Saturday 23 May 2015

கவிதையே.!(16-20)


16)
என்னை 
மன்னித்து விடு!

நான் 
சுமக்கும் முடியாத 
எண்ணச் சுமைகளை!

உன் மீது
இறக்கி வைப்பதால்.!
----------------------
கவிதையே.!(17)
---------------
உனக்கு
நாளைய வரலாற்றினை
இன்று படிக்க விருப்பமா.!?

என் தேசத்தில்
பாப்புலர் ப்ரண்ட் சகோதரனுடன்
ஒரு நாள் பயணித்துப் பார்.!
-----------------------------
கவிதையே.!(18)
---------------
ஒரு புள்ளியில் தொடங்கும்
எனது எழுத்துக்கள் கவிதையென்றால்!

பல புள்ளிகளை இணைக்கும்
உனது கோலங்களும் கவிதையே!
--------------------------------
கவிதையே.!(19)
---------------
வாழ்க்கைப் போர்க்களத்தில் 
நான் பொசுங்கிடாமல் இருக்கவே!

பூக்களாக 
உன்னை விதைக்கிறேன்
கவிதையே!
----------------------------
கவிதையே.!(20)
---------------
இன்று
என்னால் நீ 
எழுதப்படலாம் !

ஒருநாள் 
உன்னால் நான்
வாசிக்கப்படுவேன்!
-------------------

No comments:

Post a Comment