Friday 29 May 2015

கவிதையே.!(21-25)

21)
நதி உன்னில் விழுந்திட்ட
சருகு நான் கவிதையே!

உன்மேல் 
என்னை மிதக்கச் செய்தாலும் !

உனக்குள்
என்னை மூழ்கச் செய்தாலும்!

எனக்குப் பேரின்பமே
கவிதையே!
-----------------------
கவிதையே.!(22)
---------------
இன்று நான் உன்னை
லட்சியமாக எழுதுவது!

ஒரு நாள்
எனது லட்சியத்தை 
உனக்குள் எழுதத்தான்!

கவிதையே!
--------------------
கவிதையே.!(23)
---------------
உன்னையணிந்து
பார்க்கையில்தான்!

என்னை நேசிக்கும்
இதயங்களைக் கண்டேன் !

"கவிதையே"!
--------------------
கவிதையே.!(24)
-----------------
சோகத்தைக் கூட
உன்னில் புதைக்கையில்
சுகம்தான் !

கவிதையே!
---------------------
கவிதையே.!(25)
----------------
தொலைந்துக் கொண்டேதான்
இருக்கிறோம்!

உனக்குள்
நானும்!

எனக்குள் 
நீயும்! 
----------------

1 comment:

  1. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது!

    ReplyDelete