Tuesday 30 November 2021

வளையல்.!

 வானவில்லை வளைத்தா

வளையல்கள் செய்தா(ய்).!?

Monday 29 November 2021

கவிதை..!

 துளையிட்ட குழலில்

நுழைந்திட்ட காற்று

இசையாவதுப் போலவேதான்

என்னுள் தங்கிய நினைவுகள்

கவிதைகளாகிறது.!

வீணை.!

 விரல்கள் தீண்டாதவரை

வீணைகள் மௌனம் கலைப்பதில்லை.!

இதயம்.!

 பூக்களைத் தேடும்

தேனீயைப்போலவே

காயப்பட்ட இதயங்கள்

வார்த்தைகளைத் தேடும்.!

சொற்கள்.!

 சொற்கள் மட்டும் இல்லாதிருந்தால்

என்னை நான் எங்கேப் போய்

ஊற்றி வைப்பேன்.!?

Sunday 28 November 2021

வாழ்க்கை.!

 வாழ்வதென்பதென்ன

சொர்க்கப்பூஞ்சோலையா.!?

அமைதியாய் துயில் கொள்ள..!

மழை.!

 மேகக்குளத்திற்குள்

யார் கல்லெரிந்தது..!?



Tuesday 23 November 2021

தேடல்.!

 என்னைத் தேடி எடுப்பதற்காக

எழுத வேண்டியிருக்கிறது..!

மழை.!

 பழக்கப்பட்ட மழை தான்

பெய்யும் ஒவ்வொருமுறையும்

வெவ்வேறு கதைகளை சொல்கிறது..

Sunday 14 November 2021

முதுமலரின் அந்திமம்..!(இறுதி காலம்)

 விதையாய் விழுந்தேன்

துளிராய் முளைத்து

செடியாய் வளர்ந்து

மரமாய் விரிந்து

பெரும் மரமாய் ஆனேன்


என்னிலும்

பூ பூத்தது

காய் காய்த்தது

பழம் பழுத்தது

விதைகளும் விழுந்தது


பறவைகள் வரும்

பழம் தின்னும்

எச்சத்தை மிச்சம் 

வைத்துச் செல்லும்


படர்ந்த மரம் நான்

பட்ட மரமானேன்


எனது வழி விதைகளும்

என்னில் நின்று தின்ற பறவைகளும்

காத்திருக்கிறது.!


எப்போது முதுமலரின் அந்திமம் முடியும்

கொள்ளி வைத்து செல்லலாம் என்று.!


Wednesday 10 November 2021

நான் யார்.!?

 காற்றில் கலந்த நறுமணமா!?

வார்த்தைகுள் அடைந்த அர்த்தமா.!?


முத்தத்தின் இதமா.!?

உச்சத்தின் சுகமா.!?


மேகத்தின் இடியா!?

மின்னலின் ஒளியா.!?


கோடையின் வதையா.!?

இரவின் கதையா.!?


பூ தலையாட்டும் தென்றலா.!?

புல்லாங்குழல் தரும் இசையா.!?


இறைவனிடம் கேட்ட பிரார்த்தனையா.!?

இறைவன் இட்ட பிச்சையா.!?


இதில்

எது நான்

இது

எல்லாமும் நான்.!