Monday 1 June 2015

கவிதையே.!(26-30)

26)
கொஞ்சம் மடி கொடு!

உனது பேனா விரல்களால் 
தலைமுடியை கோதி விடு!

ஏனென்றால் எனக்கு
கவிதை கனவுகள் வந்து
நெடுநாட்களாகி விட்டது !
--------------------------
கவிதையே.!(27)
----------------
கொதிக்கும்
எனது பாலைவனத்தை
கொஞ்சம் ஈரப்பதமாக்குவது!

நீ தந்துச் செல்லும்
முத்தங்கள்தான்!

"கவிதையே"!
--------------------
கவிதையே.!(28)
-----------------
தீராத ஆசைகளும் 
தீர்ந்திடாத ஏக்கங்களும் கொண்ட
நாம்!

சேர்ந்தே வாழ்திடுவோம்
வா !

வாழ்க்கைத் தீரும் வரைக்கும் !
------------------------------
கவிதையே.!(29)
-----------------
தங்கப் பேனாக்களெல்லாம்
உனக்காக தவம் இருக்கையில் !

தனக்கென எதுவும் இல்லாத 
என்னை நீ கரம்பிடித்தது ஆச்சரியம்தான்!

"கவிதையே"!
--------------------
கவிதையே.!(30)
-----------------
புரியாத புதிர்களிரண்டு
புரிந்துக் கொண்ட அதிசயம்தான் !

நீயும் 
நானும்
இணைந்தது !
-------------------------

No comments:

Post a Comment