Friday 26 June 2015

விந்தை உலகம்..!!

குழந்தைகளில்லாமல்
கண்ணீர் வடிப்பவர்களையும் பார்க்கிறேன் !

குழந்தைகளால் 
கண்ணீர் வடிப்பவர்களையும் பார்க்கிறேன் !

தூக்கத்தைத் தொலைத்து
பணத்தைத் தேடுபவர்களையும் பார்க்கிறேன்!

பணத்தைச் சேர்த்தால்
தூக்கத்தைத் தொலைத்தவர்களையும் பார்க்கிறேன் !

குடும்பம் தன்னுடன் இல்லையே என கலங்கும் 
வெளிநாட்டு ஊழியர்களையும் பார்த்திருக்கிறேன் ! 

குடும்பத்துடன் இருந்தும்
வீட்டை விட்டு வெளிநடப்பு செய்பவர்களையும் பார்க்கிறேன் !

லட்சியங்கொண்டவர்களை அலட்சியப்படுத்தும்
சமூகத்தையும் பார்த்திருக்கிறேன் !

அலட்சியமாக வாழ்பவர்களை 
சமூக அக்கறையற்றவர்கள் என
தூற்றுபவர்களையும் பார்த்திருக்கிறேன் !

இந்த வினோதமான உலகத்தில்
விந்தையானவற்றை பார்த்து வளர்வதால்தான் என்னவோ..!!

கிடைத்தவற்றை நினைத்து
திருப்திப்பட்டுக்கொள்ளவும்!

கிடைக்காதவற்றை நினைத்து
சந்தோசப்பட்டுக்கொள்ளவும் பழகிக்கொண்டேன்!

      

5 comments:

  1. முரண்
    சொல்லிப்போனவிதம் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வாழ்க்கை முரண்களை வகைபடுத்தியவிதம் அருமை!

    ReplyDelete
  3. வணக்கம்,
    இந்த வினோதமான உலகத்தில்
    உண்மை தான் நாம் இதை உணர்ந்தால் நலம்,
    அருமையான பதிவு, வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete
  4. இப்படியும் அப்படியும் அருமை...

    ReplyDelete
  5. முரண்பாடுகள் நிறைந்த உலகம்!

    ரசித்தேன் நண்பரே.

    ReplyDelete