Friday 22 May 2015

கவிதையே .!(11-15)

11)
உனக்கு 
ரோசம் அதிகம்!

உன்மேல் 
நேசம் கொள்ளாதவர்களுக்கு
நீ
அர்த்தம் தர மறுப்பதால்!
--------------------------
கவிதையே.!(12)
-----------------
உன்னைத் தேடி வந்த
உயிர்த்துளி நான்!

என்னை ஏற்றுக்கொண்ட
கருவறை நீ!
------------------------
கவிதையே.!(13)
----------------
மூச்சடைக்கும் 
ஓர் பேரணைப்பும்!

மூச்சைப் பறிக்கும்
பெரும் பிரிவும்!

உன்னுடன்
கூடவே பிறந்ததா.?

"கவிதையே"!
-----------------
கவிதையே.!(14)
----------------
மேகம் சேரும்
கடல் நீராய் !

கடலில் விழும்
மழைத் துளியாய்
இருக்கிறோம்!

கவிதையே
நீயும்
நானுமாய்!
----------------
கவிதையே.!(15)
------------------
என் சிந்தனைப் புல்வெளியில் 
மின்னிடும் பனித்துளிகள்
நீ தான்!

"கவிதையே"!
-----------------_


2 comments: