல !

என்னை 
எனக்கே அறிமுகம் செய்தது
நீ தான்!
----------------------------
கவிதையே..!(4)
-----------------
ஓர் துளி 
எனக்கோர் தீராத ஆசை!

கவிக்கடல் உன்னை
குடித்திட!
-------------------------
கவிதையே..!(5)
----------------
என்னைக் கொல்ல வரும்
தனிமையெனும் மிருகத்திடமிருந்து
தற்காத்துக் கொள்ள !

உன்னைத்தான் 
ஆயுதமாக பயன்படுத்துகிறேன்!
----------------------------------

4 comments:

  1. அருமை... அறிமுகம் அருமை...

    ReplyDelete
  2. கவிதையை சிறப்பித்த வரிகள் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. கவிதையே..!(4)
    கவிதையே..!(5)
    ஆகிய இரண்டையும்
    நான் விரும்புகிறேன்

    ReplyDelete
  4. கவிதையே..!(4)
    கவிதையே..!(5)
    ஆகிய இரண்டையும்
    நான் விரும்புகிறேன்

    ReplyDelete